Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rudhra Veenai - Part 1
Rudhra Veenai - Part 1
Rudhra Veenai - Part 1
Ebook391 pages4 hours

Rudhra Veenai - Part 1

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100700231
Rudhra Veenai - Part 1

Read more from Indira Soundarajan

Related to Rudhra Veenai - Part 1

Related ebooks

Related categories

Reviews for Rudhra Veenai - Part 1

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rudhra Veenai - Part 1 - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    ருத்ர வீணை - பாகம் 1

    Rudhra Veenai - Part 1

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    ***

    1

    அன்று

    அன்று என்றால் இன்றிலிருந்து மிகச் சரியாக 302 ஆண்டுகளுக்கு முன்னால் சென்று விடவேண்டும்.

    அன்றைய இந்தியாவை வடக்கில் மொகலாயர்களும் தெற்கில் மங்கம்மாள், சாந்தாஜி, கிழவன் சேதுபதி என்கிற மூன்று பேரும் பட்டா போட்டுக்கொள்ளாத குறையாக ஆண்டு கொண்டிருந்த காலம் அது. அதாவது கி.பி.1700.

    குறிப்பாக தஞ்சையில் வீர சிவாஜியின் சகோதரன் சாந்தாஜி ராஷ்ட்ரச் சிறப்புடைய ஆட்சியை நிறுவி சோழநாட்டுக்குள் மஹாராஷ்டிட்ரர்களைக் குடியேற்றி தன் பிடிக்குள் வைத்திருந்தான்.

    மதுரையும் திருச்சியும் மங்கம்மாவின் பிடியில் நாயக்கர் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்க-கடலோரமாக ராமநாதபுரத்தில் மட்டும் தமிழனாகிய சேதுபதி மறவன் ஆண்டுகொண்டிருந்தான்.

    கூட்டிக்கழித்துப் பார்த்தால் தென்பகுதியில் உருது, தெலுங்கு, தமிழ், மராத்தி என்கிற மொழிகளில் தமிழ் சற்றுப் பின் தங்கியிருக்க-மற்ற மூன்றும்தான் முன்னிலை வகிக்கிறது.

    காலகட்டம் அப்படி!

    இதில் தஞ்சையில் மட்டும் ஒரு தனி உணர்ச்சி பரவிக்கிடந்தது.

    மஹாராஷ்ட்ராவில் மொகலாயர்களுக்கு எதிராக வீரசிவாஜி ஆண்டு கொண்டிருந்தான். பாரதம் முழுவதையும் வசப்படுத்தி பாரதத்தை இந்து ராஷ்ட்ர பூமியாக்க வேண்டும் என்பது சிவாஜியின் கனவு.

    டெல்லியில் ஒளரங்கசீப் ஒரு மகத்தான ஆட்சியை வழங்கிக் கொண்டிருந்தார். ஒளரங்கசீப் பற்றி பிழையான வரலாற்றுப் பார்வையைத்தான் பலர்கொண்டிருக்கிறார்கள்.

    'பெற்ற தந்தையைச் சிறை வைத்தவன்'-

    'இசைச் சிறப்பு அறியாதவன்'-

    'மிகப்பெரிய கருமி' என்றெல்லாம் ஒளரங்கசீப் பற்றி கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால், அதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.

    ஒளரங்கசீப் மிகத் திட்டமிட்ட ஒரு நல்லாட்சியை நடத்திக் கொண்டிருந்ததாகவே தோன்றுகிறது. இதனால், சிவாஜியால் இந்து ராஷ்ட்ரத்தைப் பெருமளவில் மக்கள் துணையுடன் அன்று கொண்டு வர இயலவில்லை.

    இருந்த போதிலும் தஞ்சை மட்டும் அவன் பிடிக்கு வந்தது. அதையும் சிவாஜியின் சிற்றன்னை மகன் சாந்தாஜியிடம் ஒப்படைத்து ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தான்.

    இப்படியாக தஞ்சைக்கு அதாவது சோழநாட்டுக்கு நான்குபுறத்திலும் நான்கு விதமான கலாசாரங்கள் பரவிக்கிடந்தன. அதேசமயம் ஒருவித

    இந்துத் துவ மனப்பான்மை பலமாகவும் முகமதியர்கள்மேல் ஒரு வித கோபமும்கூட இருந்ததாகக் கூறலாம்.

