Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Akkaraiyil Ore Anniya Paravai...
Akkaraiyil Ore Anniya Paravai...
Akkaraiyil Ore Anniya Paravai...
Ebook159 pages1 hour

Akkaraiyil Ore Anniya Paravai...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs Vimala Ramani is a graduate of Madurai Kamarajar University. She also holds a highest degree Hindi Praveen. Her name is familiar to anyone who has read Rani, Kumudum or Kalki in the last 50 years. With more than 1,000 short stories and 700 novels to her credit. More than 600 dramas have been broad casted on AIR Trichy and Coimbatore.
She has won many laurels for her stories and novels. The title of-Ezuthu Sudar was conferred on her by-Urattha chinthanai. Outstanding novelist award was given to her by Rotary club of Coimbatore. She was honoured by V G P award also. She has also got other titles like Novel arasi, Pudinaperarasi, Manida neya manpalar and Samuganala thilagam. She has participated in many seminars conducted by Unicef, Air Chennai and Sahitya Academy. Her dramas and serials have been telecasted in Chennai Doordarshan.
Her Novels have been translated and published in Vanitha (Malayalam) Raga Sangama (Kannada), Mayura (Kannada) and Sudha (Kannada).
She has stage experience as a drama script writer and director. She had a dramatic troupe named Navaratna in late seventies. Her Novel - Ula Varum Urayugal has been pictured in the name of Kanne Kaniyamude in late seventies.
Sri Ramakrishna Mission Vidyalayam conferred on her Sadanai Magalir award for Tamil literature. She has participated in the World Tamil conference held at Coimbatore and submitted an article on feminism.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100802767
Akkaraiyil Ore Anniya Paravai...

Read more from Vimala Ramani

Related to Akkaraiyil Ore Anniya Paravai...

Related ebooks

Reviews for Akkaraiyil Ore Anniya Paravai...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Akkaraiyil Ore Anniya Paravai... - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    அக்கரையில் ஓர் அந்நியப் பறவை...

    Akkaraiyil Ore Anniya Paravai…

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    ராமகிருஷ்ணன் காத்திருந்தான்.

    இந்த நேரத்தில்தான் அவன் வழக்கமாகக் காத்திருப்பான்.

    இந்த நேரத்தில்தான் அவனுக்கு 'ஃபோன்' வரும். வாரத்தில் ஒரு நாள்!

    'லோக்கல் கால்' அல்ல.

    சிங்கப்பூரிலிருந்து ஃபோன்.

    ஒவ்வொரு வெள்ளியும் வருகிற தவறாத ஃபோன்.

    அவள் பெயர் என்ன?

    'பல்லவி! ஆ... ஆ... அதுதான் அவள் பெயர்... அதன்பின் அனுபல்லவி, சரணம் எல்லாம் இவன்தான்!'

    'பென் பிரண்ட்ஷிப்' என்று ஆரம்பித்த இந்த நட்பு இப்பொழுது 'பெண் பிரண்டாக' மாறி இருக்கிறது.

    ஏதோ ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் பேனா நண்பர்கள் தேவை என்ற தலைப்பில் சில முகவரிகள் வெளியாகி இருந்தன.

    இப்பொழுது ஏரோகிராம் எல்லாம் விலை அதிகமாகிவிட்டது. கிட்டதட்ட அமெரிக்காவிற்கு ஐந்து ரூபாய் ஆகிறது. வேண்டாம்டா சாமி இந்த வம்பு என்று இவன் ஒதுங்கத்தான் நினைத்தான். இவன் போறாத காலம் இவன் நண்பன் ஷியாமுக்கு இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் ஆர்வம் அதிகம்.

    தினம் தினம்.

    ஜப்பானிலிருந்து டோக்கியோ மீயூஸியோ என்னோட கேர்ல் பிரண்ட் இன்று கடிதம் போட்டிருக்கிறாள் - என்பான் ஒரு நாள்.

