Nee Engey... En Anbe...!
By Rajesh Kumar
()
About this ebook
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Read more from Rajesh Kumar
Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Nimisham Rating: 2 out of 5 stars2/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Iruttile Rendu Per Rating: 4 out of 5 stars4/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5
Related to Nee Engey... En Anbe...!
Related ebooks
Antha 69 Naatkal! Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Kuttrangal Rating: 0 out of 5 stars0 ratingsIndia Naadu En Veedu Rating: 0 out of 5 stars0 ratingsOru Vaanam Pala Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThappu Thappai Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsIni Min Mini Rating: 5 out of 5 stars5/5Kannellam Unnodudhaan Rating: 2 out of 5 stars2/5Oru Kaadhalin Climax Rating: 0 out of 5 stars0 ratingsJanuary February Mortuary Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukka Sonnaye! Rating: 5 out of 5 stars5/5Vithi Puthithu Rating: 5 out of 5 stars5/5Puthiya Thisaigal Rating: 5 out of 5 stars5/5Aadatha Oonjalgal Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Innaley! Rating: 0 out of 5 stars0 ratingsUdaiyaatha Vennila Rating: 0 out of 5 stars0 ratingsSudum Nilavu Sudatha Sooryan Rating: 0 out of 5 stars0 ratingsOru Thuli Kadal! Rating: 0 out of 5 stars0 ratingsSila Vellai Iravugalum Oru Karuppu Pagalum Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsThithikkum Thee Rating: 0 out of 5 stars0 ratingsNil... Kavani...Kaathiru! Rating: 2 out of 5 stars2/5Jeyippathu Nijam Rating: 0 out of 5 stars0 ratingsKarkandu Ayutham Rating: 0 out of 5 stars0 ratingsThadayai Udai! Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaal Suvadu Thodargirathu...! Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Kadavul Rating: 0 out of 5 stars0 ratingsNaveena Navarasa Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsSudum Nilavu Sudatha Sooriyan Rating: 0 out of 5 stars0 ratingsRaththamindri Oru Yuttham Rating: 0 out of 5 stars0 ratingsSorkkam En Kaiyil Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nee Engey... En Anbe...!
0 ratings0 reviews
Book preview
Nee Engey... En Anbe...! - Rajesh Kumar
http://www.pustaka.co.in
நீ எங்கே…
என் அன்பே…!
Nee Engey...
En Anbe...!
Author:
ராஜேஷ்குமார்
Rajeshkumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajeshkumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
பதிப்புரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
பதிப்புரை
இன்று மிகப் பிரபலமான நாவலாசிரியர்களிலே குறிப்பிடத்தக்கவர் ராஜேஷ்குமார் அவர்கள். நல்ல கற்பனை வளமும் கோர்வையான கதை அமைப்பும் வாசகர்களின் மனதைப் பெரிதும் கவர்கிறது.
சம்பவங்களைப் பின்னிப் பிணைந்து படிப்பவர்களின் உள்ளங்களிலே நிலைத்து நிற்கிறார். அடுத்து என்ன என்று வாசகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்தக் கதை மிகவும் எடுத்துக் காட்டாக உள்ளது. படிப்பவர்களைப் பரவசப்படுத்தும் என்பது நிச்சயம்.
-அருணோதயம் அருணன்
நீ எங்கே...
என் அன்பே...!
1
இன்பம், இதயம்
இனிப்பு, வாழ்க்கை,
செல்வம், வெளிச்சம்
இத்தனை வார்த்தைகளுக்கும்
எதிராக...
என்னுடைய அகராதியில்
ஒரே அர்த்தம் தான்
போட்டிருக்கிறது.
அந்த வார்த்தை ஹம்ஸா!
விமானம் கடலுக்கு மேலே பத்தாயிரம் அடி உயரத்தில் ஐநூறு கிலோ மீட்டர் வேகத்தில் நியூஜெர்ஸி ஏர்போர்ட்டை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.
