Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mayirpeeli Uravugal
Mayirpeeli Uravugal
Mayirpeeli Uravugal
Ebook97 pages34 minutes

Mayirpeeli Uravugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தசரதன் ரயிலில் மும்பைக்குப் பயணித்துக் கொண்டிருக்கிறான். ஒரு புதுமண ஜோடி அவசரமாக ரயிலில் ஏற, அழகிய அந்தப் பெண்ணை தசரதன் வியப்புடன் பார்க்கிறான். அவர்களுக்குள்ளான நெருக்கம் அவனை தடுமாறச் செய்கிறது. இரண்டு நாட்கள் பயணத்தை எப்படி முடிப்பது எனத் திணறுகிறான். அன்று நடுநிசியில் இவன் படுத்திருக்கும்போது அப்பெண் அழுதபடி நிற்கிறாள். தான் காதலனுடன் ஓடி வந்ததாகவும் அவன் இவள் நகைகளைச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டதாகவும் அழுதபடி கூறுகிறாள். தசரதன் அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்று காதலனைத் தேடிக் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறுகிறான். அங்கு அவள் அந்த இடத்தின் தேவதையாக வலம் வருகிறாள். தசரதன் காதலனைக் கண்டுபிடித்தானா? உண்மையில் என்ன ஆயிற்று? மெல்லிய வருடலுடன் பயணிக்கிறது கதை.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100802712
Mayirpeeli Uravugal

Read more from Vimala Ramani

Related to Mayirpeeli Uravugal

Related ebooks

Reviews for Mayirpeeli Uravugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mayirpeeli Uravugal - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    மயிற்பீலி உறவுகள்

    Mayirpeeli Uravugal

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author//vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஒன்று

    இரண்டு

    மூன்று

    நான்கு

    ஐந்து

    ஆறு

    ஏழு

    எட்டு

    ஒன்பது

    பத்து

    பதினொன்று

    பனிரெண்டு

    பதின்மூன்று

    பதினான்கு

    பதினைந்து

    பதினாறு

    பதினேழு

    பதினெட்டு

    பத்தொன்பது

    இருபது

    இருபத்தொன்று

    இருபத்திரெண்டு

    இருபத்திமூன்று

    ஒன்று

    ரயில்வே பிளாட்பாரத்தின் பரபரப்பு அதிகமானது. இன்னும் சில நொடிகளில் ரயில் கிளம்பி விடும்.

    பிளாட்பார வியாபாரிகள் கூவி...கூவி...தம் பொருட்களை விற்றவர்கள் ஓய்ந்து விட்டார்கள்.

    ரயிலுடன் இணைக்கப்பட்ட ‘பேன்ட்ரி’ கோச்சிலிருந்து மட்டும் அவ்வப்போது ஆட்கள் வெளிப்பட்டு காபி, டீ, போண்டா, வடை என்று விற்றுக் கொண்டிருந்தார்கள்.

    இன்னும் பயணிகள் ‘செட்டில்’ ஆகவில்லை. வழியில் நின்று கொண்டிருப்பவர்களும், தம் தம் உடமைகளை சரிபார்த்துக் கொண்டிருப்பவர்களும், ‘டாடா’ சொல்ல வந்த உறவினர்களும்...

    என்னோட வானிடி எங்கே?

    இவ்வளவு தாம்பா. இதுக்கு மேலே கூலி கேட்காதே...

    சூட்கேஸுக்குச் செயின் போடு...

    வாட்டர் பாட்டில்லே தண்ணீ இருக்கா?

    ரப்பர் பில்லோ? ஸ்டேஷன்லேயே விக்கறான். ரெண்டு வாங்கினேன். கலர் பிடிச்சிருக்கா?

    பர்த் நம்பர் 36 எங்கே ஸார்? இது என் இடம் ஸார்...

    இதோ பாருங்க. இது எஸ்2. நீங்க புக் பண்ணி இருக்கிறது எஸ்4 கோச். அங்கே போய்த் தேடுங்க...

    ஐயய்யோ ரயில் கிளம்பிடுமே...

    கவலைப்படாதீங்க. இது வெஸ்டிப்பூல். இப்படி கம்பார்ட்மெண்ட் வழியாவே உங்க கோச்சுக்குப் போயிடலாம்...

    லக்கேஜையும் தூக்கிட்டு...எல்லாம் இந்த போர்ட்டர் பண்ணின வேலை. தப்பான கோச்சுல ஏத்திட்டான்.

    போர்ட்டர் ஒண்ணும் பண்ணலை. நீங்க தான் போர்ட்டர் வைக்க வேண்டாம். நாமளே பாத்து ஏறிக்கலாம்னு சொன்னீங்க. தப்பா ஏறிட்டு திண்டாடறீங்க...

