Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaarthai Thavarivitten Kannamma
Vaarthai Thavarivitten Kannamma
Vaarthai Thavarivitten Kannamma
Ebook438 pages4 hours

Vaarthai Thavarivitten Kannamma

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

நான் வத்சலா ராகவன். நான் ஒரு ஆசிரியை. சரியாக சொல்ல வேண்டுமென்றால் கணக்கு டீச்சர். அதற்கு மேல் ஒரு ரசிகை. இனிமையான, மென்மையான விஷயங்களுக்கு ஒரு பெரிய ரசிகை. இந்த உலகில் அன்பினால் சாதிக்க முடியாத விஷயங்கள் எதுவுமே இல்லை என்பது என்னுடைய நம்பிக்கை. இந்த எண்ணங்களின் அடிப்படையில்தான் கதைகள் எழுத ஆரம்பித்தேன் நான். சில வருடங்களுக்கு முன்னால் துவங்கிய எனது எழுத்து பயணத்தில் சிறுகதைகள் நாவல்கள் என சில அடிகள் நடந்திருக்கிறேன்.

இந்த பயணத்தில் இப்போது புஸ்தகாவுடன் இணைவதில், புத்தகமாக வெளிவந்திருக்கும் என் நாவல்கள் இப்போது மின்நூல்கள் வடிவில் வெளி வரப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580113302711
Vaarthai Thavarivitten Kannamma

Read more from Vathsala Raghavan

Related to Vaarthai Thavarivitten Kannamma

Related ebooks

Reviews for Vaarthai Thavarivitten Kannamma

Rating: 4 out of 5 stars
4/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaarthai Thavarivitten Kannamma - Vathsala Raghavan

    http://www.pustaka.co.in

    வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா

    Vaarthai Thavarivitten Kannamma

    Author:

    வத்சலா ராகவன்

    Vathsala Raghavan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vathsala-raghavan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    ALL IS FAIR IN LOVE AND WAR

    அபர்ணா!!!

    மதுரை ரயில் நிலையத்தில் தனது இரண்டு தோழிகளுடன் நின்றுக்கொண்டிருந்தாள் அவள். உடன் பணி புரியும் தோழியின் திருமணத்தில் கலந்துக்கொண்டு விட்டு சென்னை நோக்கி கிளம்பிக்கொண்டிருந்தனர் மூவரும்.

    இன்னும் சில நிமிடங்களில் புறப்பட தயாராக நின்றிருந்தது பாண்டியன் எக்ஸ்பிரஸ்!!!! ரயில் பயணம்!!! அது அபர்ணாவுக்கு எப்போதுமே திகட்டாத ஒன்று. அதவும் ஜன்னலோர பயணம் அவளுக்கு ஆனந்தம்!!! அதனாலேயே ஏ. சி பெட்டியை தவிர்துவிடுவாள் அவள். இன்றும் கூட ஏ.ஸி இல்லாத முதல் வகுப்பு பெட்டி!!! முகம் புன்னகையில் மலர்ந்து போயிருக்க ரயிலில் ஏற தயாரானாள் அவள்.

    அபர்ணா!!! ஒரு பிரபலமான மென் பொருள் நிறுவனத்தில் வேலை அவளுக்கு. ஆனால் அந்த வேலையில் அவளுக்கு எப்போதுமே நாட்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

    தழைய தழைய புடவை. பின்னி முடித்த நீளமான கூந்தல். ஏதாவது ஒரு பூச்சரம். காதோரம் எப்போதும் ஊஞ்சலடிக்கொண்டிருக்கும் சின்ன ஜிமிக்கிகள் அல்லது தொங்கட்டான்கள். இதுவே அவளது வழக்கமான அலங்காரம். இன்று தலையில் பூ மட்டும் மிஸ்ஸிங்.

    நீயும் உன் டேஸ்ட்டும்.. எப்போதும் அவளது தோழிகள் அவளை பார்த்து சொல்லும் வார்த்தை இது, 'இன்னும் திரௌபதி மாதிரி புடவையை சுத்திட்டு அலையறே' என்பார்கள்.

    அவர்களுக்கு பிடித்த நிறைய விஷயங்கள் ஏனோ இவளுக்கு பிடிப்பதில்லை. இவளுக்கு பிடித்தவை அவர்களுக்கு பிடிப்பதில்லை.

    'அதுக்கும் மேலே மாடர்ன் டிரஸ்ன்னா ஒரு சுரிதாரும் மடிச்சு பின் பண்ண துப்பட்டாவும். ஏன் அபர்ணா இப்படி இருக்கே??? ஜீன்ஸ் டி. ஷர்ட் இப்படி ஏதாவது ட்ரை பண்ணா என்ன???

    'எனக்கு பிடிச்ச மாதிரி நான் ட்ரெஸ் பண்றேன். இதிலே உங்களுக்கு என்ன பிரச்சனை??? எனக்கு இதுதான் சௌகரியமா இருக்கு.

    'நீ ஒரு முப்பது வருஷம் முன்னாடி பிறந்திருக்க வேண்டிய ஆளு. லேட்டா பிறந்திட்டே..' சிரிப்பார்கள் அவளை பார்த்து. 

    'நான் இப்படித்தான் கடைசி வரை இப்படித்தான்..' தனக்குள்ளே சிரித்துக்கொள்வாள் அவள்.

