Kaadhal Sathurangam
()
About this ebook
He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Read more from Indira Soundarajan
Pei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5Aranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Rajathanthiran Rating: 5 out of 5 stars5/5Sivaragasiyam Rating: 5 out of 5 stars5/5Dhinam Oru Uyir! Rating: 5 out of 5 stars5/5Asura Jathagam Rating: 5 out of 5 stars5/5Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Thiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Chidambara Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Sivam Rating: 4 out of 5 stars4/5Kaatru… Kaatru... Uyir Rating: 3 out of 5 stars3/5Thottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Aval Oru Savithri Rating: 5 out of 5 stars5/5Manam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Nandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Mandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Markazhi Roja Rating: 5 out of 5 stars5/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Maayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Nooravathu Kadathal Rating: 5 out of 5 stars5/5Sithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Oru April Puthisaali Rating: 5 out of 5 stars5/5Neela Neela Oodi Vaa Rating: 5 out of 5 stars5/5Rudhra Veenai - Part 3 Rating: 4 out of 5 stars4/5Naga Vanam Rating: 5 out of 5 stars5/5Mandhira Valai Rating: 5 out of 5 stars5/5
Related to Kaadhal Sathurangam
Related ebooks
Pon Magal Vanthal Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsSorna Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsOlivatharkku Vazhiillai Rating: 5 out of 5 stars5/5En Peyar Ranganayagi Rating: 0 out of 5 stars0 ratingsSutri Sutri Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsJenma Jenmamai Rating: 0 out of 5 stars0 ratingsArul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Nilavu Rating: 5 out of 5 stars5/5Ainthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Saranagadhi Rating: 5 out of 5 stars5/5Nee Nadhi Pola Odikondiru... Rating: 4 out of 5 stars4/5Kaathirukka Sonnaye! Rating: 5 out of 5 stars5/5Azhwarkalai Aarathippom Rating: 0 out of 5 stars0 ratingsThulli Varukuthu Vel Rating: 0 out of 5 stars0 ratingsThevar Koyil Roja! Rating: 0 out of 5 stars0 ratingsEnge En Kannan Rating: 0 out of 5 stars0 ratingsMaayamaga Pogirargal Rating: 0 out of 5 stars0 ratingsKaala Vettai Rating: 0 out of 5 stars0 ratingsYathirai Gnanam Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Paathiramarinthu... Rating: 0 out of 5 stars0 ratingsAathma Rating: 5 out of 5 stars5/5Pallavan Pandiyan Baskaran Rating: 0 out of 5 stars0 ratingsKai Niraiya Vairam Rating: 0 out of 5 stars0 ratingsRudhra Veenai - Part 2 Rating: 4 out of 5 stars4/5Marma Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsRanga Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Vaanvavil Rating: 0 out of 5 stars0 ratingsMaayap Punnaigai Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Kaadhal Sathurangam
0 ratings0 reviews
Book preview
Kaadhal Sathurangam - Indira Soundarajan
http://www.pustaka.co.in
காதல் சதுரங்கம்
Kaadhal Sathurangam
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
சமர்ப்பணம்!
திட்டமிட்ட செயல் திறன், உணர்வு வயப்படாத திடத்தன்மை, தளராத மனோ உறுதி, சேவை உதவி இவைகளில் அசாத்ய ஈடுபாடு என்று பாத்திரச் சிறப்பால் என்னை மிகக் கவர்ந்த
என் இனிய நண்பன்
செல்லப்பா
என்கிற
SP. வெங்கடசுப்ரமண்யனுக்கு
இந்நூலை
சமர்ப்பணம் செய்கிறேன்.
- இந்திரா செளந்தர்ராஜன்
என்னுரை!
இது ஒரு வெற்றித்தொடர்! இதன் வெற்றியை இந்தத் தொடரை இதயத்தில் எழுதத் தொடங்கும் போதே தீர்மானித்துவிட்டேன். இது நிச்சயம் ஒரு சலசலப்பை பார்வையை உருவாக்கப்போகிறது என்றும் நம்பினேன்.
என்னை அது ஏமாற்றவில்லை.
பொதுவில் காதல் காதலிப்பவர்களை வேண்டுமானால் படுத்தி எடுக்கும். பார்வையாளர்களுக்கும், வாசகர்களுக்கும் அது என்றும் சஞ்ஜீவி பர்வதம்தான்.
