Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ullam Unvasamanathadi
Ullam Unvasamanathadi
Ullam Unvasamanathadi
Ebook114 pages55 minutes

Ullam Unvasamanathadi

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Mrs. Uma Balakumar started writing in 2005 and she has written around 42 novels so far. Most of her novels are nice romantic novels. She has also written 5 spiritual novels. Her first novel is “Theendi Chendra Thendral” which got published in 2005 in Kanmani Magazine. All her novels are available as printed books in Arun publications. She has also written around 15 short stories. She has got an award from Thanga Mangai and another award from Kumutham Snehithi for her short stories.

She born and brought up in Kumbakonam, Tamilnadu. She loves long drives and to hear melodious music. Her husband has encouraged her throughout her journey as a author. She strongly believes that “God is the ultimate power” and has written 5 spiritual books too including a travelogue on “Sadhuragiri”.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580118502751
Ullam Unvasamanathadi

Read more from Uma Balakumar

Related to Ullam Unvasamanathadi

Related ebooks

Reviews for Ullam Unvasamanathadi

Rating: 3 out of 5 stars
3/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ullam Unvasamanathadi - Uma Balakumar

    http://www.pustaka.co.in

    உள்ளம் உன்வசமானதடி!

    Ullam Unvasamanathadi!

    Author:

    உமா பாலகுமார்

    Uma Balakumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/uma-balakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    Respected Madam,

    இது, மதுரையிலிருந்து உங்கள் வாசகி.

    படிப்பதும், பாடல் கேட்பதும் மட்டுமே பொழுது போக்காகக் கொண்டவள் நான் - அநேகமாக எங்கள் வீடும் அப்படியே. பெண் எழுத்தாளர்கள் - புதிதாய் எழுதினால் தேடிப்படிப்பது உண்டு. நீண்ட வருடங்களாய்த் திருச்சி வாசி. மதுரை வந்து மூன்றே மாதங்கள். திருச்சி நூலகங்கள் இரண்டில் Regular Member - விட்டு வந்தது கஷ்டமாய் உள்ளது. நூலகத்தில் படித்த உங்கள் நாவல்கள் என்னை உங்கள் தீவிர வாசகியாக்கி விட்டன. அதன்பின் புத்தகக்கடை, கண்காட்சி எங்கும் உங்கள் புத்தகங்களை விசாரிப்பது வழக்கமாகி விட்டது.

    மிக அழகாக எழுதுகிறீர்கள். இனிமையான நடை. கொஞ்சமும் தொய்வின்றி, இறுதிவரை எடுத்துச் செல்வது தனிச்சிறப்பு. சுபமான முடிவு உள்ள கதைகளையே படிக்கும் என் போன்றோருக்கான அருமையான நாவல்களைப் படைக்கும் உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள் பல.

    கவிதை நடையுடன், இடையே, அழகான, பொருத்தமான கவிதைகள், பாடல் வரிகள் எனச் சேர்ப்பதும் ஒரு தனி அழகு. இயல்பான, எளிய அதே சமயம் மனதைக் கவரும் நடை. இது எல்லாராலும் முடியாது. இறைவன் அளித்த வரம் - என் போன்ற வாசகிகளுக்கான பரிசு!

    அன்புடன்

    யசோதா சுப்ரமணியம்

    மதுரை – 625002

    1

    இரவும் பகலும் நட்புடன் கைகோர்க்கும் இனிய மாலை நேரம்!

    தூரத்தே தெரிந்த மலைத் தொடர்களிலிருந்து, குளிர்ச்சியை சுமந்து வந்து நரம்புகளின் நலம் விசாரிக்க ஆரம்பித்திருந்தது - தாவியணைத்த தென்றல் காற்று.

    யாரும் தொடாத ஒப்பந்தம் முடிந்து, மீதமிருந்த மலர்கள் மரங்களிலிருந்து உதிர்ந்து மண் தொட்டன.

    முப்பது நாளும் விழித்திருக்க ஆசைப்பட்ட நிலவுப் பெண், வானில் உலாவர நேரம் பார்த்துக் காத்திருந்தாள்.

    தேனிக்கு அருகிலிருந்த அந்த கிராமத்தில், சிவன்கோவில் மணியோசை ஓங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்க, தன் மெல்லிய பாதங்களைப் பதித்து, பிரகாரத்தை அப்பிரதட்சணம் செய்து கொண்டிருந்தாள், மிருணாளினி!

    பார்வை பூமியில் நிலைத்திருக்க, தன்னுடைய அக்கா மீனலோசனிக்கு நல்லபடியாகப் பிரசவம் நடந்து முடிய வேண்டுமென்ற மானசீக வேண்டுதல், அவள் மனதில்.

    விழிகள், சற்று தொலைவில் தெரிந்த அந்த வேட்டியணிந்த பாதங்களின் மீது சென்றதும், பதைப்புடன் உயர்ந்தன.

