Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pani Malaigal
Pani Malaigal
Pani Malaigal
Ebook163 pages1 hour

Pani Malaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs Vimala Ramani is a graduate of Madurai Kamarajar University. She also holds a highest degree Hindi Praveen. Her name is familiar to anyone who has read Rani, Kumudum or Kalki in the last 50 years. With more than 1,000 short stories and 700 novels to her credit. More than 600 dramas have been broad casted on AIR Trichy and Coimbatore.
She has won many laurels for her stories and novels. The title of-Ezuthu Sudar was conferred on her by-Urattha chinthanai. Outstanding novelist award was given to her by Rotary club of Coimbatore. She was honoured by V G P award also. She has also got other titles like Novel arasi, Pudinaperarasi, Manida neya manpalar and Samuganala thilagam. She has participated in many seminars conducted by Unicef, Air Chennai and Sahitya Academy. Her dramas and serials have been telecasted in Chennai Doordarshan.
Her Novels have been translated and published in Vanitha (Malayalam) Raga Sangama (Kannada), Mayura (Kannada) and Sudha (Kannada).
She has stage experience as a drama script writer and director. She had a dramatic troupe named Navaratna in late seventies. Her Novel - Ula Varum Urayugal has been pictured in the name of Kanne Kaniyamude in late seventies.
Sri Ramakrishna Mission Vidyalayam conferred on her Sadanai Magalir award for Tamil literature. She has participated in the World Tamil conference held at Coimbatore and submitted an article on feminism.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100802766
Pani Malaigal

Read more from Vimala Ramani

Related to Pani Malaigal

Related ebooks

Reviews for Pani Malaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pani Malaigal - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    பனி மலைகள்

    Pani Malaigal

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் - அடி மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம். பள்ளித் தலமனைத்துங் கோயிலில் செய்குவோம் எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - பாரதியார்

    கெட்டி மேளம்.... கெட்டி மேளம்....

    சீக்கிரம் பொண்ணை வரச் சொல்லுங்கோ

    "வாராய் என் தோழி வாராயோ...

    மணப்பந்தல் காண வாராயோ"

    பீ... பீ...

    டொம்... டொம்...

    பூக்களும் இலைகளும்.... தழைகளும் விழ.... அங்குள்ள அத்தனை பேரும் கைதட்டி ஆர்ப்பரிக்க...

    சுபயோக சுபதினத்தில் ஒரு திருக்கல்யாண மஹோத்ஸவம் சிறப்பாக நடந்து முடிந்தது.

    மணப்பெண்ணும், மணப் பையனும் மாலை போட்டுக் கொண்டு... தலையில் கிரீடம் வைத்துக் கொண்டு கழுத்தில் புத்தம் புதிய பட்டிகள் கட்டிக் கொண்டு... நெற்றியில் பொட்டு இட்டுக் கொண்டு... இத்தனை நேரம் இந்தச் சிறுவர் சிறுமியர் இம்சை தாங்காமல் இவர்களின் ஆர்ப்பாட்டத்திற்குப் பயந்த அந்த மணமக்களான இரண்டு பூனைகளும் மியாவ்.... மியாவ்.. என்று கத்திக்கொண்டு தன்னைப் பிடித்துக் கொண்டிருந்த காவேரியின் கையையும் ராஜாவின் கையையும் பிராண்டி விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டன!

    ஐ... பொண்ணு மாப்பிள்ளை ஓடிப் போச்சு!

    டொம்... டொம்.. மேளம் கொட்டற கல்யாணம் தங்க தாலி கட்டாத கல்யாணம்.

    எல்லாச் சிறுவர்களும் சிரித்துக் கொண்டிருக்க...

    காவேரி பூனை பிராண்டின தன் கை காயத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

    காயம் ஆழம்தான்!

    அடடா! ரொம்பக் கீறி விட்டுடுத்தா காவேரி - ராஜா பரிவுடன் கேட்டான்.

    அவன் பிள்ளை வீட்டுக்காரன்

    காவேரி பெண் வீட்டுக்காரி!

    அந்த இடத்தை மணமேடையாக பாவித்து அவர்கள் சிங்காரித்து இருந்தனர்.

    தங்க அரளிப் பூக்களாலும், செம்பருத்திப் பூக்களாலும், அசோக மர இலைகளாலும் அந்த இடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    சின்னச் சின்ன தட்டுக்களில் தும்பைப் பூவில் பண்ணிய முறுக்குகள் - சீர்வரிசைகள்… மண்ணால் பண்ணிய பருப்பு தேங்காய்கள்...

    அத்தனை பேரும் விளையாட்டு முடிந்து கலைந்து போய்விட்டார்கள். ஆனால் ராஜாவும் காவேரியும் அங்கு தான் இருந்தார்கள்.

    ராஜா காவேரியின் காயத்துக்கு கட்டுப் போட்டுக் கொண்டிருந்தான்.

