Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kandu Kondren Kandu Kondren
Kandu Kondren Kandu Kondren
Kandu Kondren Kandu Kondren
Ebook107 pages38 minutes

Kandu Kondren Kandu Kondren

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352856275
Kandu Kondren Kandu Kondren

Read more from Hamsa Dhanagopal

Related to Kandu Kondren Kandu Kondren

Related ebooks

Reviews for Kandu Kondren Kandu Kondren

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kandu Kondren Kandu Kondren - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    கண்டு கொன்றேன் கண்டு கொன்றேன்

    Kandu Kondren Kandu Kondren

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    கண்டு கொன்றேன்

    கண்டு கொன்றேன்

    ஹம்சா தனகோபால்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    ***

    1

    யாரோ அழைத்தது போல இருந்தது சிவராமனுக்கு வெளியே எட்டிப் பார்த்தான். யாரையும் காணவில்லை. திரும்ப ‘சிவா’ என்கிற அழைப்பு.

    சிவராமன் இதை நன்கு கேட்டான். கொஞ்சம் கட்டைக் குரலில், திரும்ப வெளியே பார்த்தான். யாரையும் காணோம். வீட்டிலிருந்து வருமோ. அப்போதுதான் தங்கை வைஷாலியின் நினைவு வந்தது.

    அவள்தான் இப்படி குரல் மாற்றி பேசுவாள். வீடு முழுதும் தேடினான். மாடியில் தேடினான். கடைசியில் படுக்கை அறையில் அவன் கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்தாள் தங்கை இருட்டில் அவன் மின்விளக்குப் போடவும் அவள் நைட்டி தெரிந்தது.

    குனிந்து அவள் காதைப் பிடித்து இமுத்தான். நீண்டபின்னல் மண்ணில் புரள உள்ளே ஒடுங்கிக் கிடந்தவள் அவன் காதைப் பிடித்து இழுக்கவும்.

    அம்மா என்று கத்தியபடி வலி பொறுக்க முடியாமல் வெளியே பொருளடக்கம் வந்தாள்.

    இருபத்தியிரண்டு வயதுப் பெண்ணாக தெரியவில்லை அவன் கண்ணுக்கு. இன்னமும் விரல் சூப்பியபடி பாவாடை சட்டை அணிந்த குழந்தையாய் தெரிந்தாள். குறும்பு மிளிரும் கண்கள், யவ்வனத்தைத் தூக்கி விழுங்கி விட்டிருந்தது. அந்த அழகிய முகம் காதைப் பிடித்து இழுத்ததில் சிவந்து போயிற்று.

    இரு அம்மா கிட்டயே சொல்றேன். விரலை அசைத்து மிரட்டினாள் வலியில் கண்கள் கூட கலங்கிவிட்டிருந்தன.

    சொல்லுடி போய் சொல்லிக்கோ நீ செஞ்சது மட்டும் சரியாடி சரியான்னு கேட்கறேன்.

    போடா சர்தான். அம்மா இவனைப் பாரு இந்த சிவா அண்ணா என்னைக் காதை பிடித்து திருகி அடிக்கிறான். கத்தியபடி சமையல் அறை உள்ளுக்கு ஒடினாள் வைஷாலி.

    அவனும் உடன் தொடர்ந்தான். அம்மா பின்னாடி ஒளிந்துக்கொண்டு அவனைப் பார்த்து உதடு மடித்து ஒழுங்கு காட்டினாள்.

    பாரும்மா நீயே என்னை டா போட்டு பேசறா

    நீ மட்டும் என்னை டீ போட்டு பேசலாமாடா…

    என்னைவிட ஏழெட்டு வயசு சின்னவ உன்னை நான் சொல்லலாம். ஆனா நீ

    நீ சொன்னா நானும் அப்படித்தான் சொல்வேன்.

