Indiravin Kathai
By Sivasankari
()
About this ebook
She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.
As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.
'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Read more from Sivasankari
Nappaasai Rating: 0 out of 5 stars0 ratingsAndhamma Romba Nallavanga Rating: 5 out of 5 stars5/5Thavam Rating: 5 out of 5 stars5/5Deivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsAairam Kaalathu Payir Rating: 5 out of 5 stars5/5Amma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsMookkanaangayiru Rating: 5 out of 5 stars5/5Amma Rating: 5 out of 5 stars5/5Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsPaalangal Rating: 0 out of 5 stars0 ratingsSuriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5Kuzhappangal Rating: 0 out of 5 stars0 ratingsOverdose Rating: 0 out of 5 stars0 ratingsIvalum Avalum Rating: 0 out of 5 stars0 ratingsPayirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5Avargalukku Puriyathu Rating: 5 out of 5 stars5/5Innoru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsUyarndhavargal Rating: 5 out of 5 stars5/5Kutty Rating: 0 out of 5 stars0 ratingsOru Pahal Oru Iravu Rating: 5 out of 5 stars5/5
Related to Indiravin Kathai
Related ebooks
Kaathirukkirean! Rating: 0 out of 5 stars0 ratingsNirkka Nizhal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsSetril Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsIndia Enum Aithegam Rating: 0 out of 5 stars0 ratingsKalveri Kolluthadi... Rating: 5 out of 5 stars5/5Uppu Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsSuriya Vamsam - Part 2 Rating: 5 out of 5 stars5/5Suriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5Kanne Kaathiru! Rating: 0 out of 5 stars0 ratingsPuthuputhu Anubavangal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsBharatha Dharisanam India Payanakathai Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Padikkalam Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kiliye! Azhagiya Rani! Rating: 0 out of 5 stars0 ratingsAnubava Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsPuthuputhu Anubavangal Part-3 Rating: 0 out of 5 stars0 ratingsKanne Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsOru Paravaiyin Saranalayam Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Varisu Thedukirar Rating: 0 out of 5 stars0 ratingsAmma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Manam Rating: 0 out of 5 stars0 ratingsPathinooravathu Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsSumma Irukkatha Pena Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Mannil Varum! Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyathai Sol Kiliye..! Rating: 0 out of 5 stars0 ratingsMahabalipurathil Marupadi Narasimma Pallavan Rating: 0 out of 5 stars0 ratingsDhanam Rating: 0 out of 5 stars0 ratingsSaayatha Bommaigal Rating: 5 out of 5 stars5/5Kaaranamilla Kaariyangal Rating: 0 out of 5 stars0 ratingsAppavin Radio Rating: 0 out of 5 stars0 ratingsAangal Sevvai Pengal Velli Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Indiravin Kathai
0 ratings0 reviews
Book preview
Indiravin Kathai - Sivasankari
http://www.pustaka.co.in
இந்திராவின் கதை
Indiravin Kathai
Author:
சிவசங்கரி
Sivasankari
For more books
http://www.pustaka.co.in/home/author//sivasankari-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அணிந்துரை
உலக வரலாற்றிலே பல சமுதாயங்கள் தோன்றி மறைந்துள்ளன. சில, பல்வேறு துறைகளிலும் முன்னேறி உலக முன்னணியில் நிற்பதையும், அதே சமுதாயங்கள் காலப்போக்கில் சீரழிந்துபோவதையும் காண்கிறோம். இதற்கான காரணங்களை அலசிப்பார்க்கில், ஓர் உண்மை நன்கு விளங்கும். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவ்வப்போது சில சோதனைகளும் நெருக்கடிகளும் ஏற்படுகின்றன. அந்த நிலையைச் சமாளிக்கத் தகுதிபெற்ற தலைமை அச்சமுதாயத்திற்குக் கிடைக்கும் போது, இந்நெருக்கடிகளைச் சமாளித்து அச்சமுதாயம் முன்னேறிச் செல்லுகின்றது. இல்லையேல், சீர்குலைந்து பாழ்பட்டுப்போகும் அவலநிலை ஏற்பட்டுவிடுகிறது.