    நீ ஒரு பைத்தியம் காவேரி... இந்தப் பூனை கையைக் கடிச்சவுடனேயே வீசி எறிஞ்சிருக்க வேண்டாமோ? இப்படியா கடிபட்டுண்டு இருப்பா? சனியன்... என்னம்மா இருக்கு!

    அப்பறமா கல்யாணப் பொண்ணு இல்லேன்னா எப்படி கல்யாணம் பண்றது ராஜா? அதான் விடாம பிடிச்சுண்டு இருந்தேன்.

    இருவரும் சிரித்தனர்.

    ராஜா... அந்த ரெண்டு பூனையும் கல்யாணம் பண்ணிண்டு என்ன பண்ணும்?

    குடித்தனம் பண்ணும்.

    குடித்தனம்னா?

    காவேரியின் கேள்வி ராஜாவுக்கும் புரியவில்லை.

    குடித்தனம்னா குடித்தனம்! குழந்தை குட்டிப் பெத்துண்டு....

    காவேரி சிரித்தாள்.

    நிச்சயமா பூனை குட்டி பெத்துக்கும்.

    இருவருக்குமே சிரிப்பு.

    இங்கே என்ன பண்றேள் ரெண்டு பேரும்?

    - கேள்வி கேட்டபடி அங்கு காவேரியின் தந்தை பத்மநாபன் வந்தார்.

    ஒண்ணுமில்லைப்பா... கல்யாணம் பண்ணிண்டு.

    பத்மநாபன் அதிர்ந்து போனார்.

    என்ன... கல்யாணம் பண்ணிட்டேளா?

    அதில்லைப்பா... நம்மாத்துப் பூனைக்கும் ராஜா வீட்டுப் பூனைக்கும் கல்யாணம் பண்ணி விளையாடினோம். அது தான் மண மேடை. இது தான் பருப்புத் தேங்காய்... முறுக்கு.. லட்டு...

    பத்மநாபன் பெருமூச்சு விட்டார்.

    இவர்கள் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி இருக்கும் ராஜாவின் தந்தையும் இவரும் நண்பர்கள் தான் ஒரு காலத்தில்.

    இன்று ராஜாவின் தந்தை இல்லை.

    பத்மநாபா... நாம ரெண்டு பேரும் சகோத்திரமா போயிட்டோம். ஒரே கோத்திரம். இல்லையானா காவேரியை ராஜாவுக்கு கல்யாணம் பண்ணி வைச்சு அவளை என்னோட மாட்டுப் பெண் ஆக்கினுட்டு நம்மோட பிரண்ட்ஷிப்போட ரிலேஷன்ஷிப்பையும் இன்னும் இறுக்கி இருப்பேன் என்ன பண்றது? யார் யாருக்கு எங்கே எங்கே பிராப்தமோ? யார் யாருக்கு தலையிலே என்ன எழுதி இருக்கோ?

    - என்பான் அடிக்கடி.

    மற்றவர்களின் தலை எழுத்தைப் படிக்கத் தெரிந்தவனுக்குத் தன் தலை எழுத்தைப் பற்றித் தெரிந்திருக்க வில்லை.

    வயல் வரப்பில் வேலை செய்து விட்டு ஒரு நாள் மாலை தலைவலி, ஜூரத்துடன் வீட்டிற்கு வந்தான்.

    ஜூரம் கட்டுக் கடங்காமல் போய் தலைவலியும் எல்லை இல்லாமல் போய் அவன் புழுவாய் துடித்த போது பத்மநாபன் தான் அவனைத் தூக்கி வில் வண்டியில் போட்டுக் கொண்டு பக்கத்திலிருந்த பெரிய ஊருக்குப் போனார்.

    இந்தச் சின்ன கிராமத்தில் பசுமையான வயல்கள் உண்டு.

    சிறிய ஆறு ஒன்றும் உண்டு.

    ஆனால் மருத்துவ வசதி கிடையாது.

    சமயம் போது என்றால் கை மருந்து தான். எல்லை மீறும்போது வண்டி கட்டிக்கொண்டு டவுனுக்கு ஓடுவார்கள்.

    இந்த பத்மநாபனின் வில் வண்டி எத்தனையோ உதவிகளைச் செய்திருக்கிறது!

    எத்தனையோ உதவிகளைச் செய்திருக்கிறது!

    எத்தனையோ பிரசவங்களைப் பார்த்திருக்கிறது!

    ஆஸ்பத்திரிக்குப் போகும் வழியிலேயே வில் வண்டியில் பிறந்த குழந்தைகள் இந்தக் கிராமத்தில் இருக்கிறார்கள்.

    இதே வில் வண்டியில் குழந்தையின் அழுகைச் சத்தம் மட்டும் கேட்க பெரியவர்களின் அழுகைச் சத்தத்துடன் பிரசவத்தில் இறந்த தாயின் சடலத்தை இதே வில் வண்டியில் போட்டுக் கொண்டு வந்திருக்கிறார் பத்மநாபன்!