    புருஷன் பொண்டாட்டி சண்டையை அப்புறமா புடிச்சூக்கங்க...முதல்லே உங்க சீட்டைக் கண்டுபிடிச்சு அங்கே போய் உட்காருங்க. அதுலேயும் யாராவது வந்துடப் போறாங்க...

    ஏக களேபரம். சண்டை, பேச்சு...குழப்பம்...

    இதையெல்லாம் ரசித்தபடி தசரதன் அமர்ந்திருந்தான்.

    இது மும்பை செல்லும் வண்டி. இரு நாள் பயணத்துக்குத் தங்களை தயார்படுத்திக் கொண்டு வந்த பயணிகள் ஏகப்பட்ட லக்கேஜுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தனர்.

    ரயில் ஒருமுறை தீர்க்கமாக மூச்சு விட்டது.

    எங்கோ விசில் சப்தம். ரயில் பதிலுக்குக் குரல் கொடுத்துவிட்டு மெல்ல நகர ஆரம்பித்தது.

    தலைவர் வாழ்க...

    டாடா...பை...பை...

    ஊருக்குப் போனதும் போன் பண்ணு...

    செல் பத்திரம்...

    எத்தனை எத்தனை உணர்வுகள்.

    எத்தனை எத்தனை உறவுகள்.

    எத்தனை எத்தனை மனிதர்கள்.

    அப்போது.

    வேகம் எடுக்க ஆரம்பித்திருந்த அந்த ரயிலில் அவசரம் அவசரமாக இரண்டு பயணிகள் தொற்றிக்கொண்டு ஏறினார்கள்.

    அவள் புடவை கட்டி இருந்ததால் தடுக்கி விழுந்தாள். இந்தக் காலத்தில் சுரிதார் போடாத இளம்பெண்.

    கதவருகில் நின்றவர்கள் அவர்களைக் கைகொடுத்து கம்பார்ட்மெண்ட்டில் இழுத்துப் போட்டார்கள்.

    என்ன ஸார்...இப்படியா கடைசி நேரத்திலே வருவாங்க? அதுவும் லேடீஸை வைச்சுட்டு? கொஞ்சம் முன்னாலேயே வந்திருக்கக் கூடாது?

    ஸாரி ஸார்...கொஞ்சம் லேட்டாயிடுச்சு...

    இன்னும் லேட் பண்ணி இருந்தீங்க... நீங்களே ‘லேட்...

    ’சட்’டென்று அந்த ஆள் தன் ‘ஆசி’யை நிறுத்திக் கொண்டான்.

    ஆணும், பெண்ணுமாக கைகோர்த்த வண்ணம் நுழைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர்.

    லக்கேஜ் எதுவுமில்லை. ஒரே ஒரு ஷோல்டர் பேக் தவிர!

    தசரதன் அவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

    ரயில் வேகம் எடுக்க ஆரம்பித்திருந்தது.

    ***

    இரண்டு

    தசரதன் ஏதோ புத்தகம் ஒன்றினைப் படித்தபடி ஜன்னலருகே அமர்ந்திருந்தான். ஓடும் ரயிலில் இப்படி ஜன்னல் அருகே இருந்து வேடிக்கை பார்ப்பது ஒரு இனிய அனுபவம். நகர்ந்து செல்லும் மரங்கள், தந்திக் கம்பங்கள், இணையாக வந்து பின் கோபித்துக் கொண்டு பிரிந்து செல்லும் ரயில் தண்டவாளங்கள், பச்சை வயல்கள், தந்திக் கம்பத்தில் ஒற்றையாக அமர்ந்து கூவும் பறவை...கூடவே வரும் மேகக்கூட்டங்கள்...

    திடீர்ச்சிரிப்பு...தசரதன் பார்த்தான்.

    அந்த இளம்ஜோடி இவன் எதிரில்தான் அமர்ந்திருந்தனர்.

    அந்த ஆண் சாக்லட்டை இவளுக்கு ஊட்டுவதும், இவள் முரண்டு பிடிப்பதும், சக பயணிகளைப் பற்றி கவலைப்படாமல் பெரிய புத்தகமொன்றைப் பிரித்து முகம் மறைத்தபடி அந்த ஆள் செய்யும் குறும்புகளும், அதை விரும்பினாலும், விரும்பாததுபோல் நடிக்கும் அந்தப் பெண்ணும்...

    இதோ எதிரில் ஒரு காதல் காவியம்...மோஷன் பிக்சர்...ஓடும் ரயிலில் மோஷன் பிக்சர்...இவன் வெளியில் பார்ப்பதும், அவர்களைப் பார்ப்பதுமாக...

    சாய்...சாய்...

    அந்த ரயில் பெட்டியில் ஆளுயர பிளாஸ்டிக் கப்புகளை அடுக்கியபடி விற்பனையாளர்!

    Enjoying the preview?
    Page 1 of 1