எக்னாமிக் வகுப்பில் முட்டை வடிவ ஜன்னலோரமாய் உட்கார்ந்து புத்தகமொன்றைப் படித்துக் கொண்டிருந்த சரண், ஒரு வாய் மினரல் வாட்டரை தொண்டைக்குக் கொடுத்துவிட்டு, மறுபடியும் புத்தகத்துக்குள் நுழைய முயன்றபோது, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த அந்தப் பெண், எக்ஸ்க்யூஸ் மீ
என்று சொல்லிவிட்டு தொண்டையைக் கனைத்தாள்.
சரண் நிமிர்ந்தான்.
எஸ்
புத்தகம் குப்புறப் படுத்தது.
நான் தீப்தி. ஒரு இந்தியப் பெண். அதிலும் தமிழ் நாட்டுப் பெண்.
ஓ... அதுதான் விமானம் ஏறி என் பக்கத்து இருக்கையில் உட்காரும்போதே சொல்லி விட்டீர்களே. நானும் என்னோட பேரையும் சொல்லி கை குலுக்கியாச்சே.
அது போதுமா?
சரண், அவளை புன்னகையோடு பார்த்தான். வேற என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க?
நான் ஒண்ணும் என்னைப் பார்த்து, 'ஜொள்ளு’ விடுங்கன்னு சொல்லலை. நாம ரெண்டு பேரும் இந்தியா. அதிலும் தமிழ்நாடு. அதிர்ஷ்டவசமாய் பக்கத்துப் பக்கத்து சீட்டுகளில் உட்கார்ந்திருக்கோம். ஏதாவது பேசிட்டு வரலாமில்லையா?
எதைப் பத்திப் பேசறது?
என்னங்க இது... ஒரு அழகான பொண்ணைப் பார்த்தா பேசறதுக்கு நிறைய விஷயம் கிடைக்குமே?
அழகான பொண்ணைப் பார்த்தாத்தானே?
பெரிய கண்களில் கோபம் காட்டி, தீப்தி முறைக்க,
சரண், ஸாரி... சும்மா ஒரு ஜோக்குக்காகச் சொன்னேன். டோண்ட் மிஸ்டேக் மீ
என்றான்.
தீப்தி, தன் இரண்டு தோள்களையும் அழகாய் ஜெர்க் செய்துவிட்டு ஒரு பெருமூச்சோடு கேட்டாள்.
கையில் அது என்ன குட்டி யானை சைஸில் ஒரு புக்?
ஓஷோவின் தத்துவங்கள்.
படிக்க முடியுதா?
ஏன் முடியாதா?
எனக்கு ரெண்டு பக்கம் புரட்டினாலே தூக்கம் வந்துடும்.
எந்த ஒரு புத்தகத்தையும் படிக்கிறதுக்கு முந்தி ஒரு இன்ட்ரஸ்ட்டும் இன்வால்வ்மென்ட்டும் வேணும்.
உங்களுக்கு எப்படி ஓஷோ மேல இவ்வளவு இன்ட்ரஸ்ட். எப்படி இன்ஸ்பயர் ஆனீங்க?
காலேஜ் டேஸில் இருந்தே ஓஷோ மேல எனக்கு தீராக் காதல். இதே புத்தகத்தைப் பரிட்சைக்குப் படிக்கிற மாதிரி எத்தனையோ தடவை படிச்சிருக்கேன்.
தீப்தி சட்டென்று கேள்வியின் போக்கை மாற்றினாள்.
இதுதான் உங்க முதல் வெளிநாட்டுப் பயணமா? நியூ ஜெர்ஸியில் யார் இருக்காங்க?
யாரும் இல்லை. இனிமேத்தான் நண்பர்களைத் தேடிக்கணும். நான் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர். நியூ ஜெர்ஸியில் வேலை கிடைச்சிருக்கு. ஜாய்ன் பண்ண வந்திருக்கேன்.
எந்த கம்பெனி?
அல்டிமேட் சொல்யூஸன்ஸ்
என்ற சரண், மறுபடியும் ஓஷோவைத் தேடிப் போக தீப்தி அழகாய் மூக்கை உறிஞ்சிச் சிணுங்கினாள்.
என்னைப் பத்தி எதுவுமே கேக்க மாட்டீங்களா?