    இப்படி ஒரு காலகட்டத்தில் கி.பி.1700-ல் அதிலும் ஆடிமாதத்தில் அதே சமயம் மார்கழியில் வரும் திருவாதிரை நாளை மனதில்கொண்டு ஒருவர் தஞ்சையைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு பக்கரி போல வலம் வந்து கொண்டிருந்தார்.

    அறுபது வயது மதிக்கும்படியான தோற்றம். நாடோடியாய் அலைந்து திரிந்ததால் கறுத்துவிட்ட தேகம். தலையில் அழுக்குத் துணியால் அமைந்த பாகை. தாடையிலோ குறுந்தாடி. ஆனால் கண்களில் படு தீர்க்கம் அவரிடம்…

    அடுப்பு அன்றைய இஸ்லாமிய யாத்ரீகர்கள் தரிக்கும் பருத்தியாலான மைஜாபா-குர்தாவாகத்தான் இருந்தது.

    "நவாப் ஜான் பாபா'என்னும் பெயர்கொண்ட அவரது ஒரு தோளில் அவரது துணிப்பை தொங்கியது. மறுதோளில் ஒரு கன்னிப்பெண்ணை ஆரோகணித்திருப்பது போல வீணை ஒன்றை சுமந்து கொண்டிருந்தார்.

    வித்தியாசமான வீணை அது! சாதாரணமாக வீணைகள் பிரதானமாய் பெரிய குடம் ஒன்றை முகமாகவும் அதிலிருந்து நீளும் தட்டையான தந்திப் பாதையுடன் முடிவில் சிறிய ஒரு குடம் கொண்டும் அங்கே ஸ்ருதியை கூட்டிக் குறைக்கத் தோதாக விஜ்ஜைகளுமாய்த்தானிருக்கும்.

    ஆனால் பாபாவிடம் உள்ள வீணை அவ்வாறு இல்லாமல் மிக வித்தியாசமாக இருந்தது. தேர்ந்த இசை விற்பன்னர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

    அது 'ருத்ர வீணை' என்று!

    தடித்த உறுதியான தந்திக்கம்பி. அதன் மீட்சியின் போது உருவாகும் நாதத்தை ஒரு பாத்திரத்தில் வாங்கிக்கொள்வது போல் இருபுறத்திலும் அமைந்த குடங்கள் என்று ருத்ரவீணை மட்டும் எப்பொழுதும் தனித்துவத்துடன் இருக்கும்.

    எடுத்து மடியில் வைத்து வாசித்து இசையெழுப்ப நிச்சயமாக பேராண்மை வேண்டும்.

    இத்தனைக்கும் சோழநாடு இசையில் மேன்மையான நாடு. நீடாமங்கலத்தில் வாய்ப்பாட்டு பாடுபவர்கள் அனேகர். விட்டால் விடிய விடிய ஆலாபனையிலேயே ஆளைக் கட்டிப்போட்டு விடுவார்கள்.

    திருவாரூர் பக்கமும் திருக்குவளைப் பக்கமும் போனால் நாதஸ்வரச் சக்கரவர்த்தியைப் பார்க்கலாம்.

    தஞ்சைக்குள் எல்லாம் கலந்த கூட்டம் ஒன்று இருந்தது. சாந்தாஜியும் தன் அவையில் இசைக் கலைஞர்களுக்கு மிக முக்கியத்துவமளித்திருந்தான்.

    பெரிய கோயிலில் வாய்ப்பாட்டும் நாட்டியமும் நடக்காத நாளில்லை எனலாம். போதாக்குறைக்கு ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகம் என்கிற வயல்வெளிக் கலைகளும் தழைத்துக்கிடந்தன.

    'தளும்பத் தளும்ப தண்ணீர் ஓடும் ஒர் ஆறு போதும்… அது ஆயிரம் கலைகளை தன் முதுகில் கட்டி இழுத்து வந்து கரையில் சேர்த்துவிடும்' என்பார்கள்.

    அது சத்தியமான உண்மை என்பது போல் திகழ்ந்த தஞ்சைக்கே அந்த ருத்தவீணை மட்டும் சற்று புதிய விஷயம்.

    அதைக் கற்பிக்கவோ, இல்லை அதை வைத்து வாசிக்கவோ யாரும் தயாராகவில்லை.

    ஆசைப்பட்ட சிலரும்சுட அதன் பின்புலம் தெரிந்து தயங்கினார்கள்.