அதனால்தான் சினிமா, டி.வி., நாவல் எல்லாவற்றிலும் அதற்கு அப்படி ஒரு ரத்தினக் கம்பள வரவேற்பு…
புராணகாலம் தொட்டே இதுதான் நிலை…
ஏன் இந்த ஒரு விஷயம் மட்டும் திகட்டாதபடி ஜெயித்துக் கொண்டேயிருக்கிறது என்று நான் யோசித்ததுண்டு. வாழ்வில் எத்தனையோ உணர்வுகள். பாசம், அன்பு, கடமை என்று அந்த உணர்வுகளின் தளங்களும் மிகப் பெரியவை. ஆனால் காதல் உணர்ச்சி மட்டும் எல்லா மனித மனதுக்கும் பொதுவாக இருக்கிறது. அதனால்தான் அது மிக நேசிக்கப்படுகிறது.
இதே காதல் இளமையில் மயக்கி பின் நடுமையில் மாறிப்போய் விடுகிறது. அதைத்தான் இந்த தொடரில் சொல்லியிருக்கிறேன்.
பொதுவில் காதல் என்பது என்ன? அது ஒரு அன்புமயமான ஒன்று என்று மட்டும் சொல்லிவிட முடியாது. பின் அம்மா அப்பா மேல், சகோதர சகோதரிகள் மேல் இருப்பதும் அன்புதானே… அதைக் காதல் எனலாமா? என்றெல்லாம் கேள்விகள் எழும்.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காமத்தின் நிமித்தமும் நேரிடும் அன்புதான் காதல். அதை எப்படி காமமில்லாத நட்பு, பாசத்திடம் பொருத்திப் பார்க்க முடியும்?
அதனால்தான் பல காதல் காமம் தீர்ந்தவுடன் அதுவும் தீர்ந்துவிடுகிறது.
காமம் வேறு காதல் வேறல்ல இரண்டு எமனும் ஒன்றுதான் என்பது சிலரின் காட்டமான வாதம். என் வரையில் அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்தில் காதல் என்றால் அது அவள் உருவ ஈர்ப்பால் வந்ததுதானே?
பழகிப் பார்த்து அன்பு பரிமாற்றம் செய்து கொண்டு மனதைத் தான் காதலிக்க வேண்டும் என்றால் உலகில் ஊனமுற்ற, குருட்டுப் பெண்களே அதிகம் காதலிக்கப் படுவர். ஏனென்றால் அவர்கள் மனதிற்குதான் ஊனத்தை வென்ற சக்தியும், ஏகத் தனித் தன்மைகளும் உண்டு.
ஆனால் அவர்களை இன்று எண்ணிப் பார்க்க ஒருவரும் இல்லை. அழகை பார்த்து விழத்தான் ஆசைப் படுகிறோம்.
இந்த விடுதலைதான் சற்றே தெளிந்த காமத்தைக் கடந்த மூத்த சமூகம் எதிர்க்கிறது.
காமத்திற்காக உயிரை விடாதே. அதற்காக சாதி சமய இரு மொழியின் தனித்தன்மைகளை துறந்து விடாதே. நீ எதிர்பார்க்கும் காமம் நாங்கள் உனக்காக அழைத்து வரும் பெண்ணிடமும் உண்டு. அவளிடம் அதைப் பெற்று, அவளுக்கும் அதைக் கொடுத்து மரபுகளைச் சிதைக்காமல், மதியிழக்காமல் வாழ்ந்து செல்… என்கிறது.
இது எந்த அளவு சரி…? இது எந்த அளவு சாத்யம்? இது எந்த அளவு நியாயமானது? என்பதெல்லாம் விடை காணப்படாத கேள்வியாகவே இன்றளவும் இருப்பவை.
இத்தொடரில் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தேடிப் பார்த்தேன். ஒரு நடுநிலையாளன் போல இரு தரப்புக்கும் இடமளித்துப் பேசிச் செயல்பட்டேன். இறுதியில் என் கருத்தாக காதலர் பக்கம் சாய்ந்து இந்த கதைப் போக்கை பொறுத்தமட்டில் அப்படிச் செய்வதே சரி என தீர்மானித்தேன்.
என் முடிவை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
வாசக உலகம் பலத்த ஆதரவு தந்தது.