    ரயிலில் ஏறினாள் அவள். அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட, நான்கு பர்த்துகள் கொண்ட அந்த முதல் வகுப்பு கம்பார்ட்மென்டின் கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர் மூவரும்.

    ஒரு நொடி சரேலென விரிந்து, இமை தட்டி திறந்து அவளை பார்த்த வியப்பில் மூழ்கி களித்து கிடந்தன அந்த இரண்டு விழிகள்!!!! இத்தனை நாட்களாக அவளுக்காகவே தவமிருக்கும் அந்த இரண்டு விழிகள்!!! அந்த கம்பார்ட்மென்டின் அப்பர் பர்த்தில் படுத்திருந்தவனின் விழிகள்!!!!

    'எத்தனை ஆண்டுகள் ஆகின்றன அவளை பார்த்து!!! பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறாள் என்னவள்.!!!!'

    உள்ளே நுழைந்த நொடியில் கால் கொஞ்சம் தடுக்கி அவள் சற்று தடுமாற திடுக்கிட்டு, அவளை தாங்கிக்கொள்பவன் போல் சட்டென எழுந்து அமர்ந்துவிட்டான் அவன்.

    'பார்த்துடா..' அவன் இதழ்கள் தன்னையும் அறியாமல் முணுமுணுத்தன. அவள் அவனை கவனிக்கவில்லைதான். அவள் சமாளித்துக்கொள்ள ஒரு ஆழ்ந்த மூச்சுடன் மறுபடியும் படுத்துக்கொண்டான் அவன்.

    இப்படித்தான்!!! இப்படித்தான் பல வருடங்களாக அவளுக்காகவே துடித்துக்கொண்டிருக்கிறது அவனது இதயம்!!! கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்களாக!!!

    ரயில் மெல்ல நகர துவங்க கீழே குனிந்து தனது பெட்டியை பர்த்தின் அடியில் தள்ளிவிட்டு முன்னால் விழுந்த சாட்டை பின்னலை அலட்சியமாக பின்னே தூக்கி போட்டு, சந்தோஷ சிரிப்புடன் ஜன்னலுக்கு அருகில் சென்று அமர்ந்து வெளியே பார்க்க துவங்கியவளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்திருந்தான் அவன்!!!!

    உள்ளே வந்தவர்கள் அவனை பெரிதாக கவனிக்கவுமில்லை, கண்டுக்கொள்ளவும் இல்லைதான். இன்னமும் அவளது விழிகளும் மேலே நிமிரவில்லை தான்!!! நிமிர்ந்தால்??? ஒரு வேளை அவனை பார்த்தால் என்ன செய்வாளாம்??? அவள் அவனை சந்திப்பதை எத்தனை தூரம் விரும்புவாள் என்றே புரியவில்லை அவனுக்கு.

    'வேண்டாம் அது!!!! இன்று வேண்டாம்!!! என தோன்றியது அவனுக்கு. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவள் என்னை பார்க்கட்டும். இன்று முழுவதும் நான் அவளை தூரத்திலிருந்து ரசித்துக்கொண்டே இருக்கவேண்டும்.'

    காலுக்கு அருகில் இருந்த ஷாலை இழுத்து முகம் வரை போர்த்திக்கொண்டான். இப்போது வெளியே தெரிந்தது அவன் கண்களும் கேசமும் மட்டுமே. 'இதை வைத்து கண்டு பிடித்துவிடுவாளா என்ன??? அதையும் பார்க்கலாம்!!!!

    அவளும் அவனை அவ்வபோது பார்த்திருக்ககூடும்தான். டி.வி.யில்!!! பத்திரிக்கைகளில்!!! சினிமாவில் பிரபலமாகிக்கொண்டிருக்கும் ஒரு பாடகன் அவன். அதோடு மடமடவென வளர்ந்துக்கொண்டிருக்கும் ஒரு தொழிலதிபரும் கூட.....

    இந்த எட்டு வருடங்களில் அவனது வாழ்கையில், நடை உடை பாவனைகளில், அந்தஸ்தில் என எல்லாவற்றிலும் கிடு கிடு வளர்ச்சி.. நிறையவே மாற்றங்கள்!!! ஆனால் இதயம் மட்டும் எப்போதும் போல் அவளுடையதாகவே இருக்கிறது!!!

    ஏழு எட்டு வருடங்கள் முன்னால் வரை அவனுக்கு வாழ்கையில் பெரிய பிடிப்பு என்ற ஒன்று இருந்ததே இல்லை. எந்த ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளும் சிக்காமல் சுற்றிக்கொண்டிருந்தவன்தான் அவன். இப்போது வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற பிடிப்பு வந்ததற்கு காரணம் அவள் மட்டுமே. இந்த வளர்ச்சி முழுவதும் அவன் அவள் மீது கொண்ட காதலால் மட்டுமே வந்திருக்கிறது.

    'ஹேய்.. கிளம்பும் போது மதுரை மல்லி வாங்கணும்ன்னு நினைச்சேன் மறந்திட்டேன் பாரு.. இங்கே அடுத்த ஸ்டேஷன்லே கிடைக்குமா???.' சட்டென நினைவு வந்தவளாக கேட்டாள் அபர்ணா. அவளுக்கு பூக்கள் என்றால் கொள்ளை பிரியம். சின்ன புன்னகை அவனிடத்தில்.

