En Varna Nila
()
About this ebook
Read more from Kanchana Jeyathilagar
Kanavin Karaigalil Rating: 5 out of 5 stars5/5Ithu Enna Maayam..? Rating: 4 out of 5 stars4/5En Yavana Rani Rating: 5 out of 5 stars5/5Adhu Thunbamaana Inbamaanathu! Rating: 4 out of 5 stars4/5Thedatha Kaadhal! Rating: 4 out of 5 stars4/5Vensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Sorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Aagayathil Oru Theevu! Rating: 5 out of 5 stars5/5Nithamum Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Idhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Kaadhalin Kaaladi Satham Rating: 5 out of 5 stars5/5Mazhai Pol Nee Rating: 3 out of 5 stars3/5Ninaitha Manam Marakkaathu! Rating: 2 out of 5 stars2/5Manasellam Malligai Rating: 0 out of 5 stars0 ratingsBrindhavanamum Premakumaranum Rating: 5 out of 5 stars5/5Vazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5Kanniley Neer Etharkku Rating: 0 out of 5 stars0 ratingsMullai Meeriya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Pon Maan Rating: 0 out of 5 stars0 ratingsKarumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Paartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5Theeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Pagal Natchathirangal Rating: 5 out of 5 stars5/5Pallaviye Saranam! Rating: 5 out of 5 stars5/5Mullai Panthal Rating: 5 out of 5 stars5/5Manakadhavai Thiranthu Vidu Rating: 5 out of 5 stars5/5Kaandharva Alaigal Rating: 4 out of 5 stars4/5Inbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Mannikka Vendugiren Rating: 5 out of 5 stars5/5Allikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5
Related to En Varna Nila
Related ebooks
Malarndha Malarchudare! Rating: 0 out of 5 stars0 ratingsSirungaara Naatham Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Kalantha Geetham! Rating: 0 out of 5 stars0 ratingsPon Maalai Mayakkam Rating: 4 out of 5 stars4/5Enathu Kavithai Neethan... Rating: 0 out of 5 stars0 ratingsNee Andha Nilavu! Rating: 0 out of 5 stars0 ratingsRagasiya Raagamondru… Rating: 5 out of 5 stars5/5En Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Ezhuthi Vaithai Ennai! Rating: 0 out of 5 stars0 ratingsKannaley Pesi Pesi... Rating: 0 out of 5 stars0 ratingsMaayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalanthidavey Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsDevi Thavam Rating: 0 out of 5 stars0 ratingsNee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Kannadi Thirai Rating: 4 out of 5 stars4/5Layam Thedum Thaalangal Rating: 5 out of 5 stars5/5Vazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5Uyir Chedi Rating: 5 out of 5 stars5/5Pesi Vidu Maname Pesividu…! Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsUllam Irandum Ondru Rating: 0 out of 5 stars0 ratingsNinnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Valarpirai Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsNila Nesam Rating: 5 out of 5 stars5/5Paartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5Poo Malarntha Pothu...! Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Thoongum Neram! Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vamsam Neeyo! Rating: 1 out of 5 stars1/5
Reviews for En Varna Nila
0 ratings0 reviews
Book preview
En Varna Nila - Kanchana Jeyathilagar
http://www.pustaka.co.in
என் வர்ண நிலா
En Varna Nila
Author:
காஞ்சனா ஜெயதிலகர்
Kanchana Jayathilakar
For more books
http://www.pustaka.co.in/home/author/kanchana-jayathilakar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
1
‘செண்டரல்’ ரயில் நிலைய பயணிகள் அறையில் அமர்ந்திருந்தவள் தன்னைச் சுற்றி சுவாரஸ்யமாய் நோட்டமிட்டாள்.
அக்கால சத்திரம் என்பது இப்படித்தான் இருந்திருக்கும்… பல்வேறு மொழி, இன மக்கள் வெகு இயல்பாய் ‘சளசள’த்து சுற்றிவந்த நூதனக் காட்சி.
மதுரையிலிருந்து அன்று காலைதான் அவர்கள் சென்னை வந்து இறங்கியிருந்தனர்.
இன்னும் நான்கு மணி நேரத்தில் ‘ராஜ்தானி எக்ஸ்பிரஸ்’ அவர்களை வடக்கே சுமந்து செல்லும்.
வர்ணா அதிகம் பயணம் செய்ய நேர்ந்ததில்லை.
மதுரையின் சுற்றப்புற கிராமங்களுக்கு அவ்வப்போது கல்யாணம் காட்சி காண போய் வருவதுண்டு. அதுவும் கூட வெகு அபூர்வம்.