சரி... சொல்லுங்க.
நான் ரெண்டு வருஷங்களுக்கு முன்புவரை பசிபிக் ஏர்வேஸில் ஏர்ஹோஸ்டஸ், இப்போ ஆல்ஃபா கம்பெனியில் ரிசப்ஷனிஸ்ட். கொள்ளை சம்பளம். அப்பா இல்லை. அம்மா மட்டும். அதுவும் மும்பையில். அம்மா 'ரதி’ என்கிற பெயரில் மும்பையில் ஒரு பியூட்டி பார்லரை நடத்திட்டு வர்றாங்க. பல ஹிந்தி நடிகைகள் அழகாய் இருக்கிறதுக்குக் காரணமே அம்மா நடத்திட்டு வர்ற பியூட்டி பார்லர்தான்
தீப்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, விமானத்தின் சைடு ஸ்பீக்கரில் அந்த அறிவிப்பு கேட்டது. செர்ரி பழக் குரல்.
பயணிகளின் அன்பான கவனத்திற்கு... அடுத்த பத்து நிமிடங்களில் விமானம் நியூஜெர்ஸி விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது. பயணிகள் 'சீட் பெல்ட்’களை அணிந்து கொள்ள வேண்டுகிறோம். புகை பிடிப்பதைத் தவிர்த்து விடவும்.
தீப்தியும் சரணும் பெல்ட்களை அணிந்துகொள்ள ஆரம்பித்தார்கள். தீப்தி கேட்டாள்.
நியூ ஜெர்ஸியில் எங்கே தங்கப் போறீங்க?
"நோ ஐடியா. ஏர்போர்ட்டிலிருந்து நேரா கம்பெனிக்குத்தான் போகப் போறேன். அவங்க ஏற்பாடு பண்ணுவாங்க..?
சரியான அட்ரஸ் இல்லேன்னா, கம்பெனியைக் கண்டுபிடிக்கிறது ரொம்பக் கஷ்டம். அட்ரஸ் என்னான்னு சொல்லுங்க. நான் கைடு பண்றேன்.
சரண் யோசித்துவிட்டுச் சொன்னான்.
மெரிடியன் ஸ்கொயர்ஃபோர்டீன்த் மெயின் ரோடு லெவன்த் க்ராஸ்.
நோ ப்ராப்ளம். க்ளீயர் அட்ரஸ். எந்த ஒரு டாக்ஸி ட்ரைவர்கிட்ட சொன்னாலும் தடுமாற்றம் இல்லாமே கொண்டு போய்ச் சேர்த்துடுவான். அதையும் மீறி ஏதாவது பிரச்சினைன்னா, என்னை இந்த செல்போன் நம்பரில் காண்டாக்ட் பண்ணுங்க. ஃபயர் என்ஜின் மாதிரி பறந்துட்டு வருவேன்.
அவள் கொடுத்த விசிட்டிங் கார்டை சரண் வாங்கி சர்ட் பாக்கெட்டில் சொருகிக் கொண்டிருக்கும்போதே, விமானம் உயரம் இழந்தது. கீழே நியூஜெர்ஸி வெய்யிலில் துடைத்து வைத்த கண்ணாடிப் பாத்திரம் மாதிரி இருந்தது. நான்கைந்து பெரிய பெரிய சர்ச்கள் கூர் சீவிய பென்சில் மாதிரி தெரிந்தது. தீப்தி அவனுடைய தோளைத் தொட்டாள்.
மிஸ்டர் சரண்... சிட்டியோட ஏரியல் வ்யூ எப்படி இருக்கு... பார்த்தீங்களா?
ஃபைன்.
அமெரிக்க நகரங்களிலேயே நியூஜெர்ஸி சுத்தமான நகரம். மினரல் வாட்டர் மாதிரி. நோ ரௌடியிஸம். நோ வயலன்ஸ். நோ ரேப். ஒரு பெண் நூறு பர்சன்ட் கற்போடு இந்த சிட்டியில் வாழலாம். போலீஸ் இங்கே ரொம்பவும் ஸ்ட்ரிக்ட். நியூஜெர்ஸிக்குள்ளே ஒரு கிராம் போதைப் பொருள் கூட இல்லைங்கிறது லேட்டஸ்ட் ஹைலைட் நியூஸ்.