    'அடடா!!!! ஒரு நாள் தலையிலே பூ வைக்கலைன்னா ஒண்ணும் ஆகாது. இந்த ராத்திரி நேரத்திலே ஸ்டேஷன்லே எல்லாம் பூ கிடைக்காது. சும்மா இரு..' அவளை அதட்டினாள் அவள் அருகில் இருந்த தோழி.

    அவளுக்கு பழிப்பு காட்டி திரும்பிக்கொண்டாள் அவள். சில நொடி யோசனை அவனிடத்தில். திரும்பி படுத்துக்கொண்டவன் கைபேசியை அழுத்தி மெலிதான குரலில் யாருடனோ பேசினான். ரயில் கொடைரோடு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. கீழே கலகலவென பேச்சு சத்தம் தொடர்ந்துக்கொண்டே இருந்தது.

    'மேலே ஒருத்தர் படுத்திருக்கார். தூங்கறார் போல... மெதுவா பேசுங்க...' அவர்களுக்கு முதுகு காட்டி படுத்திருந்தவனின் காதில் விழுந்தன அபர்ணாவின் வார்த்தைகள். மெல்ல சிரித்துக்கொண்டான் அவன்.

    'உன்னை பார்த்த பிறகு உறக்கம் என்பது எனக்கு கிட்டுமா என்ன???'

    சில நிமிடங்கள் கரைய ரயில் கொடைரோடு ரயில் நிலையத்தை அடைந்திருக்க அவர்கள் ஜன்னல் அருகில் வந்து நின்றாள் அந்த பெண்மணி.

    'அம்மா மல்லிகை பூ மா. வாங்கிகோங்கமா.. ராத்திரி ஆயிடுச்சு நீங்க வாங்கிடீங்கன்னா நான் அப்படியே வீட்டுக்கு கிளம்பிடுவேன்...' அபர்ணாவை பார்த்து சொன்ன அந்த பெண்ணின் கையில் ஐந்து முழம் மல்லிகை பூ.

    வியந்து மகிழ்ந்து போனாள் அபர்ணா. 'ஹேய்... மல்லிகை பூ..' அப்படியே மொத்த பூவையும் வாங்கிக்கொண்டாள் அவள். சந்தோஷ மழை அவளிடத்தில். அந்த கம்பார்ட்மென்டின் கதவு சாத்தி இருக்க சுகமான மல்லிகை மணம் அவன் நாசி தொட்டது.

    'ரயில் நகர ஆரம்பிக்க யாருக்கெல்லாம் பூ வேணும்???' கேட்டாள் அபர்ணா

    'அய்யே... எங்களுக்கெல்லாம் வேண்டாம் நீயே வெச்சுக்கோ..' சொன்னார்கள் தோழிகள்.

    'வேண்டாம்னா போங்கடி...' சூடிக்கொண்டாள் மலர்களை. அவள் முகத்தில் முழு நிலவின் வெளிச்சம். மெல்ல திரும்பி படுத்தவனின் முகத்தில் ரசனையுடன் கூடிய புன்னகை.. அவள் கேட்டதை அவள் கேட்டவுடனே அவள் கையில் கொடுத்துவிட்ட மகிழ்ச்சி!!! அந்த மல்லிகை சரம் காற்றில் ஆடி அவள் கன்னம் உரசியது. அவனுக்குள்ளே குளிர் சாரல்.

    அப்போது ஒலித்தது அவள் கைப்பேசி. அதை எடுத்து பார்த்தவளின் இதழ்களில் புன்னகை. முகத்தில் வெட்கப்பூச்சு. பார்த்திருந்தான் மேலிருந்தவன்!!! அவளை இமைக்க மறந்து பார்த்திருந்தான். எதனால் இந்த வெட்கமாம்???

    'ஓய்... யாரது??? உன் ஆளா???' அவளது தோழி கேட்க

    'ம்...' என்று தலை அசைத்தவள் அழைப்பை ஏற்றாள்.

    உயிர் துடித்து உடைந்து நொறுங்குவது என்றால் இதுதானா??? பேரதிர்ச்சி அலைகள் அவனுக்குள்ளே. சுவாசம் கூட சில நொடிகள் நின்று போனதை போலே தோன்றியது அவனுக்கு.

    இத்தனை நாட்கள் அவளை அவன் பார்த்திரா விட்டாலும் அவள் எங்கே இருக்கிறாள், என்ன செய்துக்கொண்டிருக்கிறாள் போன்ற எல்லா விவரங்களும் அவனுக்கு அவ்வபோது வந்துக்கொண்டுதான் இருக்கின்றன என்றாலும், இது பற்றி தெரிந்திருக்கவில்லை அவனுக்கு.

    'என்ன இது??? யாராம் அவன்???' படபடத்தது அவன் இதயம்.

    'ஹலோ......' என்றாள் மெதுவாக.

    'எங்கேமா... இருக்கே???' என்றது மறுமுனை.

    'ட்ரைன் ஏறிட்டேன்...' மெல்ல சொன்னாள் அவள்.