'இதயம் பேசுகிறது' இதழும் புத்தெழுச்சியோடு வெளியிட்டு உற்சாகமூட்டியது. ஆசிரியர் முருகன் மிக வித்யாசமாக என்னை மர்மக்கதை எழுதப் பணிக்காமல் குடும்பப்பாங்காக எழுத வைத்துப் பார்த்து எனக்கு சுதந்திரம் அளித்தார். அவர் ஆசிரியர் குழுவினர் காட்டிய அன்பும் ஆதரவும் மறக்கமுடியாதது.
இதயம் பேசுகிறது இதழிற்கும் அதன் வாசக உலகத்திற்கும் இதை நூலாக்கி அளிக்கும் திருமகள் நிலையம் பதிப்பகத்திற்கும் என் நன்றிகள் என்றும் உரியது.
27.4.99
மதுரை-3
பணிவன்புடன்,
இந்திரா செளந்தர்ராஜன்
வாசகர் கடிதம்
வித்யாசமான தொடர்… அதுவும் இந்திரா செளந்தர்ராஜனின் கைவண்ணத்தில் இது மிக வித்யாசமான தொடர். இரண்டு காதல் ஜோடிகளை களத்தில் உலவ விட்டு முதல் முறையாக இரண்டு ஜோடிகளின் நான்கு பெற்றோர்களையும் ஒன்று சேர்த்து குழுவாக்கி, அவர்களை பொதுவான வில்லனாக்கி ஆசிரியர் கதை அமைத்திருப்பது புதுமையான ஒன்று.
முடிவில் காதல் ஜோடிகளை பிரிக்காமல் சேர்த்து வைத்து புண்ணியத்தை கட்டிக் கொண்ட விதத்தில் அவரைப் பாராட்டுகிறேன்.
பத்மா ரவி, செங்கல்பட்டு.
இதயம் வந்ததும் முதலில் வாசிப்பது இந்த தொடரைத்தான். ஒரு மர்மக்கதை போல அத்தனை வித்யாசம். கொலை, ரத்தம், போலீஸ் துப்பு துலக்கல் எல்லாம் இருந்தால் தான் விறுவிறுப்பு வரும் என்று நினைத்திருந்த எனக்கு இந்திரா செளந்தர்ராஜன் சரியான பாடம் கற்பித்தார் என்றே சொல்ல வேண்டும்.
மனித மனங்களையும் அதன் கோணல்களையும் சொல்லும் விதமாக சொன்னாலே மர்மம் தானாக வரும் என்று அவர் நிரூபித்திருக்கிறார்.
காதலை அக்கு வேறாக ஆணி வேறாக அலசிச் சலித்துப் பார்த்துவிட்ட இந்த தொடர் என் வரையில் ஒரு குறிஞ்சிமலர்!
R பாபு கணேஷ், திருச்சி - 2
தொடரை வாசிக்கத் தொடங்கும் போதே முடிவெடுத்து விட்டேன். இது விஷுவல் மீடியாவுக்கென்றே பிரத்யேகமாக சிந்தித்து இந்திரா எழுதும் கதை என…
என் நினைப்பை அவர் பொய்யாக்கவில்லை. விரைவில் இது தொலைக்காட்சியில் வெளிப்படுத்தப் போவதாக அறிந்தேன். எப்படி கதையாக வந்தபோது கவர்ந்ததோ அதை விட மீடியாவில் இது பல மடங்கு வரவேற்பு பெறும், Best of luck.
அன்புடன்
வசந்தகுமார், மதுரை
நல்ல கதை… நல்ல நடை… நல்ல திருப்பங்கள் நல்ல அலசல்… நல்ல Lead points. நல்ல முடிவு!
அன்புடன்
மாணிக்கம், கோவை - 6
முடிவு மிக சினிமாத்தனமானது. ஆனால் நாங்கள் எதிர்பார்க்காதது. கதை மிக சுவாரஸ்யமாக சென்றது. அதே சமயம் தாவல்களும், சில இடத்தில் இழுபட்டது என்பதையும் கூறத்தான் வேண்டும். இந்திரா விஷுவல் மீடியாவில் தொடர்ந்து சாதிக்க காரணம் இந்த தொடரை படித்தால் புரிந்து விடும்.
இளசைகுமாரன், சென்னை-18
அன்புள்ள இந்திரா செளந்தர்ராஜன், வணக்கம்.
