Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chennai Nagara Anubavangal
Chennai Nagara Anubavangal
Chennai Nagara Anubavangal
Ebook99 pages40 minutes

Chennai Nagara Anubavangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஞாநி 4.1.1954 அன்று செங்கற்பட்டில் எந்த பூர்விக சொத்துமில்லாத ஒரு கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கல்வி ஒன்றே தன் குழந்தைகளுக்குத் தரும் சொத்து என்ற பார்வையில் இயங்கிய தந்தை வேம்புசாமி 1935 முதல் 1975 வரை ஆங்கில இதழியலில் இயங்கியவர். மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இதழியலுக்கு வராத நிலையில் ஞாநி அதில் ஈடுபட்ட கடந்த 40 வருடங்களாக இதழியல், சமூக அரசியல் விமர்சனம், நாடகம், தொலைக்காட்சி, சிறுவர் வாழ்வியல் ஆகிய துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். எழுபதுகளில் மாணவராக சோஷலிச அரசியல் ஆதரவுபிரசாரத்தில் ஈடுபட்டார்.பின்னர் நெருக்கடி நிலையின்போது அதை கடுமையாக எதிர்த்த இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பணியாற்றினார். எண்பதுகளில் மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்புடன் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டபோது அதை ஆதரித்து வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக 70க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பணியாற்றினார். மேதா பட்கர், ஜார்ஜ் பெர்ணான்டெஸ், நிகில் சக்ரவர்த்தி கிருஷ்ணய்யர், அஸ்கர் அலி எஞ்சினீயர், நாகபூஷண் பட்நாயக், தீஸ்தா சேதல்வாட் ஆகியோரின் மேடைப் பேச்சுகளை நேரடியாக மொழிபெயர்த்தவர். அண்மைத் தேர்தலில் மாற்று அரசியலை முன்வைத்தமைக்காக மக்கள் நலக்கூட்டணியை தீவிர்மாக ஆதரித்தார்.எழுபதுகள் முதல் இன்று வரை மனித உரிமைகள், மகளிர் சமத்துவம், சாதி ஒழிப்புக்காகப் பணியாற்றும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மதவாத எதிர்ப்பில் தொண்ணூறுகளிலிருந்தே தீவிரமாக இயங்கி வருபவர்.

நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978 முதல் இன்றுவரை பரீக்‌ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வருகிறார். சென்னையில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடி. 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.

பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா என்ற தலைப்பில் 2003ல் உருவாக்கினார்.40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், ஐந்து கதைப் படத் தொடர்களையும் இயக்கியுள்ளார்.

இதழியலில் செய்தி விமர்சன இதழ்கள் உருவாகாத காலகட்டத்திலேயே 1982ல் தீம்தரிகிட என்ற இதழை நடத்தி முன்னேர் செலுத்தினார். ஜூனியர் போஸ்ட் இதழை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் தரமான இதழாக 1993ல் மாற்றிக் காட்டினார். சுமார் 30 வருடங்கள் முன்பே தொலைக் காட்சிக்கான முதல் இதழ் 'டி.வி.உலகம்' , சென்னை நகரத்துக்கான முதல் இதழ் 'ஏழு நாட்கள்' ஆகியவை இவர் முயற்சிகள். தேங்கிக் கிடந்த சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்து உருவாக்கி வெற்றி பெறச் செய்தார்.2016ல் தமிழில் மாணவரகளுக்கான முதல் இதழாக தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து வருகிறார். சிறுவர்கள், இளைஞர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கும் பத்து வாழ்க்கைத்திறன்களைப் பயிற்றுவிக்கும் பணியில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ளார். சிங்கப்பூர் கம்போடியா, பாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,இத்தாலி, வியன்னா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ளார். நாத்திகர். பகுத்தறிவாளர். சாதி மறுப்பாளர். ஞாநியின் குடும்பத்தினரும் அதே நிலையில் உள்ளவர்கள்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352854349
Chennai Nagara Anubavangal

Read more from Gnani

Related to Chennai Nagara Anubavangal

Related ebooks

Related categories

Reviews for Chennai Nagara Anubavangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chennai Nagara Anubavangal - Gnani

    http://www.pustaka.co.in

    சென்னை நகர அனுபவங்கள்

    Chennai Nagara Anubavangal

    Author:

    ஞாநி

    Gnani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gnani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காற்றினிலே வரும்...

