Aairam Kaalathu Payir
By Sivasankari
5/5
()
About this ebook
She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.
As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.
'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Read more from Sivasankari
Mookkanaangayiru Rating: 5 out of 5 stars5/5Thavam Rating: 5 out of 5 stars5/5Nappaasai Rating: 0 out of 5 stars0 ratingsAndhamma Romba Nallavanga Rating: 5 out of 5 stars5/5Vetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 5 out of 5 stars5/5Amma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsIvalum Avalum Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsSuriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsOverdose Rating: 0 out of 5 stars0 ratingsPrayachchitham Rating: 4 out of 5 stars4/5Kuzhappangal Rating: 0 out of 5 stars0 ratingsPayirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5Paalangal Rating: 0 out of 5 stars0 ratingsUyarndhavargal Rating: 5 out of 5 stars5/5Vimochanam Rating: 4 out of 5 stars4/5Innoru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsNooleni Rating: 5 out of 5 stars5/5
Related to Aairam Kaalathu Payir
Related ebooks
Athu Sari Appuram? Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsMouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Oru Sangamathai Thedi… Rating: 5 out of 5 stars5/5Amma Rating: 5 out of 5 stars5/5Kutty Rating: 0 out of 5 stars0 ratingsAzhage Aaryuire! Rating: 3 out of 5 stars3/5Kozhaigal Rating: 0 out of 5 stars0 ratingsSudum Nilavu Sudaatha Sooriyan Rating: 5 out of 5 stars5/5Thagappan Sami Rating: 0 out of 5 stars0 ratingsKatrathu Kaadhal Rating: 5 out of 5 stars5/5Malathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsAriyatha Mugangal Rating: 0 out of 5 stars0 ratingsAatril Oru Kaal Setril Oru Kaal Rating: 0 out of 5 stars0 ratingsIni... Rating: 0 out of 5 stars0 ratingsAayul Dhandani Rating: 5 out of 5 stars5/5Vaanathu Nila Rating: 5 out of 5 stars5/5Puriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5Nooleni Rating: 5 out of 5 stars5/5Thulla Mudiyatha Pulliman Rating: 5 out of 5 stars5/5Vilai Rating: 5 out of 5 stars5/5Paalangal Rating: 0 out of 5 stars0 ratingsVer Pidikkum Mann Rating: 0 out of 5 stars0 ratingsThirisangu Sorgam Rating: 5 out of 5 stars5/5Sandhiya Rating: 5 out of 5 stars5/5Arali Poo Mel Aasai Vaithu... Rating: 0 out of 5 stars0 ratingsAvan Rating: 3 out of 5 stars3/5Agni Siragugal Rating: 5 out of 5 stars5/5Pournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Uyarndhavargal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Aairam Kaalathu Payir
2 ratings0 reviews
Book preview
Aairam Kaalathu Payir - Sivasankari
https://www.pustaka.co.in
ஆயிரம் காலத்துப் பயிர்
Aairam Kaalathu Payir
Author:
சிவசங்கரி
Sivasankari
For more books
https://www.pustaka.co.in/home/author/sivasankari-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
1
அரக்கீரே, மொளக்கீரே, பொன்னாங்கண்ணிக்கீரே, வெந்தியக்கீரே… யம்மோவ்… கீர வேணுமாம்மா?
பிளாஸ்டிக் டியூபினால் செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த மலர்விழி, கீரைக்காரியின் குரல் கேட்டு நிமிர்ந்தவள், ‘இரு’ என்று சைகை காட்டினாள்.
கையிலிருந்த பைப்பைச் செடியின் வேருக்கருகில் வைத்துவிட்டு, கால்களை மிதியடியில் துடைத்துக்கொண்டு உள்ளே போனாள்.
கல்யாணி அரிசியில் கல் அரித்துகொண்டிருந்தாள்.
கீரைக்காரி வந்திருக்கா… கீரை வேணுமா? வாங்கட்டுமாம்மா?
நல்லாயிருக்கா?