    இன்னொரு நாள் -

    சைனாவிலிருந்து யுவான்சுவாங் லெட்டர் போட்டிருக்கார் - என்பான்.

    யுவான்சுவாங் செத்துப்போய் ரொம்ப வருஷம் ஆச்சே!

    உலகத்துலே ஒரே ஒரு யுவான்சுவாங்தானா?

    ஷியாமுக்கு நிஜம் பாதி, கற்பனை பாதி கலந்து பேச நன்றாக வரும். ஒரு நாள் கண்ணைப் பறிக்கும் கலர் புகைப்படங்கள் பத்து பதினைந்து கொண்டுவந்து காட்டினான்.

    என் காதலி அமெரிக்காவிலிருந்து போட்டோ அனுப்பியிருக்கிறாள் - என்பான். இன்னொரு நாள் ஒரு பெரிய 'கிப்ட் பார்சல்' ஒன்றை எடுத்துவந்து இவன் ஆங்காரப்பட இவன் எதிரிலேயே பிரித்தான். அழகழகான விதவிதமான வால் டெகரேஷன்ஸ்! ஷியாமின் சிங்கப்பூர் காதலி அனுப்பியதாம்.

    ஆமாம், இவனுக்கு எத்தனை காதலிகள்? தேசம் தேசமாக... நாடு நாடாக... நல்ல வேளை இந்த பேனா ப்ரண்ட்ஷிப்பிற்கு பாஸ்போர்ட் தேவை இல்லை, விசா தேவை இல்லை! தேவை எல்லாம் விலாசம்தான்!

    ராமகிருஷ்ணனுக்கும் சபலம் வந்தது.

    நாமும் இப்படி ஒன்று எழுதிப்போட்டுப் பார்த்தால் என்ன? ஷியாம் மாதிரி அமெரிக்கா, லண்டன் என்று ப்ரண்ட்ஷிப் வைத்துக்கொள்ள வேண்டாம். ஒரு சிலோன், ஒரு சிங்கப்பூர்!

    சிலோன் வேண்டாம்! ஏக ரகளையாக இருக்கிறது. சிங்கப்பூர், கோலாலம்பூர்... தபால் கட்டணமும் குறைவாக இருக்கவேண்டும். ப்ரண்ட்ஷிப்பும் நிறைவாக இருக்கவேண்டும்!

    டேய் மடையா... சிங்கப்பூர்லே எல்லாம் நம்பளை மாதிரித்தான் இருப்பாங்க. ஆஸ்திரேலியா, அமெரிக்கா என்றால்தான் பணத்தை லட்சியம் பண்ணமாட்டார்கள். ப்ரண்ட்ஷிப்பிற்காக டாலர் டாலராகப் பரிசுகள் கூட அனுப்பத் தயங்கமாட்டார்கள். யார் கண்டார்கள்? உனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் உன்னை அவர்கள் ஹோஸ்ட் பண்ணினால் நீ அவர்கள் செலவில் அமெரிக்காகூடப் போய்விட்டு வந்துடலாம்!

    ஷியாமின் கூற்றை ராமகிருஷ்ணன் எடுத்துக்கொள்ளத் தயாராக இல்லை. ஒரு புனிதமான நட்பை களங்கப்படுத்த இவன் மனம் இடம் தரவில்லை. ஷியாமுக்கென்ன, பெரிய பணக்காரன்! அவன் நினைத்தால் அமெரிக்காவிலிருந்து 'பென் பிரண்டை' இறக்குமதிகூடச் செய்வான். இவனும் சுலபமாக அமெரிக்கா பறப்பான்!

    ராமகிருஷ்ணன் அப்படியா?

    இவனுக்கு அம்மாதான் எல்லாம்!

    அம்மா! அம்மா! அம்மா! அப்பா முகத்தையே பார்த்ததில்லை.

