Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Theevu
Kaadhal Theevu
Kaadhal Theevu
Ebook109 pages42 minutes

Kaadhal Theevu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114202208
Kaadhal Theevu

Read more from Hamsa Dhanagopal

Related to Kaadhal Theevu

Related ebooks

Reviews for Kaadhal Theevu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Theevu - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    காதல் தீவு

    Kaadhal Theevu

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    மல்லிகா ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் ஒட்டிக் கொண்டாள். நீண்ட பின்னலை மார்பில் எடுத்துவிட்டு அந்த சின்னக் கண்ணாடியில் முன்னும் பின்னும் பார்த்தாள். திருப்தியாக இருந்தது.

    வெளிர் நீல சேலை அணிந்து அதே நிறத்தில் சோளி அணிந்திருந்தாள். காதில் சிறிய தோடுகள். கழுத்தில் ஹைதராபாத் முத்து மாலை. கைகளில் பிளாஸ்டிக் வளைகள், விலை மலிவானவை.

    இடது கரத்தில் இளங்கோ, அவளின் சென்ற பிறந்த நாளின்போது பரிசளித்த டைட்டானிக் வாட்ச்.

    அவள் அறையிலிருந்த பெண்கள் முன்னரே வகுப்பிற்குப் போய் விட்டிருந்தார்கள். ஒருவேளை வகுப்பிற்கு எனச் சொல்லிக் கொண்டு நண்பர்களுடன் எங்காவது சுற்றவும் போய் இருக்கலாம். மல்லிகா வகுப்பு நேரத்தில் எங்கும் போக மாட்டாள். ஒரு வகுப்பைக்கூட தவிர்க்காமல் போய் வரும் மருத்துவக் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவி.

    எட்டி அறைக்கு வெளியே பார்த்தாள், இரும்பு கேட் அருகே பூங்குன்றன் மோட்டார் சைக்கிளைக் காணவில்லை. அவன் பெரும்பாலும் வந்து அவளை வகுப்புக்கு அழைத்துப் போவான்.

    சேலம் மோகனூரைச் சேர்ந்தவர்கள் என்கிறதால் ஏற்பட்ட நட்பு பூங்குன்றன் முதலாம் ஆண்டு மாணவன். பாடத்தில் சந்தேகம் என்றால் மல்லிகாவைத்தான் கேட்டுத் தெளிந்து கொள்வான்.

    மல்லிகா படிப்பில் முதலாவதாய் வரும் மாணவி, எப்படியும் தங்கப் பதக்கம் கிடைக்கும் என மற்றவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

    ஒரே ஊர் என்பதால் பூங்குன்றனும் மல்லிகாவும் நல்ல நட்பினர். அது மட்டுமல்ல, இறுதி ஆண்டு மாணவன் இளங்கோவும் அவர்கள் ஊரைச் சேர்ந்த மாணவன்தான். படிப்பில் சுமார் ரகம்.

    அவனும் இவர்களுடன் தோழமை பூண்டிருந்தான். இளங்கோவும் பூங்குன்றனும் கவுண்டர் வீட்டுப் பையன்கள். அதிலும் பூங்குன்றன் ஊர் நாட்டாமையின் ஒரே மகன். இளங்கோவும் வீட்டின் ஒரே மகன்தான்.

    ஆனால் சாதி என்று எடுத்துக் கொண்டால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவள் மல்லிகா. இருப்பினும் ஸ்காலர்ஷிப்பில் படித்து வருபவள். சந்தேகங்களைத் தெளிவிப்பவள்.

    இளங்கோவுக்கும் அவளுக்கும் நட்பே ஒரு சண்டையில்தான் ஆரம்பித்தது. பட்டிமன்றம் ஒன்றில் வீட்டில் ஆணாதிக்கம் அதிகமா பெண்ணாதிக்கம் அதிகமா என்ற தலைப்பில் இருவரும் எதிர் எதிர் அணியில் பேசினார்கள்.

    இருவரையும் சமாதானப்படுத்த பட்டிமன்றத் தலைவர் பாடுபட்டுத் தோற்றார். பெண்ணாதிக்கம் மருந்துக்கும் இல்லை வீடுகளில் என்று பேசி கைத்தட்டலை அள்ளிச் சென்றாள் மல்லிகா.

    இருவரும் நன்கு கவிதை எழுதுவார்கள், இளங்கோவின் கவிதைகள் மருத்துவ மலரில் வெளியானால் மல்லிகாவின் கவிதைகள் பல பத்திரிகைகளில் கட்டம் கட்டி வெளியாயின.

    ஆரம்பத்தில் ஒருவர் கவிதையில் மற்றவர் ஈர்க்கப்பட்டார்கள்.