    எதிரில், முகிலனும் அவளையே கூர்மையுடன் ஊடுருவியபடி கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

    அவன் விழிகளின் ஸ்பரிசத்தில், மனதிற்குள் மெலிதாய் ஒரு குளிர் பரவ, சட்டென்று விலகி நடக்க ஆரம்பித்தாள் மிருணாளினி.

    கருமை கலந்த மாநிறத்தில், ஆறடி உயரத்தில், கருத்தடர்ந்த பெரிய மீசையுடனும், கூர்மையான விழிகளுடனும், தூய வெள்ளை வேட்டி சட்டையணிந்து அவன் கம்பீரமாக நடந்து வந்தால், அந்த கிராமமே பயப்படும்.

    அந்த ஊரிலேயே பெரிய பணக்காரரும், ஊர்ப் பெரிய மனிதருமாகிய சுந்தர பாண்டியனின் ஒரே மகன்தான் முகிலன்!

    'எம்.எஸ்ஸி விவசாயம் படித்துவிட்டு, வயலையும் தோப்பையும் திராட்சைத் தோட்டங்களையும் தந்தையுடன் சேர்ந்து நிர்வகித்து வருபவன்!

    அவன் மிகவும் கண்டிப்பானவன். சிறு தவறு செய்தால் கூடப் பொறுக்க மாட்டான். உடனே தண்டனை கொடுத்து விடுவான் என்பது, ஊர் அறிந்த உண்மை.

    அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை

    பெரிய இடங்களிலிருந்தெல்லாம் நிறைய வரன்கள் வந்தாலும், எதையுமே தன் மனதிற்குப் பிடித்ததாக இல்லை என்று மறுத்துக் கொண்டிருப்பவன்!

    நேரில் பார்ப்பதற்கு மிகவும் முரட்டுத்தனமாக இருப்பதால், மிருணாளினிக்கு அவனைக் கண்டாலே ஒருவித பயம் எழும். மனம் படபடக்கும்!

    கோவிலில் அர்ச்சனையையும் வேண்டுதலையும் முடித்து விட்டு, மெதுவாக வீட்டிற்குத் திரும்பி வரும்போதுதான், வழியில் அவள் அந்தப் பைத்தியக்காரப் பெண்ணைப் பார்க்க நேர்ந்தது.

    அவளருகே ஓடிவந்து கைநீட்டியபடி அந்தப் பெண் சிரித்ததும், மனதிற்குள் சிறு பயம் வந்தாலும், உடனே வாழைப் பழத்தை எடுத்து நீட்ட- வாங்கிக் கொண்டு ஓடினாள் அவள்.

    கந்தல் உடையுடன், அங்குமிங்கும் ஊருக்குள் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் அவளைப் பார்த்தால், மிருணாளினிக்குப் பரிதாபமாக இருக்கும்.

    யாரையும் தொந்தரவு செய்யாமல், கொடுப்பதை வாங்கிச் சாப்பிட்டுவிட்டுப் பெரும்பாலும் கோவில் சத்திரத்தின் திண்ணையில் முடங்கிக் கிடக்கும் அவளை நினைத்துப் பெருமூச்சொன்று எழுந்தது.

    மிருணாளினி வீட்டிற்குள் நுழைந்தபோது, பெரிய வீட்டிலிருந்து கணக்குப் பிள்ளையும், முகிலனின் தூரத்து உறவினரான கணபதியும் வந்திருந்தனர்.

    வாங்க! என்று பொதுவாக அவர்களை வரவேற்று விட்டுத் திரும்பியவளை நல்லாருக்கியாம்மா... கோவிலுக்குப் போயிருந்தியா... நல்ல சகுனம்தான்! என்றார் கணக்குப்பிள்ளை புன்னகையுடன்.

    "ஆமாம் மாமா அக்காவுக்காக வேண்டிக்கிட்டு வந்தேன்' எனும்போதே, தேம்பாவணி காபியுடன் வர, பின் அறைக்குச் சென்றாள் அவள்

    நிறைமாத வயிற்றைப் பிடித்தபடி படுத்திருந்த மீனலோசினி, அவளைக் கண்டதும் எழுந்தாள்.

    விபூதிப் பிரசாரத்தை அவளிடம் கொடுத்தவள், என்னக்கா டயர்டா இருக்கா? என்றபோது, 'ஊஹும். ரொம்ப சந்தோஷமா இருக்கு உனக்கொரு குட்நியூஸ். சுந்தர பாண்டி ஐயா வீட்டில் இருந்து, உன் ஜாதகத்தைக் கேட்டு அவங்க ரெண்டு பேரும் வந்திருக்காங்க. அவங்க பையன் முகிலனைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டு நீயாவது வசதியா சந்தோஷமா இருக்கணும், மிருணா" என்றாள் அவள்.

    உடனே அதிர்ந்து போய் அவளருகில் அமர்ந்தாள்.

    கோவில்லே அவரைப் பார்த்தேன். எனக்கு என்னமோ அவரைப் பார்த்தாலே பயமா இருக்கு! மனம் சிறகாய் படபடக்க, பதைப்புடன் கூறினாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1