    அம்மாவின் பெயர் அன்னம். அன்னம் என்ற பெயருக்கேற்றபடி அம்மாதான் அன்னமிடுகிறாள். அரும்பாடுபட்டு அன்னம் இடுகிறாள். அப்பாவைப்பற்றிக் கேட்டாலே அம்மா சீறி விழுவாள். எனவே கேட்பதை நிறுத்திவிட்டான் ராமகிருஷ்ணன்.

    அவனைப் பொறுத்தவரை சகலமும் அம்மாதான். அன்னம்மா தான்!

    ***

    2

    தன் மகன் சாப்பிடுவதையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் அன்னம். சில சமயங்களில் ராமகிருஷ்ணன் குனிந்து உட்கார்ந்து கொண்டிருக்கும்போது அவன் அப்பாவை நினைவுபடுத்துகிறான்!

    அவன் அப்பா!

    அன்னத்தின் கணவன்! ஸாரி கணவர்!

    ஆனால் அன்னத்தைப் பொறுத்தவரை 'அந்த' உறவு விட்டுப்போய் இருபது வருடங்கள் ஆகிவிட்டது1

    இருபது வருடங்கள்.

    மலைப்பான இருபது வருடங்கள்.

    ஒரு பொண்ணின் சாதனையை விழுங்கிய இருபது வருடங்கள்..!

    ஒரு தனிமைத் 'தவத்தின்' இருபது வருடங்கள்!

    கற்பின் சோதனையின் இருபது வருடங்கள்!

    அன்னம் தன் பிள்ளையை வளர்க்க பட்ட பாடு! அவனுக்குப் பள்ளிப் படிப்பிற்கும், புத்தகம் வாங்கவும், யூனிபார்ம் வாங்கவும் அவள் திண்டாடிய கதைகள்...? பழைய கதைகள்! அது இப்போது வேண்டாம்!

    பழையவைகளை இடித்துவிட்டு அதில் புதியதொரு 'சின்ன மாளிகை' கட்டியிருக்கிறாள் அன்னம்.

    மூலையில் சுத்தி வைக்கப்பட்டிருக்கும் தம்பூராவின் கம்பிகள் துருப்பிடித்து நிறம் மாறிக்கிடக்கின்றன...

    அன்னமும் உழைத்துத் தேய்ந்து கிடக்கிறாள்...

    அவள் பயின்ற சங்கீதம் கைகொடுக்கும் என்று நம்பித்தான் கணவனின் கையை உதறினாள்.

    குறைந்தபட்சம் கோவில் கச்சேரி, சபாக் கச்சேரி கூடவா வராது போய்விடும்?

    அன்னம் நெற்றியில் பெரிய பொட்டிடன், தலையில் கொள்ளை கொள்ளையாய் மல்லிகைப் பூவை சுமந்தபடி மேடையில் அமர்ந்து சுருதி சேர்ந்து 'வாதாபி கணபதிம்' -என்றுபாட ஆரப்பிக்கும்போதே கச்சேரி களைகட்டிவிடும்!

    ஆனால்?

    அன்னத்தின் இளமை ஆபத்தாக இருந்தது!

    சுற்றிலும் ஆண்களின் ஆதிக்கமாக இருந்தது! நேர்மைக்கும், நியாயத்துக்கும் திறமைக்கும் மதிப்பே இல்லை என்பது புரிந்தது.

    திருவிழாக் காலங்களில் கோவில் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யக்கூட எத்தனை 'திறமை' தேவைப்படுகிறது. எத்தனை போட்டி!

    ஈ.ஓ.விலிருந்து தக்கார் வா.இ, டிரஸ்டி வரை அனைவரையும் போய்ப் பார்க்க வேண்டியிருக்கிறது! அவர்கள் 'பார்ப்பதை' சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது! ஒவ்வொருத்தரும் அரசியல் பின்னணியுடன் 'போனில்' இன்னார் பி.ஏ. பேசுகிறேன் இவர்களுக்கு சான்ஸ் கொடுங்கள், அவர்களுக்கு சான்ஸ் கொடுங்கள். 'சான்ஸ்' பிடிக்கப்போய் அலைகிற நேரத்தில் இவள் எந்த மூலைக்கு?