இந்தியாவிற்கு 1971-ம் ஆண்டு ஒரு பெரிய சோதனைக் காலம். நம் அண்டை நாடான கிழக்கு வங்காளத்திலிருந்து, மேற்கு பாகிஸ்தான் ராணுவ அக்கிரமங்களைத் தாங்கமுடியாமல், ஒரு கோடிக்கு மேற்பட்ட அகதிகள் நம் நாட்டிற்கு வந்து அடைக்கலம் புகவேண்டி ஏற்பட்டது. இம்மக்களுக்கு இருக்க இடமும், உண்ண உணவும், வைத்திய சுகாதார வசதிகளும் செய்துகொடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு இந்தியாவிற்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நிர்வாக இயந்திரத்திற்கு ஏற்பட்ட புதிய வேலைப்பளுவும், நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியும், நம்முடைய எதிர்காலத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடிய நிலையை ஏற்படுத்திவந்தது. இக்கோடிக்கணக்கான மக்களைத் திரும்பவும் கிழக்கு வங்காளத்திற்குத் திருப்பி அனுப்ப முடியுமா என்ற சந்தேகமும் அச்சமும் நம்மைப் பீடித்திருந்தது. இந்த இருள் சூழ்ந்த நிலையில், நாட்டிற்கு வழிகாட்டும் நல்விளக்காக நமது பிரதமர் விளங்கினார்கள். இந்திரா காந்தி அம்மையார் இந்த நெருக்கடியான நிலையில், தக்க நடவடிக்கைகளை தக்க காலங்களில் எடுத்து, கடைசிக் கட்டத்தில் ஏற்பட்ட இந்திய பாகிஸ்தான் போரையும் திறமையுடன் நடத்தி வெற்றிக்கொடி நாட்டினார்.
திருமதி சிவசங்கரி தமிழ் மக்களுக்குத் தரும் இந்திராவின் கதையை 1971 டிசம்பர் மாதம் 3-ம் தேதிய நிகழ்ச்சியுடன் ஆரம்பித்திருப்பது, சாலப்பொருத்தமாக அமைந்துள்ளது. பாரதப் பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை, பல கோணங்களிலிருந்து படமெடுத்து நமக்கு சிவசங்கரி வழங்கியுள்ளார்.
ஒரு மகளாக, தாயாக, மனைவியாக என்று எத்தனை கோணத்திலிருந்து இந்திராவைப் பார்க்க முடியுமோ அத்தனை விதத்தில் பார்த்து எழுதிவிட்டேன்
என்று சிவசங்கரி கூறியிருப்பதை, இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்வர்.
பிரதமர் இந்திரா காந்தியைப் பற்றிய வாழ்க்கை நூல்கள் பல, ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் வந்துள்ளன. தமிழ்மொழியில் இத்தகைய நூல்கள் வெளிவரவில்லை என்றதொரு குறையை சிவசங்கரி போக்கியுள்ளார். நம்முடைய பிரதமரை அரசியல் தலைவர் என்ற முறையில் மட்டுமல்லாது, அவருடைய மற்ற குணாதிசயங்களை தமிழ் உலகிற்கு இப்புத்தகம் அறிமுகப்படுத்துகிறது. முக்கியமாக இளந்தலைமுறை இந்நூலைப் படிப்பதின் மூலம் பெரும் பயன் எய்துவார்கள் என்பது எனது நம்பிக்கை.
இவ்வாழ்க்கை வரலாற்றை உருவாக்கிய நூலாசிரியர் சிவசங்கரிக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
- சி. சுப்பிரமணியம்
முன்னாள் மத்திய நிதியமைச்சர்
புது டெல்லி
1972
நன்றி
தன்னைப் பற்றிய கேள்வி எதுவாக இருப்பினும் அதற்குச் சிரித்த முகத்துடன் பதிலளித்து, எந்த நாள், எந்த நேரத்தில் என்னைக் கண்டாலும் 'செளக்கியமா?' என்று முகம் மலரக் கேட்டு என்னைப் பெரிதும் கவர்ந்த நம் பிரதமர் திருமதி இந்திரா காந்திக்கும்,
பலவகை சுவையான தகவல்களை எனக்குக் கிடைக்கும்படி செய்த அவரது செயலாளர்கள் திரு. சேஷன், திரு. சாரதா பிரசாத், திரு. மேனன், குமாரி உஷா பகத் ஆகியோருக்கும்,
இந்நூலுக்குச் சிறப்பான முன்னுரை அளித்த மதிப்பிற்குரிய உயர்திரு. சி. சுப்பிரமணியம் அவர்களுக்கும்,
இப்புத்தகத்தை உருவாக்கக் காரணமாக இருந்த திரு. எஸ். வெங்கடராமன் அவர்களுக்கும்,
என் கணவருக்கும்,
என் அன்புகலந்த நன்றியும் வணக்கங்களும் உரித்தாகுக.
