Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennodu Vaa Nila
Ennodu Vaa Nila
Ennodu Vaa Nila
Ebook79 pages47 minutes

Ennodu Vaa Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115702789
Ennodu Vaa Nila

Read more from Lakshmi Rajarathnam

Related to Ennodu Vaa Nila

Related ebooks

Reviews for Ennodu Vaa Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennodu Vaa Nila - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    என்னோடு வா நிலா

    Ennodu Vaa Nila

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    மெ/ல்ல கதவைத் தட்டினான் வாசு. கதவுக்கு வலிக்குமே என்பது போல இருந்தது அவன் தட்டுவது. வீட்டில் யாரும் இல்லையோ? தொலைக்காட்சி நிகழ்ச்சி ஓடுவது தெளிவாகக் கேட்டது.

    ஆஹா மெல்ல நடமெல்ல நட மேனி என்னாகும்?

    பழைய பாடல்களுக்கு மவுசு அதிகம் தான்.’ தனக்குள் சொல்லிக் கொண்டான். நான் தட்டுவது உள்ளே இருப்பவர்களுக்குக் காதில் விழுந்திராதோ?’

    மீண்டும் தட்டினான். ஆனால் சற்று பலமாகவே தட்டினான்.

    யாரு?

    கேட்பவர் குரல் இளமையானது என்று புரிந்தது. "நான் யாரென்று சொன்னால் உள்ளே இருப்பவர்களுக்குப் புரியுமா?’

    அவன் நினைப்பைக் கலைப்பது போல கதவு திறந்தது. காற்றுக்குத் திறந்த ஜன்னல் கதவு வழியே பெளர்ணமி நிலவு தெரிவது போல இருந்தது வாசுவிற்கு கரிய விழிகளும், பட்டாம் பூச்சியாய் சிறகடிக்கும் இமைகளில் படபடப்பும். கரிய சுருண்ட கூந்தல்..

    இக்காலத்து நாகரீமாக விரித்துப் போடாமல், அடக்கிப் பின்னி இருப்பதையும் கவனித்துக் கொண்டான். அவளின் பவள இதழில் சிரிப்பு இல்லை.

    என்ன? யார் வேணும்?

    சின்ன செப்புவாய் கொஞ்சும் குரலாக மிழற்றியது.

    நடே...சன்... மிஸ்டர் நடேசன் இருக்காரா? தடுமாறினான்.

    இப்படி ஏன் தடுமாறறீங்க. அப்பா குளிக்கிறார்.

    அப்ப அப்புறமா வரட்டுமா?

    உள்ளே வந்து உட்காருங்க.

    அவள் திரும்பி உள்ளே நடக்கும் பொழுது தான் கவனித்தான். மெல்ல நட மெல்ல நட.. என்ற பாடல் இவளுக்குத் தான் பாடப்பட்டதோ என்று, கதவை அவள் திறந்ததும் நினைத்தானே. அவன் நினைத்ததென்ன? இப்பொழுது இவள் விந்தி விந்தி நடந்து போவதுதான் என்ன!

    தீட்டிய சித்திரம் போல இருக்கும் இவளுக்கு இப்படி ஒரு குறையா? அவன் நின்று விட்டான். ஹாலில் நுழைந்து திரும்பிப் பார்த்தவள், அப்படியே நின்னுட்டீங்க? உள்ளே வந்து உட்காருங்க. இல்லேன்னா அப்பா என்னைத் திட்டுவாரு என்றவள் உள்ளே போனாள்.

    அவள் அப்படி விந்தி விந்திப் போவது அவனுக்குக் காலை வலிப்பது போல இருந்தது. அவள் போன சுருக்கில் காப்பியைக் கொண்டு வந்து நீட்டினாள். உட்கார்ந்தவன் சட்டென்று கொஞ்சம் எழும்பி வாங்கிக் கொண்டான்.

    எதுக்குங்க சிரமத்தோட என்று அவன் உபகாரமாக மொழிவதற்குள் கண் பார்வையில் சீற்றம் காட்டினாள்.

    எனக்கு இந்த அனுதாபம் எல்லாம் துளிக்கூடப் பிடிக்காது என்றாள் வெடுக்கென்று.

    தலையைத் துவட்டியபடியே குளியலறையிலிருந்து இடுப்பில் கட்டிய துண்டு சகிதம் வெளிப்பட்டார் நடேசன்.

    அடடே... வாசுவா... வா. வா. என்ன இவ்வளவு தூரம் வீடு வரைக்கும்?

    பழங்களும், இனிப்புப் பெட்டியும் நிறைந்த பையை அவரிடம் நீட்டினான் வாசு. பிடித்த வேகத்தில் பூப் பொட்டலம் கீழே விழுந்தது.

    என்னப்பா, பூ, பழம், இனிப்பெல்லாம் அமர்க்களப்படுது?

    கண்களில் நன்றி தேங்க நின்றான் வாசு.

    எனக்கு எவ்வளவோ உபகாரம் பண்ணியிருக்கீங்க ஸார். அம்மா போனதும் கையைப் பிசைஞ்சுண்டு நின்னேன். காலேஜ் படிப்புக்குக் கை கொடுத்தீங்க. பாஸானதும் வேலையும் போட்டுக் கொடுத்தீங்க. முதல் சம்பளம் வாங்கினேன். உங்க ஆசீர்வாதம் எப்பவும் வேணும் ஸார் என்று தடாலென அவர் காலில் விழுந்தான்.

    அடடா, என்னப்பா இது? எழுந்திரு எழுந்திரு என்று நடேசன் பதட்டப்பட்டார்.

    எழுந்தவன் கண்களில் சமையலறை நிலைப்படியைப் பிடித்துக் கொண்டு நின்ற பிரபா பட்டாள். அவன்

    Enjoying the preview?
    Page 1 of 1