Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nila Magan
Nila Magan
Nila Magan
Ebook117 pages1 hour

Nila Magan

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateDec 8, 2017
Nila Magan

Read more from Arnika Nasser

Related to Nila Magan

Related ebooks

Reviews for Nila Magan

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nila Magan - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    நிலா மகன்

    Nila Magan

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    நேரில் சந்திக்கையில்

    நீ மெளனமாய் இருந்தாலும்

    உன் அழகு

    உரக்கப் பேசுகிறது

    தொலைபேசி அழைப்புகளில்

    முகம் தெரியாவிட்டாலும்

    உன் பேச்சில்

    யெளவனம் வழிகிறது.

    -கோவி லெனின்

    பெளர்ணமி நிலா ஜாஜ்வல்யமாய் கடல் மட்டத்திலிருந்து சற்றே உயர்ந்திருந்தது. நிலா மிடுக்காய் மிளிர்ந்தது.

    கடல் இருப்புக் கொள்ளாமல் தவித்தது. கடலலைகள் தங்க மஞ்சள் நிற ஃபேஸியல் பண்ணியிருந்தது.

    தூரத்தே பூம்புகார்.

    கடற்கரையோரம் யுவன் யுவதிகள் குழுமம்.

    குறும்கப்பலின் மேற்தளத்தில் சமுத்ரா நின்றிருந்தாள்.

    சமுத்ரா வயது 20. உயரம் 5-6. பூக்குழம்பால் உருட்டிய உடல். புட்டத்தின் கீழும் சரிந்திருக்கும் தலைக்கேசம். பிரியங்கா சோப்ரா கண்கள். காமசூத்ரா கற்றுக் கொடுக்கும் வாய். பளிங்குக்கல் வீக்கமாய் மார்பகங்கள். நெய்யில் பொறித்து எடுக்கப்பட்ட புலிவால் இரால் போல தொப்புள். நீண்ட அதெலடிக் தொடைகள். மாசு மருவில்லாத கால்கள்.

    சமுத்ரா பல் மருத்துவம் மூன்றாம் ஆண்டு படிப்பவள்.

    சமுத்ராவின் தந்தை சூரியமூர்த்தி கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தலைவர் தாய் தென்றல் விலங்கியல் துறை விரிவுரையாளர்.

    மூன்று பிளேட்டுகளில் உணவு வந்தது.

    ‘நான்’ + பிஷ் கவாப் + பிரான் கிரேவி+நண்டு மசாலா

    சமுத்ரா உணவைக் கொறிக்க ஆரம்பித்தாள்.

    அப்பா அருகில் வந்தார். சம்மு!

    என்ன டாடி?

    ஹெள யூ ஃபீல்?

    வெரி நைஸ் டாடி நடுக்கடலில் நின்று கொண்டு நிலவை எட்டி பறிப்பது போலொரு பிரமை. இத்தனை அழகான முழுநிலவை நான் என் வாழ் நாளில் பார்த்ததில்லை. அமெரிக்கர்கள் நிலவில் கால் பதித்து வந்திருந்தாலும், இன்னும் நிலவு மனிதர்களுக்கு அதீத கற்பனைகளை கொள்ளை கொள்ளையாய் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது. நிலா காதலின், கவிதைகளின் படிமம். நிலவின் ஒவ்வொரு நிலைக்கும் மனிதனுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. பூமிக்கு கடவுள் தந்த மெஹாபரிசு நிலா!

    சூரியமூர்த்தி முறுவலித்தார். ரொம்ப பிரமாதமா பேசுற!

    நானா பேசல… நிலா என்னைப் பேச வைக்குது!

    அப்படியா? கொஞ்சம் உன் நிலாகிட்டச் சொல்லி எனக்கும் பேச கத்துத்தரச் சொல்லு!

    அவ்வளவுதானே! இதோ இப்பவே நிலாகிட்ட கேக்றேன்! சற்றே அண்ணாந்தாள் சமுத்ரா. முகம் மஞ்சள் நிறத்தில் மிளிர்ந்தது.

    ஏய் நிலா!

    ….

    ஏய் உன்னைத்தான் நிலா! என் டாடிக்கு கவிதையாய் பேசக் கற்றுத் தாயேன்!

    கண்சிமிட்டி சிரித்தார் சூரியமூர்த்தி.