சிவசங்கரி.
முன்னுரை
1971-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி, திருமதி இந்திரா காந்தியின் யுத்த நிறுத்த அறிக்கையைக் கேட்ட வினாடியிலிருந்து என் மனதில் ஏதோவொரு கொந்தளிப்பு.
உலகமெங்கிலும் பயணம் செய்து, தன் நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க உதவி வேண்டி நின்று, அவர்கள் ஒருவரும் முன்வராதுபோகவே, தனி நாடாகப் போராடி பங்களா தேசத்தை அந்நாட்டிற்கு உரியவரிடமே ஒப்படைத்து, அதுநாள்வரை பாகிஸ்தானின் கவனத்தை ஒருபக்கமாக வைத்திருக்கவேண்டி மேற்கிலும் அவர்களுடன் போரிட்டுக்கொண்டிருந்துவிட்டு, பங்களா தேசம் விடுதலை பெற்ற மறுகணமே மேற்கத்திய எல்லையிலும் ஒருபக்க யுத்த நிறுத்தத்தைக் கொணர்ந்து, உலகத் தலைவர்களின் நடுவில் ஒரு சாணக்கியர் என்று பெயரெடுத்துவிட்ட இந்திரா காந்தியைப்பற்றி இன்னும் என்னவெல்லாமோ தெரிந்துகொள்ள என்னுள் ஒரே துடிப்பு.
ஆனானப்பட்ட அரசியல் தலைவர்களையும், அரசியலில் ஜாம்பவான்கள் என்று பெயரெடுத்துவிட்ட பலரையும், தன் ஒரே செய்கையால் இருந்த இடம் தெரியாமல் செய்துவிட்ட பிரதமரின் கதையை நான் எழுதத் துணிந்துவிட்டேன்.
எப்படி?
அரசியல் தலைவியாக இல்லை. பின் எப்படி?
ஒரு தாயாக, ஒரு பெண்ணாக, ஒரு நல்ல எஜமானியாக, மனிதாபிமானம் கொண்ட ஒரு பெண்மணியாக... இன்னும் என்னவெல்லாமாக என் கண்களில் தோன்றுகிறாரோ, அதைத்தான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.
முதலில் நான் பேட்டிகண்டுவிட்டு, பிறகு ஒரு மாதம் கழித்து மீண்டும் டெல்லிக்குச் சென்று அவரைச் சந்தித்தபோது, 500 பேர்கள் மத்தியில் என்னைப் புரிந்துகொண்டு, இருபதடி தொலைவில் இருக்கையிலேயே, ஓ, நீங்களா! செளக்கியமா?
என்று அன்பாய், அழகாய்க் கேட்டாரே... அந்த இந்திராவைப்பற்றி எழுதப்போகிறேன்.
பல நூற்றுக்கணக்கானவர் அவரைச் சந்திக்க இருக்கையில், உங்களை மட்டும் படம் எடுத்தால் போதாது, உங்கள் பேரனுடனும் சேர்த்து எடுக்க வேண்டும்...
என்று நான் கேட்டபோது, உடல்நலம் சரியில்லாமல் அழுது கொண்டிருந்த ராகுலை ஆள் மேல் ஆள் விட்டு சிருங்காரித்து அழைத்துவரச் செய்து, எனக்குப் படமெடுக்க சிரித்த முகத்துடன் நின்றாரே... அந்த இந்திராவைப் பற்றி எழுதப்போகிறேன்.
