Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Malar
Kaadhal Malar
Kaadhal Malar
Ebook87 pages1 hour

Kaadhal Malar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114202850
Kaadhal Malar

Read more from Hamsa Dhanagopal

Related to Kaadhal Malar

Related ebooks

Reviews for Kaadhal Malar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Malar - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    காதல் மலர்

    Kadhal Malar

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    சூரியக் கதிர்கள்பட்டு அந்த கட்டி முடிக்கப்படாத மிகப் பெரிய கட்டிடம் அழகாகவே தென்பட்டது. பெரிய கட்டிடம் எனச் சொல்வதைவிட அதை மிகப் பெரிய மாளிகை என்றே சொல்ல வேண்டும். ஆனால் வெறுமனே தளங்கள் போடப்பட்டு சுவர்களும் தூண்களும் எழுப்பப்பட்டு வெறுமனே நின்றுக் கொண்டிருக்கிறது. கொட்டப்பட்ட மணலும், செங்கற்களும், இரும்புக் கம்பிகளும், சிமெண்டு மூட்டைகளும் அருகில் ஒரு பெரிய குடிசையில் அதற்குக் காவலாய் அவன். வயது பதினேழோ பதினெட்டோ... கணிக்க முடியாது. ஒரு கண் பெருத்தது ஒரு கண் சிறுத்தது. முன் பற்கள் பெரிதாய் வெளியே துருத்டி... கொஞ்சம் 'ஸ்தூல’ சரீரம் போல.. தொடைகளும் கைகால்களும் பெருத்து... அவன் பார்வை அந்த கட்டப்படாத மாளிகையைவிட்டு அடுத்திருந்த குட்டி பங்களாவின் மீதே நிலைத்திருந்தது.

    பங்களாவின் தரைப்பகுதி ஜன்னலில் கோகிலம் நின்று தன் நீண்ட பின்னலை சிக்கெடுத்துக் கொண்டிருக்கிறாள். அவள் பார்வை என்னமோ எங்கும் படியாமல் தூரத்தில் ஓடிப் பிடித்து விளையாடும் கடல் அலைகளும் தாண்டி அதன்பிறகும் அந்தி வானத்தில் படிந்து. அதன் பொருள் புரியாதது போல அவளையும் அவனால் புரிந்துக் கொள்ள முடிந்ததில்லை. குடிசைவிட்டு வெளியே வந்தவன் கொஞ்சம் உரக்க, யக்கா வரட்டா. என்கிறான்.

    வேணாம் பையா.

    யக்கா, வவுத்த பசி. வரட்டா. மீண்டும் அவன் குரல் சோகமாய்.

    நான் வேலைக்குப் போறப்ப வெளியே தோட்டத்து கூடைக்குள்ள சாப்பாடு மூடி வச்சு போறேன். சாப்பிட்டு பாத்திரங்களை அலம்பி வை.

    சரிக்கா. அவன் குரலில் உற்சாகத் துள்ளல். செலவில்லாமல் அன்றைய பசி பறந்துவிடும். 'யக்கா’தான் அவனுக்கு எத்தனை உதவிகள் செய்கிறாள். அவளுக்காக அவன் செய்யும் உதவிகள் ஒன்றுமேயில்லை. அதை யார் வேண்டுமானாலும் செய்வார்கள். அதுவும் எப்போதோ ஒருமுறை. ஏன் 'யக்கா’ எதையும் மனம் விட்டுச் சொல்ல மாட்டேன் என்கிறாள்.

    குடிசை வாசல் குத்துக்கல்லில் குத்துக்காலிட்டு அவன் பீடி புகைத்துக் கொண்டிருக்கிறான். யக்காவின் அறையில் அவளைக் காணவில்லை.

    கோகிலம் அன்றைய உடையை பீரோவிலிருந்து தேர்வு செய்து எடுக்கையில் அறை வாசலில் நிழல் படிந்தது போல... மின்னலாய் திரும்புகிறாள். யாரையும் காணவில்லை. சுவரில் தொங்கும் ஆளுயரக் கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறாள். சேலைத் தலைப்பு எங்கோ ஒதுங்கி அவள் இளமை கவர்ச்சியாய்... அவசரமாய் சேலையைச் சரிப்படுத்துகிறாள். வேகமாய் அறைவிட்டு வெளி வருகிறாள்.

    மாடிக்குப் போகும் படிகளில் காலடி ஓசை மட்டுமே கேட்கிறது. யாரையும் காணவில்லை. அதுவும் புரிப்படாத ஒலி. அவள் தங்கையா.. இல்லை வேலைக்காரியா.. தங்கையின் கணவன் ஷங்கரா. யார் வந்து போனது.

    அன்று மட்டும் அல்ல.. அவள் குளிக்கும் போது.. யாரோ ஒளிந்து நின்று பார்ப்பது போல.. தூங்கும்போது, புரண்டு படுக்கையில் யாரோ அறை வாசலில் நின்று மறைந்தது போல.. இவள் அவசரமாய் குளித்து பாதி துடைத்தும் துடைக்காததுமாய் வெளி வந்து பார்த்தால் யாரும் இருக்க மாட்டார்கள். சில நேரம் அவள் தங்கை சரோஜினி எதையாவது செய்திருப்பாள். அவள்தான் வந்து போய் இருப்பாளோ?

    இருக்காது. சரோஜி எதற்கு அப்படி செய்ய வேண்டும்.

    தூங்கி விழிக்கையில் மணி ஒன்றா இரண்டா... தெரியாது... ஆனால் வந்து போன அரவம் மட்டும் சத்தியம். கடல் அலைகளின் ஓசை இங்கே மெலியதாய் ஓடிவந்தபோதும் அதையும் மீறி... எழுந்து வெளி வந்து பார்ப்பாள். வெறும் வராண்டா... கூடம்... ஊஞ்சல்... சில நேரம் ஊஞ்சல் லேசாய் முன்னும் பின்னும் ஆடி பயமுறுத்தும். இவளுக்குப் பயம் விட்டுப் போய் பல காலம் ஆகிவிட்டது.

    உறக்கம் வராதபோது நேராக காம்பவுண்டு கதவு திறந்து வெளியே போவாள். கடற்கரையோரமாய் முன்னும் பின்னும் நடப்பாள். கடல் அலைகள் அமானுஷ்யமாய் ரகசியம் பேசுகிற குரலில் ஆர்பாட்டமாய் தன் குரலை ஓங்கி உயர்த்தி அச்சுறுத்தப் பார்க்கும். அவளிடமா அதன் ஆட்டம் பலிக்கும். சில நேரம் பையன் இவளைப் பார்த்துவிட்டு அங்கங்கள் குலுங்க ஓடிவருவான். இவள் நடையுடன் சேர்ந்துக் கொள்வான். இவள் நடையுடன்

    Enjoying the preview?
    Page 1 of 1