ஐயா… உங்களுக்குத்தான் எத்தனை விதமான கரங்கள்? ஒன்று சரித்திரம் எழுதுகிறது. ஒன்று மர்மத்தில் அமர்க்களம் செய்கிறது. இன்னொன்று சமூகத்தில் காதைத் திருகிச் சிந்திக்க வைக்கிறது.
கல்கி, சுஜாதாவுக்கு பிறகு பல முனைகளில், பல விதங்களில் எழுதும் ஒரே எழுத்தாளர் தாங்களே என்பது என் தீர்மானம்.
சுவை, சுவாரஸ்யம், செறிவு எல்லாம் உங்கள் எல்லா படைப்பிலும் பரவிக் கிடக்கிறது. தென் கிழக்கு மின்னலை படித்துவிட்டு இந்த காதல் சதுரங்கத்திற்கு வந்தால் அடேயப்பா எத்தனை வேறுபாடு… எத்தனை வேறுபாடு…
பெங்களூரில் உங்கள் புத்தகத்திற்கென்றே ஒரு தனி கூட்டம் இருக்கிறது. அந்த வாசகக் கூட்டத்துடன் நீங்கள் ஒருநாள் அமர்ந்து விவாதித்து விருந்தும் உண்ண வேண்டும்.
இந்த காதல் சதுரங்கம் பற்றி சன் டிவி வணக்கம் தமிழகத்தில் தான் விரிவாக அறிந்தேன். அந்த பேட்டியும் சரி, உங்கள் வெளிப்பாடும் சரி மிக அருமை.
கதை முடிவை நிச்சயமாக நான் இப்படி எதிர்பார்க்கவில்லை. Excelent அது சரி நீங்கள் காதலுக்கு எதிரியா… நண்பனா? அதுவும் புரியவில்லை.
அன்புடன்,
ஜெயந்தி நாகராஜன், பெங்களூர் - 86
காதல் சதுரங்கம்
1
"காதல்
விசித்திர மந்திரம் இது! ஓதுபவர்களுக்கு
எப்பொழுதும் நேர் எதிர் பலன்களையே
தரும்."
விடிந்து கொண்டிருக்கிறது.
இருளின் காதைப் பிடித்துத் திருகி முதுகில் நாலு வைத்து அதைத் துரத்தி அடித்தபடி நிமிர்ந்து பார்க்கிறான் கதிரவன்!
ஆடி மாதத்து வானம் ஆகையால் பழைய மெத்தையின் அழுக்குப் பஞ்சாக மேகக் கூட்டம் சூழக்கிடப்பதால் எட்டிப் பார்க்கும் கதிரவனின் கதிர்க் கரங்கள் மதுரைக்குள்ளே அவ்வளவாக ஊடுருவ முடியவில்லை!
இல்லாவிட்டால் இந்த வினாடி ஜோதி ஷங்கரின் லாவண்யமான பங்களாவின் மாடி அறைக்குள் கண்ணாடிச் சாளரம் வழியாக அது நுழைந்திருக்கும். ஃபோம் மெத்தை மேல் ரோஜா நிறக் கம்பளிக்குள் மரவட்டையாய் முகம் மட்டும் வெளித்தெரிய சுருண்டு கிடக்கும் அவன் முகத்தின் மேலும் பட்டு சுள்ளென்று இளஞ்சூட்டைத் தாளித்திருக்கும். அவனும் கண்களைக் கசக்கியபடி விழித்திருப்பான்.
இருந்தாலும் அது செய்யத் தவறியதை அலாரம் டைம்பீஸ் ஆறு மணி எனும் எல்லையைத் தொட்டு அலறியபடி செய்ய ஆரம்பிக்கிறது.
ஜோதி ஷங்கரும் அஷ்ட கோணங்களோடு சோம்பல் முறித்து பலிக்கோழி போல் சிலுப்பல்களோடு எழுந்திருக்கத் தொடங்குகிறான்.
அலாரம் சப்தம் மாடியைக் கடந்து கீழ் வரை பாய்கிறது.
நடுஹாலில் நல்ல நவீன சோபா கிடக்கிறது. அதில் இந்தியன் எக்ஸ்பிரஸை மேய ஆரம்பித்திருக்கும் அவனது அப்பா தர்மராஜன் தனது சுமாரான வழுக்கைத் தலையை உயர்த்தி மாடிப்பக்கம் பார்க்கிறார் - நிறைய ஆச்சர்யப்படுவதை அவரது பரந்த நெற்றியின் சுருக்கங்கள் காட்டுகின்றன.