புகழ்பெற்ற லண்டன் 'டெய்லி மிரர்' ரிப்போர்ட்டர் ஜான் பில்கர் சொல்கிறார், இந்த ஜூலை மாதம் உலகத்தின் வலிமைமிக்க பெண்ணான இந்திரா காந்தியை நான் சந்திக்கச் சென்றிருந்தேன். 'வாருங்கள்' என்று சொல்லிவிட்டு, 'என் மூக்கின் மேல் ஒரு பரு வருகிறது' என்று சொல்லி குழந்தையாய் சிரித்தார் இந்திரா. நான் ஒரு பத்திரிகையாளன், அவருடைய பிம்பத்தை என் எழுத்து மூலம் உலகத்துக்குத் தரப்போகிறேன் என்பது தெரிந்திருந்தும், சட்டென்று மனதில் தோன்றியதைப் பேசி, தான் தானாகவே இருந்தார். இது என்னை மிகவும் கவர்ந்தது.
அந்த இந்திராவைப்பற்றி எழுதப்போகிறேன்.
எனக்கு ஒரு சமயம் முதுகு பிடித்துக்கொண்டுவிட்டது. அந்த 15 நாட்களிலும் எனக்கு மருந்து தடவி முதுகைப் பிடித்துவிட்டார் இந்திரா...
என்று திரு. நேருவின் வீட்டில் பல ஆண்டுகள் பணியாற்றிய விமலா சிந்தி சொல்கிறாரே... அந்த இந்திராவைப் பற்றி எழுதப்போகிறேன்.
இந்திராவின் அன்றாட அலுவல்கள், அவர் தினம் சாப்பிடும் உணவு வகைகள், உடுக்கும் உடைகள், சிப்பந்திகளிடமிருந்து மருமகள் ஸோனியா வரை பழகும் விதம், ஏன், அவர் செய்துகொள்ளும் அலங்காரம் முதற்கொண்டு எழுதப் போகிறேன்.
இந்திராவின் கதையை வெகு வித்தியாசமாக எழுத, அரசியலின் கலப்பே இல்லாமல் எழுத எனக்கு ஆசைதான்... என்றாலும், அது சாத்தியமான காரியமில்லை.
ஏன்?
பிறப்பிலிருந்து இந்திரா அரசியலுடன் ஒன்றுகலந்து வளர்ந்தவர். அவரை அதிலிருந்தும், அரசியலை அவரிடமிருந்தும் பிரிப்பது சுலபமில்லை. அதனால், நம் கதையிலும் அரசியல் வரும். ஆனால், எங்கெங்கு அவசியமோ, அங்கங்குதான்.
இன்றைய இந்திராவைப்பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பிறந்து வளர்ந்த விதத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக, இந்திராவின் கதையைத் தொடக்கத்திலிருந்து ஆரம்பித்து எழுதிவிட்டு, இன்றைய பிரதமரைப் பற்றியும் நிறைய சொல்லப்போகிறேன்.
- சிவசங்கரி
விழுப்புரம்
1972.
***
1
"நம் நாட்டைச் சுற்றிக் கருமையான பயங்கரம் சூழ்ந்திருக்கும் இந்நேரத்தில் நான் உங்களோடு பேசுகிறேன். இன்று மாலையிலிருந்து பாகிஸ்தான் நம்மோடு முழுநேர யுத்தத்தைத் தொடங்கிவிட்டது.
"கடந்த மார்ச் மாதத்திலிருந்து நாம் பெரும் சுமைகளைப் பொறுமையாகத் தாங்கிக்கொண்டிருக்கிறோம். உலக நாடுகளிடம் நம் குறைகளை முறையிட்டு, சமாதானமாக நம் பிரச்சினையைத் தீர்க்க நாம் பாடுபட்டோம். ஆனால், உலகத்தின் காதுகளில் நம் சுமையின் ஓலம் விழவில்லை. பங்களாதேஷின் வீரர்கள் எந்த சுதந்திரத்திற்காகப் பாடுபட்டார்களோ, படுகிறார்களோ, அந்தச் செய்கைகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது.
