Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vetri Ettu Dhikkum!
Vetri Ettu Dhikkum!
Vetri Ettu Dhikkum!
Ebook183 pages1 hour

Vetri Ettu Dhikkum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Nagasubramanian Chokkanathan (born January 17) better known by his pen name N.Chokkan is a Tamil Writer who has written two novels and nearly 100 short stories. His works has been translated into other Indian languages. Apart from this, he has written columns in several Tamil magazines. His interest for writing came from his blind aunt for whom he used to read a lot of books. His love for Books then made him to write few detective stories,which are not yet published.His first short story was published in 1997. His entry into Non-fiction area was kick started by a publishing house approaching him to write Biography of Sachin Tendulkar.He then wrote Biographies of famous Businessmen,Politicians and people who shaped the world.The list includes Narayana murthy, Azim Premji, Dhirubhai Ambani, Walt Disney, Charlie Chaplin,to mention a few.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352857685
Vetri Ettu Dhikkum!

Read more from N. Chokkan

Related to Vetri Ettu Dhikkum!

Related ebooks

Reviews for Vetri Ettu Dhikkum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vetri Ettu Dhikkum! - N. Chokkan

    http://www.pustaka.co.in

    வெற்றி எட்டுத் திக்கும்!

    Vetri Ettu Dhikkum

    Author :

    என். சொக்கன்

    N.Chokkan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/n-chokkan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****************************

    வெற்றி எட்டுத் திக்கும்!

    *****************************

    முன்னுரை

    வெற்றி எங்கிருந்து வருகிறது? யாருக்குக் கிடைக்கிறது?

    நிறையப் படித்தவர்கள்தான் ஜெயிக்கமுடியுமா? பெரிய பணக்காரக் குடும்பத்தில் வந்தவர்கள்தான் ஜெயிக்கமுடியுமா? நகரவாசிகள்தான் ஜெயிக்கமுடியுமா? ஆண்கள்தான் ஜெயிக்கமுடியுமா? இளைஞர்கள்தான் ஜெயிக்கமுடியுமா? அழகானவர்கள்தான் ஜெயிக்கமுடியுமா? உயரமானவர்கள்தான் ஜெயிக்கமுடியுமா? வளரும், வளர்ந்த நாடுகளில் உள்ளவர்கள்தான் ஜெயிக்கமுடியுமா? ஸ்டைலாக ஆங்கிலம் பேசுகிறவர்கள்தான் ஜெயிக்கமுடியுமா? வேலைக்குப் போகிறவர்கள்தான் ஜெயிக்கமுடியுமா? சொந்தத் தொழில் தொடங்கி நடத்துபவர்கள்தான் ஜெயிக்கமுடியுமா?

    இப்படிக் கேள்விகளுக்கு அவசியமே இல்லை. முனைப்பிருந்தால் யாராலும் ஜெயிக்கமுடியும். இதுதான் சரித்திரம் திரும்பத் திரும்பச் சொல்லும் உண்மை.

    இதனை நிரூபிக்கும்விதமாகவே இந்தப் புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. நீங்கள் சற்றும் எதிர்பாராத பின்னணியிலிருந்து வந்தவர்களெல்லாம் ஜெயித்த கதையைப் படிப்படியாகச் சொல்லித்தருகிறது, அவற்றை நாம் பின்பற்றுவதற்கான பாடங்களை எடுத்துரைக்கிறது!

    உதாரணமாக,

    * ஓர் ஆப்பிரிக்கச் சிறுவன், படிப்பறிவு அதிகமில்லை, பரம ஏழை, அவன் சொந்தமாக ஒரு காற்றாலை அமைத்து உலகப் பிரபலமாகிறான். எப்படி?

    * இன்னொரு சிறுவன், பதினேழு வயதில் எவரெஸ்ட்மீது ஏறி ஜெயிக்கிறான். எப்படி?

    * வேறொரு சிறுவன், பன்னிரண்டு வயதில் சொந்தமாகப் பத்திரிகை நடத்துகிறான். எப்படி?

    * அடிதடி கேஸில் ஜெயிலுக்குள் வந்த கைதிகள், விவசாயிகளாகித் தங்களைப் பண்படுத்திக்கொள்கிறார்கள். எப்படி?

