Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oonjaladum Uravugal
Oonjaladum Uravugal
Oonjaladum Uravugal
Ebook74 pages26 minutes

Oonjaladum Uravugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குடும்பமென்னும் கோயிலில் தெய்வீகம் நிறைந்திருக்க, உறவுகள் என்னும் அடித்தளம் பலமாக இருக்க வேண்டும். உணர்ச்சிகளால் கட்டுண்ட உறவுகளுக்கிடையேயான எதிர்பார்ப்புகள், அடுத்தவரைப் பற்றிய கணிப்புகள் (அஹம் பிரம்மாஸ்மி), கடமையைத் தட்டிக் கழிக்கும் பொறுப்பின்மை (அம்பு படுக்கை), தடம் மாறி வந்த உறவுகளையும் நல்ல கோணத்தில் பார்க்கும் பண்பு (அட்சதை), தவறி வந்த உறவைத் தனிமையை போக்கும் மருந்தாய் மாற்றும் பாங்கு (பாவை நோன்பு) என ஒவ்வொரு சிறுகதையிலும் நம்மை கடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளை அதன் தாக்கம் குறையாமல் நிறைவாய்ப் படைத்துள்ளார் ஆசிரியர். குடும்பத்தின் வில்லங்களுக்கு குறுகிய பக்கங்களில் குதூலகமான முடிவுகள் தந்திருப்பது விமலா ரமணியின் சிறப்பு.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100802719
Oonjaladum Uravugal

Read more from Vimala Ramani

Related to Oonjaladum Uravugal

Related ebooks

Reviews for Oonjaladum Uravugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oonjaladum Uravugal - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    ஊஞ்சலாடும் உறவுகள்

    Oonjaladum Uravugal

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    நீண்டு நிமிர்ந்து நிற்கும் அசோகா மரங்கள்... அதில் வாழும் வவ்வால்களின் எச்சம் காம்பௌண்ட் சுவர் முழுவதும் சித்திரம் வரைந்திருந்தது.

    வவ்வால்கள் பதுங்கி வாழ இந்த அடர்த்தியான மரம் சௌகரியமாக இருந்தது. மரம் வளர வளரத்தான் அதன் கஷ்டம் புரிகிறது.

    தன் கையால் தண்ணீர் ஊற்றி வளர்த்த மரம் சிறு செடிகளாக நர்சரியில் இருந்து வாங்கி வந்தபோது வினயாவிற்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. இவளும், இவள் கணவனும் பொறுக்கி எடுத்து வாங்கி வந்து நட்ட செடி... இன்று வளர்ந்து பெரிய மரமாகி...

    கடந்த காலத்தின் நீண்ட வரலாறு போல் மரத்தின் உயரம் கண்களுக்குத் தெரிகிறது. ஆனால் இவள் மனத்தின் வரலாறு இவளுக்குள்...

    எப்படியெல்லாமோ வாழ ஆசைக் கனவு கண்டவள்... இன்று மரம் மட்டுமே நிதர்சன உண்மையாகி நிற்கிறது...

    காம்பவுண்ட் சுவர் எல்லாம் அசிங்கமா எச்சமிட்டு வைக்கிறது... இதை வெட்டிடும்மா...

    மகன் விகாஸ் அடிக்கடி கூறுவான்...

    அவனுக்கு இந்த மரத்தின் அஸ்திவாரக் கதை தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை... சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாது. அது இவள் மனத்துக்குள்ளேயே புதைக்கப்பட வேண்டிய சமாதி நினைவுகள்...

    மரத்தை வெட்டலாம்... உறவுகளையும் வெட்டிவிட முடியுமா? உறவுக்கு அப்பால் எத்தனை உணர்வுகள் தங்கிக் கிடக்கின்றன? மண்டிக் கிடக்கின்றன?

    வினயா தன் நினைவுகளில் மூழ்கினாள்.

    சிறு வயதில் இவள் படித்ததெல்லாம் திண்டுக்கல் அருகில் உள்ள ஒரு இடம். புதூர் பாலகிருஷ்ணாபுரம்.

    இவள் தந்தை ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் காவல்துறை உயர் அதிகாரி. அப்போது பென்ஷன் மட்டும் வந்தது. திண்டுக்கல் அருகிலுள்ள ‘அணைப்பட்டி’ கிராமத்தில் இவர்களுக்கு ஒரு தோட்டம் இருந்தது.

    மாதத்தில் ஒரு நாள் மட்டும் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு கையில் பிசைந்த சாத வகையறாக்களை எடுத்துக் கொண்டு, இவர்கள் அங்கு பிக்னிக் போவார்கள். இவளுக்கு பள்ளி ஞாயிறு லீவு என்பதால் அநேகமாக இவர்கள் ஞாயிறு தான் கிளம்புவார்கள்.

    இவளின் தாத்தா கடையத்தில் இருந்ததார், பாரதியின் காலத்திற்குப் பிறகு கடையம் இவ்வளவு பிரபலம் அடையும் என்று தெரியாத காலம் அது. தாத்தாவிற்கு கிராம மிராசுதார் என்று பெயர் உண்டு. தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு ஊர் பஞ்சாயத்து நடத்துவார். தனக்கிருந்த சிறிய நிலத்தை பராமரிக்க குடியானவர்களை அமர்த்துவார். சில சமயம் இவரே வயலில் இறங்கி நாத்து நடுவது, களை எடுப்பது என்பதையெல்லாம் செய்வார்.

    அப்போதெல்லாம் மரக்கால்... பெரிய படி என்று தான் அளவு. அறுவடை ஆகி வந்த நெல்லை அளக்கும் போது ‘லாபம்’ என்று தான் முதல் படியை அளப்பார்கள். விடுமுறைக்கு ஒருமுறை இவள் தன் தாயுடன்

    Enjoying the preview?
    Page 1 of 1