Malarey Ennidam Mayangathey
3.5/5
()
About this ebook
Read more from Arunaa Nandhini
Kavitha Oru Kavidhai Rating: 5 out of 5 stars5/5Nalai Vaa Nila Rating: 4 out of 5 stars4/5En Uyiril Kalantha Uyire Rating: 5 out of 5 stars5/5Poomanamey Thazh Thiravai Rating: 5 out of 5 stars5/5Mannikka Mattaya? Rating: 4 out of 5 stars4/5Ninaikka Therindha Manamey! Rating: 3 out of 5 stars3/5Kaadhal Nilavey! Rating: 5 out of 5 stars5/5Veesum Thendraley Veesu Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthal Rating: 4 out of 5 stars4/5Partha Mudhal Naaley Rating: 4 out of 5 stars4/5En Vasam Naanillai Rating: 3 out of 5 stars3/5Sonna Sollai Marandhidalamo… Rating: 4 out of 5 stars4/5Ithayathil Nee Rating: 2 out of 5 stars2/5Endhan Manam Unnai Sutruthey... Rating: 4 out of 5 stars4/5Endhan Uyirallavo Kanmani... Rating: 5 out of 5 stars5/5Neeyedhaan En Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsSonthamadi Nee Enakku! Rating: 4 out of 5 stars4/5Radha Kaadhal Varatha Rating: 4 out of 5 stars4/5Vaarayo Vennilave! Rating: 5 out of 5 stars5/5Sollathaan Ninaikiren Rating: 5 out of 5 stars5/5
Related to Malarey Ennidam Mayangathey
Related ebooks
Endhan Manam Unnai Sutruthey... Rating: 4 out of 5 stars4/5Kaadhal Nilavey! Rating: 5 out of 5 stars5/5Mullai Meeriya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsUrave.. Unai Thedi.. Rating: 5 out of 5 stars5/5Azhagai Pookkuthe... Rating: 5 out of 5 stars5/5Unnudan Naan... Ennudan Nee... Rating: 4 out of 5 stars4/5Vanam Vasapadum Thooram Rating: 0 out of 5 stars0 ratingsNeeyedhaan En Manaivi Rating: 5 out of 5 stars5/5Partha Mudhal Naaley Rating: 4 out of 5 stars4/5Thalattum Poongatru... Rating: 4 out of 5 stars4/5Kaadhalenbathu Yaathenil Rating: 5 out of 5 stars5/5Idhayathin Saalaram Rating: 3 out of 5 stars3/5Unathuravil Naan Kalanthean... Rating: 5 out of 5 stars5/5Malai Nerathu Mayakkam... Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Kangal Rating: 5 out of 5 stars5/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Kadalil Kalantha Mazhathuli... Rating: 3 out of 5 stars3/5Vaarayo Vennilave! Rating: 5 out of 5 stars5/5Nooru Jenmam Nee Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsVizhigalil Ethanai Mozhigal! Rating: 0 out of 5 stars0 ratingsTheendi Sendra Thendral Rating: 5 out of 5 stars5/5Sonthamadi Nee Enakku! Rating: 4 out of 5 stars4/5Vannam Konda Pennilave! Rating: 1 out of 5 stars1/5Andhi Nera Thendral Kaatru! Rating: 4 out of 5 stars4/5Unakkena Thavamirunthen Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthal Rating: 4 out of 5 stars4/5Manam Vizhithathu Mella! Rating: 2 out of 5 stars2/5Ullam Unvasamanathadi Rating: 3 out of 5 stars3/5Aayiram Nilavey Vaa! Rating: 4 out of 5 stars4/5Mannikka Vendugiren Rating: 5 out of 5 stars5/5
Reviews for Malarey Ennidam Mayangathey
2 ratings0 reviews
Book preview
Malarey Ennidam Mayangathey - Arunaa Nandhini
http://www.pustaka.co.in
மலரே என்னிடம் மயங்காதே
Malarey Ennidam Mayangathey
Author:
அருணா நந்தினி
Aruna Nandhini
For more books
http://www.pustaka.co.in/home/author/arunaa-nandhini
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
1
ராஜகம்பீரமாய் மாடியிலிருந்து இறங்கி வந்த மகனைப் பெருமையுடன் பார்த்தாள் செளந்திரம்.