    அந்த வீணையும் அன்னை பராசக்தி திருச்சிலையும் ஒன்றாம்!

    அதை பயபக்தியோடுதான் தொடவேண்டுமாம். பயன்படுத்த வேண்டுமாம். தவறி கை,கால் மேல் பட்டாலும் தோஷமாம். அது அந்த உண்மையை உதைத்த பாவத்தைத் தந்துவிடும். எல்லாவற்றிக்கும் மேலாக அதை பூஜையறையில் பூசனைப் பொருட்களோடுதான் வைத்துப் பராமரிக்க வேண்டும். ஒரு மூலையில் கிடக்க அது சாதாரண இசைக்கருவி கிடையாது என்றெல்லாம் சொல்லப்பட்டதால், எதற்கு வம்பு என்று யாரும் ருத்ரவீணையை வைத்துக் கொள்ளத் துணியவில்லை.

    அவ்வளவு ஏன்… தஞ்சை மேலவீதியில் ஜம்புநாதம் என்று ஒரு இசைக்கருவி தயாரிப்பவன் இருந்தான். வீணை செய்வதில் சமர்த்தன் இவன். வீணைக்கு என்று ஒரு மரம் இருக்கிறது. அதைத் தேடிப்பிடித்து அதில் தேவையான அளவு தண்டுப்பாகத்தை வெட்டி எடுத்துவந்து அதைக் குடைந்து, பின் உலரப்போட்டு ஒரு வீணை செய்ய எப்படியும் ஒரு மாதமாகும் இவனுக்கு.

    ஆனால் லட்சம் பொன் தந்தாலும் ருத்ரவீணையை மட்டும் தான் செய்து தரமுடியாது என்பான்.

    காரணம், 'அதைப் பழுதின்றிச் செய்ய பரமன் அருள்வேண்டும். சிறு பிழை இடையில் நிகழ்ந்தாலும் உயிர் போய் விடும்' என்றெல்லாம் நம்பிக்கைகள் நிலவிக் கொண்டிருந்தன.

    எனவே ருத்ரவீணை என்பதே ஒரு அரிய காட்சிப் பொருள் போன்றதாக இருந்துவிட்ட நிலையில் தான் பாபா அத்துடன் திருவாதிரை நாளைக் குறிவைத்து ஆடிக்கருக்கலில் தஞ்சையைக் சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றித் திரிந்தபடி இருந்தார்.

    இப்படிச் சொல்வதுகூடத் தவறு.

    அவர் புராணச் சிறப்புடைய தோடிபுரம் என்கிற ஊர் எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டிருந்தார் என்றால் அது சரியாக இருக்கும்.

    அன்று அவர் இருந்த ஊரின் பெயர் செம்பொன் களரி. சிறிய கிராமம்தான். ஐம்பது குடிசைகள் இருந்தால் அதிகம்…

    அதில் வாழ்பவர்களும வயல்வெளி வேளாண்குடி மக்கள்.

    வயல்களில் எல்லாம் நல்ல நெல் விளைச்சல் என்று சொல்ல முடியாது. பாதி விளைந்து மறுபாதியும் மழை நீருக்காகக் காத்துக்கொண்டிருந்தது.

    ஆடி மாதத்தில் கன்னிப்பெண் சதிராடிக்கொண்டு வருவது போல வரவேண்டிய காவிரியில்கூட நீரில்லை.

    காலம் சில சமயங்களில் கண்ணாமூச்சி விளையாடுவது உண்டு. அப்பொழுது அது மழையை ஒளித்து வைத்துவிட்டு 'கண்டுபிடி பார்க்கலாம்' என்ற ஜனங்களைத் தேடித்திரிய விட்டுக் கொண்டிருப்பது போல தோன்றியது.

    நடந்தே பயணிக்கும் பாபாவை தாகம் வாட்டிற்று. உச்சிச் சூரியனை அண்ணாந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்தக் கிராமத்து குடிசை ஒன்றை நோக்கி நடந்தார்.

    கட்டிலில் ஒரு முதியவர் நோயாளி போல் படுத்திருக்க, அந்த வீட்டுப் பெண் வெளியே வைக்கோல் கொட்டாரத்தை ஒட்டி அடுப்பெரித்து சோறு பொங்கிக் கொண்டிருந்தாள்.

