Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannum Kannum Kollai Adithal
Kannum Kannum Kollai Adithal
Kannum Kannum Kollai Adithal
Ebook131 pages47 minutes

Kannum Kannum Kollai Adithal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114202857
Kannum Kannum Kollai Adithal

Read more from Hamsa Dhanagopal

Related to Kannum Kannum Kollai Adithal

Related ebooks

Reviews for Kannum Kannum Kollai Adithal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannum Kannum Kollai Adithal - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்

    Kannum Kannum Kollai Adithal

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    கல்லூரி புறப்படுவதற்காக தயாராகிக்கொண்டிருந்தாள் ஆர்த்தி!

    அன்று சுடிதார் அணிவதா; இல்லை சேலையா என்று மனதுக்குள் ஒரு பட்டிமன்றம் நடத்தினாள்.

    வெள்ளிக்கிழமையாய் இருப்பதால் சேலை அணிவதே சரி என்கிற முடிவிற்கு வந்தாள்.

    பீரோவில் ஒவ்வொரு சேலையாய் எடுத்துப் பார்த்து மார்போடு அணைத்து கண்ணாடியில் பார்த்தாள். ஒவ்வொரு சேலையிலும் அவள் அழகு அசாதாரணமாகவே இருந்தது. இருப்பினும் சேலைகள் அனைத்தும் அவள் அக்கா அர்ச்சனா உடுத்திக் கிழித்துக் கொடுத்ததே என்பது உறுத்தலாய் இருந்தது.

    அர்ச்சனாவிற்கு போதாமல் போகும் உடைகள் எல்லாம் இவளுக்குத் தான் என்றாயிற்று. மூன்று ஆண்டு பெரியவளான அர்ச்சனா இவளைவிட நிறமாயும் இன்னும் அழகாகவும் இருப்பாள். தொட்டால் கன்றிப்போகும் நிறம். செண்பக பூக்களைக் குழைத்து செய்தமேனி. குரலில் குயில் கொஞ்சும்.

    அர்ச்சனா படித்த பழைய புத்தகங்களைப் பத்திரப்படுத்தி வைத்து இவளுக்கு கொடுப்பார்கள். ஒரு ஆண்டாவது புது புத்தகத்தில் படிக்க ஆசை. பாடங்கள் மாறினாலாவது தன் ஆசை நிறைவேறாதா என நினைப்பாள். பள்ளி அல்லது கல்லூரி பாடங்கள் இவள் படித்து முடிக்கும்வரை அதே பாடத் திட்டங்களாய் இருக்கும்.

    இவள் படித்து வேறு வகுப்பு போகும்போது பாட திட்டங்கள் மாறிவிடும். எரிச்சல்கொள்வாள் ஆர்த்தி.

    என்ன இருப்பினும் மனதுக்குள் தமக்கை என்றால் ஒரு தனி பாசம் அவளுக்கு. ஆனால் எப்போதும் அதை வெளிக் காட்டியவள் அல்ல. இப்போதும் இவள் ஒவ்வொரு சேலையாய் கலைத்துப் போட அங்கே வந்த அர்ச்சனா ஒருவிநாடி நின்று பார்த்தாள். தங்கை செயல் கோபத்தை வரவழைத்து.

    ஆர்த்தி கல்லூரிக்கு புறப்பட்டுப் போனதும் பாவம் அம்மா இத்தனை சேலைகளையும் மடித்து வைக்க வேண்டும். இருக்கும் வேலைகள் போதாது என்று இது வேறு. அதை உடனே மனதுக்குள் புதைத்து கொண்டாள். தலைக்குக் குளித்த கூந்தலை எடுத்து முடித்துக்கொண்டே மென்மையாய் கேட்டாள்.

    அர்த்தி உன் மனதுக்குப் பிடித்த. மாதிரி ஒரு சேலை கொடுக்கட்டுமா?

    கூந்தலை சரியாய் துவட்டாமல் வந்து நிற்கும் அர்ச்சனா ஒரு தேவதை என்பதில் சந்தேகமில்லை. இவளுக்குத் தங்கையாய் பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    தங்கை மவுனமாய் தன்னைப் பார்த்தது அவளுக்குச் சம்மதம் என்று புரிந்துகொண்டாள். பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த சேலையை எடுத்து தங்கை முன் நீட்டினாள்.

    சந்தனக் கலரில் உடலும் பார்டராய் அரக்குக் கலரும், ஜரிகை லேசாய் இழைந்து கண்ணைப் பறித்தது சேலை. யார் கட்டினாலும் அழகு கூடும். அதிலும் அர்ச்சனாவோ ஆர்த்தியோ உடுத்தினால் சாலையில் போவோரை அந்த விநாடி கட்டிப் போடுவது சத்தியம். தன்னை மறந்து அந்தச் சேலையை எடுத்து தோளிலும் மார்பிலும் வைத்துப் பார்த்தாள் ஆர்த்தி. அவள் உருண்டை முகத்திற்கும் சுருண்ட கூந்தலுக்கும் நிச்சயம் ‘மிஸ் இந்தியா' பட்டம் கொடுத்துவிடுவார்கள் என்று நினைத்தது ஒருகணம்தான்.