    அவளுடன் வேலை பார்ப்பவன்தான் மறுமுனையில் இருப்பவன். இவளது எண்ணங்களும் அவனது எண்ணங்களும் எப்போதுமே நேரெதிர். அதனால் தானோ என்னவோ அவள் மீது ஒரு ஈர்ப்பு பிறந்தது அவனுக்கு. புன்னகைத்து புன்னகைத்தே மெதுமெதுவாக அவளுக்குள்ளும் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தினான் அவன். அவளது வீட்டில் அவள் அண்ணனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும்.

    'சொல்லி விடவேண்டும். அப்பாவிடமும் சீக்கிரமே சொல்லி விட வேண்டும்' நினைத்துக்கொண்டாள் அபர்ணா.

    'சரி என்ன டிரஸ் போட்டிருக்கே???' கேட்டது எதிர்முனை.

    'அ... அது... புடவைதான் ஏன்???'

    'ஹேய்... சரியான பட்டிக்காடு மாதிரி எப்போ பாரு புடவை. ட்ரைன்லே போகும் போதாவது ஜீன்ஸ் மாதிரி ஏதாவது போடலாம் இல்ல. மேலே பர்த்திலே ஏறணும்ன்னா என்ன செய்வே???'

    அவள் முகம் சட்டென மாற்றம் கொண்டது. 'இல் இல்லை எனக்கு இது.. இது... சௌகரியமாதான் இருக்கு.. நான் லோயர் பர்த்திலே தான் படுக்க போறேன். ' அவள் குரல் தடுமாறியது. அவள் அணியும் உடைகள் அவனுக்கு ஏனோ பிடிப்பதே இல்லை தான்.

    அங்கே இருந்த எல்லாருமே அவளையே தான் பார்த்திருந்தனர். மறுமுனையிலிருந்து பதில் வராமல் போக...

    'நான் கொஞ்ச நாளிலே என்னை மாத்திக்கறேன். வேறே மாதிரி டிரஸ் பண்ண ட்ரை பண்றேன்...' தயக்கம் நிறைந்த குரலில் சொன்னாள் அபர்ணா.

    'யாராம் அவன்??? மிரட்டுகிறானா அவளை??? ராஸ்கல்...' கொஞ்சமாக வாடிப்போன அவளது முகம் பார்க்க பார்க்க மேலே இருந்தவனுக்கு சுறுசுறுவென கோபம் ஏறியது.

    'சரி பத்திரமாவா. வைக்கிறேன்...' அழைப்பை துண்டித்துவிட்டு தோழிகள் இருவரையும் பார்த்தாள் அபர்ணா.

    'ஏன் அபர்ணா.. அவனுக்கு இப்படி பயப்படறே.??? கேட்டாள் அவள் தோழி ப்ரியா...

    'பயப்படலாம் இல்லை...' மெதுவாக எழுந்தது அவள் குரல்.

    'அபர்ணா.. கோபப்படாதே. நான் சொல்றதை கொஞ்சம் ரைட்டா புரிஞ்சுக்கோ. இன்னும் கல்யாணமே ஆகலை அதுக்குள்ளே நீ எதுக்கு இவ்வளவு அடங்கி போகணும்??? எங்ககிட்டே சொன்னே இல்ல....' எனக்கு பிடிச்ச மாதிரி நான் ட்ரெஸ் பண்றேன். இதிலே உங்களுக்கு என்ன பிரச்சனை??? அப்படின்னு.... அதையே அவன் கிட்டே கேட்க வேண்டியது தானே???

    இடம் வலமாக தலை அசைத்தாள் அவள் 'அதெல்லாம் முடியாது...'

    'ஏன் முடியாது.???' அவசரமாக கேட்டாள் இன்னொரு தோழி.

    'ஏன்னா எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். ஐ லவ் ஹிம். நான் அவர் என்ன சொன்னாலும் கண்டிப்பா கேட்டுப்பேன்.... அவருக்காக எதை வேணும்னாலும் விட்டுக்கொடுக்கலாம். விட்டுக்கொடுப்பேன் ' விரல்களை பார்த்தபடியே சொன்னாள் அவள்.

    'நான்சென்ஸ். காதலிக்கறது என்ன... கல்யாணம் ஆனா கூட உன்னோட சுயத்தை நீ விட்டுகொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரையும் முழுசா நம்பாதே. டிபெண்ட் பண்ணாதே. நீ படிச்ச பொண்ணு, வேலை பார்க்கிற பொண்ணு அப்புறம் என்ன???'

    'இங்கே பாரு ப்ரியா..' என்றாள் தோழியை பார்த்து 'அவர் ரொம்ப நல்லவர். நான் ஒண்ணும் கண்ணை மூடிட்டு முடிவு எடுக்கலை. அவர் கிட்டே எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அவருக்கும் நான் தான் எல்லாமே. வேறே எந்த பொண்ணையும் அவர் நிமிர்ந்துக்கூட பார்க்க மாட்டார் தெரியுமா???' பட பட வென தன்னவனுக்கு பரிந்து பேச ஆரம்பித்தாள் அபர்ணா.

    ரயில் தடதடத்து விரைந்துக்கொண்டிருந்தது மேல் பர்த்தில் இருந்தவனின் இதயத்தை போல!!!!

    "எனக்கும் தெரியும்பா. அவன் எனக்கும் நல்ல ஃப்ரெண்ட். அவன் ரொம்ப நல்லவன். ஆனால் அவன் கிட்டே இருக்கிற ஒரே மைனஸ்..... அவன் தான் நினைச்சதுதான் எப்பவும் நடக்கணும்ன்னு நினைக்கிற டைப்' தெளிவாக சொன்னாள் ப்ரியா.

