Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ninaivalaigal Thodarnthu Vanthal...
Ninaivalaigal Thodarnthu Vanthal...
Ninaivalaigal Thodarnthu Vanthal...
Ebook81 pages37 minutes

Ninaivalaigal Thodarnthu Vanthal...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115702595
Ninaivalaigal Thodarnthu Vanthal...

Read more from Lakshmi Rajarathnam

Related to Ninaivalaigal Thodarnthu Vanthal...

Related ebooks

Reviews for Ninaivalaigal Thodarnthu Vanthal...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ninaivalaigal Thodarnthu Vanthal... - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    நினைவலைகள் தொடர்ந்து வந்தால்…

    Ninaivalaigal Thodarnthu Vanthal…

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    "எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்

    அத்தனை மணங்கள் திருமணங்கள்

    …………………

    தடதடவென்ற கை தட்டல்கள்…

    உஷா, எக்ஸ்லெண்ட்… மார்வலெஸ்…

    ஊட்டி ப்ளவர் ஷோ. சுற்றி வந்த ராஜாராமன் திடுக்கிட்டு நின்றான். வண்ண மலர்களின் நடுவே நின்ற பெண் மலர்கள்… அவர்களின் நடுவே பெல்ஸ், சஃபாரி சூட், சைட் பர்ன்ஸ், ஒரு பாஷனை உருவாக்க ஸ்டெப் கட்டிங் ஹேர் ஸ்டைல்-

    உஷா அடுத்தது ஒருதலை ராகம் – 'குழந்தை பாடும் தாலாட்டு பாடு'.

    நோ, நோ… அது நான் பாட வேண்டிய பாட்டு என்றது ஓர் ஆண் குரல்.

    மலர்களில் ஆடும் புதுமையே என்று அடி எடுத்துக் கொடுத்தது இன்னொரு குரல்.

    பட்டு உடுத்திய புதுமண ஜோடி ஒன்று கை கோர்த்துக் கொண்டு போயிற்று.

    நல்லி, சாரதா, லஷ்மண்ஸா என்ற கேலியைத் தொடர்ந்து காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டும் வச்சு - என்ற பாடல் தொடர்ந்து ஒலித்தது.

    இனிமையான குரல்; நெஞ்சைத் தொடும் வளம்; அருவியின் சிலுசிலுப்பு. - இதைப் பாடியது எந்தப் பெண்?

    தெரிந்து கொள்ளா விட்டால் ராஜாவுக்குத் தலை வெடித்து விடும் போல இருந்தது. மெல்ல தலையை நீட்டினான். அது கல்லூரி மாணவ-மாணவியர் கும்பல். பாடியவள் அழகாக இருந்தாள்.

    ஏய் உஷா, போதும் நிறுத்து என்று ஒருத்தி பாட்டை நிறுத்தினாள்.

    பசிக்கிறது - அந்த கும்பலம் கிளம்பியது.

    அந்த அழகியின் பெயர் உஷா. ராஜாவின் உதடுகள் முணுமுணுத்தன. அவர்கள் தடதடவென்று கிளம்பி விட்டார்கள். எத்தனை பேர்கள் சுற்றியிருந்தாலும் சட்டென்று ஒளி குறைந்தாற் போல ஏன் ஒரு வெறுமை! அவனும் மெல்லக் கிளம்பினான்.

    அடுத்த இரண்டு தினங்களில் அவன் அவர்களைப் பல இடங்களில் பார்த்தான். கலகலவென்ற சிரிப்பலைகள், கேலிகள், வரையறையில்லாத பேச்சுக்கள் - தானும் மாணவனாக இருந்தால் அவர்களில் ஒருவனாக இருக்கலாமே! எங்கு நின்றாலும் தனிப்படத் தெரியும் உஷாவுடன் பேசலாமே!

    உஷா! உஷா! எங்கு போனாலும் உஷாதான் மனதில் நின்றாள். இது ஏன்? அவனுக்குப் புரியவில்லை.

    ஊட்டியிலிருந்து திரும்பிப் போக ரிஸர்வேஷன் கிடைக்கவில்லை. அவன் முப்பத்தைந்து வயது வாலிபன்தான். இவ்வளவு சின்ன வயதிலேயே முன்னுக்கு வந்தவன். டிஸ்ப்ளே அண்ட் டிஸ்ப்ளே என்ற அவனுடைய அட்வர்டைஸ்ஸிங் ஏஜென்ஸியின் புகழ் எங்கும் பரவியிருந்தது. டி.டி.ஏ.ஏ. என்ற பெயர் வியாபார உலகில் பிரசித்தம்.

    அப்படி இருந்தும் அவனுக்கு ரிஸர்வேஷன் கிடைக்கவில்லை. உதக மண்டலம் ரயில் நிலையத்தில்

    தீப்பெட்டியின் அடுக்குகளாக நின்றன ரயில் பெட்டிகள். ஆனால் இடம்தான் கிடைக்கவில்லை. மறுநாள் அவன் கோயம்புத்தூரில் இருக்க வேண்டும். ஒரு பெட்டியில் உஷாவும் அவள் நண்பர்களும் இருந்தார்கள்.

    "எனக்கு ஓர் இடம் கிடைக்குமா? ரிஸர்வேஷன் கிடைக்கவில்லை.

    அவர்கள் தங்களுக்குள் கலகலத்தார்கள்.

    "ஓ… எஸ். எங்கள் குழுவில் இரண்டு பேர்கள் மைசூர் போய் விட்டார்கள். தாங்கள் எங்களுடன் வரலாம்.

    கோயம்புத்தூர் வரையில் ராஜாராமன் அவர்களுடன் வந்தான். அந்தக் கலகலப்பு, வித்தியாசமில்லாத பேச்சுக்கள், விதரணையை எதிர்பார்க்காத கேலிகள்… கோயம்புத்தூரில் இறங்க மனமில்லாமல் இறங்கினான். சில மணி நேரங்கள் அவர்களில் ஒருவனாக - உஷாவுடன் அப்படியும் இப்படியுமாகப் பேசிய சொற்கள் - அவனுடைய வயதில் பத்தாண்டுகளைக் குறைத்தாற் போல உணர்வைத் தூண்டின.

    அவனுக்குத் தன் மனைவி ரமாவின் நினைவு வந்தது. கல்யாணம் ஆன நாள் முதல் வியாதிதான். மண வாழ்க்கையின் சரிவுதான் உழைப்பில் உயர்வைக் கொடுத்தது. தனிமையில் கிடைக்கும் சமயங்கள் ஆண்மை விழித்துக் கொண்டு போடும் கூப்பாடுகள்-

    எத்தனை காலம் செவி சாய்க்காமல் இருக்க முடியும்? உஷாவின் குரல் நெஞ்சைத் தொட்டது. நண்பனின் வற்புறுத்தலுக்கு இணங்கி டெல்லியில் கேட்ட கஜலில் இல்லாத மயக்கம் உஷாவின் குரலுக்கு இருக்கிறது! ஆனால் தன்னைவிட எத்தனை சிறியவள்!

    சென்னை திரும்பிய பின்பும் கூட சில தினங்கள் உஷா ராஜாவின் நினைவில் நின்றாள்.

    அதிகாலையிலேயே கண் விழித்துக் கொண்டு விட்டாள் உஷா. பக்கத்துப் படுக்கையில் வித்யா இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கினாள். வீடே உறக்கத்தில் மூழ்கிக் கிடந்த பல்லைத் தேய்த்துக் கொண்டாள். ஒரு கப் காப்பி

    Enjoying the preview?
    Page 1 of 1