Nenjin Nizhalgal
()
About this ebook
கருமலைத்தமிழாழன் கிருட்டிணகிரியில் உள்ள கருமலை என்ற ஊரில் 16.07.1951ல் பிறந்தவர். இவர் புலவர், எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில்., ஆகியப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் தமிழ் மீதும் தனது ஊர்ப்பற்றின் மீதும் கொண்ட மிகுந்த காதலால் தனது இயற்பெயரான கி.நரேந்திரன் என்பதனை மறந்து இன்று கருமலைத்தமிழாழன் என்று அனைவர் மனதிலும் பதியும் வண்ணம் தமது தமிழ்ப்பணியைச் செய்து வருகிறார்.
கருமலைத்தமிழாழன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணியும் தமிழாசிரியர் பணியும் செய்துள்ளார். அரசு மேல்நிலைப்பள்ளியில் 25 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். அடுத்த 10 ஆண்டுகள் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக சீரும் சிறப்போடும் பணியாற்றியுள்ளார்.
குயில், காஞ்சி, கண்ணதாசன், தமிழ்ப்பணி, முல்லைச்சரம், புன்னகை, காவியப்பாவை, தினத்தந்தி, தமிழ் இலெமுரியா, தினகரன், தினமணி, தினமலர், மாலைமுரசு, மாலைமலர், முரசொலி போன்ற 50திற்கும் மேற்பட்ட நாள், வார, மாத ஏடுகளில் 1969 முதல் இன்றுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் வெளிவந்துள்ளன. இதுவரை 22 கவிதை, உரைநடை நூல்கள் வெளிவந்துள்ளன.
பல்வேறு இலக்கிய அமைப்புகளின் மூலமாக 1.பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர் 2.ஒட்டக்கூத்தர் 3.கவிதைச் செல்வர் 4.தமிழ்மாமணி 5.பாவேந்தர் நெறி செம்மல் 6.தமிழ் இலக்கியமாமணி 7.இலக்கியச்செம்மல் 8.இலக்குவனார் விருது 9.ஈரோடு தமிழன்பனார் விருது 10. வெண்பா வேந்தர் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.
Reviews for Nenjin Nizhalgal
0 ratings0 reviews
Book preview
Nenjin Nizhalgal - Karumalai Thamizhazhan
http://www.pustaka.co.in
நெஞ்சின் நிழல்கள்
Nenjin Nizhalgal
Author:
கருமலைத் தமிழாழன்
Karumalai Thamizhazhan
For more books
http://www.pustaka.co.in/home/author/karumalai-thamizhazhan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
இனிமை
தனிமை
பொதுமை
புதுமை
நினைமை
புகழ்மை
தகடூரில் தமிழ்ப்பயிற்றும் பணியை ஏற்ற
தமிழாழன்
தரமான கழுகு ராவார்
புகழுரில் இடம்பிடிக்க இளைஞர் ஆற்றும்
புரட்சிமிகு செயல்களெல்லாம் சிறந்த தாகும்!
முகமலரும் இக்கவிஞர் தமிழைப் பார்த்து
முரண்பட்டால் முரண்படுவார் திருத்த பார்ப்பார்!
அகத்தெளிவு மிகப்பெற்றார்; ஐம்பத் தொன்றில்
அழகொழுகும் கருமலையில் பிறந்து வந்தார்!
வருமேட னைத்திலுமே இவரி ருப்பார்
வரிவாயால் கனிச்சுவையை வழங்கி நிற்பார்!
கருக்கொண்ட சிந்தனைகள் பொதிந்தி ருக்கும்
கவிதைகளில் இலையழகு நடன மாடும்
மருட்டுகின்ற மதங்களேயும் சாதி என்னும்
மடமையையும் சாடுகின்ற இந்தத் திரர்
இருட்டிற்கோர் விளக்கென்றால் புகழ்ச்சி யில்லை
எழுத்தாலே இவர்வாழ்க மலேயைப் போலே!
எங்கள் பெரியவரின் இனிய வாழ்த்து
என்றன் மகவின்
இன்சொல் மழலை
என்றும் சிறக்க
என்றன் வாழ்த்து
இலக்கணப் புலவர் அ ந. இராமாநுசம்
அவர்களின் இனிய வாழ்த்து
தீங்கனியும் தேமாவும் காயும் பூவும்
தேடரியப் பிறப்போடு காசும் நாளும்.
ஈங்கிணைந்த கவிதைக்கா ஒன்று கண்டேன்
இனியதமிழ் இன்பமெலாம் ஒன்றாய்க் கண்டேன்
கருமலையான் தமிழாழன் ஆழ மூழ்கி
கண்டெடுத்தத் தமிழ்முத்தைக் கண்டு நானும்
இருந்தமிழால் வாழ்த்துகின்றேன் வாழ்க என்றே
இனியதமிழ் கவியமுதம் வாழ்க என்றும்!
அன்பு அண்னன்,
அ. ந. இராமாநுசம்
கிருட்டினகிரி
25-1-1976
***
எழுத்தாளர் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவரும் தென்னார்க்காடு மாவட்டத் தமிழ்க் கவிஞர் பெருமன்றத்தலைவரும், ‘குயில்’ புதுமை இலக்கியத் திங்களிதழ் ஆசிரியருமாகிய
‘செந்தமிழ்ச் செல்வர்’ 'பாவலர் மனி’
டாக்டர் கே. எம். ஏ. வகாப் அவர்கள் அளிக்கும்.
முகவுரை
‘உள்ளுணர்வுகளை ஒழுங்குபடுத்தும் பொறியாளர்கள் கவிஞர்கள்!" என்றார் மார்க்சு. அவர் சொன்ன மணிமொழி. எவ்வளவு உண்மையானது என்பதை உலகப் பெருங்கவிஞர்களின் பாடல்கள் உணர்த்துகின்றன.
உருசியப் பெருங்கவிஞன் மாயோவ்சுகி, அமெரிக்கப் பெருங்கவிஞன் வால்ட்விட்மன், அய்ரோப்பா தந்த செல்லி, பஞ்சாப்தக்த அல்லாமா இக்பால், வங்கம் தந்த தாகூர், தமிழகம் வழங்கிய பாரதி, பாரதிதாசன் போன்றோர்களின் கவிதைகள் எவ்வளவு வலிவும், பொலிவும் வாய்ந்தவை என்பதை இலக்கிய உலகம் மட்டுமல்லாமல், எல்லா உலகமும்