ம்…
நாலு கட்டு வாங்கு… உங்கப்பாவுக்கு காரக்குழம்புக்கு, தேங்கா, பருப்பு போட்ட கீரைப் பொரியல் வெச்சுக்கப் பிடிக்கும்…
தலையாட்டிவிட்டுத் திரும்பிய மலர்விழி, தன் கைப்பையிலிருந்து எட்டணா காசு எடுத்துக்கொண்டு மீண்டும் வாசலுக்கு வந்தாள்.
பூச்சி இல்லாததாக ஐந்து கட்டுகளைத் தேர்ந்தெடுத்தபின், எட்டணா நாணயத்தை நீட்ட, கீரைக்காரி அவசரமாக மறுத்தாள்.
கட்டுப்படி ஆவாது தாயி… நாலு மட்டும் எடுத்துக்க…
வாரத்துல நாலு நாள் வாடிக்கையா வாங்கறோமே, ஒருநாள் அஞ்சு கட்டு குடுத்தா குறைஞ்சுபோயிடுவியா?
படப்பையிலேருந்து சொமந்துகிட்டு வரேன் தாயி… அவங்க குடுக்கறதே அஞ்சு கட்டுதான்… வெயில்ல அலைஞ்சு திரியறதுக்குப் பத்து காசாவது கிடைக்காட்டி எப்படி?
அதெல்லாம் எனக்குத் தெரியாது… இன்னிக்கு அஞ்சு கட்டுக் குடுத்தாக் குடு, இல்லாட்டி வேணாம்!
கீரைக்காரி அலுப்புடன் அவள் நீட்டிய காசைப் பெற்றுக்கொண்டு, நீ சரியான அடாவடிக்காரிம்மா! உன்னண்ட வாய் குடுத்துக்கிட்டு நின்னா, போது போயிடும்… நா வரேன்…
என்றபடி, கூடையைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நகர்ந்தாள்.
கீரையுடன் படியேறியவளை, வாச வராந்தாவில் பேப்பரும் கையுமாய் உட்கார்ந்திருந்த முத்தையா ஏறிட்டுச் சிரித்தார்.
என்ன சொல்லிட்டுப் போறா, பாத்தியா? நீ சரியான அடாவடியாம்!
இருந்துட்டுப்போறேம்ப்பா… எனக்கொண்ணும் வெக்கமில்ல! படப்பை தோட்டத்துல ஏழு எட்டு கட்டுனு வாங்கிட்டு, நம்மகிட்ட இவ தாறுமாறா விலை சொன்னா, ஒத்துக்கறதா?
பேசிக்கொண்டே கூடத்தைத் தாண்டி நடந்தவள், ஒருபக்கமாய் சுருண்டு படுத்திருக்கும் தம்பி தங்கையை உலுக்கி, தொரைக்கும், தொரைசாணிக்கும் இன்னும் விடியலியா? எழுந்திருங்க…
என்று அதட்டிவிட்டு, சமையல்கட்டுக்குச் சென்றாள்.
கீரையைச் சமையல்கட்டில் கொண்டுவைத்துவிட்டுத் திரும்பியவளை, கல்யாணி வாஞ்சையுடன் அழைத்தாள்.
மலர்…
என்னம்மா?
பகல்பூரா வேலைக்குப் போய் களைச்சு வரே… காலைல இப்படி விடியறதுக்கு முன்னியே எழுந்து, ஏன் இருக்கற வேலையெல்லாம் தலைல இழுத்துப்போட்டுக்கறே? அரைமணி கூட படுத்து எழுந்தா என்ன?
மலர்விழி சின்னதாகப் புன்னகைத்தாள்.
ஆறு மணிக்கு எழுந்திருக்கறதுக்கு, விடிகாலைன்னு பேராம்மா? யாராச்சும் கேட்டாங்கன்னா சிரிக்கப்போறாங்க! நீங்க இப்படி எடங்குடுத்துக் குடுத்துதான், கடைசிப் பசங்க ரெண்டும் சோம்பேறியாப் போயிட்டுதுங்க! தோட்டவேலை எனக்குப் புடிக்குது, எழுந்து செய்யறேன்… இதெல்லாம் ஒரு வேலையா?