பொண்டாட்டி, புருஷன் பிரிந்து கிடக்கும் குடும்பத்தில் மழுப்பலில்லாது சொன்னால் - ஒடிப்போன அம்மாவின் பெண்ணான அவளுக்கு ஊரில் நடக்கும் நல்ல காரியங்களுக்குப் போக மனம் வருமா? போனாலும் நல்ல வரவேற்பு கிடைக்குமா?
இளக்கார பார்வைகளும் - ஏளனப் பேச்சுக்களுந்தான்.
‘அந்த ஊதா தாவணி போட்ட குட்டியப் பார்த்தியா?’
‘ஆமா அதுக்கென்ன - பேரு வர்ணாதானே?’
‘பேரப் பாத்தாலே அவள் ஆத்தாளைப் பத்திப் புரிஞ்சிருக்கணுமே.’
'ஊகூம்-நம்ப பக்கத்தில இதுபோல பேரு கேள்வியே பட்டதில்லை."
‘மகளைப் பெத்து சிங்காரமாப் பேரும் வைச்சிட்டு ஒடிப் போயிட்டால்ல மகராசி.’
‘கொஞ்சம் விவரமாச் சொல்லுடி.’
விவரங்களை கேட்பதற்கு முன்பே குன்றிவிடுவாள் வர்ணா. பிறகு வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்தவள்தான்.
ஆக சென்னை ரெயில் நிலையமே அவளுக்கு பிரமிப்பு தந்தது.
அங்கு பெரும்வாரியாகக் குழுமியிருந்தது வடக்கத்தியர்கள்தான். வெள்ளரிப் பழமாய் வெளுத்த தோல்கள்.
கூட்டுக் குடும்பங்கள் போலும் குழுவாகவே பயணித்தனர்.
'பயணிகள் அறை’க்குள் நுழைந்த கையோடு தோளில் தொங்கிய பருத்த பைகளைக் குடைந்து துவாலைகளுடன் பலர் குளியலறைக்கு ஓடினர்.
அங்கு அத்தகு வசதி இருப்பதே அறியாத இவள் சுவாரஸ்யமாய் நடப்பவற்றைக் கவனிக்கலானாள்.
ஐந்து, பத்து நிமிடங்களில் குளித்து வெளியேறினர்.
பேசி சிரித்தபடி, தலைசீவி ஒப்பனை நடந்தது.
‘பளிச்’ என்ற கசங்காத உடையில் உதட்டுச் சளாயமும் உடைக்குத் தகுந்த பொட்டுமாய் தயாரானவர்கள், பையின் மற்றொரு மூலையிலிருந்து சிறு அட்டைப் பெட்டிகளை எடுத்துப் பிரித்தனர்.
‘கம்’மென்று நெய் மணம்! ஒருவருக்கு மற்றவர் பகிர்ந்து அந்நெய் இனிப்புகளை சாப்பிட ஆரம்பித்தாயிற்று.
இத்தனைக் காலை வேளையில் இனிப்பா? நினைப்பே திகட்டியது.
காதோரம் நரை மின்ன ஆரம்பித்த வடகத்திப் பெண்கள் எல்லாரும் பிரம்மாண்ட பருமனில் இருந்ததின் காரணம் இதுதான்போலும்!
நம்மவர்கள் வேறு தினுசு.
பிரயாண அயர்ச்சி முழுதுமாய் முகத்தில் வடிய, முகம் கூடக் கழுவாது, கசங்கல் ஆடைகளுடன் சரிந்து கிடந்தனர். பலர் கைகளில் ஆவி பறக்கும் காபி கோப்பைகள்!
பயணிப்பது ஒரு கலை எனத் தோன்றியது.
ஆயிரம் மைல்கள் கடந்தும் முகச் சிரிப்பு மாறாமல், உடை கலையாமல், கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு அல்லது பிடித்த சாப்பாட்டைச் சுமந்து கொண்டு...!
சித்தி பசிக்குது…
பிரபு அவள் மீது சாய்ந்தான்.
மொழியைக் கடந்த உணர்வில் பசியும் ஒன்றாயிற்றே? சிறுவன் கூறியது புரிந்தவள் போல முக்காடிட்டிருந்த பருத்த மாது இனிப்புப் பெட்டியை சிறுவனிடம் நீட்டினாள்.
ஊகூம்… இது வேணாம்... தோசை...