    ரொம்பத் திறமை படைத்தவர்கள் ரொம்பத் திறமை படைத்தவர்களின் 'விருந்தாளியாக' வந்து, கெஸ்ட் அவுஸில் தங்கி, கச்சேரியை முடித்து 'எல்லாம்' முடித்து, ஐயாயிரம், பத்தாயிரம் என்று பணம் வாங்கிக்கொண்டு போய்விடுகிறார்கள்.

    இவள் ஐநூறுக்கும், ஆயிரத்துக்கும் ஆலாய் பறந்து, கச்சேரி 'டேட்' வாங்கி, கஷ்டப்பட்டு உழைத்துச் சாதகம் பண்ணிப் பாட உட்கார்ந்தால்...

    கோவில் கச்சேரிகளில்கூட –நேற்று ராத்திரி - என்று பாடச்சொல்கிற ரசிகப் பெருமக்கள்...

    இவள் பொறுத்துக்கொண்டாள்!

    'அவனை வளர்த்து ஆளாக்கிக் காட்டுகிறேன் பார்... உன் தயவில்லாமலே வாழ்ந்து காட்டுகிறேன் பார்' என்று வீம்பு பேசி, சபதம் செய்து, வீட்டைவிட்டு வெளியேறிய புதிய பாதையில் அடியெடுத்து வைத்த அந்த புண்ணிய நாளுக்காகப் பொறுத்துக்கொண்டாள்.

    தரையில் நடக்க ஆரம்பித்த பிறகு வாழைப்பழத்தோல் சறுக்குகிறதே என்று நடக்காமல் இருக்க முடியுமா?

    இவள் பார்த்து நடக்கவேண்டும்!

    நடந்தாள், நலிந்தாள்.

    ராமகிருஷ்ணன் வளர்ந்தான்... வாலிபனானான்...

    இவளுக்கு இப்பொழுது வயதாகிவிட்டது. கோவில் கச்சேரிகளுக்குக் கூட கூப்பிடுவார் இல்லை. முன்பு மாதிரி இப்போதெல்லாம் 'தம்' பிடித்துபாட முடிவதில்லை! ஜீவராகத்தின் நாடி நரம்புகள் தளர்ந்துதான் போய்விட்டன...

    தான் எப்போதோ பாடிய பழைய கச்சேரிகளிலிருந்து பதிவுபண்ணிய கேஸட்டை போட்டுப் போட்டுக் கேட்டு சில சமயம் மகிழ்ந்து போவதும் உண்டு!

    பரவாயில்லை. நானும் சாதித்திருக்கிறேன். நேர்மையாக சாதித்திருக்கிறேன். உண்மையாகச் சாதித்திருக்கிறேன் என்று தனக்குத்தானே ஷொட்டு கொடுத்துக் கொள்வதும் உண்டு.

    என்னம்மா மோர் ஊத்தாம எங்கேயோ பார்த்துட்டே இருக்கே? ராமகிருஷ்ணன் இவள் சிந்தனைகளைக் கலைத்தான்.

    சுயநினைவு பெற்றவளாய் பிள்ளைக்குச் சோறுபோட்டு மோர் ஊற்றினாள்.

    இப்போது...?

    ராமகிருஷ்ணன் சாப்பிடும் சாதத்தையே பார்த்தபடி உட்கார்ந்துகொண்டிருந்தாள். ஏனெனில் அவன் இலையில் பல்லவியின் முகம் தெரிந்தது. இப்போது கனவு காணுவது இவன் முறை!

    பல்லவி.

    ***

    3

    "ஆமாம். ஆமாம். பல்லவிகிட்டே

    Enjoying the preview?
    Page 1 of 1