    ஒரு காடு, ஒரு கட்டடம் - சில நினைவுகள்

    சென்றதினி மீளாது மூடனே!

    ஒரு வீடு, பல சுவர்கள்

    காணி நிலம் வேண்டும், பராசக்தி!

    சிங்கிள் டீயும் சட்னி உணர்த்தும் மாற்றமும்

    சைக்கிள் கலாசாரம்...

    ஆட்டோ...!

    இந்த நகர வாழ்க்கையில் என்னை அடையாளம் கண்டுகொண்டு வாய்ப்புகள் அளித்து மீடியாவின் எல்லா பிரிவுகளிலும் என் பார்வைகளை சுதந்திரமாகச் சொல்ல உதவிய ஆளுமைகளில் ஒருவரான முன்னாள் அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் அதிகாரியும் எழுத்தாளர்களின் நண்பரும் எழுத்தாளருமான ஏ.நடராஜனுக்கு இந்த நூல் என் காணிக்கை.

    அட்டைப் படங்கள்: முன்னட்டையில் மேலே சென்னை டிடி.கே.சாலை எனப்படும் மௌபரீஸ் சாலை 1902ல் எப்படி இருந்தது என்பதைக் காட்டுகிறது.கீழே இப்போதைய தோற்றம்: பின்னட்டையில்: ஞாநி 20 வருடம் குடியிருந்த பீட்டர்ஸ் காலனி வீட்டுக்கு அண்மையில் சென்று பார்த்த போது எடுத்த படம்: அதியமான்.

    சென்னை வாழ்க்கையின் அனுபவங்களை எழுதும்படி என்னைத் தொடர்ந்து தூண்டி, இவற்றை ‘நம்ம சென்னை’ இதழில் வெளியிட்ட ஆசிரியர் அரவிந்தனுக்கு நன்றி

    சென்னை நகர அனுபவங்கள்

    ***

    காற்றினிலே வரும்...

    எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தொண்னூறுகளிலும் சென்னை வானொலியில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு நிகழ்ச்சி ‘நகர்வலம்’. தினசரி காலையில் ஒலிப்ரப்பாகும் இதில் நகரின் பல்வேறு தன்மைகள், பிரச்சினைகள், அனுபவங்கள் பற்றி பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் எழுதும் கட்டுரைகள் வாசிக்கப்படும். சில எழுதியவர்களாலேயே வாசிக்கப்படும். நான் அப்படி பல முறை எழுதி வாசித்திருக்கிறேன். என்னை விட 47 வயது மூத்தவரான என் அப்பா ஆங்கிலப் பத்திரிகையாளர் வேம்புசாமியும் நகர்வலம் எழுதியிருக்கிறார். இந்த நகர்வலம் நிகழ்ச்சியை வானொலியில் அறிமுகப்படுத்தியவர் அப்போது அங்கே பெக்ஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் ப்ரொகிராம் எக்சிகியூடிவாக இருந்த நண்பர் ஏ.நடராஜன். பின்னால் தூர்தர்ஷன் இயக்குநராக பணியாற்றி அதிலிருந்து ஓய்வு பெற்றாலும் பொது வாழ்விலிருந்து ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிற அதே நடராஜன்தான்.

    இப்போதும் சென்னை வானொலியில் நகர்வலம் நிகழ்ச்சி காலை நேரங்களில் ஒலிபரப்பப்படுகிறதா என்பது எனக்குத் தெரியாது. பண்பலை வந்தபிறகு மீடியம்வேவ், ஷார்ட் வேவ் நிலையங்களைக் கேட்கும் பழக்கமே போய்விட்டது. தேர்தல் முடிவு வரும் நேரங்களில் மீடியம் வேவ் நிலையத்தில் முடிவுகளை ஆய்வு செய்து விவாதிக்க அழைப்பார்கள். நிலைய நண்பர்களிடம் இவற்றுக்கு நேயர்கள் இப்போதும் கணிசமாக உண்டா என்று விசாரிப்பேன். பல வெளியூர்களில் பண்பலை கிடையாது. அங்கெல்லாம் சிற்றலையும் இடையலையும் நேயர்களிடம் தொடர்ந்து பிரபலமாக இருக்கின்றன என்பார்கள். இருந்தால் மகிழ்ச்சிதான். வானொலி ஓர் அற்புதமான மீடியம். எழுத்துக்கு அடுத்தபடி எனக்கு பிடித்த மீடியம் அது. வானொலி அனுபவங்களைப் பற்றி அதில் பணியாற்றிய சிட்டி, சுந்தா, பூர்ணம் விஸ்வநாதன் எழுதியதையெல்லாம் படித்திருக்கிறேன். படு சுவாரஸ்யமானவை அவை. வானொலி தயாரிப்பாளராக அந்தத் துறையில் மிகவும் மதிக்கப்பட்ட எழுத்தாளர் தி.ஜானகிராமன் தன் வானொலி அனுபவங்களைப் பற்றி எதுவும் எழுதவில்லை என்பது ஓர் இழப்புதான்.