'அம்மாடி..! என்ன கம்பீரம்... என்ன களை... என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது...’ உள்ளுக்குள் பெருமிதத்துடன் நினைத்தாள்.
ஆறடி உயரத்தில்... நெடு நெடு வென்று வளர்த்தியுடன்... ஜமீன்தார் பரம்பரைக்குரிய மிடுக்குடன் இருந்தான் ராஜசேகர். மாநிறத்திற்கும் கொஞ்சம் நிறம் கம்மிதான்...
அடர்ந்த கேசமும்... அகன்ற நெற்றியும்... ஊடுருவிப் பார்க்கும் தீர்க்கக் கண்களும்... எடுப்பான நாசியும் அவனை ஆணழகனாகக் காட்டின... பட்டுவேட்டி... பட்டு ஜிப்பாவில் அவனது தோற்றம் வசீகரமாகத் தெரிந்தது.
போன ஜென்மத்தில் எந்த நாட்டுக்கோ ராஜகுமாரனாய் இருந்திருக்க வேண்டும்... அதுதான்... விட்டக்குறை தொட்டக்குறையாய் அந்த ஆண்மை கம்பீரம் இந்த பிறவியிலும் வந்திருக்கிறது. நெஞ்சில் ஏற்பட்ட நிறைவில் கண்கள் பனித்தன... துடைத்துக் கொண்டாள் செளந்திரம்... ஆனால். அதைத் தொடர்ந்து வந்த வேதனை...
கடவுளே...! அதை நினைக்கும் போது வயிற்றில் ஏதோ பிசைகிறதே!
ஒரே பிள்ளை... துடைத்து விட்ட கற்சிலை போல இருக்கிறான்...ஆனால் இந்த ராஜகுமாரனுக்கு ஏற்ற ராஜகுமாரி அமையவில்லையே.
எல்லா விஷயத்திலும் அதிர்ஷ்டத்தைக் கொண்டவன் திருமண விஷயத்தில் கோட்டை விடும்படி ஆகிவிட்டதே.
திருமணமாகியும் பிரம்மச்சாரியாய் தனித்திருக்கும் பிள்ளையைக் கண்டு பெற்றமணம் துடித்தது.
பாவம்... துக்கத்தை வெளிக்காட்டாமல்... வேதனையை மறைத்துக் கொண்டு பாறையாய், அல்லவா இறுகிக் கிடக்கிறான்.
அருகில் வந்த ராஜசேகர் தாயைக் கேட்டான்.
என்னம்மா. நீங்கள் புறப்படவில்லையா..?
நான் எதுக்குப்பா... வேணாமே... நீ போய் வாப்பா...
உள்ளே சென்றுதட்டில் பழங்களுடன்... விலை உயர்ந்த பட்டுப்புடவை, ரவிக்கையுடன் வந்தாள். கூடவே இரண்டா யிரம் ரூபாய் கட்டும் இருந்தது.
இது பரம்பரையாய் இருந்து வரும் வழக்கம்.
அவர்களுடைய நிலத்தில்... ஆலையில் பணிசெய்யும் பணியாட்கள் வீட்டில் திருமணம் என்றால் அன்பளிப்பாய் பட்டுப்புடவையும் பணமும் தருவது வழக்கம்...
இப்பவும் ஒரு திருமணத்திற்குத்தான் செல்ல இருக்கிறான் ராஜசேகர்.
எப்போதும் உடன் வரும் செளந்திரம் ஏனோ இந்தத் தடவை மறுத்துவிட்டாள்.
அதற்குக் காரணமும் இருக்கிறது...
மகனின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்து... அவன் தனிமரமாய் நிற்பதை எந்தத் தாய் பொறுத்துக் கொள்வாள்... எந்த திருமண மண்டபத்திற்குச் சென்றாலும் ‘அய்யோ... இப்படித்தானே என் பிள்ளையின் திருமணம் கோலாகலமாய்... அனைவரும் மூக்கில் விரல் வைத்து வியக்கும்படி நடந்தது... ஆனால் அது கனவு மாதிரி கலைந்து போனதே என்ற ஏக்கமும் தவிப்பும் வந்து... முள் இருக்கை மீது அமர்ந்தது போல இருக்கும்...’