    பாபா வரவும்-ஒரு பார்வை.

    என்ன வேணும்?

    ஒரு வாய் தண்ணீர்…!

    இருங்க. தாரேன்…! என்றவளாய் உள்ளே ஓடியவள் அலறிக்கொண்டு ஓடிவந்தாள். பாபா அவளை பதிலுக்கு அதிர்வோடு பார்த்தார். அவளோ நடுங்கியபடி குடிசைக்குள் கையைக் காட்ட உள்ளே தூளி ஒன்றில் குழந்தை ஒன்று தூங்கிக்கொண்டிருந்தது. அதற்குக் கீழே எங்கிருத்தோ வந்திருந்த நல்லபாம்பு ஒன்று படம் விரித்தபடி!

    அவளுக்குக் கண்டங்கழுத்தில் குழிவிழுந்து வியர்வை பெருக ஆரம்பித்தது. அச்சத்தில் உடம்பெல்லாம் நடுங்கியது. பேசக்கூட வாய் வரவில்லை. பாபாவுக்கும் ஒரு வினாடி சுருக்கென்றுதான் இருந்தது. இருந்தாலும் சுதாரித்தவராகத் தன் தோள்மேல் கிடந்த வீணைணை எடுத்து மடிமேல் வைத்துக் கொண்டு நிதானமாக வாசிக்க் ஆரம்பித்தார்.

    அந்தப் பெண்ணுக்கு எரிச்சலாக வந்தது.

    'ஒரு கம்பையோ, கழியையோ எடுத்துக்கொண்டு சென்று அதை அடித்து தன் குழந்தையை மீட்டுத்தருவார் இவர்' என்று அவள் நினைத்திருக்க வேண்டும். நேர்மாறாக வீணையை வாசிக்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும்? ஆனால், பெருகி வழிய ஆரம்பித்த அந்த வீணை இசை அவளை வாயடைக்க வைத்தது. அவள் நின்று கொண்டிருந்த தலைப்பரப்பிலும் மெல்லிய நடுக்கம் ஒன்று உருவாகிப் பரவுவது போல ஒரு பிரமை அவளுக்கு.

    உள்ளே குழந்தையை நோக்கியபடி படம் எடுத்திருந்த அந்த நாகமும் வீணை இசையால் கவரப்பட்டது போல திரும்பியது. விறுவிறுவென்று அவரை நோக்கி வர ஆரம்பித்தது.

    வந்து அவர் முன் படமெடுத்து நின்றது.

    அவரும் சட்டென்று வாசிப்பை நிறுத்தினார். அப்படியே கைகளைக் கூப்பினார். அதுவும் 'சரி' நான் வருகிறேன்'என்பது போல திரும்பி ஊர்ந்து சென்று மறைந்தும் போயிற்று!

    அந்தப் பெண்ணின் கண்களில் ஏகாண்ட விரிவு. ஓடிப்போய் குழந்தையை அள்ளி மார்பில் போட்டுக்கொண்டு திரும்பிவந்தவள் கேட்டாள்.

    எப்படிங்க… எப்படிங்க சாமி அந்தப் பாம்பு திரும்பி வந்துச்சு? நீங்க வாசிச்சதாலையா?

    அவரிடம் ஒரு அனந்தமான புன்னகை.

    ஆம் தாயே…! புன்னாகவராளியை இந்த வீணையைக் கொண்டு இசைத்தேன். அது அந்த நாகத்தை மயக்கி திசை திருப்பிவிட்டது.

    புன்னாகவராளியா…? ஆமாம் நீங்க யாரு?

    "நான் ஒரு நாடோடி தாயே…?'

    பேரு…?

    நவாப் ஜான்… ஆனால் என் சொந்த ஊரில் நவாப் ஜான் பாபா என்பார்கள்.

    பாபா…!

    அப்படியே நீ கூப்பிடு… கொஞ்சம் பருகத் தண்ணீர் கேட்டேனே…

    சோறே போடுறேன் சாமி. என் குழந்தையைக் காப்பாத்துன மகாத்மாவாச்சே நீங்க…

    அவள் ஆவலாக தண்ணீர் கொண்டுவர ஓடினாள். குழந்தையும் மண்ணில் தவழத் தொடங்கியது. அவரைப் பார்த்துச் சிரித்தது. அவர் முகத்தில் ஒரு வித நிம்மதிப் புன்னகை!

