Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Innoru Suthandira Por
Innoru Suthandira Por
Innoru Suthandira Por
Ebook108 pages45 minutes

Innoru Suthandira Por

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சமீபத்தில் எழுதிய எட்டுச் சிறுகதைகளின் தொகுப்பு தான் இன்னொரு சுதந்திரப் போர்.

வளரும் பருவத்தில் சாதிப்பற்று இன்றி சரிசமமாகப் பழகும் மாணவர்கள் வாலிபர்கள் ஆனதும் சாதி வெறி என்னும் சாக்கடையில் விழுந்து விடுகிறார்களே என்ற வேதனையில் வெளிப்பட்டது தான் இன்னொரு சுதந்திரப்போர்.

“கோபுரங்கள் சாய்வதில்லை” என்ற சிறுகதை ஒரு விவசாயியின் வெள்ளை மனதையும் பெருந்தன்மையையும் வெளிப்படுத்துவது.

“அன்புள்ள அப்பா” வளர்ந்துவரும் முதியோர் இல்லங்கள் ஏற்படுத்திய வேதனையால் விளைந்தது. “மீண்டும் ஒரு சகுந்தலை” இன்றைய நாகரிக உலகில் இளம் பெண்கள் பாதிக்கப்படுவதை நினைத்தால் வந்தது. “கலையும் மேகங்கள்” உறவுகளின் நிலைகளை நினைத்ததால் உருவானது.

“தென்றல் மூட்டிய தீ” முதிர்கன்னிகளை நினைத்து நினைத்து உருகியதால் உருவானது! “காமம்” ஆணைப் போல பெண்ணுக்கும் உண்டு என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக எழுதப்பட்டது.

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள “விடியல்” இலக்கிய இதழ் பன்மலரில் முதல் பரிசு பெற்றது. குழந்தை தொழிலாளர்கள் கூடாது என்பதை வலியுறுத்த எழுதப்பட்டது.

“நிலைமாறும் நிஜங்கள்” சற்றே பெரிய கதை. உண்மையான ஒரு போலீஸ் அதிகாரி உடைந்து போன ஒரு பெண் இவர்களை மையமாக வைத்துப் பின்னப்பட்டது. நாடக பாணிக் கதை என்று கூட சொல்லலாம்.

இத்தொகுப்பில் உள்ள எட்டுச் சிறுகதைகளும் உங்கள் இதயத்தைத் தொட்டுப் பேசி, உங்கள் உள்ளுணர்வுகளைத் தட்டி எழுப்பும் என்று நம்புகிறேன். இவற்றைப் படிப்பவர்கள் ஒரு நொடியாவது நாட்டு நடப்புகளை நினைத்தால் அதுவே இவற்றை எழுதியவனின் வெற்றி!

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580119202494
Innoru Suthandira Por

Read more from V.K. Kasthurinathan

Related to Innoru Suthandira Por

Related ebooks

Reviews for Innoru Suthandira Por

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Innoru Suthandira Por - V.K. Kasthurinathan

    http://www.pustaka.co.in

    இன்னொரு சுதந்திரப் போர்

    Innoru Suthandira Por

    Author:

    வீ. கே. கஸ்தூரிநாதன்

    V.K. Kasthurinathan
    For more books

    http://www.pustaka.co.in/home/author/v-k-kasthurinathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    காணிக்கை

    தன்னை உருக்கி

    என்னை வளர்த்த

    அன்னை பாப்பாத்தியம்மாள்

    பொன்னடி தமக்கு!

    முன்னுரை!

    வாஞ்சையுள்ள வாசகரே!

    வணக்கம். இன்னொரு சுதந்திரப் போர் என்ற இச்சிறுகதை நூலை உங்களிடம் ஒப்படைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் எழுதுவதை இலட்சியமாகக் கொண்ட நான் சமீபத்தில் எழுதிய எட்டுச் சிறுகதைகளின் தொகுப்பு தான் இந்த நூல்.

    வளரும் பருவத்தில் சாதிப்பற்று இன்றி சரிசமமாகப் பழகும் மாணவர்கள் வாலிபர்கள் ஆனதும் சாதி வெறி என்னும் சாக்கடையில் விழுந்து விடுகிறார்களே என்ற வேதனையில் வெளிப்பட்டது தான் இன்னொரு சுதந்திரப்போர்.