    * இன்னொருவர், ரௌடிகளைத் திருத்துவதற்குக் கிரிக்கெட்டைப் பயன்படுத்துகிறார். எப்படி?

    * அமெரிக்காவில் ஒருவருக்கு உலகம்முழுக்க லட்சக்கணக்கில் சிஷ்யர்கள். எப்படி?

    * நடமாடும் நூலகம் கேள்விப்பட்டிருக்கிறோம், கழுதைமேல் நடமாடும் நூலகத்தை நடத்துகிறார் ஒருவர். எப்படி?

    * இன்னும் சிலர், தங்கள் வீட்டு வாசலில் குட்டி நூலகங்களை அமைத்து அறிவைப் பரப்புகிறார்கள். எப்படி?

    * சக்கர நாற்காலிகளில் வலம் வருகிற ஒருவருடைய உலகம் மிகச் சிறியதாகச் சுருங்கிவிடுகிறது. அதை விரிவுபடுத்தும் முயற்சியில் விழிப்புணர்வைப் பரப்புகிறார்கள் சிலர். எப்படி?

    * தங்கள் வருமானத்தில் ஒரு சிறு பகுதியைச் சமூக நலனுக்காகத் தரலாம், 1% போதும் என்கிறார்கள் சிலர். எப்படி?

    * மூன்று ரூபாய் செலவழித்துக் கோடீஸ்வரி ஆனார் ஒருவர். எப்படி?

    * ஆறு நாளில் ஒரு வீடு கட்டுகிறார்கள். எப்படி?

    * பெண்கள் திருமணமானபின், குழந்தை பிறந்தபின் வீட்டுக்குள் முடங்கியிருக்கவேண்டியதுதான் என்று பலர் சொல்லிக்கொண்டிருக்கையில், அதை ஏற்க மறுத்து முன்னேறுகிறார்கள் பலர். எப்படி?

    * ஒரு தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள், அவர்கள் மூவரையுமே சர்வதேச செஸ் சாம்பியன்களாக, பெரிய ஜீனியஸ்களாக உருவாக்குகிறார்கள். எப்படி?

    * சைக்கிளில் கிராமம் கிராமமாகச் சென்று, தொழில்நுட்பத்தின் உதவியுடன் மக்களுக்கு உதவிவருகிறார்கள் சில பெண்கள். எப்படி?

    * குப்பைத் தொட்டியில் எச்சில் இலைகளுக்காகச் சண்டையிடும் சிறுவர்களைப் பார்க்கிறார் ஒருவர், அதனால் துயரப்பட்டு அவர் உருவாக்கிய ஓர் அமைப்பு இன்றைக்கு லட்சக்கணக்கானோருக்குச் சாப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறது. எப்படி?

    * ஒரு புதுமையான கண்டுபிடிப்பு, ஐம்பது ஆண்டுகள் யாரும் சீண்டாமல் மூலையில் கிடந்தது. திடீரென்று அது சூப்பர் ஹிட் ஆனது. எப்படி?

    * மும்பையில் சில எளிய தொழிலாளிகள் பிரமாதமான நெட்வொர்க் அமைத்து ஊருக்கே சாப்பாடு போடுகிறார்கள். எப்படி?

    இப்படி இந்தப் புத்தகம்முழுவதும் சுவாரஸ்யமான கதைகள், செய்திகள், அத்தனையும் நிஜத்தில் நடந்தவை என்பதுதான் விசேஷம். இவை தருகிற வெற்றிப் பாடங்களைப் படிக்கப் படிக்க, நம்மாலும் ஜெயிக்கமுடியும் என்கிற உத்வேகம் வருவது நிச்சயம்.

    வெற்றி எட்டுத் திக்கிலும் இருக்கிறது, எல்லாருக்கும் கிடைக்கிறது, எடுத்துக்கொள்வது நம் சாமர்த்தியம்!

    என்றும் அன்புடன்,

    என். சொக்கன்

    உள்ளே...

    1. காற்று நாயகன்

    2. ஜீனியஸ்கள் பிறக்கிறார்களா, உருவாக்கப்படுகிறார்களா?

    3. உடலுக்குமட்டுமா பயிற்சி?