    இன்று

    தோடிபுரம்.

    காவிரியிடம் குதூகலமான பாய்ச்சல்!

    நல்லவேளையாக கர்நாடாகவில் நிறைய மழை பெய்து கண்ணம்பாடி அணையும் நிரம்பி வழிந்ததால் தண்ணீர்ச் சண்டைக்கு நடுவிலும் நிறைய தண்ணீர் போகட்டும் என்று அனுப்பி வைத்திருந்தார்கள்.

    அதனால் இக்கரை… அக்கரை இரண்டும் திமிலோகப் பட்டது. சரியான செங்கழுநீர். புதிய மழை நீரே இப்படித்தான். வழியில் தழைத்தும் போகட்டும் என்று பிழைத்தும் வளர்ந்திருந்த தாழைச்செடிகளும் நீர்முள்ளிகளும் கூட்டம் கூட்டமாய் ஏராளமாய் வெள்ளத்தில் மிதந்து வந்து கொண்டிருந்தன.

    தோடிபுரம் படித்துறையில்ன பாதிப்பாகம் வரை காவிரித் தண்ணீர். அந்தப் படி ஒன்றின் மேல் அமர்ந்தபடி துவைக்கக் கொண்டுவந்திருந்த அழுக்குத் துணிகளுக்கு சோப்பைப் போட்டுக் கொண்டிருந்தாள் கோமதிப்பாட்டி.

    எழுபது வயது மொட்டைப்பாட்டி. காவிரியில் மடிசார் உடுத்தி மொட்டையடித்துக்கொண்டு அது தெரியாதபடி முடடாக்கும் போட்டிருந்தாள்.

    இத்தனை வயசுக்கு எதற்கு ரவிக்கை என்று அதை உதறிவிட்ட அவளது கோலம் இன்றைய நாளைக்கு மிகப் புதியது. இன்று யார் இப்படி புருஷன் போனால் காவிக்குள் போய் புகுந்து கொள்கிறார்கள்!

    ஆனாலும் கோமதி அந்தக் காலத்து மனுஷி.

    எனவே அந்தக் கோலத்தை ஒரு திருக்கோலம் போலவே நினைத்துவிட்டாள். அவளது பேத்தி அலமு படித்துறையில் அட்டூழியம் பண்ணிக்கொண்டிருந்தாள்.

    தோடிபுரம் ஹைஸ்கூலில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். இரட்டை ஜடை, பாவாடை தாவணி என்று பார்க்க பரம திவ்யமாய் இருப்பாள். நல்ல நெய் மணக்கும் பிராம்மணச்சாப்பாடு. அன்றாடம் கீரை உண்டு. எனவே உடம்பு வனப்புக்கு கேட்கவேண்டுமா என்ன?

    தளதளவென்று பதிமூணு வயசில் இருபது வயது உடம்போடு இருந்தாள். ஆனாலும் குறும்பு-விளையாட்டு இவைகளில் ஏழெட்டு வயசுப் பெண்ணாகத்தான் இருந்தாள்.

    இல்லாவிட்டால் அந்த வெள்ள நீரில் பொதேல் பொதேல் என்று குதிப்பாளா என்ன?

    சண்டாளி… செத்த சும்மா இரேன். பொம்மனாட்டியா லட்சணமா உக்காந்து குளிக்காம எதுக்கு இப்படி விடலைப் பசங்க மாதிரி குதிக்கறே…? என்று கத்தல் வேறு கோமதிப் பாட்டியிடம்…

    பக்கத்திலேயே அக்ரஹாரத்து மாமி ஒருத்தியும் துணி மூட்டையை அவிழ்த்துக் கொண்டிருந்தாள்.

    "நன்னா சொல்லுங்கோ… அலமு வயசுக்கு வந்துட்ட ஒரு பொண்ணாகவே நடந்துக்கறதில்லை. அப்பா அம்மா இருந்து வளத்திருந்தா இப்படி வளந்திருப்பாளான்னு நாளைக்கு உங்களை யாரும் சொல்லிடக்கூடா தோல்லியோ..?'

    அதே கவலைதான் எனக்கும்… அவர் ரெண்டு பேரும் ட்ரெய்னிங்னு தென்னாப்பிரிக்காவுக்குப் போய்ட்டா. இங்க இது என்னைக் பாடாய் படுத்தறது.