    கோபுரங்கள் சாய்வதில்லை என்ற சிறுகதை ஒரு விவசாயியின் வெள்ளை மனதையும் பெருந்தன்மையையும் வெளிப்படுத்துவது; இச்சிறுகதை திருச்சி ரோட்டரி சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது.

    அன்புள்ள அப்பா வளர்ந்துவரும் முதியோர் இல்லங்கள் ஏற்படுத்திய வேதனையால் விளைந்தது. மீண்டும் ஒரு சகுந்தலை இன்றைய நாகரிக உலகில் இளம் பெண்கள் பாதிக்கப்படுவதை நினைத்தால் வந்தது. கலையும் மேகங்கள் உறவுகளின் நிலைகளை நினைத்ததால் உருவானது.

    தென்றல் மூட்டிய தீ முதிர்கன்னிகளை நினைத்து நினைத்து உருகியதால் உருவானது! காமம் ஆணைப் போல பெண்ணுக்கும் உண்டு என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக எழுதப்பட்டது.

    இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள விடியல் இலக்கிய இதழ் பன்மலரில் முதல் பரிசு பெற்றது. குழந்தை தொழிலாளர்கள் கூடாது என்பதை வலியுறுத்த எழுதப்பட்டது.

    நிலைமாறும் நிஜங்கள் சற்றே பெரிய கதை. உண்மையான ஒரு போலீஸ் அதிகாரி உடைந்து போன ஒரு பெண் இவர்களை மையமாக வைத்துப் பின்னப்பட்டது. நாடக பாணிக் கதை என்று கூட சொல்லலாம். ஆம்! அந்தக் கதையை நாடகம் ஆக்கி நானே இயக்கி, நடித்தும் இருக்கிறேன்.

    இத்தொகுப்பில் உள்ள எட்டுச் சிறுகதைகளும் உங்கள் இதயத்தைத் தொட்டுப் பேசி, உங்கள் உள்ளுணர்வுகளைத் தட்டி எழுப்பும் என்று நம்புகிறேன். இவற்றைப் படிப்பவர்கள் ஒரு நொடியாவது நாட்டு நடப்புகளை நினைத்தால் அதுவே இவற்றை எழுதியவனின் வெற்றி! எனது நூல்களை வரிசையாக வெளியிட முன்வந்துள்ள மணிமேகலைப் பிரசுரம் இதை அழகிய முறையில் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. அதன் நிர்வாகி திருமிகு.ரவி தமிழ்வாணன் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

    இந்நூலில் உள்ள கதைகளைப் படித்து அற்புதமான ஓர் அணிந்துரையை வழங்கியுள்ளார் சிறுகதைச் செம்மல் நற்கதை நம்பி பேராசிரியர் டாக்டர் அய்க்கண் MA, BT, D.Litt அவர்கள். அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி என்றும் இருக்கும்.

    எனது சிறுகதைகளுக்குப் பரிசளித்துப் பாராட்டிய திருச்சி ரோட்டரி சங்கத்தாருக்கும், பன்மலர் இலக்கிய இதழ் ஆசிரியர் குழுவினர்க்கும் இந்த நூல் வெளிவர அவ்வப்போது ஆலோசனை தந்து உதவிய நண்பர் வாழைக் குறிச்சி பொன்.மணிமொழி அவர்களுக்கும் என் நன்றி என்றும் உரியது. எனது படைப்புகளின் முதல் வாசகியாக இருந்து என்னை இலக்கிய உலகில் ஊக்கப் படுத்திவரும் என் துணைவியார் திருமதி சுகுமாரி BA BEd அவர்களுக்கும் இவ்வேளையில் நன்றி கூறுகிறேன்.

    அன்புடன்,

    வீ.கே.கஸ்தூரிநாதன்,

    குழிபிறை

    அணிந்துரை

    தேசியக் கவிஞர் வீ.கே.கஸ்தூரிநாதன் நாடறிந்த நல்ல கவிஞர்; நாவாடும் பட்டி மன்றங்களிலும் கருத்தரங்குகளிலும் பங்கேற்று சிறப்பான புகழ் ஈட்டியுள்ளவர்; நற்றமிழ்ப் புலமையிலும், ஆய்வுத் திறனிலும் ஆழமிகு அறிவுபெற்றுள்ள அறிஞராகத் திகழ்பவர். அவருடைய ஆற்றலில் மற்றொரு பரிணாமமாகச் சிறுகதைத் துறையிலும் தம் கைவந்த திறமையை இந்நூல் மூலம் நிலைப்படுத்தியுள்ளார்.