அதுமட்டுமல்ல... நாதசுர ஓசையும். அய்யர் ஒதும் மந்திரமும்.. கெட்டி மேளமும் பழைய நினைவுகளைக் கிளறி மனதை ரணப்படுத்தும்...
திருமண மண்டபத்திலிருந்து எப்போதுடா கிளம்புவோம் என்று தவித்துக் கொண்டும்... அங்கிருந்தால் யாரா வது ஏதாவது கேட்டு... ஆறிக்கொண்டு வரும் மனக் காயத்தை... குத்திக்... கிளறி மீண்டும் புண்ணாக்கி விடுவார்களோ என்று அஞ்சி... நடுங்கி... அதற்காக மற்றவர்களுடன் பேசுவதையும் தவிர்த்து... ஒரமாய் அமர்ந்திருப்பதை விட பேசாமல் வீட்டிலியே இருந்து விடலாம்தான்.
ராஜசேகர் என்றால் ஆண்பிள்ளை, எந்த உணர்ச்சியையும் வெளியே காட்டிக்கொள்ள மாட்டான்... தவிர... அனை வருக்கும் படி அளக்கும் எஜமானன் வேறு... அவனிடம் வந்து பேசவும் தயங்குவார்கள்... ஆண்களை விடப் பெண்களுக் குத்தான் அடுத்த வீட்டு விஷயத்தில் அக்கறை அதிகம்...
ஆண்பிள்ளைகள் அப்படியில்லை... கண்டும் காணாமல் இருந்து விடுவார்கள்... துருவித்துருவி விஷயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆண்கள் கம்மியே...
அன்று அவர்களது ஆலையின் நிர்வாகி பரமேசுவரனின் மகள் பானுமதிக்கு திருமணம்...
நல்ல மனிதர்... விசுவாசி... நாணயஸ்தர்... ஒரே மகள் என்பதால் சக்தி மீறிய இடத்தில் சம்பந்தம் செய்திருந்தார்.
பிள்ளை வீட்டார் பெரிய மண்டபத்தில் திருமணம் செய்து தரவேண்டும் என்று சொல்லி இருந்ததால் ஊரி லிருந்து கொஞ்சம் தள்ளியிருந்த வசதியான மண்டபத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
அதிக வாடகைதான்... அரண்மனைபோல சத்திரம்... நவீன வசதிகள் கொண்டது...
பிள்ளை வீட்டினர் திருப்தியடைய வேண்டுமே...
அவருடைய இரண்டு மகன்களும் ஆலையில் நல்ல வேலையில் இருந்தனர்.
அதனால் நம்பிக்கையுடன் ராஜசேகரிடம் கடன்பட்டு அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்...
முதலில் பானுமதியின்திருமணம் சிறப்பாக நடத்திவிட்டு... அப்புறம் கடனை எப்படித் தீர்க்கலாம் என்று யோசிக்கலாம்...
மகளின் வாழ்க்கை தான் முக்கியம்...
இரண்டு ஆறு வலுவான கரங்கள் இருக்கின்றதே. உழைத்து கடனை அடைத்து விடலாம்தான்...
தன்னம்பிக்கையும் நல்ல முயற்சியும் இருந்துவிட்டால் முடியாதது ஏதும் இல்லை...
மலையைக் கூட புரட்டி விட முடியும்!
அத்தனை விஷயங்களையும் செளந்திரம் அறிந்திருந்த தால் விலையுயர்ந்த பட்டுப்புடவையாய் வாங்கி வைத்திருந்தாள். கூடிய வரை பெற்றவரின் பாரத்தைக் குறைக்கலாமே!
ராஜா... நம் மேனேஜரிடம் சொல்லுப்பா... திருமணம் முடிஞ்சதும் பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒரு தடவை நம்ம வீட்டிற்கு அழைத்து வரணும்னு
என்று சொன்னாள் செளந்திரம்.
சொல்கிறேன்ம்மா... நான் வருகிறேன்..