    என்னடா சிவா இது வயசுக்கு வந்த பெண்ணை கை நீட்டி அடிச்சிட்டு இப்படியா சின்னக் குழந்தையாட்டம் சண்டை போடுவீங்க. அவ என்ன செஞ்சிருந்தாலும் நீ அடிக்கறது தப்புதான்.

    என் ஷர்ட் பேண்ட்டுக்கு அவ பெட்டி போடலைம்மா. ஆனாஅவ கம்ப்யூட்டர் கிளாஸ்க்குப் போக சூரிதாருக்கு மட்டும் பெட்டி போட்டு மடிச்சு வெச்சிருக்கா. அதைக் கேட்டேன். ஒளிஞ்சிட்டு வேற யாரோ கூப்பிடறாப்புல சிவா, சிவான்னு கூப்பிட்டு என்னைச் சீண்டாறாம்மா. அவமட்டும் இப்படிச் செய்யலாமா"

    என்னம்மா வைஷாலி, நீ அப்படி செய்தியா?

    நான் என்னம்மா செய்யட்டும் என் டிரஸ் தேய்க்கற வரைக்கும் கரண்ட் இருந்தது. அவன் டிரஸைக் கையில் எடுத்தேன். கரண்ட் கட் அவன் மனசு போல. இதுக்குப் போய் என்னை அடிக்கறான்.

    ஐயோ என்னப்பா இது. ரெண்டு பேரும் உதவாத சமாசாரத்துக்கு இப்படி அடிச்சிக்கிறீங்க இப்படி சண்டை போடுவீங்க ஆனா ஒருத்தர் இல்லாம மற்றவங்க சாப்பிட மாட்டீங்க ஊம். இந்தக் கூத்தை இருந்து பார்க்க உங்கப்பாவுக்குப் குடுப்பினை இல்லாமப் போச்சு கரண்டட் வந்தாச்சு, போய் சிவா டிரஸ்ஸுக்கு அயர்ன் செய்துரு வைஷாலி

    அவ வேண்டாம்மா. அவளுக்கு கம்ப்யூட்டர் கிளாஸ்க்கு நேரமாச்சு நானே அயர்ன் செய்துக்கறேன்."

    அவன் அங்கிருந்து நடக்க வெளியே இருந்து சிவா" என்கிற அழைப்பு வந்தது. அவன் திரும்பி தன் தங்கையைப் பார்த்தான். அம்மா, இல்லை அவள் அழைக்கவில்லை என்பது போல தலை அசைத்தாள்.

    வெளியே வந்தான். அவன் அலுவலகத்து நண்பன் கோபி நின்றிருந்தான்.

    வாங்க கோபி என்ன இந்தப் பக்கம். அதுவும் ஆபிஸ் நாள்ல.?

    உன்னைப் பார்த்துப் பேசணும்னு அது ஆபிஸ்லே பேசினா நல்லா இருக்காது உள்ளே வந்து அமர்ந்து வீட்டைச் சுற்றிப் பார்த்தான் கோபி யாரும் கண்ணீல் படவில்லை.

    கடன் கிடன் கேட்க வந்திருப்பானோ? தங்கையின் திருமணத்திற்காக அவன் குருவியாக சேர்த்து வருகிறான். அதில் போய் கை வைக்க முடியுமா.

    அதற்குள் உள்ளிருந்து வெளியே வந்த அவன் தாய் காபி டபராவை நீட்டினாள்.

    வாங்க தம்பி காபி சாப்பிடுங்க.

    டபராவைக் கொடுத்துவிட்டு திரும்ப சமையல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

    கோபி, காபியைக் குடித்துக்கொண்டே மெல்லிய குரலில் சொன்னான். நம்ம ஆபிஸ்ல நம்மோடு வேலை பார்க்கிற கெளதமனைப் பற்றி என்ன நினைக்கிறே நீ

    கோபி இவர்கள் வீட்டிற்கு அடுத்த தெருவில் இருந்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1