விமானம் தன்னுடைய முன் சக்கரங்களில் ரன்வேயை முத்தமிட்டது. லேசாய் குலுக்கியது. ஜன்னல் வழியே விமான நிலையமும் அதனுடைய கண்ணாடிச் சுவர்களும் நிறம் நிறமாய் வந்தது.
சரண்... எனக்கு அவமானமாய் இருக்கு.
எதுக்கு அவமானம்?
ஒவ்வொண்ணையும் நான் உங்ககிட்டே கேட்டு வாங்க வேண்டியிருக்கு. நான் என்னோட ஐ.டி. கார்டை கொடுத்தேன். ஒரு கர்ட்டர்ஸிக்கு நீங்க உங்க கார்டைக் கொடுத்தீர்களா?
ஸாரி... மிஸ் தீப்தி. நான் தேவையில்லாமே யாருக்கும் என்னோட ஐ.டி. கார்டைத் தர்றது இல்லை. அதிலும் முக்கியமா பெண்களுக்குத் தர்றது இல்லை. இன்னும் முக்கியமாய் சொல்லப் போனால் உன்னை மாதிரியான அழகான பெண்களுக்குத் தர்றதே கிடையாது.
ராட்சஸா...
வாய்க்குள் கோபமாய் முனகிக் கொண்டாள் தீப்தி.
என்ன திட்டறீங்களா?
இல்லையே. உங்களுடைய நல்ல பாலிஸியைப் பாராட்டி மனசுக்குள்ளே ஒரு கவிதை எழுதிட்டிருக்கேன்.
தாங்க்ஸ்.
விமானம் நின்றது.
கதவருகே ஸ்டேர்ஸ் பொருத்தப்பட ஒவ்வொருவராய் இறங்க ஆரம்பித்தார்கள். சரணும் தீப்தியும் எழுந்து கொண்டார்கள். தங்களுடைய சிறிய லக்கேஜ்களை சுமந்து கொண்டார்கள்.
அப்புறம்?
என்றாள் தீப்தி.
டாட்டா... பை... பை... சீரியோ...
அவ்வளவுதானா?
வேறென்ன பண்றது?
மறுபடியும் என்னைப் பார்க்கணும்னு உங்களுக்குத் தோணலையா?
தோணலையே.
தீப்தி மனசுக்குள் முனகிப் பொருமினாள். சரியான அழுத்தக்காரண்டா நீ.
மறுபடியும் ஏதோ திட்டறே போலிருக்கே?
சேச்சே.
இருவரும் படிகளில் ஒன்றாய் இறங்கி ரன்வேயில் நடந்து ஏர்போர்ட்டில் லெவன்த் ஏரியாவுக்குள் நுழைந்தார்கள்.
சரண்.
ம்.
அந்த கபேடேரியாவுக்குப் போய் ஒரு காபி சாப்பிட்டுப் போலாமா?
இதோ பாருங்க தீப்தி. நாம ரெண்டு பேரும் கோ - பாஸஞ்சர்ஸ் தான். ஃப்ரண்ட்ஸ் கிடையாது. ஒண்ணா ட்ராவல் பண்ணினோம். அதோடு சரி. இனிமே நீங்க உங்க வழியைப் பார்த்துட்டுப் போங்க. நான் என் வழியில் போறேன். திஸ் இஸ் த லிமிட்
சொல்லி விட்டு நகர முயன்ற சரணை, ஒரு நிமிஷம்
என்று கூறி நிறுத்தினாள் தீப்தி.