    மல்லிகா, நீங்க எழுதற கவிதை ஒவ்வொன்றும் பெண்களின் நிலை சொல்லுது ஆணாதிக்கம் ஒழியனும்னு சொல்லுது. ரொம்ப அழகா எழுதறிங்க

    என் அழகைப் பார்த்துட்டு என் கவிதையைப் புகழலியே…

    ஐயோ நம்புங்க மல்லிகா, நீங்க அழகு. ரொம்ப அழுகு அதுவும் நம்ம கிராமத்து வனதேவதைன்னும் சொல்லலாம். ஆனா அதுக்காக நீங்க எழுதற கவிதையைப் புகழனும் என்கிறது இல்லை மல்லிகா…

    தேங்க் யூ ஆண்கள் பெண்களிடம் இருக்கிற திறமை எதையாவது புகழ்ந்தா மறைமுகமா அவங்களைப் புகழறதுன்னு அர்த்தம்னு சொல்வாங்க. அதான் ஸாரி. நீங்களும் நல்லாவே எழுதறீங்க. அதுவும் வறுமையைப் பற்றி நீங்க எழுதின பாதையோரப் பசிப் பானைகள் எனக்குப் பிடிச்ச கவிதை

    நட்பு கவிதையில் ஆரம்பித்தது. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நித்தம் சந்திப்பில் முடிந்தது.

    சந்திக்க முடியாத காலங்களில் ஒரே விடுதியில் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள் என்பதால் பூங்குன்றனிடம் செய்தி சொல்லி அனுப்புவாள் மல்லிகா.

    சேர்ந்து படித்த ஆரம்ப மூன்று ஆண்டுகளும் நல்ல நட்பில் கழிந்தது.

    ஒருநாள் இருவரும் மனம் ஒன்றி கடற்கரைக்குப் போனார்கள். கூட்டம் அதிகம் இல்லாத கட்டு மரங்களின் பக்கம் ஈர மணலில் அமர்ந்தார்கள்.

    நீல வானமும் நீலக் கடலும் சங்கமித்திருக்க மணல் கரையும் அதனுடன் சமரசம் செய்து கொண்டிருந்தது.

    லேசாக வானம் தூறிக் கொண்டிருந்தது. மக்கள் வெள்ளம் தூறலுக்குப் பயந்து பறந்தோடிவிட்டது.

    இவர்கள் மட்டும் சுகமாய் அமர்ந்திருந்தார்கள்.

    மல்லிகா, ஏன் பேசவே மாட்டேன் என்கிறீங்க…

    உம்… என்னைச் சொல்றீங்களே. நீங்க பேசனீங்களா. என்ன பேசறது என்கிறதை இங்கே வந்ததும் மறந்துடறேன். மனசு முழுக்க எதையோ சொல்லிடனும் என்கிற தவிர்ப்பு. ஆனா இளங்கோ… உங்களைப் பார்த்ததும் எதையும் சொல்லாமலே எல்லாத்தையும் சொல்லிட்ட நிறைவு வந்துடுது. உங்களைவிட்டு பிரிஞ்சதும்தான் ஐயோ அதை சொல்லியிருக்கணும்னு தோணுது…

    கரெக்டா சொல்லிட்டீங்க. என் மனசும் அப்படித்தான் நினைக்குது. மழைத் தூறல் போடுது. அதனாலே கூட்டம் கலைஞ்சு போயிருச்சு. இன்னும் கொஞ்ச நேரத்தில் மொத்த கூட்டமும் போயிடும். அப்புறம் நானும் நீங்களும்தான்… கரை அலைகளில் கால்கள் புதைய தொடுவானத்தையும் கடலையும் பார்த்தபடி நடந்துட்டே இருக்கணும். பேசக்கூடாது. நாம கைகோர்த்துட்டு நடக்கணும். எல்லாமே பேசிட்ட நிறைவு ஏற்படும்.

    அட... எனக்கும் அப்படித்தான் தோணுது. நான் நினைச்சதை நீங்க அப்படியே சொல்லிட்டீங்க. உண்மைதான். என் மனசும் அதைத்தான் நினைக்குது…

    மல்லிகா.. இளங்கோ ஜீன்ஸ் பேண்ட் மடங்க அமர்ந்திருந்தான். அவன் டைட் பனியனில் எழுத்துகள் மடங்கியிருந்தன. புலனாகவில்லை. மல்லிகா ஒற்றைப் பின்னலிட்டிருந்தாள்.சிவப்பு ரோஜா காதோரம் செருகியிருந்தாள். மையிடப்படாத

    Enjoying the preview?
    Page 1 of 1