    அப்போதுதான் அது நடந்தது!

    கே.ஜே. யேசுதாஸ், எஸ்.பி.பி, ஹரிஹரன், தலேர் மெஹந்தி காக்டெய்லிய ஓர் ஆண் குரல். சமுத்ராவின் காதுகளுக்கு மட்டும் கேட்டது.

    நான் ஆண்களுக்கு கவிதை கற்றுத் தருவதில்லை!

    திகிலுற்றுப் போனாள். அப்பாவின் முகத்தைப் பார்த்தாள். அவள் கேட்ட வார்த்தையை அவர் கேட்டதாகத் தெரியவில்லை.

    டாடி! உங்களுக்கு ஏதாவது குரல் கேட்டதா?

    இல்லையேம்மா… நீ நின்று நிலவை ரசிச்சுக்கிட்டு இரு. நானும் அம்மாவும் ‘ஸ்பெஸிமன்’ செக் பண்ணிட்டு வந்திடுரோம்!

    போகாதீங்க டாடி… பயமாயிருக்கு! இதைச் சொல்ல நினைத்து ஓகே டாடி! என்றாள்.

    பெற்றோர் அகன்றனர்.

    இப்போது சமுத்ரா யாராவது ஒளிந்து கொண்டு ‘நிலா’ போல் பேசினார்களா என குறும்கப்பலின் மேற்தளத்தை அலசினாள்.

    யாரும் இல்லை.

    மீண்டும் நிலாவிடம் நிமிர்ந்தாள்.

    பூடகமாய் நிலா ஒளி வீசியது. -

    நீயா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்கிட்டப் பேசுன?

    பதில் இல்லை.

    நீயா பேசின?

    பதில் இல்லை.

    ‘நான் ஒரு முட்டாள். உயிரில்லாத நிலா எப்படி பேசும்? அதுவும் தமிழ்ல? நமக்கு மனப்பிரமை!"

    விஷ்! விஷ்! ஹேய்!

    திடுக்கிட்டு அண்ணாந்தாள்.

    யாரு? யாரு கூப்பிட்டது?

    நான்தான்!

    குரல் வந்த திசையை அனுமானிக்க முடியவில்லை. ஆனால் அது வானத்தின் எங்கேயோ இருந்து வந்தது.

    சுவாரசியமாய் திகிலுற்றாள்.

    நான்தான்னா?

    நான்தான் எனக்கு அறிமுகம் தேவையா?

    புரியல…

    மண்டு. என்னைப் பார்த்துக் கொண்டே நான் பேசுவது தெரியாமல் நின்று கொண்டிருக்கிறாய்!

    நிலாவா என்னுடன் பேசுவது?

    சந்தேகமென்ன?

    காலம் காலமாக நிலவை பெண்ணாகத்தானே கற்பனை செய்து பாடியிருக்கிறார்கள் கவிஞர்கள்…

    அது அவர்கள் தப்பு!

    நிலவுக்கு உயிரேது! நிலா ஆணுமல்ல; பெண்ணுமல்ல; பூமியின் துணைக் கோள் அவ்வளவுதான்!

    தவறு. எனக்கு உயிர் இருக்கிறது. சூரியனுக்கு உயிர் இருக்கிறது. பூமிக்கு உயிர் இருக்கிறது. எல்லாருமே ‘உயிரியல் கடிகாரம்’ பொருத்தப்பட்டுள்ளோம். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சாய்ந்து கொண்டு பூமி தன்னையும் சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமிக்கு யார் சொல்லிக் கொடுத்தது? பூமி ஒரு புள்ளி பிசகினாலும் எங்கோ போய் வெடித்து தூள்தூளாய் சிதறிவிடும். நான் ஒரு புள்ளி பிசகினாலும் பூமிக்கு இரவுநேர வானவிளக்காய் கிடைக்கமாட்டேன். சூரியன் ஒரு புள்ளி பிசகினால் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் காணாமல் போகும். இப்போது சொல். எனக்கு உயிர் உண்டா இல்லையா?

    இவ்வளவு பேசுவதும் நிலாதானா?

    இன்னும் என்ன சந்தேகம்? என் குரல் போலொரு குரல் பூமியில் கேட்டு இருக்கிறாயா?

    Enjoying the preview?
    Page 1 of 1