Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennai Yaarendru Enni...
Ennai Yaarendru Enni...
Ennai Yaarendru Enni...
Ebook95 pages34 minutes

Ennai Yaarendru Enni...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352856138
Ennai Yaarendru Enni...

Read more from Hamsa Dhanagopal

Related to Ennai Yaarendru Enni...

Related ebooks

Reviews for Ennai Yaarendru Enni...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennai Yaarendru Enni... - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    என்னை யாரென்று எண்ணி...

    Ennai Yaarendru Enni...

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    என்னை யாரென்று எண்ணி

    ஹம்ஸா தனகோபால்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    ***

    1

    அபிநயா சுவாமி படத்திற்கு முன்பு கை கூப்பியிருந்தாள். அவள் ஆரஞ்சு சுளை இதழ்கள் முணுமுணுத்தன. ‘தெய்வமே, எங்கம்மாவைக் காப்பாத்து. அவங்க தீர்க்காயுசா இருக்கணும். என் மனோஜையும் என்னையும் ஒன்று சேர்த்து வை. நான் நடந்தே உன் கோவிலுக்கு வரேன்’. நித்தம் அவள் தொழுகை இதுதான். தெய்வத்திடம் தன் மனக்கனவை அடிக்கடி சொல்வாள்.

    எப்போதும் நம் விருப்பம் எதுவோ அதை நினைத்திருப்பதும் அதை வாய்விட்டுச் சொல்லி நம் காதால் கேட்டால் அதுவே நடந்தேறும் என்கிறதில் அவளுக்கு நம்பிக்கை.

    சமையல் அறையில் ஓடியாடி வேலை பார்த்து வந்த ஜானகி ஆசுவாசமாய் சாய்வு நாற்காலியில் போய் அமர்ந்துகொண்டாள். இன்னும் சமையல் முடியவில்லை. வேலைக்குப் போகும்போதே தன் உணவையும் எடுத்துப் போய் விடுவாள் அபிநயா. காலை உணவு வெறும் சாப்பாடுதான்.

    அதுவே செய்ய முடியாமல் அடிக்கடி களைத்துப் போகிறாள் ஜானகி. சமீப காலமாய் அவளால் எதுவும் முடியவில்லை. எது செய்தாலும் மூச்சு வாங்குகிறது. அபிநயாவிடம் சொல்லாமல் தவிர்த்து வருகிறாள். அபிநயாவுக்குத் தெரிந்தால் தாங்கிக்கொள்ள மாட்டாள். அபிநயா சுவாமி அறையிலிருந்து வெளியே வந்தாள். என்னம்மா முடியலையா. என்னைக் கூப்பிடக் கூடாது? அதான் சிம்பிளா ஏதானும் செய்துருமான்னா கேட்காமே அதையும் இதையும் செய்ய புறப்படறே.

    ஜானகிக்கு ஸ்தூல சரீரம். அழகிய முகம். காலத்தால் அவள் அழகு இன்னும் கலைந்து போகவில்லை. யாரையோ இழுத்துக்கொண்டு ஓடிப்போன கணவனின் நலனுக்காக இன்னும் நெற்றியில் குங்குமமும் கழுத்தில் மாங்கல்யமும் சுமக்கும் சராசரி இந்தியப் பெண்.

    நீ ஆபிஸ் போகிறப் பெண். உழைக்க சத்து வேணும் இல்லியா. டெய்லி மோருஞ்சாதம்னு சொன்னா உட்கார்ந்து சாப்பிடற உன் ப்ரெண்ட்ஸ் கூட கேலி செய்வாங்க இல்லியா.

    அம்மா இப்படிச் சொன்னதும் சமையல் அறையில் வேலை பார்த்த அபிநயா தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள். ப்ரெண்ட்ஸ் என அம்மா சொன்னதும் அவள் மனக்கண்ணில் மனோஜ் தெரிந்தான்.

    இவளுக்கு அவன்தான் ஆரம்பத்தில் வேலையில் சேர்ந்தபோது வேலை சொல்லிக்கொடுத்தான். அரசு அலுவலகத்தின் நெறிமுறைகள் சொல்லி வைத்தான்.

    ஆரம்பத்தில் வெறும் நட்பு. அவனுக்குப் பிடித்த நாவலாசிரியர்கள், ஆங்கில எழுத்தாளர்கள் இவளுக்கும் பிடித்தவர்களாக இருந்தார்கள். அவன் கருத்தால் இவளின் கருத்தை ஆட்கொண்டான். நட்பு நாளடைவில் காதலாயிற்று.

    திருமணத்திற்குப்பின் தாயையும் பாதுகாக்க வேண்டும் எனப் பலமுறை அவனிடம் சொல்லியிருக்கிறாள் அபிநயா. அதற்கு அவனும் சரியென்று சொல்லியிருக்கிறான். மனோஜிற்கு இரண்டு தங்கைகள், சத்யா, நித்யா. இருவருக்கும் திருமணம் செய்தபின்தான் தனக்குத் திருமணம் எனச் சொல்லி வந்தான்.

    கல்லூரியில் படித்த சத்யாவிற்கும் நித்யாவிற்கும் வேலை எதுவும் கிடைக்கவில்லை. அவர்களைத் திருமணம் செய்து அனுப்ப அவனும் அவன் தந்தை நடராஜனும் பெரிதும் விரும்பினர். ஆனால், பாங்கில் அவர் வேலை பார்த்து கட்டாய ஓய்வில் இருந்தார். காரணம் காசாளராய் அவர் பணி புரிந்தபோது பத்து லட்சம் கணக்கில் குறைந்தது. எப்படிப் போயிற்று. எங்கே போயிற்று என்று தெரியவில்லை? பெருந்தொகை!

    அவர் கவுண்டரில் வைத்திருந்த சமயம் பார்த்து யாரோ கவர்ந்து சென்றிருக்கவேண்டும். அது அவர் தலையில் விழுந்தது. பணம் கட்டினால்தான் அவர் கம்பி எண்ணுவது தவிர்க்கப்படும் என்பதால் கட்டாய ஓய்வு பெற்று வந்த பதினோரு லட்சத்தில் பணத்தைக் கட்டினார். தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்.

    மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்த வகையில் ஏற்பட்ட கடனை அடைத்ததில் ஒரு லட்சம் செலவாயிற்று. கையில் ஒன்றும் இல்லாத நிலை. பணம் கையாடல் என்கிற நிலையில் அவர் ஓய்வூதியம் இழுபறியாயிற்று.

    மனோஜின் சம்பளத்தைக் குடும்பம் எதிர்பார்த்தது. இதில் இரண்டு தங்கைகளுக்குக் கல்யாணம் செய்யவேண்டும். இத்தனையும் தெரிந்துதான் அவனை நேசித்தாள் அபிநயா.

    மனோஜ் நினைவிலிருந்து விழித்துக்கொண்டவள் தாயை அழைத்தாள்.

    வாம்மா வந்து சாப்பிடு. எனக்கு ஆபீஸுக்கு நேரமாச்சு.

    நான் அப்புறமா சாப்பிட்டுக்கறேன். நீ சாப்பிட்டு கிளம்புமா. ஜானகி குரல் கொடுத்தாள்.

    "உக்கும். இப்படித்தான் சொல்வேமா நீ அப்புறம் நான்

    Enjoying the preview?
    Page 1 of 1