Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirumana Malargal
Thirumana Malargal
Thirumana Malargal
Ebook116 pages1 hour

Thirumana Malargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114202756
Thirumana Malargal

Read more from Hamsa Dhanagopal

Related to Thirumana Malargal

Related ebooks

Reviews for Thirumana Malargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirumana Malargal - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    திருமண மலர்கள்

    Thirumana Malargal

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    ஸ்ரீ நந்தன் கடிதத்தை எழுதும்போதே வசந்தியின் நினைவு தான் வந்தது. வசு எப்படி இருக்கிறாளோ அவளுக்காகத் தான் இந்தக் கடிதமே. அவளுக்கு அவள் பெயருக்கு எழுதாமல் அவளுக்கொரு கடிதம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை எழுதுகையில் அவள் அருகே நிற்பது போன்ற பிரமை. அவள் சருமத்திற்கே உரித்தானதொரு மணம் அவனைச் சுற்றி சுழல்வதாய் ஒரு உணர்வு.

    இதை அவனைத்தவிர வேறு யார் அறிவர். அங்கே மோகனுார் கிராமத்தில் இந்த கடிதம் எதிர்பார்த்து ஏங்கும் வசு மட்டுமே அறிவாள். இந்த ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உருகும் அவனை அவள் அன்றி யார் அறிவர்.

    அவன் குழந்தைகள் பாபுவும், தர்ஷனாவும் ஒன்றையொன்று அடித்துக்கொண்டு அழுகின்றன. இரண்டு வயது. நான்கு வயது குழந்தைகள். பாபுவுக்கு பெரியவன் என்கிற தோரணை ஏற்பட்டிருக்கவில்லை. ஐநூறு அடி கூட இல்லாத வீட்டின் சமையல் உள்ளில் பாத்திரங்களை உருட்டும் அவன் மனைவி சௌமியா குரல் உயர்த்துகிறாள்.

    ஏன்னா... வந்து குழந்தைகளைப் பாருங்கோ அப்போ பிடிச்சு என்ன எழுதியாறது. ஒஹோ கடுதாசியா... மூணு மாசத்துக்கொரு முறை எழுதலேன்னா உமக்குத் தலை வெடிச்சிருமே. அப்படியென்ன அவா உறவா ஒட்டா. தட்டுக் கெட்டு போறாப்பல என்னமோ கெடந்து ஆடறேள் எழுதறதை விடுங்கோன்னா கேக்கறேளா என்ன.

    சௌமியாவின் குரல் போகப் போக உயர்கிறது. இவள் ஆரம்பித்துவிட்டால் ஒரு வாரம் கூட பேசிக் கொண்டேயிருப்பாள். நிறுத்தமாட்டாள். அவன் ஒவ்வொரு முறை கடிதம் எழுதும்போதும் அலுவலகத்தில் அமர்ந்து எழுத வேண்டும் என்று நினைப்பான். அது முடிவதில்லை.

    டெல்லி செகரேட்டிரியேட்டில் அவனுக்குப் பெரிய உத்தியோகம். அலுவலகம் போனால் பல பிடுங்கல்கள். அதில் சொந்த வேலை மறந்து போகும். அப்படியிருக்க எங்கே கடிதம் எழுதுவது.

    அவன் கடிதம் எடுத்து மடித்து டைரியில் வைத்தான். நல்ல காலம் கடிதங்களைத் துருவி தேடிப் படிக்கும் பழக்கம் எல்லாம் செளமியிடம் கிடையாது. அந்த வகையில் அவன் பாக்கியம் செய்தவன்.

    எழுந்து போய் தர்ஷனாவை எடுத்து தோளில் சாய்த்து அதன் கண்களைத் துடைக்கிறான். என்னடா கண்ணா பால் வேணுமா. அம்மா எடுத்துண்டு வரா. சித்த அழாம இரு.

    அது சரி. கடிதம் யாருக்கு அம்மாக்கா எழுதறேள். அம்மாக்கு எழுதி ரெண்டு மாசத்துக்கு மேலாச்சு. ஒரு நாலு வரி எழுதிப் போடச் சொன்னா நேரமில்லைன்னு சொல்லிண்டிருக்கேள். நேக்கும் பொழுதில்லை. நீங்க எழுதறாப்பல ஆகுமா. நான் எழுதினா என்னயிருந்தாலும் நான் மாட்டுப் பொண்ணுதானே. அம்மாக்கு மனசாகுமோ.

