Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennai Kol
Ennai Kol
Ennai Kol
Ebook84 pages33 minutes

Ennai Kol

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352856190
Ennai Kol

Read more from Hamsa Dhanagopal

Related to Ennai Kol

Related ebooks

Reviews for Ennai Kol

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennai Kol - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    என்னைக் கொல்!

    Ennai Kol!

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    என்னைக் கொல்!

    ஹம்சா தனகோபால்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    ***

    1

    என்னைப் பற்றி நான் சொல்லித்தான் ஆக வேண்டும். முப்பது வயது ஆகிக்கொண்டிருந்தபோதும் ஒர் இளைஞன் நிரந்தர வேலையொன்றில் இல்லையென்றால் யார் மதிப்பார்கள். என்னைப் பற்றி அப்படிக் குறை சொல்லவோ இடித்துக் காட்டவோ யாரும் கிடையாது.

    இருந்த ஒரே அத்தையும் போன வாரம். ப்ச்சு அது வேறு கதை. எழும்பூர் ஸ்டேஷனில் வந்து இறங்கினதும் கண்னை விசியத் திறந்தேன். அடயேப்பா திரைப்படங்களில் வரும் சென்னையைவிட இது மிகப் பரபரப்பான மிகத் துரித நகரம் இதில் என் உயிர் சிநேகிதன் திலீபன் வீட்டை நான் கண்டுபிடித்து அவன் மூலம் நல்லதொரு வேலை தேடி வாழ்க்கையில் நிம்மதி கான விழைந்தேன்.

    ஒர் ஆட்டோ பிடித்து அடையாறில் திலீபனின் விலாசம் சொல்லி அமர்ந்தேன். ஞான மாளிகை அவன் இருக்கும் இடத்தின் பெயரே கனமாய் இருந்தது. அவனும் அங்கே நல்லதொரு வேலையில் இருப்பான் என்று நினைத்தேன். அதுதான் அவன் விலாசம் தேடி தஞ்சாவூரில் குக்கிராமத்திலிருந்து புறப்பட்டு விட்டேன்.

    சட்டைப் பாக்கெட்டில் இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களும் சில ஒற்றை ரூபாய்களும்தான் மிச்சமிருந்தது. இதை வைத்துக்கொண்டு இந்த மாபெரும் நகரில் எப்படி காலம் தள்ளுவது? உக்கும் என் நண்பனைச் சந்தித்து விட்டால் எனக்கென்ன கவலை. அவனே எல்லாம் பார்த்துக் கொள்வான்.

    நான் கும்பகோணத்தில் படிக்கும்போது எனக்கான செலவை அவன்தான் செய்வான். எனக்காவது ஒர் அத்தை என்கிற உறவு இருந்தது. அவனுக்கு அதுவும் கிடையாது. விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கென்று யாரும் கிடையாது. எனக்குத் தெரிந்து அவன் எந்த வேலைக்கும் போவது கிடையாது. இருந்தாலும் என் கல்லூரிக் கட்டணம், என் துணிமணிக்கென அவனே செலவு செய்தான். நான் கூச்சத்துடன் கேட்டால் சிரித்து மழுப்பி விடுவான்.

    திலீபனை நீங்கள் பார்க்க வேண்டும். உடனே உங்கள் சொந்தக்காரப் பெண்ணிற்காக ஜாதகம் கேட்க ஆரம்பித்து விடுவீர்கள். அத்தனை கவர்ச்சியாய் உயரமாய் இருப்பான். எங்கள் கிராமத்திற்கு வந்தால் என் அத்தையைப் பேசிப்பேசியே மயக்கிவிடுவான். அத்தை எதற்கும் சிரிக்கமாட்டாள். எனக்குக்கூட வாய்க்கு ருசியாய் எதையும் செய்ய மாட்டாள். ஆனால் திலீபனைப் பார்த்தால் போதும், கடன் வாங்கியாவது கோழி, காடை, கெளதாரி எனத் தேடி ஒடுவாள்.

    ‘டேய் இளங்கோ, உனக்குச் சமர்த்து போதாதுடா நம்ம திலீபனைப் பாரு என்னம்மா பேசறான். அவன் பேச்சிலேயே மத்தவங்க மயங்கிருவாங்களடா. அவன் கிட்டயாவது மத்தவங்க கிட்ட எப்படிப் பழகறதுன்னு தெரிஞ்சுக்கோ இளங்கோ.’

    ஆட்டோக்காரர் குலுங்கி நிற்க, என் எண்ணங்கள் என்னைவிட்டு விலகின. அவருக்குச் சேர வேண்டிய தொகைக்கும் மேலாக ஒரு தொகை போட்டுக் கொடுத்ததும் சலாம் அடித்து ஆட்டோவை வட்டமடித்துப் போனார் அவர் என் நண்பனைத்தான் சந்திக்கப் போகிறேனே அப்புறம் எனக்கு என்ன கவலை?

    ‘ஞான மாளிகை’ பெரிய காம்பவுண்டு சுவருக்குள் பெரிய இரும்பு கேட்டுக்குள் பொதிந்திருக்க, வெளியே பாதி சுவரும் பாதி கண்ணாடிக் கூண்டான இடத்தில் கூர்க்கா தோளில் துப்பாக்கியுடன் என்னைப் புழுப் போல பார்த்திருந்தான்.

    இங்கேயா என் திலீபன் வேலை செய்கிறான்? கூர்க்காவைப் பார்த்துக் கை கூப்பினேன். என் பவ்யமான வணக்கம் அவனை வீழ்த்திற்று.

    ஸார், இங்கே திலீபன்னு... நான் இழுத்தேன்.

    ஒ... அம்மா கையிலே பேச வந்திருக்கீங்களா. வாங்க ஸார். நீங்க அவருக்கு என்ன வேணும்?

    நானும் திலீபனும் ஒன்றாவது வகுப்பிலேந்து காலேஜ்ல பி.ஏ. வரை ஒண்ணா படிச்சவங்க. அதான் வந்திருக்கேன்.

    "வாங்க ஸார்.

    அவன் மிகப் பெரிய அந்த இரும்பு கேட்டைத் திறக்க, அது ஒலமிட்டது.

    இத்தனைப் பெரிய தோட்டத்தையும் மாளிகையும் நான் பார்த்ததே கிடையாது. கோடியக்கரையில் பார்த்திருக்கலாம். அதுவும் வெளியே நின்றுதான், உள்ளே போய் அல்ல.

    பரவாயில்லை திலீபன் மகா

    Enjoying the preview?
    Page 1 of 1