    கோமதிப்பாட்டியின் அந்தக் கோவத்தை அலமு லட்சியமே செய்யவில்லை.

    பாட்டி, இங்கே பாரேன்… என்று அவளை கைச்சொடக்குப் போட்டு அழைத்து வாயை இருகையாலும் விகாரமாய் பிடித்து இழுத்துக்காட்டி 'பே'என்று பரிகாசம் செய்தாள்.

    கோமதிப்பாட்டியிடமும் கோவம் சிண்டைப் பிய்த்தது. கைவசம் துவைபட்டுக் கொண்டிருந்தது அவளது ரவிக்கை. அதை எடுத்து அப்படியே வீசினாள். அது பறந்து வந்த வேகம் பார்த்து அலமு மளுக்கென்று விலகிக்கொள்ள, அது அவளைக் கடந்து பறந்து சென்று அப்பொழுதுதான் படித்துறைபடியில் காலை வைத்திருந்த மைதிலியின் முகத்தில் பட்டு மூடி அவளுக்கு ஒரு தினுசான வரவேற்பைக்கொடுத்தது.

    அய்யோடா… அம்மாடி மன்னுச்சுடுடிம்மா. நீ வரதை பாக்கலே… என்று கோமதிப்பாட்டி உடனே கத்த, பக்கத்து மாமியும்-

    யாரு மைதிலியா… . வா. என்று வரவேற்க சரியாக இருந்தது. மைதிலி அந்த ஈர ரவிக்கையை கோமதிப்பாட்டியை நெருங்கி நீட்டியவளாகச் சிரித்தாள். இடுப்பில் பித்தளைக்குடம்!

    வா மைதிலி…! என்ன ஆத்துக்குத் தண்ணி எடுத்துண்டு போக வந்தியா?

    பாட்டியின் கேள்விக்கு அவள் தலை ஆமோதிப்பாக ஆடியது.

    கொண்டா… நானே உள்ளபோய் நல்ல சுத்த ஜலமா பிடிச்சுத்தரேன்… என்றபடி பாட்டியே குடத்தை வாங்கிக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கி நடந்து ஒரு இடத்தில் தண்ணீரை மொண்டுகொண்டு வந்து தந்தாள்.

    அதைப் பெற்றுக்கொண்டவளும் 'இந்த ஜலம் அந்த பிள்ளையாருக்கு.' என்கிற மாதிரி கரையோரமாய் வன்னிமரத்தடியில் இருந்த பிள்ளையாரை நோக்கி கையைக் காட்ட பாட்டிக்குப் புரிந்தது.

    என்ன… பிள்ளையாருக்கு அபிஷேகமா. உம்… போய் பண்ணு. அவர்தான் வாய் பேசமுடியாத உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை அனுப்பி வைக்கணும்.

    என்று பாட்டி சொல்லவும் மைதிலி என்னும் அந்த இளம்பெண்ணின் முகத்தில் சன்னமாய் ஒரு சலனம்.

    இருந்தும் அதை உடனே போக்கிக்கொண்டு பிள்ளையாரை நோக்கி நடந்தாள்.

    அவரை நெருங்கி அப்படியே ஜலத்தை அவர் மேல் கவிழ்த்துவிட்டு சேலைமுந்தானையில் அடக்கமாய் வைத்து கொண்டு வந்திருந்த செம்பருத்தி பூவில் இரண்டை எடுத்து பிள்ளையாரின் தலைமேல் வைத்தாள்.

    பார்த்துக்கொண்டேயிருந்த கோமதிப்பாட்டியிடம் இருந்து உஷ்ணமாய் பெருமூச்சு வெளிப்பட்டது. அப்படியே ஆதங்கமும்…

    நாள் தவறினாலும் இவ இந்த பிள்ளையாருக்கு அபிஷேகம் பண்ணத் தவர்றது கிடையாது. ஆனா, அந்தப் பகவான்தான் கண்ணைத் திறக்கமாட்டேங்கறான்…

    என்ன பண்றது… வாய் பேசமுடியாத ஊமையா போய்ட்டா. எந்த ஆம்பளை பெரிய மனசு பண்ணி இவளைப் பண்ணிக்கப்போறானோ… பார்க்க ரதியாட்டம் இருக்கா…!

    இது பக்கத்து மாமி. அவர்கள் ஆதங்கித்து முடிக்க, திரும்பவும் குடத்துடன் படித்துறைக்கு வந்து குடத்தைக் கொடுத்து நீரை மொண்டு கொண்டாள்.