பழத்தட்டை பணியாள் சுமந்துவர முன்னே சென்ற மகனைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் செளந்திரம். நெஞ்சு விம்மியது... துயரம் தொண்டையை அடைத்தது. எல்லாம் சரியாக இருந்திருந்தால்...
பட்டுப்புடவை சரசரக்க... அலங்கார தேவதையாய் மனைவி உடன்வர கர்வத்துடன் போயிருந்திருக்கலாம் பிள்ளை...
யார் செய்த பாவமோ... மனைவி இருந்தும் இப்படி ஒற்றையாய் செல்லவேண்டிய தலையெழுத்து... தாயுள்ளம் தவித்தது.
காரில் ஏறி அமர்ந்து கொண்ட ராஜசேகருக்கு கையசைத்து விடை கொடுத்து அனுப்பிவிட்டு இதயம் கணக்க உள்ளே சென்றாள் செளந்திரம்.
படகு போன்ற கார் சாலையில் வழுக்கிக் கொண்டு செல்ல... பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராஜசேகர்தலையை பின்புறம் சாய்த்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டிருந்தான்.
அவனது மனதிலும் பாறையாய் வேதனைச்சுமை... எந்தத் திருமணத்திற்கு செல்லும்போதும் சொல்ல முடியாத துக்கம் இதயத்தைப் பிழியும்.
திருமண ராசியில்லாத தன்னை அழைக்கிறார்களே... அந்த வைபவத்தில் கலந்து கொள்ள எனக்கு அருகதை ஏது... திருமணம் என்ற வார்த்தையே கசப்பாகிவிட்டது... ஏன் தான் அழைக்கிறார்களோ என்று நினைத்தான். நாதசுர ஓசை காதுகளுக்கு நாரசமாகிப் போனது... கெட்டி மேளம் தன்னைப் பார்த்து கைக்கொட்டிச் சிரிப்பது போல இருந்தது...
சந்தன வாசமும்... மலர்களின் மணமும் கிறங்கச் செய் வதற்குப் பதில் தலையை கிறுகிறுக்க வைத்தது... பழைய நினைவுகள் அவனைப் பார்த்து எகத்தாளம் செய்வதுபோல இருந்தது... இருந்தும்.. விடமுடியாதே...
வந்துதான் ஆக வேண்டும்... பரம்பரை வழக்கத்தை விடாமல் செய்ய வேண்டும்...
எஜமானன் என்ற முறையில் இருந்து சிறப்பித்துவிட்டுச் செல்ல வேண்டும்...
தவிர்க்கவே முடியாது...
பெருமூச்சு விட்டான் ராஜசேகர்.
எல்லாத் திருமணங்களும் சொர்க்கத்தில் நிச்சயப்படுகின்றதாமே.. ஏன் தன் திருமணம் மட்டும் நரகத்தில் தள்ளப் பட்டது.
ஏன் எனக்கு இப்படியொரு வாழ்க்கை... குமைந்தான். ரத்னா... அவனது மனைவி...
பெயருக்கு மனைவியாய் வாழ்ந்து விட்டு ஓடிவிட்டவள். திருமணம் ஆகி இரண்டரை ஆண்டுகள் ஆகியும்... கணவன் என்று ஒருவன் இருக்கிறான் என்று திரும்பியும் பார்க் காதவள்.
அவனும்... தாய் சொல்லைத் தட்டாமல் இரண்டு மூன்று முறை போய் அழைத்து வர நினைத்தும்... ஊகூம்... மறுத்துவிட்டாள்...
அதன்பிறகு வாழ்க்கையேசூன்யம் ஆகிவிட்டது அவனுக்கு..
மனதால் துறவியாகிப் போனான்.
இனி ரத்னா வரப்போவதில்லை என்று தெரிந்து விட்டது.
சின்ன வயதிலிருந்தே அவனுக்கு ரத்னாதான் என்ற பேச்சு இருந்தது.
இளம் வயசு... ரத்னா மீது பற்று உண்டானது. ரத்னாவை மணக்கக் காத்திருந்தான்.
ஆனால்... ரத்னாவும் தன்னை விரும்புவாள் என்று எதிர்பார்த்தது தப்புதான்...