    4. பசுமைச் சிறைகள்

    5. எவரெஸ்டை ஜெயித்த மாணவர்

    6. ‘உலக’ வாத்தியார்

    7. கழுதைமேல் ஒரு நூலகம்

    8. கிரிக்கெட் வைத்தியம்

    9. சின்னஞ்சிறு நூலகங்கள்

    10. வீட்டுக்கு வீடு வாசப்படி வேணாம்!

    11. படித்தால்மட்டும் போதுமா?

    12. பொற்குவை, காசுகள்

    13. திடீர் கோடீஸ்வரி

    14. ‘பொடி’ட்டர்

    15. ஐம்பது விஷயங்கள்

    16. ஒரே வாரத்தில் வீடு கட்டமுடியுமா?

    17. ‘அம்மா’டி!

    18. அஞ்சு தந்திரம்

    19. அட்சய பாத்திரம்

    20. அதுவரை பொறு மனமே!

    21. பிஸ்கட்டாக இருங்கள்

    22. கேன்டூ

    23. கார்பே டீயெம்!

    24. ‘டப்பாவாலா’க்கள்

    25. தெய்வம் சைக்கிளிலும் வரும்

    *****************************

    1. காற்று நாயகன்

    *****************************

    மின்சாரம் இல்லாமல் ஒரு நாள், அவ்வளவு வேண்டாம், ஒரு மணி நேரத்தையாவது உங்களால் கற்பனை செய்துபார்க்கமுடியுமா?

    நமக்கெல்லாம், மின்சாரம் என்பது அத்தியாவசியத் தேவை. ஆனால் உலகெங்கும் பல கிராமங்களில், இன்னும் அது ஓர் ஆடம்பரமாகவே இருக்கிறது. மாலைச் சூரியன் மங்கிவிட்டபிறகு கும்மிருட்டிலேயே வாழப் பழகிவிட்ட ஏழைகள் பல கோடிப் பேர்.

    வில்லியம், அவர்களில் ஒருவன்.

    விவசாயத்தை நம்பிப் பிழைக்கும் குடும்பம் அவனுடையது. நாள்முழுக்க வயலில் வேலை செய்வார்கள், ராத்திரியானால் அரை வயிறு சாப்பிட்டுப் படுத்துவிடுவார்கள், மறுநாள் விடிந்ததும், மீண்டும் வேலை எலும்பை முறிக்கும், நடுவில் கொஞ்சூண்டு வறட்சி, பஞ்சம் வந்துவிட்டால் போச்சு, வீட்டில் எல்லோரும் பட்டினி கிடக்கவேண்டியதுதான்.

    இத்தனை சிரமத்துக்கு நடுவிலும், அவர்கள் எப்படியோ கஷ்டப்பட்டு வில்லியமைப் படிக்கவைத்தார்கள். பள்ளியில் அவனுடைய ஃபேவரிட் பாடம், அறிவியல்!

    2002ம் வருடம், வில்லியம் வாழ்ந்த மலாவி நாட்டில் கடும் பஞ்சம். மக்கள் சாப்பாட்டுக்கு, குடிநீருக்கு வழியில்லாமல் அங்கும் இங்கும் அலைமோதினார்கள், ஆயிரக்கணக்கானவர்கள் பசி, தாகம் தாங்காமலே உயிரை விட்டார்கள்.

    இந்த நிலைமையில், வில்லியமின் வீட்டாருக்கு வேறு வழி தெரியவில்லை, ‘தம்பி, இனிமேலும் உன்னைப் படிக்கவைக்க எங்களால முடியாது, நாளைலேர்ந்து நீ ஸ்கூலுக்குப் போகவேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்கள்.

    சிறுவன் வில்லியமுக்கு எதார்த்தம் புரிந்தது. ஆனாலும் தொடர்ந்து படிக்கவேண்டும் என்றுதான் விரும்பினான் அவன்.

    ‘உனக்குமுன்னாடி படிச்சவங்களுக்கே வேலையைக் காணோம், நீ படிச்சு என்னத்தைக் கிழிக்கப்போற? ஒழுங்கா ஏதாவது வேலை செஞ்சு அஞ்சோ பத்தோ சம்பாதிக்கிற வழியைப் பாரு’

    அந்த ஊரில், புகையிலை விவசாயம்தான் முக்கியத் தொழில். பதினாலு வயதுப் பையனுக்கு என்ன பெரிய வேலை கிடைத்துவிடும்?