முந்தானை, கொசுவமெல்லாம் எப்படி நனைஞ்சிடுச்சு பாரு… போதும்மா… செத்த உக்காந்திட்டு, குளிக்கப் போ…
மங்கை எங்க? எழுந்திட்டாளா?
ம்ம்… நீ எழுந்ததும் அவளும் எழுந்திட்டா… காபி குடிச்சிட்டு, மொட்டைமாடிக்குப் புஸ்தகத்தோட போயிருக்கா…
மேற்கொண்டு எதுவும் பேசாமல், மலர்விழி வாசலைப் பார்க்க நடந்தாள்.
பாக்கியிருந்த நித்தியமல்லிகை, அரளி, செம்பருத்திச் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகையில், மதமதவென்று இந்தச் செடிகள் ஆறு மாதத்தில் எப்படி வளர்ந்துவிட்டன என்று ஆச்சர்யமாக இருந்தது.
அவர்கள் அந்த வீட்டுக்குக் குடிவந்து எட்டு மாசங்கள் பூர்த்தியாகிவிட்டன.
உள்ளங்கை அகலத்துக்கு இருந்தாலும், சொந்த வீடு.
ஒரு கிரவுண்ட் நிலத்தில், தோட்டத்தால் சூழப்பட்ட அடக்கமான வீடு.
இன்னும் துப்புறவாய் வீட்டு வேலைகள் முடிந்துவிட்டன என்று சொல்ல முடியாது.
மாடி கைப்பிடிச் சுவரிலும், வீட்டின் பின்பக்கமும், பூச்சுவேலைகள் பாக்கி இருக்கின்றன.
மாடியில் ஓர் அறை போடலாமென்று முதலில் நினைத்து, ஜன்னல் விளிம்புவரை சுவர் எடுத்துவிட்டு, பின், எக்கச்சக்கமாய் பட்ஜெட் கையைக் கடித்துவிட, அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டதில், சிவப்புச் செங்கல் மொட்டைச்சுவர் மாடியிலிருந்து தெருவில் போவோர் வருவோர்களைப் பார்த்துச் சிரிக்கிறது.
மின்விசிறி, இன்னும் சாப்பாட்டுக் கூடத்துக்கு மாட்டவில்லை.
படுக்கையறை அலமாரிகளுக்கு, பெயிண்ட் அடிக்கவில்லை.
இப்படித் தொட்டுத்தொட்டு கைவைத்தால், பதினைந்து இருபது ரூபாயை இழுத்துவிடுகிற அளவுக்கு வேலை பாக்கியிருக்கிறது.
ஆனாலும், சொந்த வீடு என்கிற பெருமை, மகிழ்ச்சி அலாதிதான்.
நாலைந்து குடித்தனக்காரர்களுடன் ஒண்டிக்கொண்டு வாழ்ந்து வந்தவர்களுக்கு, இந்தத் தனி வீடும், தனி கழிப்பறைக் குளியலறை வசதியும், தனிக் கிணறும், ஸ்விட்ச் போட்டால் மோட்டார் ஓடி குழாய்களில் தண்ணீர் வருவதும் ராஜவாழ்க்கையாகப் படுவது நியாயம்தான்.
மலர்விழியின் தந்தை முத்தையா, ஏஜீஸ் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்.
காலம் இருக்கிற இருப்பில் சொந்தத்தில் நிழல் கொடுக்க ஒரு கூரை இல்லாவிட்டால் எப்படி என்ற ஞானோதயம் வர, பத்து நண்பர்களாகச் சேர்ந்து தாம்பரத்துக்குப் பக்கத்தில் முடிச்சூர் போகும் சாலையில் மலிவாக வந்த பத்து கிரவுண்ட் நிலத்தை வாங்கி, ஆளுக்கு ஒரு கிரவுண்டாகப் பிரித்து, அவரவர் அந்தஸ்து இடம்கொடுத்த விதமாய் சின்னச் சின்னதாய் வீடுகளைக் கட்டிக்கொண்டு குடியேறியவர்களில் முத்தையாவும் ஒருவர்.