எல்லாம் முடிந்த கதையாகிவிட்டது... இன்னும் அவளை நினைத்து மறுகிக் கொண்டிருப்பதில் பயனில்லை... இனி அவள் வரமாட்டாள் என்பது உறுதியாகிவிட்டது... இந்த ஜென்மத்தில் எனக்கு மனைவி பாக்கியம் இல்லை...
இப்படியே வாழ்க்கையைக் கழித்துவிட்டால்...
எஜமான்... கல்யாண சத்திரம் வந்தாச்சுங்க..
டிரை வரின் குரல் அவனை விழிக்க வைத்தது. உண்மையில் அது பிரம்மாண்டமான மண்டபம் தான்... தின வாடகையே வாயைப் பிளக்க வைக்கும். பாவம்... பரமேசுவரர்... தன் வசதிக்கு மீறிதான் திருமணத்தை நடத்துகிறார்... எதிலும் குறை வைக்கவில்லை. மின் விளக்குகளின் அலங்காரம்... மலர் ஜோடனை... பந்தல் அலங்காரம் அனைத்தும் பிரமாதமாக இருந்தது. மண்டபத்தின் முன் வாசலில் பலநிறப் பூக்களால் பானுமதி வெட்ஸ் சந்திரன் என்று புனையப் பட்டிருந்தது.
பெயர் பொருத்தம் நன்றாகத்தான் இருக்கிறது. இருவர் பெயரிலும் சந்திரன்...
அவனையும் அறியாமல் உள்மனம் ராஜசேகர்... ரத்னா என்று முணுமுணுத்து பொருத்தம் தேடியது...
அடுத்தகணமே சே! மனப்பொருத்தம் இல்லாத ஜோடி பெயர் பொருத்தம் இருந்தால் என்ன... இல்லாவிட்டால் என்ன என்று சலித்துக் கொண்டது.
வேண்டாத எண்ணங்களை உதறிவிடவேண்டும் என்று ஆவேசத்துடன் தலையை சிலுப்பிக் கொண்டு காரில் இருந்து இறங்கிய அவனைப் பார்த்து அனைவரும் பணிவுடன் ஓடிவந்தனர்.
மானேஜர் பரசுராம் பரபரப்புடன் முன் வந்து அவனை வரவேற்றார்.
அய்யா... வரணும். உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம். முகூர்த்த நேரம் வந்தாச்சு...
என்றார். வணங்கி நின்ற அனைவருக்கும் தலையசைத்தவாறு சென்று முன் வரிசையில் அவனுக்காகப் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான். அய்யரும் மந்திரத்தை ஆரம்பித்தார்.
மாப்பிள்ளைப் பையன் ஒடிசலாய் இருந்தான். முகத்தில் கர்வம் தெரிந்தது.
உலகத்தில் அவனுக்கு மட்டுமே கல்யாணப் பேறு வாய்த் திருக்கிறது என்பது போல அகம்பாவத்துடன் அமர்ந்திருந் தான்.
அய்யர் சொன்ன மந்திரத்தை அலட்சியத்துடன் திருப்பி சொன்னான் அவன்.
மண்டப மேடையில் சலசலப்பு.
மணமகளை அழைத்து வந்து கொண்டிருந்தனர். அழகுப் பதுமையாய் இருந்தாள் அவள்...
அனைவரின் கண்களும் ஆர்வத்துடன் மணமகளை கவனித்தன.
பரமேசுவரரின் மகளா...! உண்மையிலேயே பெண் அழகிதான்... ஆனால்... மாப்பிள்ளை தான் சுமார்... பொருத்தம் கொஞ்சமும் இல்லை...
அங்கிருந்தவர்களின் நினைவோட்டம்...
உண்மைதான்... பெயருக்கு ஏற்றாற்போல பானுவின் காந்தியையும்... மதியின் அழகும் சேர்ந்ததுபோல இருந்தாள் பானுமதி.
பொன்னிற மேனிக்கு அவள் உடுத்தியிருந்த கரும்பச்சை நிறப் பட்டுப்புடவை எடுப்பாய்த் தெரிந்தது. அவளின் அழகை இரட்டிப்பாக்கிக் காட்டின அவளது பொன் நகைகள்...