    இதற்கு முன்பே அவரது சிறுகதைகளைப் படித்து மனம் பறிகொடுத்த ரசிகன் நான். நிகழ்காலத்து நடப்புகளைச் சுவையாகவும் துல்லியமாகவும் படம் பிடித்துக்காட்டி, அதன் வழியாக எதிர்காலத்தில் கடைப்பிடிக்கத் தகுந்த குறிக்கோள் வாழ்க்கையை குறிப்பாக உணர்த்தி வழிகாட்டும் இலக்கியத் திறனை நான் பார்த்து வியந்து பாராட்டியிருக்கிறேன், இன்னொரு சுதந்திரப்போர் என்னும் தொகுப்பிலே, அருமையான சிறுகதைகள் சிலவற்றைக் கண்டு மகிழ்கிறேன்.

    ஒரு கவிஞர், கதாசிரியராகப் பரிணமிக்கும்போது, முதலில் கதையின் தலைப்புகளே நெஞ்சையள்ளும் கவிதை வரிகளாக மலரும் வாய்ப்பு ஏற்படும். இத்தொகுப்பில், இடம்பெற்றுள்ள தென்றல் மூட்டிய தீ நிறம் மாறும் நிஜங்கள் கலையும் மேகங்கள், விடியல் என்ற கதைத் தலைப்புகளே நம்முள் கவிதையுணர்வை உந்தி எழச்செய்கின்றன.

    தலைப்பில் மட்டும் அன்றி, கதையோட்டத்தில் நடையிலும் ஆங்காங்கே கவிதைச் சொற்றொடர்கள் தலைதுாக்கி எழுந்து நின்று ஓட்டத்தை அழகு படுத்துகின்றன.

    புழுவாய் நெளிந்து புல்லாய் மெலிந்து நாராக நலிந்து சருகாகச் சுருண்டு விட்டாள் (பக்கம் 53), என்ற தொடர் அவமானத்திற்குள்ளான ஒரு பெண்ணின் அவலத்தை எவ்வளவு துடிப்பாக உணர்த்துகிறது?

    "சீமாவின் கண்களில் மின்னலாய் எட்டிப்பார்த்தன இரு கண்ணீர் மொட்டுகள் (பக்கம் 39), என்ற வரியில் எத்துணை அழகான உருவகம் எட்டிப் பார்க்கிறது, பாருங்கள்!

    காதலர்கள் இருவரும் காற்றுக்கு இடம்தராமல் நடந்தார்கள் (பக்கம் 39), என்ற காட்சியில் பண்டைய வளியிடை போழப் படா அ முயக்கு (குறள் 108) வீமும்" இருவரின் புதுமை வேகத்தைக் காண்கிறோம்!

    எழுத்தாளர், சிறந்த மேடைப் பேச்சாளர் என்பதன் தாக்கங்களையும் இடையிடையே கண்டுணர்ந்து மகிழ்கிறோம்.

    கறுப்பாக காபி என்ற பெயரில்… காபி கலக்கலில் கலைந்துபோன சந்தோஷங்கள் தோன்றின... (பக்கம் 18)" என்ற வரிகளில் நகைச்சுவை நிறையவே கலந்து சுவையைத் தோற்றுவிக்கிறது.

    மனுசனுக்கு எல்லா உறுப்புகளையும் வெளியே வச்ச கடவுள், நாக்கை மட்டும் 32 காவலர்களுக்கு மத்தியிலே தண்ணியிலே ஏன் ஊறப் போட்டான், தெரியுமா? அசிங்கமா அடிக்கடி பேசற நாக்கை அப்பப்ப கழுவனும்ங்கிறதுக்காகத்தான் (பக்கம் 35) என்ற கருத்து, ஓர் உடற்கூறு அமைப்புக்குச் சுவையான காரணியாக ஒலிக்கிறது.

    இன்னொரு சுதந்திரப்போர் என்னும் புரட்சி கரமான தலைப்பில் அமைந்துள்ள கதை, இன்றையக் காலத்தின் சாதீயத்தையும் அரசியலையும் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரு நல்ல ஆசிரியரிடம் உருவான மாணவர்கள் இருவரே, பிற்காலத்தில் சாதிச் சழக்குகளில் சிக்கி விலங்குகளாய் மாறிவிட்ட அவலத்தைக்

    Enjoying the preview?
    Page 1 of 1