முத்தையா - கல்யாணி தம்பதிக்கு நாலு குழந்தைகள்.
மூத்தவள் மலர்விழி.
அடுத்து, மங்கை எனப்படும் மங்கையர்க்கரசி.
மூன்றாவது, பாண்டியன்.
கடைக்குட்டி, எழிலரசி.
முத்தையா, தமிழைக் காதலிப்பவர். அந்த ஈடுபாட்டைத் தன் குழந்தைகளுக்கு வைத்த பேர்களால்கூட வெளிப்படுத்தியவர். கீழ்க்கடை குழந்தைகள் பிறந்தால், கலைமகள், வேழவேந்தன் என்ற பெயர்களை வைக்க வேண்டுமென்று அவர் ஆசைப்பட்டது, எழிலரசிக்குப் பிறகு கல்யாணி கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் ஈடேறாமல் போய்விட்டது.
மலர்விழி, பி.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு, ஆயிரம் விளக்கில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக வேலைபார்க்கிறாள். மாசம் எல்லாமாகச் சேர்ந்து நானூற்று எழுபது வரும். போனஸ்ஸும் உண்டு.
மங்கை, பி.எஸ்.ஸி. ஹோம் சயன்ஸ் கடைசி வருஷம் படிக்கிறாள். இன்னும் ஒரு மாசத்தில் இறுதிப் பரிட்சை. நல்லவிதமாய் பாஸ் செய்து, அதிருஷ்டம் இருந்து சீக்கிரமே ஒரு வேலையும் கிடைத்துவிட்டால், எல்லாவற்றுக்கும் வசதியாய் இருக்கும்.
பாண்டியன், ப்ளஸ்டூ முதலாண்டும், எழிலரசி எட்டாவதும் படிக்கிறார்கள்.
இவர்களைப்பற்றிக் கவலைப்பட இன்னும் சில வருஷங்கள் தாராளமாய் போகலாம்.
கூடத்துக் கடிகாரம் ஏழு மணி அடிக்கும்வரை தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த மலர்விழி, நாழி ஆகலியாம்மா?
என்று அப்பா குரல் கொடுத்ததும், பைப்பைச் சுற்றி வைத்துவிட்டு உள்ளே வந்தாள்.
முதல்நாள் இரவு இஸ்திரி செய்திருந்த புடவை, ஜாக்கெட்டை அலமாரியிலிருந்து எடுத்து வெளியே வைத்துவிட்டு, உள்பாவாடை, பாடி, துண்டு சகிதம் குளிக்கச் சென்றாள்.
குளித்து, அலங்காரத்தை முடிக்கையில், கடிகாரம் ஏழரை என்றது.
தட்டைப் போட்டுக்கொண்டு, அம்மா உணவு பரிமாறியதைச் சாப்பிட்டு, தட்டைத் தேய்க்கப் போட்டுவிட்டு, கை கழுவி, புடவை மாற்றி, சாப்பிட்டதால் அழிந்துவிட்ட பவுடரை இன்னும் கொஞ்சம் பூசி சரிசெய்து, அம்மா நீட்டிய டிபன் பாக்ஸை ஹாண்ட் பாகில் வைத்தபின், நா வரேன்…
என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.
முடிச்சூர் ரோட்டில் பத்து நிமிஷங்கள் போல நடந்து, தாம்பரம் ஸ்டேஷனை அடைந்து, மின்சார வண்டியைப் பிடித்து, சைதாப்பேட்டை வரைக்கும் சென்றாள். அங்கிருந்து பஸ் ஏறி, ஆயிரம் விளக்கில் இறங்கி, கொஞ்சம் நடந்து, அலுவலகத்தை அடைந்தாள்.