கொட்டக் குழம்பாட்டம் காபி தம்ளரோடு வரும் ராஜேஸ்வரியும் அவருக்குச் சளைக்காத ஆச்சரியத்தோடு மாடியைப் பார்க்கிறாள்.
என்ன ராஜேஸ்வரி இது - அலாரம்லாம் அடிக்குது?
அதானே… ஐ. ஏ. எஸ். பரிட்சை எழுதப் போனப்ப கூட இந்தப் பய எட்டு மணிக்கு எழுந்தரிச்சதில்லியே…?
-அவர்களின் ஆச்சரியத்தைக் கூட்டுவது போல ஜோதி ஷங்கர் ஜாகிங் உடுப்புடன் படி இறங்க ஆரம்பித்திருக்கிறான்.
என்னடா ஜோதி இது அதிசயம்… ஆறுமணிக்கே எழுந்திரிச்சுட்டே! உடுப்பெல்லாமும் ஒரு மாதிரியா இருக்கு?
தர்மராஜன் வியப்பை கேள்வியாக்குகிறார்.
ஆமாம்ப்பா… இன்னில இருந்து தினம் காலைல ஓடப் போறேன். காலைல ஓடின அன்னிக்கு பூரா பிரிஸ்கா இருக்கலாமாமே...?
அப்படின்னு யார் சொன்னது?
நம்ப ஃபேமிலி டாக்டர்தான்.
சொன்னபடி அங்கேயே ஸ்டெப் எடுக்க ஆரம்பிக்கிறான்.
டேய் காபி குடிச்சிட்டுப் போடா…
எல்லாம் வந்து…
- ஓடிக் கொண்டே சொல்கிறான். வாசல் மெயின் கேட் வரை சாதாரணமாக ஓடி பின் அசுர வேகம் எடுக்க ஆரம்பிக்கிறான்… ஜாகிங் போலவே தெரியவில்லை! வேறு எதற்கு?
***
வெள்ளைத்தாளைச் சுருட்டி எடுத்துக் கொண்டு, இளக்கமான கூந்தல் பின்னலை மார்முன் போட்டுக் கொண்டு வாசலைத் தாண்டுகிறாள் வசந்தா.
அம்மா நான் இன்ஸ்ட்யூட் போய்ட்டு வரேன்…
பேசியதில் இருந்து குரலில் குயில் குடி இருப்பது தெரிகிறது. நல்ல உயரம், சிம்ரன் ஜாடை! சாதாரண கைத்தறிப் பாவாடை தாவணிதான்! ஆனாலும் தைத்து அணிந்து தாவணி முகப்பை இடுப்பில் செருகாமல் தழையத் தொங்க விட்டு நடப்பதில் அதிஅற்புத கலா லாவண்யம் இழைகிறது.
சின்ன ஸ்டிக்கர் பொட்டும், அது ஒட்டியிருக்கும் பளிச்சென்ற நெற்றியும், திருத்தமான மூக்கும், சுழித்த உதடும், ஜாம் பூசின கன்னங்களும் பிரம்மன் இவளைப் படைக்க சற்று சிரத்தை எடுத்துக் கொண்டதை உணர்த்துகின்றன.
அதிக அகலமோ இல்லை… குறுகலோ இல்லாத சுமாரான வீதி அது. ஆயிரத்து சொச்சம் சம்பளக்காரர்களுக்கு மட்டும் என்றே மாறியும் போனது. பெரும்பாலும் வாடகை வீடுகள்! அந்த வீடுகளில் விடலைகள் இருந்ததால் அவர்கள் இப்பொழுது வாசற்படியில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
வசந்தா தங்கள் வீட்டு வாசலை கடந்த பிறகுதான் உள் பக்கமே திரும்புகின்றனர். சாதாரணமாக வீட்டுக்குள் சட்டையோ பனியனோ போடவே மாட்டான் கதிரேசன், இப்பொழுதெல்லாம் தூங்கும்போது கூட அதைக் கழட்டுவதில்லை.
தெருவே அதிரும்படி பேசுவதும் 'திம்திம்' என்று நடப்பதும் நடராஜனுக்கு வாடிக்கை! அவன் கூட மாறிப் போய் 'நிதானமாக நடந்து நளினமாக பேசுவது' என்று மாறியிருக்கிறான்.