    அந்த வாண்டு அலமு அவள் படி ஏறும்போது பார்த்துச் சிரித்தது. அப்படியே… சீக்கிரமே விவாகப் பிராப்தி ரஸ்து மைதிலி… என்று பெரிய முனிவரின் தோரணையில் ஆசீர்வதித்து கையை ஆட்டியது.

    மைதிலி அதை ரசித்தாள். செல்லமாய் கன்னத்தை வருடியும் விட்டாள்.

    தொடர்ந்து நடந்தாள்.

    சில அடிதான் போட்டிருப்பாள்… எதிரில் சிலர் தாறுமாறாக ஓடி வந்தபடி இருந்தனர்.

    ஒருவன் கத்திக்கொண்டே முன்னால் ஓடிவந்து கொண்டிருந்தான்.

    நவுந்து ஓடுங்க… கோவில் மாடு மிரண்டு முட்ட வந்துக்கிட்டிருக்குது…

    அவன் அலறலுக்கு ஏற்ப நல்ல கறுப்பு நிறக் காளை ஒன்று கண்ணில் வெறியோடு ஓடி வந்தபடி இருந்தது.

    மைதிலி அதைப் பார்த்து விக்கித்துப்போக அது அவளையே நோக்கி வருகிற மாதிரிகூட இருந்தது.

    ஒருபுறம் மாட்டின் பாய்ச்சல்.

    எதிர்திசையில் ஒரு டி.வி.எஸ்-50 வாகனத்தின் மேல் தோடிபுரம் பிரசிடென்ட்டின் மகன் சாமிநாதனும் மைதிலியின் அண்ணன் சங்கரனும் ஜோடியாக வந்து கொண்டிருந்தனர்.

    அவர்களில் சாமிநாதன் மாட்டைப் பார்த்துவிட்டு பிரேக்போட, மாடு எதிர்பார்த்த மாதிரியே மைதிலியை நோக்கிதான் திரும்பியது.

    காலால் அது நிலத்தைக் கீறிய விதமும் மூச்சுக்காற்றின் அரவமும் கண் முழியின் வெறிப்பும் அவளை மிரட்டாய் மிரட்ட அவளும் இடுப்புக் குடத்தைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் காதைப் பொத்திக்கொண்டாள்.

    நல்லவேளை…

    ஒரு தடுப்புச்சுவர் மாதிரி நடுவில் சரேலென்று புகுந்து நிமிர்ந்தான் சாமிநாதன்.

    மிரட்சியின் உச்சமாய் வெறித்த அந்தக் காளையின் கொம்பையும் எகிறிப்பிடித்தான்.

    சினிமாவில் வரும் ஹீரோக்கள் காட்டும் அதே சாகசம். மைதிலி ஓடிப்போய் அண்ணன் சங்கரனை ஒட்டி நின்றுகொள்ள-படித்துறையே நின்று அந்தக் காட்சியை வேடிக்கை பார்த்தது. அதில் பல் விளக்கியபடி நிற்கும் ஆண்களும் அடக்கம்.

    மாடு சாமிநாதன் பிடியில் ஒரு வழியாக மடங்கினாலும் ஒரு உதறு உதறி அவனைத் தூக்கி எறிந்துவிட்டுத் திரும்பி ஓடியது…

    சங்கரன் கீழே விழுந்த சாமிநாதனை சமீபத்துத் தொட்டுத் தூக்கினான்.

    மைதிலி அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள்.

    சாமிநாதா…! உனக்கு ஆனாலும் தைரியம்டா…படித்துறையில் இருந்து கோமதிப்பாட்டிதான் முதல் பாராட்டுக் குரல் கொடுத்தாள்.

    டேய் சாமி… அடிகிடி பட்டுடுத்தாடா…?

    சங்கரன் கனிவோடு விசாரிக்க, அந்தச் சூழலில் ஒருவன் மட்டும் லேசாக ஒரு மாதிரி சிரித்தான்.

    சாமிநாதனும் அவன் சிரிப்பதைப் பார்த்துவிட்டான். கைகால்களில் ஒட்டியிருக்கும் மண்ணைத் தட்டிலிட்டபடியே அவனை நெருங்கினான்.

    Enjoying the preview?
    Page 1 of 1