    மறுகணமே ஏதோ பாம்பைத் தீண்டியவள் போல அதைத் தூர எறிந்தாள். அவள் செய்கையில் பதறிப்போன அர்ச்சனா அதைக் கையில் எடுக்கையில் கண்கள் கலங்கிவிட்டாள்.

    அக்கா… இது உன் நிச்சயத்திற்கு எடுத்த சேலைதானே? இதை நான் உடுத்தலாமா? உன்னோட எல்லா உடைகளையும் நான் பழசானபிறகே உடுத்திக்கிறேன்… உன்னோட கணவனுக்கும் நான் ரெண்டாந்தாரமா வாழ்க்கைப்படவேண்டுமா?

    ஏய் ஆர்த்தி… வாயை மூடு… எங்களுக்கு நிச்சயம்தான் ஆகியிருக்கு... கல்யாணம் ஆகலை. கல்யாணம் ஆனதும் சத்தியமா என்னோட கணவரை நான் யாரோடயும் பங்கு போட்டுக்கமாட்டேன். அது நீயா இருந்தாலும் சரி… வேறு யாராக இருந்தாலும் சரி… அவர் எனக்கே எனக்கு மட்டும்தான்...

    ஆமாம் அந்த கார்த்திக் மூஞ்சிக்கு ரெண்டு மனைவிகள் கேட்குதாக்கும்... அதுவும் அவரோட நெட்டை உயரமும் சிரிப்பும்… சே….

    தங்கை இப்படி பேசப் பேச பெரிதும் கலங்கினாள் அர்ச்சனா. கலக்கத்துடன் தாயைத் தேடிப் போனாள்.

    அம்மா… ஆர்த்தியை பாரும்மா… வழக்கம்போல என்னையும் கார்த்திக்கையும் கேலி செய்றாம்மா... கார்த்திக் அசிங்கமா இருக்காருன்னு சொல்றாம்மா…

    அவர்களுக்கு மதிய உணவை எடுத்து வைத்துக்கொண்டிருந்த மரகதம் திரும்பினாள். இரண்டு பெண்களின் அழகும் எப்போதும் அவளுக்குள் ஒரு கர்வத்தை ஏற்படுத்தும். ஆனால் சதா அவர்களுக்குள் சச்சரவுதான். ஒருத்தி இல்லை என்றால் இன்னொருத்தி அவள் வரவை எதிர்ப்பார்த்து வாசலில் நின்றிருப்பாள். வந்ததும் வராததுமாய் பைசா பெறாத விசயங்களுக்கு எல்லாம் குரல் உயரும்.

    பேச்சுக்களுடன் ஒருவரை ஒருவர் பதம் பார்க்கும் சுடு கணைகள். எப்போதும் பெரியவள்தான் கண்ணைக் கசக்குவாள். சின்னவள் அழுது அவள் பார்த்ததே இல்லை.

    இந்த குழந்தைக்கு அழுகையே தெரியாதோ என்றுகூட அவள் குழந்தை பருவம் முதல் நினைப்பதுண்டு.

    பெரும்பாலும் சின்னவள்தான் பெரியவளைச் சீண்டி வம்புக்கு இழுப்பாள்.

    விசயம் சொன்னாள், அர்ச்சனா.

    ஏய்… ஆர்த்தி… உடுத்தலைன்னா விட்டுட்டு போயேன்... அதுக்கு வாய்க்கு வந்தப்படி பேசலாமா… உன்னைவிட அவள் பெரியவள் இல்லையா… வேலை பார்க்கிறா... இன்னும் ரெண்டு மாசத்தில் ஒருத்தர் வீட்டுக்குப் போக இருக்கிற பெண்ணை நீ பேசலாமா?

    தன் தாயின் கண்டனக் குரல் ஆர்த்தியை எதுவும் செய்ததாய் தெரியவில்லை. தனக்குள் முனங்கிக்கொண்டு திரும்ப், சேலைக் குவியலில் புதைந்தாள்.

    கடைசியில் அவள் தேர்வு வழக்கம்போல வெளிர் ஊதா நிற சுடிதார்தான்.

    அர்ச்சனா… நீ போய் உன் வேலையைப் பார்க்கிறதைவிட்டு அவள்கிட்ட என்ன பேச்சு. நாம சொன்னா அவள் என்னைக்குக் கேட்டா... உங்கப்பா சொன்னாதான் கேட்பா… அவள் பேசிக் கொண்டிருக்க, மாடியில் அவர்கள் தந்தை கனைக்கும் ஒலி கேட்டது.

    ஐயோ உங்கப்பா சாப்பிட வர்றார்… சீக்கிரமா தட்டு எடுத்துப் போடு… நீ ஆபீஸ் போகணும் இல்லையா… ஏன் மசமசன்னு நிக்கறே...

    இதோ…

    ஏண்டி இன்னும் நிக்கிறே…

    "வந்து… கார்த்திக் ஆபீசுக்கு போன்

    Enjoying the preview?
    Page 1 of 1