    செளமி பாலை ஆற்றி கிண்டியில் ஊற்றிக்கொண்டே பேசுகிறாள். அவள் வெளிவரும் போது ஒருநொடி அவன் தடுமாறித்தான் போகிறான். இரண்டு குழந்தைகள் பெற்றவள் போல இல்லை செளமி. இன்னமும் திருமணம் செய்துக் கொண்டு வந்தது போலத்தான் யெவ்வனம் கலையாமல் இருக்கிறாள். அவனைச் சொக்க வைக்கும் அழகும், கவர்ச்சியும்.

    அவனிடமிருந்த குழந்தையை எடுத்து மடியில் சாய்த்துக் கொண்டு குழந்தையின் வாயில் கிண்டியைத் திணிக்கிறாள். யாருக்குக் கடுதாசி எழுதியாறதுன்னு கேட்டேன்.

    கவனத்தைச் சிதறவிட்டு நின்ற ஸ்ரீ நந்தன் விழித்துக் கொள்கிறான்.

    நம்ம பட்டாபி மாமாக்குத்தான்.

    சர்தான். அவர் என்ன உமக்குச் சொந்த மாமாவா. அல்லது தூரத்து உறவா. எதுவுமே இல்லை. அப்புறம் மூணு மாசத்துக்கு ஒருக்கா என்னத்துக்கு எழுதியாறதாம்.

    இவள் ஓயமாட்டாள். அவன் குளிப்பது போல பாவனை செய்து துண்டு சோப்பு தேடி எடுக்கிறான்.

    சொந்தத்துக்கு மேலேன்னு வை. எங்கம்மாவும் பட்டாபி மாமாவும் சொந்த அண்ணன் தங்கைப் போல...

    தெரியும். அவர் மூத்த பொன் வசந்தியை உம்ம தலையிலே கட்டப் பார்த்தா அம்மா நடுவிலே நின்னு தடுத்துட்டா. இதை எத்தனை முறை சொல்வேள்.

    எடுத்தெறிந்து பேசுகிறாள் செளமி. அவளுக்குத் தெரிந்ததெல்லாம் கலைந்து போன உறவு மட்டுமே.

    அதற்குள் அடங்கியிருக்கும் நேசயிழைகளும் கலைந்து போன கனவுகளும் அவள் எப்படி அறிவாள்.

    அதை வசுவும் இவனும் மட்டுமே அறிவார்கள்.

    இன்று நேற்றைய உறவா அது. வசு பிறந்த நாள் முதல் ஏற்பட்ட பந்தம். ஒரு விபத்தால் எல்லாமே கலைந்து போன உறவுகள்.

    கண்ணாமூச்சி ஆடும் கனவுகளுடன் காலத்தை ஒட்டிக் கொண்டு வாழ்ந்தும் வாழாமல் வாழ்தலில் ஒரு ஒட்டுதல் இன்றி... இந்த சௌமியைத் தொடும்போதெல்லாம் குறுக்கே புகுந்து நிற்கும் வசுவின் நினைவுகள்... இதையெல்லாம் செளமி அறிவாளா.

    அவளுக்குத் தெரிந்ததெல்லாம் பெரிய உத்தியோகத்தில் இருக்கும் அவள் கணவன். குழந்தைகள், குடும்பம். கிராமத்தில் நிலங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் மாமியார். அவர் அவ்வப்போது அனுப்பும் சில ஆயிரங்கள். அவள் பிறந்த வீடு. அதன் மனிதர்கள். ஒரு சராசரி இந்தியப் பெண்.

    செளமி... இதற்கு மேலே இந்த ஸ்ரீ நந்தனுக்கு ஒரு உலகம் இருக்கிறது. அதில் வசு என்கிற தேவதை குடியிருக்கிறாள். அவள் தான் உள்ளும் புறமுமாய் நின்று அவனை இயக்கிக் கொண்டிருக்கிறாள். இதை நீ உணர்வாயா.

    அப்படி உணர்ந்தாள் அதைத் தாங்கிக் கொள்ள இயலுமா.

    சிமெண்டு சுவரிற்குள் வேரோடிப்போன ஆலைப் போலவும் அரசைப் போலவும் வசுவின் நினைவுகள் அவனுள் வேர்விட்டு வளர்ந்து கொண்டிருக்கின்றன.

    அதை அழிக்கும் சக்தி எதற்கும் இல்லை.

    தாய் தந்தையரின் அன்பு குழந்தை தர்ஷனாவுக்கு கிடைத்ததும் பாபு பெரும் குரல் எடுத்து கத்துகிறான். கண்ணில் . அழுகை வரவில்லை. பெரும் கத்தல் மட்டுமே வருகிறது. அவனை எடுத்து ஆறுதல் படுத்தப்

    Enjoying the preview?
    Page 1 of 1