"பங்களாதேஷில் ஆரம்பித்த யுத்தம், இன்று இந்தியாவின் மேல் திரும்பி, என் மேல், என் நாட்டின் மேல், என் அருமை மக்கள் மேல் ஒரு மாபெரும் சுமையை ஏற்றிவிட்டது. நமக்கும் இந்த யுத்தத்தை எதிர்நோக்குவதைத் தவிர வேறு வழி தென்படவில்லை. நமது வீரர்களும், படை அதிகாரிகளும் நாட்டைக் காக்கத் தம்தம் பொறுப்புகளைச் செவ்வனே செய்ய ஆரம்பித்துவிட்ட இந்நிலையில், ஒவ்வொரு பிரஜையின் ஒத்துழைப்பும் மிக அத்தியாவசியமாகிறது.
"நம் நாட்டில் நம்மிடையே இருக்கும் ஒற்றுமையைக் காணும் எனக்கு, நாம் எதிரியை முறியடிப்பதும், அநியாயத்தை வேரோடு அறுப்பதும் நிச்சயம் என்றே புரிகிறது. ஆனால், இதைச் செய்யும் நேரத்தில் நாம் அனைவரும் பலதரப்பட்ட கஷ்டங்களை அனுபவிக்க நேரலாம், பலவிதமான தியாகங்களைச் செய்யவேண்டி வரலாம்.
"பாரத நாடு, சமாதானத்தை விரும்பும் நாடு. நமது ஜனநாயகத்தைக் காத்துக் கொண்டால்தான், நமது சமாதானம் நிலைத்து நிற்கும் என்பதும் நமக்குத் தெரிந்திருப்பதால், நாமும் நம்மை, நம் ஜனநாயகத்தை, அதன் மூலம் நம் சமாதான உணர்வைக் காத்துக்கொள்ள இன்று போரில் இறங்குகிறோம்.
"அநியாய ஆக்ரமிப்பை அடக்குவோம். ஒன்றுபட்ட இந்தியாவிற்கு இது பெரிய காரியமல்ல. ஒற்றுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் நாம் ஒத்துழைப்போம்.
ஜெய் ஹிந்த்!
பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி ஆற்றிய மேற்சொன்ன உரையை நம்மில் பலர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3-ம் தேதி நள்ளிரவில் கேட்டிருப்போம். சொற்பொழிவைக் கேட்டுவிட்டு சிலர், 'எதற்காக திருமதி காந்தி இப்படித் தயங்கித் தயங்கி பேசுகிறார்?' என்று கேட்டதையும், ஹிந்தி மொழிபெயர்ப்பைக் கேட்டு விட்டு, 'என்ன இது! ஆங்கில உரைக்கும் ஹிந்தி மொழிபெயர்ப்புக்கும் இத்தனை வேறுபாடுகள் உள்ளனவே!' என்று சிலர் வியந்ததையும் அறிவோம், இல்லையா?
ஆனால், நமது பிரதமர் அன்று மாலை கல்கத்தாவிலிருந்து போர்ச்செய்தியைக் கேட்டுவிட்டு அவசரம்அவசரமாகத் தலைநகரம் திரும்பியவர், நேராகப் பார்லிமெண்டுக்குச் சென்றதையும், அங்கு தயாராக இருந்த மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தியதையும், பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு இரவு 12 அடிக்க ஒருசில நிமிடங்கள் இருக்கையிலேயே அகில இந்திய வானொலி நிலையத்திற்கு வந்து விட்டு, முன்னதாக, தான் பேசப்போகும் குறிப்பைப் படிக்கக்கூட நேரமில்லாமல் சொற்பொழிவைத் தொடங்கிவிட்டதையும், அவ்வப்போது திருத்திக்கொண்டே பேசியதால் உரையின் நடுவில் தடங்கல் ஏற்பட்டதையும், முன்னேற்பாடாகத் தயாரித்துவைத்திருந்த ஆங்கில உரையின் மொழிபெயர்ப்பான ஹிந்தி உரையும், பிரதமர் ஆற்றிய உரையும் மிகவும் வித்தியாசமாக இருந்ததற்கு இதுவே காரணம் என்பதையும் நம்மில் எத்தனை பேர் அறிவோம்?
நம் பாரதத்தின் பல மொழிப் பத்திரிகைகள், அன்றாடம் வரையும், எழுதும், திருமதி இந்திராவை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். ஒரு பிரதமராக, நேருவின் பெண்ணாக, அவர் ஆற்றும்,