    1975ல் நான் சென்னைக்குக் குடிபெயர்வதற்கு முன்பே கடை நிலை குமாஸ்தாவாகவும் இதழியல் மாணவனாகவும் செங்கற்பட்டிலிருந்து சென்னைக்கு தினசரி வந்து போன காலங்களில் முதலில் ஓர் அலுவலகத்துக்கு சென்று கற்றுக் கொண்டது என்பது சென்னை வானொலி நிலையத்தில்தான். அப்பாவின் நண்பர் சௌமியநாராயணன் என்பவர் அப்போது வானொலியில் செய்தி ஆசிரியராக இருந்தார். சக்ரபாணி என்ற செய்திக் கதம்பத் தயாரிப்பாளர் இருந்தார். அவர்கள் மூலம் முறையான அனுமதி பெற்று வானொலியில் ரிகார்டிங், டப்பிங் எல்லாம் செய்வதற்குக் கற்றுக் கொண்டேன். டப்பிங் என்றால் இப்போது டி.வியிலும் சினிமாவிலும் பின்னணிக் குரல் கொடுப்பது, சேர்ப்பது என்ற அர்த்தத்தில் மட்டுமே புரிந்துகொள்ளப்படுகிறது. வானொலியில் டப்பிங் என்பது பதிவு செய்யப்பட்ட ஒலிகளை சேர்த்து தொகுத்து பிரதி எடுக்கும் வேலையைக் குறிக்கும். இப்போதும் அதே அர்த்தத்தில அங்கே சொல்கிறார்களா என்று தெரியவில்லை.

    எழுத்தாளர் அகிலன் அப்பொது சென்னை வானொலியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வானொலியில் கேட்டுக் கேட்டு பழக்கமான பல குரல்களுக்குரியவர்களை அங்கே நேரில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஜெயஸ்ரீ என்று ஒரு பாடகி. ஞாயிறு மதியம் குழந்தைகள் நிகழ்ச்சியில் பாலராமாயணப் பாடல்களைப் பாடுவார். அற்புதமான குரல். குழந்தைகள் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த கூத்தபிரான் யாரை சந்திக்கும்போதும் வாஞ்சையோடு பேசுவார். மலர்க்கொடி சுகுமாரன் என்று இளைஞர் நிகழ்ச்சியில் இருந்த என் வயதுக்காரர். யூத் ப்ரொகிராம் பொறுப்பாளராக இருந்த லீலா என்று பலரை அப்போது சந்திக்க முடிந்தது.

    காப்புக்கட்டி சத்திரம், ஜனதா நகர் காலனி என்று பல முக்கியமான வானொலி நாடகங்களையும் தினசரி மாநிலச்செய்திகளையும், நேயர் விருப்பம், தேன்கிண்ணங்களையும் தவறாமல் கேட்டிருந்த எனக்கு அதில் பங்கேற்றவர்களின் முகங்கள் தெரியாது. அதுதான் வானொலியின் தனித்தன்மை. குரல் மூலம் மட்டுமே ஒருவரை நன்கு அறிந்திருப்போம். நேரில் அவரைப் பார்த்தால் அவர் பேசும்வரை அவர்தான் இவர் என்பது தெரியாது. இப்படி பலரை அங்கே பதிவுகள் நடக்கும் ஸ்டூடியோவில் மைக் வழியே ஒலி கேட்டு அட, அவரா, இவர் என்று சந்தோஷப்பட்டிருக்கிறேன். நான் கடைசி வரை

    Enjoying the preview?
    Page 1 of 1