Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kolai, Kolai Endru Sonnale!
Kolai, Kolai Endru Sonnale!
Kolai, Kolai Endru Sonnale!
Ebook80 pages31 minutes

Kolai, Kolai Endru Sonnale!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352856145
Kolai, Kolai Endru Sonnale!

Read more from Hamsa Dhanagopal

Related to Kolai, Kolai Endru Sonnale!

Related ebooks

Reviews for Kolai, Kolai Endru Sonnale!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kolai, Kolai Endru Sonnale! - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    கொலை, கொலை என்று சொன்னாளே!

    Kolai, Kolai Endru Sonnale!

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    கொலை, கொலை என்று சொன்னாளே!

    ஹம்ஸா தனகோபால்

    1

    மின்னலின் மெல்லிய சிணுங்கல், நட்சத்திரங்கள் எங்கோ கூட்டம் போட்டிருக்க வானத்தில் ஒரு வெறி, நிலாப் பெண் எட்டிப் பார்க்கலாமா வேண்டாமா என்கிற ஆலசனையில்

    கடற்கரை மணலில் சௌமினியும் சந்திரனும் நெருக்கமாய் ஈர மணலில் கைகள் அலைய அவனைப் பார்த்தாள். லேசான இருளில் விழிகள் மின்னின.

    செளமி, இந்த இருட்ல கூட நீ எத்தனை அழகாய் இருக்கே தெரியுமா.

    ப்ச்சூ... இந்த அழகைக் கண்டுதான் என்னை லவ் பண்ணிங்களா.

    சத்தியமா உன் அழகிலேதான் அப்படியே விழுந்துட்டேன்

    அவன் தொடையில் நறுக்கென ஒரு கிள்ளல் ஒரு மிளகாய் கடித்தவனாய் சூள் கொட்ட... அவள் தோளை மெல்ல இடித்து

    ஸாரி டார்லிங், என்னைப் பார்த்து நீ அப்படி கேள்வி கேட்டு இன்சல்ட் செய்யலாமா அதான் அப்படி சொன்னேன் நோ… ஏதோ ஒரு பந்தம் விட்ட குறை தொட்ட குறை என்கிறாங்களே அதான் நம்மை ஒண்ணா சேர்த்திருக்குன்னு நான் மனப்பூர்வமா நம்பறேன்.

    டைலாக் போறும். எங்க பாட்டியை வந்து பாருங்கன்னு எத்தனை தரம் அழைச்சிருக்கேன். நீங்க வந்திருக்கீங்களா சந்திரன்.

    உங்க பாட்டியாலே பார்க்க முடியாதுன்னு சொல்லியிருக்கியே செளமி. அவங்க என்னை எப்படி பார்ப்பாங்க நான் தான் அவங்களைப் பார்த்து என்ன செய்யப் போறேன். நானோ வெறும் பி.ஏ., மெடிகலா படிச்சிருக்கேன்.

    மீண்டும் அவன் தோளில் ஒரு குத்து.

    ஐயோ… செளமி... தொடக்கூடாது என்கிறே. நீ மட்டும் என்னைத் தொட்டு அடிக்கடி அடிக்கலாமா

    பின்ன என்ன எங்க பாட்டிமா கிட்ட வந்து நம்ம காதலைச் சொல்லுங்க. சுருக்க மேரேஜூக்கு ஏற்பாடு செய்யுங்கன்னு சொல்றேன். நீங்க பாட்டுக்கு இந்த ஆறு மாசமா என்னைச் சுத்தி வரீங்களே தவிர உருப்படியாய் உங்கப்பா கிட்ட கூட நம்ம விஷயம் சொல்லலை. அட்லீஸ்ட் என்னை அவர் கிட்ட அழைச்சுப் போய் அறிமுகம் கூட செய்யலை.

    விநாடியில் மாறிய அவன் முகக் கருமையை இருள் அவளுக்குச் சொல்லவில்லை.

    என்ன சந்திரன், நான் மட்டும் பேசறேன். ஐயா பதில் சொல்லக் காணோம். பணக்கார அப்பா. இவளை அழைச்சிட்டு போனா எங்கே மறுத்துருவானோன்னு பயம் வந்திருச்சி. இவள் காதலையும் இவளையும் எப்படி கழிச்சுக் கட்டலாம்னு யோசனையா.

    சீ... என்னப் பேச்சு இது செளமி. உன்னையும் என்னையும் பிரிக்கறது இறப்பு ஒண்ணாத்தான் இருக்கும். வேறு எதுவும் உன்னை என்கிட்டயிருந்து பிரிக்காது. ஆனா நீதான் என்னை... என்னை... மனம் மாறிரிருவியோன்னு பயமா இருக்கு செளமி.

    நான் எதையாவது சொன்னா இந்த டைலாக் விடுங்க. ஐயோ மணி எட்டாகப் போறது. நான் எப்படி பஸ் பிடிச்சு எப்படி... மை காட்... பாட்டிமா என்ன செய்துட்டிருக்காங்களோ, அவங்களுக்கு விளக்குப் போட்டுக்கணும்னு கூட தெரியாதே.

    அவள் வேகமாய் எழுந்துக் கொள்ள அவனும் எழுந்தான்.

    டோன்ட் ஒர்ரி சௌமி, நான் வேணா என் பைக்ல அழைச்சிட்டு வரேன்.

    மணலில் செருப்புக்கள் புதைய நடந்தவள் வேறு நேரமாய் இருந்தால் அவனை முறைத்திருப்பாள். ஆனால் மனதில் பாட்டி உட்கார்ந்திருக்க மனம் வீட்டைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தது.

    உம்... அவள் ஒற்றைச் சொல் தேய்ந்து ஒலித்து காணாமற் போயிற்று."

    கடற்கரையில் நல்லவர்கள் சுருக்கமாய் காணாமற் போய்க் கொண்டிருக்க சக விரோதச் சக்திகள் தருணம் பார்த்திருந்தன.

    அவன் தோளில் ஒட்டாதபடி அமர்ந்து அவன் சுசுக ஹோண்டாவில் அவள் பூ மேனி…

    சே… வண்டியில் வந்தா இப்படித்தான் வரதா

    க்கும். வரதே பெரிசு. வேற எப்படி வரதாம்?

    "அப்படியே தோளை

    Enjoying the preview?
    Page 1 of 1