    வில்லியம் தவிப்போடு ஊரைச் சுற்றிவந்தான். அவனுக்கு எப்படியாவது படிப்பைத் தொடரவேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் ஸ்கூல் ஃபீஸ், வருடத்துக்குச் சுமார் நான்காயிரம் ரூபாய், அவ்வளவு காசுக்கு வில்லியம் எங்கே போவான்?

    சரி, பள்ளிக்கூடம்தான் இல்லை, ஊரில் ஒரு லைப்ரரி இருக்கிறதே, அங்கே உள்ள புத்தகங்களைப் படித்துக் கொஞ்சமாவது அறிவை வளர்த்துக்கொள்ளலாமே!

    வில்லியம் தினமும் நூலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தான். அங்கே பலதரப்பட்ட புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படிக்கத் தொடங்கினான்.

    அப்போதுதான், ‘Using Energy’ என்ற புத்தகம் அவன் கண்ணில் பட்டது. அதில் பலதரப்பட்ட ஆற்றல் சக்திகளைப்பற்றி விரிவாக விளக்கப்பட்டிருந்தது.

    வில்லியம் யோசித்தான், ‘நம்ம ஊர்லதான் ஏகப்பட்ட காத்து வீசுதே, இதை வெச்சு மின்சாரம் தயாரிக்கலாம்ன்னு இந்த புக்ல போட்டிருக்காங்களே, நாம இதை முயற்சி செஞ்சு பார்த்தா என்ன?’

    ஒரு பட்டிக்காட்டுப் பையன், இன்னும் மீசைகூட அரும்பவில்லை, படிப்பைப் பாதியில் நிறுத்தியவன், ‘நான் சொந்தமாகக் காற்றாலை அமைக்கப்போகிறேன்’ என்றெல்லாம் பேச ஆரம்பித்தால் என்ன ஆகும்?

    ஊரில் எல்லோரும் வில்லியமுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று முடிவுகட்டினார்கள், ‘காற்றிலிருந்து மின்சாரம் எடுக்கமுடியுமா? சும்மா கேனத்தனமா பேசிகிட்டுத் திரியாதே’ என்று அவனைக் கேலி செய்தார்கள்.

    யார் என்ன பேசினாலும், வில்லியமின் நம்பிக்கைமட்டும் குறையவில்லை. அந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறபடி ஒரு காற்றாலையை அமைத்துவிடவேண்டும் என்று தீர்மானித்தான், உடனடியாக அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டான்.

    ஆனால், காற்றாலை அமைப்பது என்றால் சாதாரண விஷயமா? அதற்கு ஏகப்பட்ட பொருள்கள் தேவைப்படுமே, அவ்வளவையும் வாங்குவதற்கு வில்லியமிடம் ஏது காசு?

    வில்லியம் இதை நினைத்துத் தயங்கவில்லை, அப்போதைக்கு அக்கம்பக்கத்தில் என்னென்ன பொருள்கள் கிடைக்கிறது என்று பார்த்தான், அதை வைத்து வேலையை ஆரம்பித்துவிட்டான்.

    இப்படிக் காற்றாலைக்கு வில்லியம் பயன்படுத்திய ‘ஸ்பேர் பார்ட்ஸ்’களில் சில: உடைந்த சைக்கிள், துருப்பிடித்த இரும்பு, டிராக்டர் உதிரிபாகங்கள், மரக் கட்டைகள், இன்னும் சில துண்டு துக்கடா பொருள்கள். இந்தக் காயலான் கடை சமாசாரங்களை வைத்துக்கொண்டு எப்படியோ ஒரு சின்ன காற்றாலையை உருவாக்கி மின்சார இணைப்புகளும் கொடுத்துவிட்டான் அவன்.

    ஆனால், வில்லியமின் காற்றாலையைப் பார்த்த யாரும், அது மின்சாரம் தரும் என்று நம்பவில்லை, பையன் ஏதோ பெரிய சைஸ் விளையாட்டுப் பொம்மையைச் செய்துகொண்டிருக்கிறான் என்றுதான் நினைத்தார்கள், அவனைத் தொடர்ந்து கேலி செய்தார்கள்.

    கடைசியாக, அவன் தன்னுடைய காற்றாலையை இயக்கப்போகும் நாள் வந்தது. என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக

    Enjoying the preview?
    Page 1 of 1