    'சரி.. அவர் நினைச்சதே நடக்கட்டுமே இப்போ என்ன???' அழுத்தமாக சொன்னாள் அபர்ணா.

    'இல்லடா உனக்கு எப்படி புரிய வைக்கன்னு தெரியலை. நீ நினைக்கற மாதிரியே அவனும் நினைக்கணும் அப்போதான் லைஃப் நல்லா இருக்கும். இப்படி கண்மூடித்தனமா லவ் பண்ணாதே. எல்லாம் நல்லபடியா நடக்கட்டும் அதுதான் என் ஆசையும். பட் ஏதோ ஒரு சூழ்நிலை இந்த கல்யாணம் நடக்கலைன்னா அப்புறம் என்ன செய்வே???

    'ப்ரியா...' தோழியை பார்த்து எகிறியது அபர்ணாவின் குரல் 'வாயை மூடு. ஏதாவது உளறாதே...'

    'ப்ளீஸ்... ப்ளீஸ்... அபர்ணா... நான் அவன் மேலே கண் மூடித்தனமா பாசம் வைக்காதேன்னுதான் சொல்ல வந்தேன் அவ்வளவுதான். வேறே எதுவும் இல்லை.. ' மெல்ல இறங்கியது தோழியின் குரல். பதில் பேசவில்லை அபர்ணா.

    'என் வாழ்க்கையிலே நான் இது மாதிரி அனுபவ பட்டிருக்கேன் அபர்ணா. அப்புறம் அதை விட்டு வெளியே வர ரொம்ப கஷ்டப்பட்டேன். கல்யாணம் நடந்திட்டா கூட ஓகே. பட் அதுவரைக்கும் என்ன வேணும்னாலும் நடக்கலாம்ங்கிறதுதான் உண்மை. ஒரு வேளை உனக்கும் வேறே யாருக்குமோ முடிச்சு போட்டிருந்தா???'

    'அப்படி எல்லாம் எதுவும் நடக்காது.. ' சட்டென சொல்லிவிட்டு அபர்ணா நிமிர அங்கே மேலே அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த அந்த விழிகளை சந்தித்தன அவள் கண்கள். துறுதுறுவென தவித்தன அவன் கண்கள்.

    'யார்??? யாரது???' உடல் மொத்தமும் ஒரு முறை குலுங்கி ஓய்ந்தது அவளுக்கு.

    அது அவளுக்கு மிகவும் பரிச்சயமான கண்களை போலவே தோன்றியது. போர்வையினுள்ளே மெல்ல மெல்ல புன்னகையில் விரிந்தன அவனது இதழ்கள். அது அவன் கண்களிலும் பிரதிபலித்திருக்க வேண்டுமோ??? சட்டென கண்களை தாழத்திக்கொண்டாள் அவள். '

    'யாரிவன்????' அவனை அடையாளம் தெரியவில்லை அவளுக்கு. தோழிகள் மூவரும் அவளையே பார்த்திருக்க சமாளித்துக்கொண்டு சொன்னாள் அபர்ணா

    'அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. அப்படியே... அப்...ப....டியே இந்.. இந்....த..... க...ல்யா....ணம் ந.. நடக்..கலைன்....னாலும்...'  நிறுத்திவிட்டு கண்களை மூடிக்கொண்டாள் அவள். சில நொடிகள் கழித்து அவளே தொடர்ந்தாள்......

    'கல்யாணம் நடக்கலைன்னாலும்.... நான் வேறே யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன். வாழ்கையிலே காதல்ங்கிறது ஒரு தடவை தான் வரும். ஒரு தடவை தான் வரணும். அது எனக்கு வந்தாச்சு... என்ன ஆனாலும் அது இனிமே மாறாது அவ்வளவுதான்.' நிரம்பி விட்டிருந்தன அவள் விழிகள்.

    'கண்ணீரா. அவள் கண்களில் கண்ணீரா???' பதறி துடித்தது அவன் இதயம்.

    அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை காட்டிலும்... தனது காதல் நிறைவேறுமா என்ற தவிப்பை காட்டிலும்.... அவள் கண்ணீரே அவனுக்கு பெரிதாக பட்டது. அப்படியே இறங்கி சென்று அவளது கண்களை துடைத்து விட தவித்தன அவன் விரல்கள். அதற்குள் அவள் அருகில் வந்து அமர்ந்து விட்டிருந்தாள் ப்ரியா..

    'ஹேய்... லூசு... நான் ஏதோ எனக்கு நடந்ததை வெச்சு பேசிட்டேன். சாரிடா. எனக்கு நடந்ததே உனக்கும் நடக்குமா என்ன??? உனக்கு எல்லாம் சரியா நடக்கும். கூல் பேபி.. அவள் கண்ணீரை துடைத்து விட்டு அவள் கையை அழுத்திக்கொடுத்தாள். இன்னொரு தோழியும் அவள் அருகில் வந்து அமர்ந்து அவளை சமாதான படுத்த முயன்றாள்.

    'சரி.... போங்க.. எல்லாரும் போய்... படுங்க போங்க...' யாரையும் நிமிர்ந்துக்கூட பார்க்காமல் சொன்னாள் அபர்ணா.