தங்கபாண்டிக்கு புரோட்டின் குறைவோ என்ன எழவோ, 18 வயதாகியும் மீசை துளிர்க்கவில்லை! முகத் தில் பால் வடிதலும் மாறவில்லை. வெம்பிப் போய் ஐப்ரோ மீசை போட்டுக் கொண்டிருக்கிறான்.
ஒரு பெண்ணால் ஒரு வீதியே இப்படி மாறிப் போகுமா என்ன! 'அழுத்தமான அழகு! அதுவும் எட்டக் கூடிய உயரத்தில்!' என்று இருந்து விட்டால் மிக சகஜமாகி விடுகிறது இந்த விஷயங்கள் எல்லாம்! ஆண்களுடைய தரப்பில் மட்டும்தானா இந்த மனவேதியல் மாற்றங்கள்… பெண்களுக்கில்லையா என்ன…?
வசந்தா முகத்திலும் ஒரு குறுஞ்சிரிப்பிருக்கிறது.'ஈர உதட்டில் சின்ன இடத்தில் அது இருக்கிறது' என்று கூற முடியாவிட்டாலும் இருக்கிறது! வாலிப பார்வைகள் தன்னை மேய்வது 'தப்பா சரியா' என்று அவளால் பிரித்துப் பார்க்க முடியவில்லை… ஆனால் உணர்ச்சிகளுக்கு அது பிடித்திருக்கிறது!
சாதாரண மெக்கானிக்கின் மகள் என்கிற தாழ்வுணர்ச்சிக்கு இவர்கள்தான் வெள்ளையடிக்கிறார்கள், வீடு கூட்டுவது… பாத்திரம் தேய்ப்பது என்பதை மீறிய ஒரு சக்திப் பொருள் தன்னிடம் இருக்கிறது! அதற்கு இந்த சமூகத்தில் நல்ல மதிப்பும் கிடைக்கும்!
என்பதாக ஒரு அர்த்தப்படுத்தலில் கொஞ்சம் கர்வமும் பூத்திருக்கிறது.
இல்லாவிட்டால் எதிர் வரும் பகவதி பாட்டியைப் பார்த்ததும் பார்க்காத மாதிரி போவாளா என்ன? இயல்பான நடை மாறி சற்று விரைவும், கையசைப்பில் ஒரு வகை 'விசுக் விசுக்'கும் வருமா என்ன?
யாரு வசந்தாவா போகுது?
ஆமாமா; மெக்கானிக் மாணிக்கம் பொண்ணு வசந்தாதான்.
என்னாச்சு இவளுக்கு - இந்த வெட்டு வெட்டறா?
எல்லாம் வயசு படுத்தற பாடுடி! நீதான் வெட்டலையா - இல்ல நான்தான் வெட்டலையா?
குழாயடிப் பெண்கள் இரண்டு பேர் எக்ஸ்ரே பார்வை பார்த்து தீர்மானம் வாசிக்கும்போது கச்சிதமாக அந்தத் தெருவுக்குள் நுழைகிறான் ஜோதிசங்கர் இந்த இரண்டு பெண்கள் கவனிப்பது தெரியாமல் ஒரு கடிதத்தை வசந்தா வசம் குதித்தபடியே சேர்க்கிறான்.
அவளும் வேகமாக வாங்கிக் கொண்டு ஜாக்கெட்டுக்குள் தள்ளி விட்டுக் கொண்டு நடக்கிறாள்.
அடக் கருமமே… இது எத்தனை நாளா?
- குழாயடியில் கலக்கம்!
***
டைப்ரைட்டிங் இன்ஸ்ட்யூட்!
ஏகத்திக்கும் 'தட்தட்'சப்தங்கள். தனது மெஷினுக்கு முன் அமரும் வசந்தா பேப்பரை ரோலரில் இன்செர்ட் செய்து செட் பண்ணிவிட்டு சுற்றிச் சுற்றிப் பார்த்தபடி ஜாக்கெட்டுக்குள் கையை விட்டு, ஜோதி ஷங்கர் தந்த கடிதத்தை எடுக்கிறாள்.
முன்னால் சின்ன நடுக்கத்தோடு விரித்தபடி பார்த்து படிக்க ஆரம்பிக்கிறாள். 'என் வசந்தமே' என்று துவக்கத்திலேயே அவளை தேன் கொட்டாரத்தில் தள்ளுகிறான் ஜோதி ஷங்கர். அந்த நொடி அவளைப் பொறுத்து உலகில் துன்பம் என்ற ஒன்றே இல்லை. கடிதம் தொடர்கிறது.