லுக் மிஸ்டர் சரண். நான் உங்ககிட்ட வந்து வலிய வலிய பேசினதால, என்னை சீப்பா எடை போட்டு விட வேண்டாம். பொதுவா ஆண்கள் என்கிட்டே வழிவாங்க. எதை எதையோ உளறிக் கொட்டுவாங்க. பட்... நீங்க அப்படியில்லை. நான் பக்கத்து சீட்ல இருந்தாலும் கண்ணியமாய் நடந்துட்டீங்க. கடந்த சில மணி நேரப் பயணத்தில் தவறிப் போய்க்கூட உங்க கையோ காலோ என் மேல படலை. ஆண்களில் உங்களை மாதிரியானவங்களைப் பார்க்கிறது ரொம்பவும் அபூர்வம். உங்களுக்கு மனைவியாய் வரப் போகிற பெண் போன ஜென்மத்துல நிறைய புண்ணியம் பண்ணியிருக்கணும்.
எனக்குக் கல்யாணம் நடக்கும்போது உங்களுக்கு இன்விடேஷன் அனுப்பறேன். அந்தப் புண்ணியவதியைப் பார்க்க கண்டிப்பா வாங்க.
சரண் சொல்லிவிட்டு, கஸ்டம்ஸ் கெளண்டரை நோக்கிப் போனான். கஸ்டம்ஸ் சடங்குகளை முடித்துக் கொண்டு 'எக்ஸிட்’ கேட் வழியாக வெளியே வந்த போது, தன் சட்டையைப் பிடித்து யாரோ இழுப்பது போல் உணர்வு தட்டவே சட்டென்று திரும்பினான்.
நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் நின்றிருந்தான். முகத்தில் இந்திய ஜாடை.
சரணை நெருங்கி கால்களைக் கட்டிக் கொண்டான்.
டாடி.
டாடியா?
சரண் திகைத்து திணறிக் கொண்டு இருக்கும்போதே, பக்கவாட்டிலிருந்து ஒரு பெண்ணின் குரல்.
என்னங்க...
சரண் திரும்பினான்.
ஊதா நிற பட்டுச் சேலையில் பளிச்சென்றிருந்த அந்தப் பெண் சட்டென்று சரணின் கால்களில் விழுந்து வணங்கினாள்.
2
என் அலமாரியைத் திறந்தேன்.
உள்ளே சாரை சாரையாய்
எறும்புகள். எனக்குள் கோபம்.
ஹம்ஸா! உன் பிறந்த நாள்
பரிசுக்காக வாங்கி வைத்து இருந்த
காட்பரீஸை எறும்புகள்
துவம்சம் செய்வதா?
காட்பரீஸை எடுத்தேன். எறும்புகள்
அதில் இல்லை. எல்லா
எறும்புகளும்
பக்கத்தில் நான் எழுதிய காகிதத்தில்!
அதில் நூற்றியெட்டு தடவை
ஹம்ஸா... ஹம்ஸா... ஹம்ஸா.
சரணின் மூளைப் பிரதேசத்துக்குள் ஒரு மஹாப் பிரளயம் நிகழ்ந்த உணர்வு. தன்னை டாடி என்று அழைத்த சிறுவனையும், தன்னுடைய காலடியில் விழுந்து கிடக்கும் பெண்ணையும் திகைத்த விழிகளோடு மாறி மாறிப் பார்த்தான்.
யார்... இவர்கள்?
சரண் அதிர்ச்சியோடு பின்னுக்கு நகர முயல அந்தப் பெண் விடாப் பிடியாய் அவனுடைய பாதங்களைப் பற்றிக் கொண்டாள். எக்ஸிட் கேட்டை நோக்கி முன்னால் போய்க் கொண்டிருந்த தீப்தி ஓடி வந்தாள்.
சரண்...! யார் இவங்க?
தெ... தெ... தெரியலையே.
என்ன இது...? தெரியலைன்னு சொல்றீங்க... அந்தப் பொண்ணு உங்க கால்ல விழுந்து கிடக்கு...
அதுதான் எனக்கும் குழப்பமாய் இருக்கு...
சரண் வியர்த்த முகமாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்தச் சிறுவன் பக்கத்தில் வந்து சரணின் கையைப் பற்றினான் - டாடி...
யார்ரா டாடி...?
சரண் கோபமாய் சிறுவனின் கையை உதற கால்களில் விழுந்து கிடந்த