    'சாரிடா..' என்றாள் ப்ரியா மறுபடியும். 'ரொம்ப மூட் அவுட் பண்ணிட்டேனா???'

    'அதெல்லாம் ஒண்ணுமில்லை போடி...' சின்ன புன்னகை ஓட ஆரம்பித்தது அவள் இதழ்களில். அவனிடம் நிம்மதியான சுவாசம்.

    சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்து விட்டு, எல்லாரும் படுத்துவிட காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஜன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தாள் அபர்ணா.

    காதில் அந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருக்க ஏதோ ஒரு உந்துதலில் அவள் நிமிர, மறுபடியும் நான்கு விழிகளும் உரசிக்கொள்ள, அவள் இதயம் படபடக்க அவள் காதில் ஒலித்தன அந்த வரிகள்

    'எனைத்தான் அன்பே மறந்தாயோ???

    மறப்பேன் என்றே நினைத்தாயோ???

    'என்னையே தந்தேன் உனக்காக......

    'ஜென்மமே கொண்டேன் அதற்காக.........'

    ப்ரியா சொன்ன வார்த்தைகள் அவன் மனதில் கொஞ்சம் ஆழமாக பதிந்திருந்தன. 'திருமணம் என்ற ஒன்று நிகழும் வரை எது வேண்டுமானாலும் நடக்கலாம் தானே??? ஒரு வேளை அவளுக்கும் எனக்கும் முடிச்சு போடப்பட்டிருந்தால்???

    2

    மறுநாள் காலை

    ரயில் சென்னையை நெருங்கிக்கொண்டிருக்க, மேல் பர்த்தில் அசந்து உறங்கிக்கொண்டிருந்தான் அவன்.

    இரவு முழுவதும் உறக்கமில்லை அவனுக்கு. கீழ் பர்த்தில் உறங்கிக்கொண்டிருந்தவளை விட்டு விழி மூட விருப்பமில்லாதவனாக அவளையே ரசித்திருந்தவன், சில நிமிடங்கள் முன்னால்தான் தன்னையும் அறியாமல் உறக்கத்தை தொட்டிருந்தான். இன்னமும் அவள் அவன் முகத்தை பார்த்திருக்கவில்லை.

    சில நிமிடங்களில் திடுக்கென விழித்துக்கொண்டான் அவன். ரயில் நின்றிருந்தது. 'சென்னையை அடைந்து விட்டோமா என்ன???" சட்டென அவன் திரும்பி பார்க்க கீழே அவள் இல்லை!!! எழுந்து அமர்ந்தவனின் விழிகள் அவளை பரபரவென தேடின.

    ரயில் சென்னை எக்மோரை தொட்டிருக்க, தோழிகளுடன் இறங்கி சென்று விட்டிருந்தாள் அவள். துடித்துக்கொண்டிருந்த இதயம் சட்டென காணாமல் போனதைப்போல்...... வார்த்தையில் வர்ணிக்க முடியாத ஒரு வெறுமை அவனை சூழ்ந்துக்கொண்டது.

    'ச்சே... எப்படி இப்படி உறங்கிப்போனேன்??? இனி எப்போது அவளை மறுபடியும் பார்க்க முடியுமென தெரியவில்லையே??? நினைக்கும் போதே உள்ளத்தின் அடி ஆழத்தில் பரவியது வலி..

    தனது பையை முதுகில் மாட்டிக்கொண்டு மடமடவென ரயிலை விட்டு கீழே இறங்கினான் அவன். விழிகளை இங்கமங்கும் அவசரமாக சுழற்றினான்.

    'எங்காவது தென்பட்டு விட மாட்டாளா அவள்???

    'இல்லை!!! கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எங்கேயும் இல்லை அவள். அவனது கண்களிலும், உள்ளத்திலும் நிறையவே ஏமாற்றம் பரவியது. மனம் ஆறாமல் பார்வையை சுழற்றியபடியே நடந்தான் அவன்.

    சென்னை மா நகரம்!!!

    இந்த ஊருக்கு வர மாட்டோமா என்று அவன் ஏங்கிய நாட்கள் நிறைய உண்டு. ஆனால் இப்போது பெரிய நாட்டம் இல்லை. இந்த ஊருக்கு வருவதென்றால் அது அவளுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று தோன்றும் அவனுக்கு. அவன் இப்போது இருப்பது பெங்களூரில்.

    மதுரையில் ஒரு நண்பனின் வீட்டு விசேஷத்தில் கலந்துக்கொண்டு விட்டு, அந்த பெரிய பத்திரிக்கையின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக இன்று இங்கே வந்து இறங்கி இருக்கிறான் அவன்!!!

    சென்ற வருடம் சில திரைப்படங்களில் அவன் பாடிய பாடல்களுக்காக விருது இது. இப்போது தான் வளர்ந்து வரும் பாடகன் என்பதால் முகம் எல்லாருக்கும் அத்தனை பரிச்சயம் இல்லைதான். இந்த விழாவுக்கு பிறகு சற்று பிரபலமாக கூடும்.

    .'ஒரு டாக்சி எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு செல்ல வேண்டும்'யோசித்தபடியே நடைமேடையில் அவன் நடக்க...