அண்ணன் சொன்னதும்தான் சின்ன பவித்ராவும் தன் பசி உணர்ந்தாள் போலும்.
ம்ம்... எனக்கும் தோசை.
வர்ணா மெள்ள யாமினியின் பக்கமாய் பார்த்தாள்.
யாமினிதான் இவ்விரு குழந்தைகளின் தாய்.
ஆனால் அவளோ தனக்கு இவர்களுடன் எந்த சம்பந்தமும் இல்லாதது போல ஓர இருக்கை ஒன்றில் புத்தகத்துடன் சாய்ந்திருந்தாள்.
யாமினி பிள்ளைகளுக்கு பசிக்கிறதாம்…
உணவகம் அருகே எங்காவதுதான் இருக்கும். விசாரித்துக் கூட்டிப்போ வர்ணா-எனக்குப் பசிக்கலை.
ஒருகணம் மட்டுமே உயர்ந்த அவள் விழிகள் மீண்டும் புத்தகத்தில் பதிந்து ஓடின.
எழும்பூரிலிருந்து சென்ட்ரல் வருவதற்குள்ளாகவே வர்ணாவிற்கு விழி பிதுங்கிப்போனது- தலைநகரின் ஜனத்திரள் பரபரப்பைப் பார்த்து!
அதனூடே குழந்தைகளையும் பெட்டி, பைகளையும் தூக்கியபடி ஒடியது இன்பமாயில்லை-பதட்டம்தான்.
இப்போது உணவகத்தைத் தேடி போய் சாப்பிட்டு வருவது… எப்படி?
ம்ம்… வேறு வழியுமில்லையே.
அவள் இதற்காகத்தானே கூட்டிவரப் பட்டிருக்கிறாள்?
ஏற்கனவே யாமினி இவளிடம் செலவுக்கென்று சில நூறுகளைத் தந்து வைத்திருந்தாள் - ஆக கிளம்ப வேண்டியதுதான்.
குழந்தைகளை பக்கத்துக்கு ஒருவராய் பிடித்தபடி நடந்தாள். கொட்டை எழுத்தும், அம்புக்குறிகளும் அவளை அலைக்கழியாது சேரவேண்டிய இடம் சேர்த்தன.
நல்லவேளை உணவகத்தில் கூட்டமில்லை.
ஆனால் தட்டுகளில் தோசை வந்தபிறகுதான் ஏன் அங்கு கூட்டமில்லை என்பது புரிந்தது.
ரப்பர் போல பிய்ந்த தோசை வாயில் இழுபட்டது.
எனக்கிது பிடிக்கலை...
பிரபு முகம் திருப்பிக்கொண்டான்.
பவித்ரா மேசையின் கீழே புகுந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.
பவி அங்கே என்ன பண்றே?
பூன... குத்திப் பூன… தித்தி…
அப்போ... சாப்பிட்டுட்டே பார்ப்பியாம்.
ஆர்வமாய் மூத்தவனும் குனிய, பஞ்சு பந்துகளாய் அங்குமிங்குமாய் ஒடி பம்மி நின்ற பூனைக்குட்டிகளைக் காட்டியே இவள் தோசைகளை அவர்களுக்கு ஊட்டிவிட்டாள். தானும் ருசி பாராது பசிக்கு மென்று வைத்தாள்.
வடை சற்று தேவலை, யாமினிக்காய் இரு வடைகளைக் கட்டி வாங்கினாள்.
பூனையின் பஞ்சு தேகத்தைத் தொட்டுவிட்ட குதுகலத்தில் எம்பிய பவித்ரா, மேசை விளிம்பில் மோதிக்கொண்டு பெரிதாய் அழ ஆரம்பிக்க, அவளையும் அள்ளிக்கொண்டு கிளம்பினாள்.
'தனியாய் இதுகளைக் கூட்டிட்டு என்னால் இரண்டாயிரம் மைல் பிரயாணம் பண்ண முடியாது வர்ணா!'
என யாமினி சொன்னதில் அர்த்தம் உண்டுதான். ஆனால் பிரயாண அனுபவமே அற்ற தன்னால் மட்டும் அது முடியுமா? கூட யாமினியும் இருந்தால் தேவலை.
ஆனால் அவளுக்கு நினைத்த நிமிடத்தில் தலைவலி வந்துவிடும்!
‘தைலம் தேய்ச்சுக்கிரியா?’ என்றால்-
‘இல்லை - புத்தகம் வாசிச்சிட்டு இருந்தாலே வலி போயிடும்’ என்று