ஆனால்... பூ மாலைக்கு குரங்கு பொருத்தமில்லையே... வேறு அழகான... நல்ல மாப்பிள்ளை கிடைக்கவில்லையா.. எதை வைத்து இப்படி பொருத்தமில்லாதவனை தன் மகளுக்கு மாப்பிள்ளையாக்க நினைத்தார்... பரமேசுவரர்... குணத்திலும் நல்லவனாகத் தெரியவில்லையே... ஒரு வேளை... பணம் மட்டுமே தகுதியாக நினைத்தாரோ... தன் மகள் பெரிய இடத்தில் வாழ்க்கைப்பட்டால் போதும் என்ற எண்ணத்திலா...
ராஜசேகர் மனதிலும் அந்த கேள்விதான்.
திடீர் என்று அய்யரே மந்திரத்தை நிறுத்துங்க
என்று உரத்த குரல் உறும...
அனைவர் முகத்திலும் குழப்பம்...
மாப்பிள்ளையின் தந்தைதான் அப்படிச் சொன்னது. அய்யர் திகைப்புடன் பார்த்தார்...
மாப்பிள்ளைக்கு 'ஸ்ப்லெண்டர்’ வண்டி இன்னும் வரவில்லை... வைர நெக்லஸ்னு சொன்னீங்க... பார்த்தா... வெறும் வெள்ளைக்கல் அட்டிகை மாதிரித் தெரியுது. எங்களை என்ன... இளிச்சவாய்ங்கன்னு நினைச்சீங்களா... உசந்த மாப்பிள்ளை மட்டும் வேணும். சீதனம் தர மட்டும் கசக்கிறதா. உங்களுக்கெல்லாம் எதுக்கைய்யா பெரிய வீட்டுச் சம்பந்தம்... பேசாம... ஏழைக்கேத்த எள்ளுருண்டைன்னு பார்த்துக்க வேண்டியதுதானே...
மாப்பிள்ளையின் தந்தை கத்த...
கையைப் பிசைந்து கொண்டிருந்த பரமேசுவரர் அவரது காலில் விழப் போனார்.
அருகில் இருந்த பெரிய மகன் அதைத் தடுக்க நினைத்தான். என்னப்பா... இது... அவர்கள் காலில் நீங்கள் விழுவதா...
பெண்ணைப் பெத்தவங்க... மானம்... அவமானம்னு பார்க்கக் கூடாதுப்பா... நம்ம மகளோட வாழ்க்கைப் பிரச்சனைப்பா... அவ சந்தோஷத்தை நாம பார்க்கணும். நீ கொஞ்சம் பேசாம இருப்பா...
என்று சொல்லி விட்டு. மாப்பிள்ளையின் தந்தையிடம் கெஞ்சினார்.
அய்யா... நீங்க பெரிய மனசு பண்ணி என் மகளை ஏத்துக்குங்க...
"எனக்கு பெரிய மனசு இருக்கக் கண்டுதான் உங்க பொண்ணை மருமகளாக்கிக் கொள்ளச் சம்மதிச்சேன். எல்லோரும் கேட்டார்கள்... ஏண்டா. உன் தகுதிக்கு இறங்கி வந்து பெண் எடுத்திருக்கேன்னு. ஏதோ உங்கப் பொண்ணு கண்ணுக்கு லட்சணமா இருக்காளேன்னு ஒப்புக் கொண்டோம். இப்போதும் குடியேதும் மூழ்கிப் போகல்லே... கேட்டதைத் தரப்பாருங்க... உங்கப் பொண்ணுக் கழுத்தில் தாலி விழும்...’’ கறாராகப் பேசிவிட்டு... என் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்பதுபோல இறுகி நின்றார்.
இந்த இக்கட்டான நேரத்தில்... இனியும் தான் சும்மா இருப்பது அழகல்ல என்று நினைத்தான் ராஜசேகர்.
பரமேசுவரன்... ஒரு நிமிடம்... இங்கே வாருங்கள்...
என்று அழைத்தான்.