மானேஜர் ஊரிலில்லாமல் இருந்ததால், அத்தனை ஜரூராக யாரும் வேலை செய்ய முனையாமல், நிறைய பேசி, சிரித்து, கொஞ்சமாக வேலைபார்த்துப் பொழுது போக்கிக்கொண்டிருக்கையில், சற்றும் எதிர்பாராமல் முத்தையா போனில் மகளை அழைத்தார்.
என்னப்பா?
ஒண்ணுமில்லம்மா… பொன்னுசாமி ஆபீஸுக்கு வந்துட்டுப் போனார்… அந்த பண்ருட்டி வரன் ஏதோ வேலையா மெட்ராஸுக்கு வந்திருக்காராம்… சாயங்காலமா பொண்ணுபாக்கறதை வெச்சுக்கலாம்னு சொன்னார்… நா இப்பவே கிளம்பி வீட்டுக்குப் போயி, ஏற்பாடுகளைக் கவனிக்கறேன். நீ அரைநாள் லீவு போட்டுட்டு வந்துட முடியுமா?
மலர்விழி சூள்கொட்டினாள்.
என்னப்பா இப்படி திடும்னிட்டு? ரெண்டு நாள் முன்னாலியே சொன்னா என்னவாம்! அக்கௌண்டன்ட் என்ன மூட்ல இருக்காரோ!
போனாப் போவுதும்மா… அவங்களுக்கு என்ன அவசரமோ! பொண்ணைப் பெத்த நாமதான் விட்டுக்குடுக்கணும்… விவரத்தைச் சொன்னா, ஆபீஸ்ல புரிஞ்சுப்பாங்க… நீ மூணு மணிக்கெல்லாம் வந்துடறியா?
வருவதாகச் சொல்லிவிட்டு, மலர்விழி எழுந்து தலைமைக் கணக்கரின் அறைக்குச் சென்றாள்.
பொய்க் காரணம் எதையும் கூற விருப்பமில்லாமல் உண்மையைச் சொல்லி, அனுமதி வாங்கிக்கொண்டு பையுடன் வெளியில் வந்தாள்.
வெயில் காட்டமாக இருந்தது.
நிதானமாக நடந்து பஸ் ஸ்டாண்டை அடைந்து, சைதாப்பேட்டை பஸ்ஸுக்காகக் காத்திருந்து, அது வந்ததும் ஏறி, காலியான சீட்டில் உட்கார்ந்தபோது, இந்த எட்டு மாச காலத்தில் தன்னைப் பார்க்க வரும் மூன்றாவது ஆசாமி இன்று வரப்போகிற நபர் என்கிற விஷயம் ஞாபகத்துக்கு வர, சந்தையில் மாடு பார்க்கிற மாதிரி அவமானப்படுத்தப்படும் இந்த அனுபவம் இன்னும் எத்தனை நாளைக்கோ என்ற சலிப்புக்கலந்த கோபம் அவளுள் விரவியது.
2
முத்தையா, காரும் ஆளுமாகக் கொடிகட்டி வாழாவிட்டாலும், ஓரளவுக்கு வசதிகொண்ட வருமானக்காரர்தான்.
பூர்வீக சொத்தாக ஆரணியில் தந்தை வைத்துவிட்டுச் சென்ற தென்னந்தோப்பையும், இரண்டு ஓட்டு வீட்டையும், சென்னையிலும், பம்பாயிலும் இருந்தபடி சரியாகப் பராமரிக்க இயலவில்லை என்று அவரும் தம்பியுமாய் தீர்மானித்து, அவற்றை விற்றுவிட்டு வந்ததை ஆளுக்குச் சரிபாதியாகப் பிரித்து பாங்கில் போட்டுவைத்திருந்ததன் வட்டிப்பணமும், மாசச்சம்பளமாக வரும் எட்டு நூறு ரூபாயும் அவரது குடும்பத்தின்