    சமயம் போது ஆபத்து என்றால் அனாவசியமான சென்டிமெண்ட்ஸூக்கு இடம் தருபவர் பத்மநாபன் இல்லை!

    ஆனால் ராஜாவின் தந்தை சொல்லி விட்டு போனது நன்றாக நினைவில் இருந்தது.

    ஒரே கோத்திரம்.

    காவேரியும் ராஜாவும் சகோதர சகோதரிகள்!

    ஆரம்பத்திலிருந்தே ஒன்றாக வளர்ந்து அந்தக் கிராமத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்து இணைந்து பெரியவர்கள் ஆகிக்கொண்டிருப்பவர்கள்.

    இந்த ராஜாவும் காவேரியும்!

    அதனால்தான் மரணப் படுக்கையில் புழுவாய் ராஜாவின் தந்தை துடித்துக் கொண்டிருந்த போது - பத்மநாபா.... என்னோட ராஜாவை பாத்துக்க வேண்டிய பொறுப்பு.... உனக்கு.... அவன் உன் புள்ளை... உன் புள்ளை - என்று கதறியபடியே நண்பன் உயிரை விட்ட போது பத்மநாபன் அதிர்ந்து போய் விட்டார்.

    மூளைக் காய்ச்சலாம். மூன்றே நாட்களில் உயிரைப் பலி வாங்கி விட்டது!

    நீங்க கொஞ்சம் முன்னால வந்திருக்கணும். எங்களால முடிஞ்சதை ட்ரை பண்ணினோம் பட் டூ லேட்... - என்றார்கள் டாக்டர்கள்.

    நண்பனை இழந்த தானும் தந்தையை இழந்த ராஜாவும் கிட்டத்தட்ட அனாதைகள்தான்.

    தாய் இல்லாத காவேரியும் தந்தை இல்லாத ராஜாவும் கிட்டத்தட்ட அனாதைகள் தான்.

    இதெல்லாம் பழைய கதை.... கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் நடந்து முடிந்த கதை...

    இனி காவேரியும் வளர்ந்து கொண்டிருக்கிறாள்.

    ராஜாவும் பெரியவன் ஆகிக்கொண்டிருக்கிறான்.

    சிறு வயதில் ஒன்றாக விளையாடியதால் இன்னமும் இவர்கள் பூனைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    இதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்.

    ராஜா... உன்னை அம்மா கூப்புட்டா. இந்த லீவு முடிந்ததும் இனிமே டவுனுக்குப் போய்ப் படிக்கணும் போலிருக்கே. அம்மாகிட்டே சொல்லிட்டேன். நம்மாத்து வில் வண்டியை உன்னோட படிப்பு முடியற வரை நீயே உபயோகிக்கலாம்னு சொல்லிட்டேன். வண்டிக்கார பொன்னனையும் அனுப்பித் தரேன். நீ அந்த வில் வண்டியிலேயே ஏறி டவுனுக்குப் போய் நன்னாப் படிச்சு முன்னுக்கு வந்து உன்னோட அம்மாவுக்கு உறுதுணையா ஆதரவா இருக்கணும். அதான் எனக்கு வேணும்.

    பத்மநாபன் பேசப் பேச காவேரிக்கு கோபமாக வந்தது.

    என்ன இந்த அப்பா ராஜாவின் மேல் படிப்பைப் பத்தித் தான் பேசறாரே தவிர என்னோட படிப்பைப் பத்திப் பேசக் காணோமே!

    என்னப்பா... நானும் டவுனுக்குப் போய் மேல் படிப்பு படிக்கறேம்பா....

    இந்தக் கிராமத்துப் பள்ளிக்கூடத்துலே அஞ்சாவதுக்கு மேலே இல்லை!

    நானும் ஆறாவது படிக்கறேம்பா

    பத்மநாபன் மகளைப் பார்த்தார்.

    வேண்டாம்மா.... பொண் கொழந்தைகளுக்குப் படிப்பு எதுக்கு. நாளைக்கு கல்யாணமானா ஆம்படையானுக்கு சமைச்சுப் போடப்போறே? அதுக்கு இந்த அஞ்சாவது ஏதேஷ்டம்!

    போங்கப்பா என்று சிணுங்கினாள் காவேரி.

    கல்யாணம் என்றதும் ஏற்பட்ட வெட்கத்தோடு... 'நாளைக்கு இந்த ராஜா பெரிய படிப்பு படிச்சுட்டு தாட் பூட்டுன்னு இங்கலீஷ்லே பேசினா அது எனக்குப் புரிய வேண்டாமோ? ரெண்டு பேரும் ஒண்ணாப் படிச்சு ஒண்ணா குடித்தனம் பண்ணி....'

    "நம்ம கிருஷ்ணர் கோவில்லே ஸ்லோக கிளாஸ் ஆரம்பிக்கிறாளாம். அதுலே நீ

    Enjoying the preview?
    Page 1 of 1