'உனக்காகவே இன்று அலாரம் வைத்து ஆறு மணிக்கு எழுந்தேன். ஒண்ணரை மைல் தூரம் ஜாகிங் என்று ஓடியும் வந்திருக்கிறேன். இனி இன்றைய தினம் எனக்கு உற்சாகமாகக் கழித்துவிடும். கொஞ்சம் டல்லடித்தாலும் பர்சிலிருக்கும் உன் பாஸ்போர்ட்டைப் பார்க்க, அது ஒரு பாட்டில் குளுகோஸ் ஆகி உள்ளே நுழைந்து விடும். போகட்டும் இன்று மாலை ஆறு மணிக்கும் மறக்காமல், மீனாட்சியம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத்துக்கு வந்து விடு... எனக்கும் ஒரு கோவிலில் இரண்டு அம்மனைத் தரிசித்த பாக்யம் கிடைக்கட்டும்!"
இப்படிக்கு
உன் ஊனில் உயிரில் குடி புகுந்த
ஜோதி ஷங்கர்.
மீனாட்சியம்மன் கோவில்!
நிறைய மாறி விட்டிருக்கிறது. சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிளை நிறுத்திவிட்டு டோக்கனுக்காக கை நீட்டும் வேணு அதில் ஐம்பது பைசா கட்டணம் என்பதை அடித்து விட்டு ஓர் ரூபா தா!
எனும் தெனாவெட்டான மனிதனைப் பார்த்து முறைக்க ஆரம்பிக்கிறான்.
என்னா முறைக்கறே…? ஃபீசைத் தந்துட்டு போய்கிட்டே இரு…
தரேன்… எட்டணாக்கு மேல ஒத்த காசு தர மாட்டேன்
அப்ப வண்டிய நிறுத்தாதே… எடு
என்னய்யா அநியாயம் இது… எட்டணான்னு அப்ப எதுக்கய்யா இதுல போட்டுருக்கீங்க.?
அநாவசியமா பேசாதே… லட்சக் கணக்குல பணம் கட்டி காண்ட்ராக்ட் எடுத்தீன்னா தெரியும்…
கோவில்ங்கறது பணம் பிடுங்கற இடம் கிடையாது தெரிஞ்சிக்கோ. உன்னை யாரு காண்ட்ராக்ட் எடுக்கச் சொன்னது?
இஷ்டமிருந்தா வண்டியை நிறுத்து… இல்லாட்டி போய்க்கிட்டே இரு…
காண்ட்ராக்ட்காரன் பேசிய படியே ஒரு பைக் நிறுத்திய நபர் பக்கம் திரும்ப அவர் கேட்ட காசைக் கொடுத்துவிட்டு போய்க் கொண்டேயிருக்கிறார்.
பாத்தியா… இப்படி ஜென்டிலா நடந்துக்க… ஆமா…
ஒரு சீறு வேறு சீறுகிறான் அவன்.
ச்சை…!
சலிப்போடு ஒத்த ரூபாயை விட்டெறிந்து விட்டு சாலையை ஆக்ரமித்து நிற்கும் வியாபாரிகளை, ஜனங்கள் கோயில் மாடுகளைக் கடந்து தெற்கு கோபுர வாசலுக்கு வந்து செருப்பு விடச்சென்று அங்கேயும் இதே கட்டணத் தகராறு பண்ணி 'சில்லரை இல்லை' என்று பதிலுக்கு தலையில் கட்டப் பார்த்த கற்பூரத்தை அரை மனதாக வாங்கிக்கொண்டு, முகத்தில் இடிக்கிற குறையாக காசு கேட்கும் பிச்சைகாரர்களிடம் இருந்து தப்பித்து கோயிலுக்குள் நுழைபவன் கைக் கெடிகாரத்தைப் பார்த்துவிட்டு ஒரு துள்ளு துள்ளுகிறான். மணி ஏழு!
ஐய்யய்யோ... ஆறு மணிக்கே வந்திருப்பாளே அனு!
- வாய்விட்டு முனங்கியபடி ஓட ஆரம்பிக்கிறான். விபூதிப் பிள்ளையாரைக் கடந்து, பொற்றாமரைக் குளத்து காவியடித்த கருங்கல் படிகளில் கண்களை