    'வணக்கம் சார்...' கார் கொண்டு வந்து இருக்கேன்... டாக்டர் சார் அனுப்பினார்... உங்களை வேண்டிய இடத்தில இறக்கி விட சொன்னார் ' ஒரு டிரைவரின் குரல் அவனை நிறுத்தியது.

    'டாக்டர் சார்....' என்ற வார்த்தை மட்டுமே போதுமானதாக இருந்தது அவனுக்கு அந்த வண்டியை அனுப்பியது யாரென தெரிந்துக்கொள்ள...

    நிதானமான குரலில் சொன்னான் அவன் 'உங்க டாக்டர் சாரோட காரை அவரையே வெச்சுக்க சொல்லுங்க. எனக்கு டாக்சி பிடிச்சு போக தெரியும்ன்னு சொல்லிடுங்க...' அவன் நகர முற்பட

    'சார் சார் ப்ளீஸ் சார்...' டிரைவரின் கெஞ்சலான குரல் அவனை நிறுத்தியது. 'நீங்க கார்லே ஏறலேனா எனக்கு இந்த மாசம் சம்பளம் கிடையாதுன்னு சொல்லிட்டார் சார்..... நான் பிள்ளை குட்டிகாரன் சார் ப்ளீஸ்...'

    டிரைவரின் முகத்தை பார்க்க பாவமாக இருந்தது அவனுக்கு. இவனை எப்படி மடக்க வேண்டுமென நன்றாக அறிந்தவன் தானே அந்த டாக்டர்!!!

    கொஞ்சம் சுறுசுறுவென ஏறத்தான் செய்தது இவனுக்கு 'எருமை மாடு...' அவன் உதடுகள் தன்னையும் அறியாமல் உச்சரித்தன.

    'அவன் என்னை எருமை மாடுன்னு திட்டினான் வெச்சுக்கோங்க அவன் கூல் ஆயிட்டான்னு அர்த்தம் ' டிரைவரிடம் சொல்லித்தான் அனுப்பி இருந்தான் அந்த டாக்டர்.

    இதழ்களில் ஓட ஆரம்பித்த புன்னகையை கஷ்டப்பட்டு மறைத்துக்கொண்டு கேட்டார் டிரைவர் 'சார் போலாமா சார்...'

    சில நொடிகள் யோசித்தவன் 'சரி வாங்க...' என்று நடந்தான்

    கார் ஹோடேலை அடைந்திருக்க அதிலிருந்து இறங்கியவன் தனது பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து டிரைவரிடம் நீட்டினான்.

    'சார் எதுக்கு சார்???'

    'உங்களுக்கில்ல... உங்க டாக்டர் சார்க்கு... கிலோமீட்டர் கணக்கு பார்த்து கொடுத்திருக்கேன். அப்புறம் ஜென்ரலா இந்த மாதிரி டப்பா வண்டிலேயெல்லாம் நான் ஏறுறது இல்லை. அடுத்த தடவை ஒரு வேளை எனக்கு வண்டி அனுப்பணும்னு நினைச்சா என் ரேஞ்சுக்கு ஏத்தா மாதிரி அனுப்ப சொல்லுங்க... அவர்கிட்டே அந்த மாதிரி கார் இருந்தா... வரட்டுமா..' சொல்லிவிட்டு நடந்தவனை வியப்புடன் பார்த்தபடி நின்றிருந்தார் அந்த டிரைவர்.

    ஹோட்டல் அறையை அடைந்து அவன் குளித்து முடித்து வெளியே வந்த நேரத்தில் தட்டப்பட்டது அறைக்கதவு. அவன் கதவை திறக்க கையில் ஒரு பூங்கொத்துடன் நின்றிருந்தார் அந்த ஹோட்டல் மானேஜர். அதை அனுப்பியதும் அதே டாக்டர்தான் என்பதும் அவன் அறியாததில்லை.

    அதை வாங்கி அலட்சியமாக படுக்கையின் மீது எறிந்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு வந்தவனின் பார்வையில் மறுபடியும் விழுந்தது அந்த பூங்கொத்து. மனம் கேட்கவில்லை அதை கையில் எடுத்தான் அவன். அதனோடு ஒரு கடிதம் வேறு...

    இது இவனுக்கு புதிதில்லை. கடந்த சில வருடங்களாகவே நடந்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் தான் இது. அது எப்படி அறிந்துக்கொள்வானோ அவன்??? இவன் எங்கே இருக்கிறான் என்ன செய்துக்கொண்டிருக்கிறான் என்பது எப்போதும் அந்த டாக்டருக்கு தெரியும்.

    வாரம் ஒரு முறையாவது பூங்கொத்து வரும். ஏதாவது ஒரு வாழ்த்து வரும், சின்ன சின்ன பரிசுகள் வரும். இவனுடைய கரம் ஒரு முறை அந்த பூங்கொத்தை மெதுவாக வருடியது. அவனை பார்த்தே பல நாட்கள் ஆகின்றன. பார்த்தால் மட்டும் என்னவாம்??? இவன் அவனுடன் பேசி விடவா போகிறான்??? அதனுடன் இருந்த அந்த கடிதத்தை பிரித்தான்.