பரமேசுவரன் வந்ததும் என்ன இது... உங்களால் முடியவில்லை என்று தெரிந்தும் வைர நெக்லஸுக்கும் ‘பைக்’கிற்கும் எதுக்கு ஒப்புக் கொண்டீர்கள். ஏற்கனவே உங்கள் கைமீறி எல்லாம் செய்திருக்கிறீர்கள்... இது வேறு ஏன்..
என்று கேட்டான்.
இல்லை அய்யா... இவற்றை நான் தருவதாக சொல்லவும் கிடையாது. கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்பு சம்பந்தி என் வீட்டிற்கு வந்திருக்கிறார். நான் வீட்டில் இருந்திருந்தால் இந்த சிக்கலே வந்திருக்காது. இப் போதைக்கு முடியாது என்று நாசூக்காய் மறுத்திருப்பேன்... ரொம்ப வேண்டியவர்களை அழைக்க வேண்டி வெளி யூருக்குப் போயிருந்தேன். அந்த நேரத்தில் என் வீட்டுக்கு வந்து என் பெண்ணிடம் சொல்லியிருக்கிறார். அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை... பேசாதிருப்பதை ஒப்புதல் என்று நினைத்துவிட்டார் போல...
சரி... மனம் தளரவேண்டாம்... நான் சொல்லிப் பார்க்கிறேன்... இருங்கள்.
ராஜசேகர் அழுத்தமாய் நின்றிருந்த மாப்பிள்ளையின் தந்தையிடம் சென்றான்.
இருவரும் என்ன பேசினார்களோ தெரியவில்லை. அடங்கியக்குரலில் அவன் வாதாடுவதும்... அந்த மனிதர் மறுப்பதும் மட்டும் தெரிந்தது.
கடைசியில் சத்தமாய் நீர் யார் இதைக் கேட்க... உமக்கும் இந்த விஷயத்துக்கும் என்ன சம்பந்தம். அவருக்கு நீ முதலாளியா இருக்கலாம்... எங்களுக்கு இல்லை... டேய்... சந்திரா... எழுந்திருடா... போதும்... இந்தக் கல்யாணம் ஒரு கேடு... இது இல்லாவிட்டால் என்ன... நூறு சம்பந்தம் தேடி வரும்...
கோபத்தினால் முகம் கன்ற நின்றிருந்தான் ராஜசேகர். இதுவரைக்கும் தான் சென்ற திருமணங்களில் இந்தமாதிரி பிள்ளை வீட்டாரைப் பார்த்தது இல்லை...
தான் நின்று வாகனமும்... வைர அட்டிகையும் வாங்கித் தருவதாய்க் கூறியும் இந்த மனிதர்நம்பாமல் குதிக்கிறாரே... இவர்கள் இன்னும் வேண்டும் என்று கேட்டுப் பிடுங்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்...
அதுமட்டும் அல்ல... மருமகளை நன்றாக வைத்துக் கொள்வார்கள் என்று சொல்வதற்கும் இல்லையே.. பாவம்... பரமேசுவரன்... நல்ல சம்பந்தம் என்று எண்ணி மோசம் போய் விட்டார்.
ஐயா... ஐயா...
என்று கெஞ்சிக்கொண்டு பின்னே அவர் ஒடுவதை தடுத்தான் ராஜசேகர்.
பரமேசுவரன்... நில்லுங்கள்... அவர்கள் போனால் போகட்டும்... இவர்களை விட்டால் வேறு யாரும் கிடையாதா.. என்ன... பணப்பிசாசு பிடித்து ஆட்டாத ஒருவன் நிச்சயம் வருவான்... இவர்கள் வீட்டுக்கு உங்க பெண்ணை அனுப்புவதை விட... பேசாமல் திருமணம் ஆகாமல் வீட்டில் இருக்கலாம்... அவர்களைப் போக விடுங்கள் பரமேசுவரன்...
சட்டென்று நின்றார் சம்பந்தியாக வர இருந்த பெரிய மனிதர்.
"ஆமா... ஆமா... வருவாங்க... யாராவது காதில் பூ வச் சிருக்கும் இளிச்சவாயன்கள் இருந்தா வருவாங்கதான்... ஏம்ப்பா... இத்தனை பேசறயே.