    'டேய்.. உனக்கு அனுப்பின இந்த பூ.. கிஃப்ட் எல்லாம் ஒரு பொண்ணுக்கு அனுப்பி இருந்தேன்னு வை.... இன்னேரம் பொண்டாட்டி ரெண்டு, மூணு புள்ளை குட்டின்னு செட்டில் ஆகி இருப்பேன்...என் தலை எழுத்து உனக்கு பொக்கே அனுப்பியே எனக்கு வயசாயிட்டிருக்கு.. கொஞ்சமாவது சிரிடா...' கிறுக்கலான அவனது கையெழுத்தில் கடிதம்.

    கடிதத்தை படித்தவனின் இதழ்கள் அழகான சிரிப்பில் மலர்ந்து விரிந்தன.

    'எருமை மாடு...' சொல்லிக்கொண்டே நிமிர்ந்தவனின் கண்கள் அடுத்த நொடி சரேலென விரிந்தன.

    அவன் கண்கள் எதிரிலிருந்த கண்ணாடியில் பதிந்திருக்க அதில் தெரிந்தது அந்த முகம்!!!! அறைக்கதவில் சாய்ந்து நின்றிருந்தவனின் முகம்!!! மலர்ந்த முகத்துடன் இவனையே பார்த்திருந்தான் அவன்.

    அங்கே நின்றிருந்தவன் அவனே தான்!!! அதே எருமை மாடு தான். விறுவிறுவென அலைபாயும் கண்களும், இதழ்களில் குறும்பு , புன்னகையுமாக நின்றிருந்தான் அவன்.

    அதுவரை இதழ்களில் ஓடிக்கொண்டிருந்த கஷ்டபட்டு விரட்டி விட்டு, முகத்தில் மாற்றத்தை பூசிக்கொண்டு அவனை கண்டுக்கொள்ளாதவனாக சீப்பை எடுத்து தலை வார துவங்கினான் இவன்.

    'என்னதான் நீ இப்போ முகத்தை டைப் டைப்பா மாத்தினாலும் நீ சிரிச்சதை நான் பார்த்துட்டேனே... என்றபடியே இவன் அருகில் வந்து நின்றான் அவன். 'நீ சிரிச்சு நான் ஜாஸ்தி பார்த்ததில்லைடா...' அவன் குரலில் இருந்தது பாசம் மட்டுமே.

    பதிலில்லை இவனிடம். ஏதேதோ நினைவலைகள் இருவரிடத்திலும். இவன் சட்டையை சரி செய்துக்கொள்வதும் பெர்ஃப்யூம் அடித்துக்கொள்வதுமாக இருக்க... சட்டென இவன் தோள் தொட்டு திருப்பினான் அவன். இருவர் கண்களும் ஒன்றை ஒன்று சில நொடிகள் ஊடுருவின...

    'ப்ளீஸ் டா... நான் என்ன தப்பு பண்ணேன்??? என்கிட்டே ஏன்டா பேச மாட்டேங்கற...'

    ................................

    'வி......ஷ்......வா........ன்னு என் பேரையாவது சொல்லேன்....'

    ........................................

    'டேய்.... பரத்......... அட்லீஸ்ட்.... எருமை மாடுன்னாவது சொல்லுடா...'

    விஷ்வா சொல்லிக்கொண்டே இருக்க பேசாமல் திரும்பி நகர்ந்து அங்கே சார்ஜரில் இருந்த தனது மொபைலை எடுத்து துழாவ துவங்கினான் பரத்.

    'பேச மாட்டியா? சரி கையை குடு முதல்லே.... அவர்ட் எல்லாம் வரப்போகுது.... ரொம்ப சந்தோஷமா இருக்குடா எனக்கு...' விஷ்வா கையை நீட்ட கண்களை கூட நிமிர்த்தவில்லை பரத்,

    'ம்... சரி...' என்றான் விஷ்வா அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்தபடி...' இன்னைக்கு உன்னை பேச வைக்காம இங்கிருந்து நான் போறதில்லைங்கற முடிவோட தான் வந்திருக்கேன்...'

    ஒரு பெருமூச்சு மட்டுமே எழுந்தது பரத்திடம். 'இது பல வருட மௌனம். இதெல்லாம் அத்தனை சுலபமாக கலையாது....'

    சோபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்தபடி மெல்ல சொன்னான் விஷ்வா.........

    'அ....ப....ர்...ணா' சரேலென நிமிர்ந்தான் பரத்.

    'என்னடா அப்படி பார்க்கிற???" அவன் முகத்தை படித்தபடியே ரகசிய புன்னகையுடன் விஷ்வா கேட்க தனது முகத்தில் பரவிய தவிப்பின் ரேகைகளை மறைக்க நிறையவே சிரமப்பட்டுக்கொண்டிருந்தான் பரத்.

    'இவனுக்கு அபர்ணாவை எப்படி தெரியும்???' கேள்வி பிறந்தது அவனுக்குள்.

    'இவனுக்கு எப்படிடா அபர்ணாவை தெரியும்னு யோசிக்கறியா??? உன்னைவிட எனக்கு அபர்ணாவை நிறையவே தெரியும்...'

    பகீரென்றது பரத்துக்கு 'நேற்று இரயிலில் அவளுடன் போனில் பேசியது இவன்தானோ??? இறைவா!!!'

    'பார்த்தியா??? உடனே நிறைய கணக்கு போடறே பார்த்தியா??? நீ நினைக்கிற மாதிரி க்ளோஸ் இல்ல நாங்க ரெண்டு பேரும்... இது வேறே..' அடுத்த

    Enjoying the preview?
    Page 1 of 1