Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Edho... Nadakirathu!
Edho... Nadakirathu!
Edho... Nadakirathu!
Ebook128 pages53 minutes

Edho... Nadakirathu!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352850617
Edho... Nadakirathu!

Read more from Rajesh Kumar

Related to Edho... Nadakirathu!

Related ebooks

Reviews for Edho... Nadakirathu!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Edho... Nadakirathu! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    ஏதோ... நடக்கிறது!

    Edho... Nadakirathu!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    ஏதோ... நடக்கிறது!

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    ***

    1.

    நோபல் பரிசு 2011-ஆம் ஆண்டு மொத்தம் 13 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பெளதிகம், இரசாயனம், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம்- இந்தத் துறைகளில் சாதனை புரிந்தவர்கள் பரிசு பெறும் நபர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள். பரிசுத்தொகை ஒவ்வொரு துறைக்கும் இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ. 7.5 கோடி. ஒரு துறையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் தேர்வுக் குழுவினர் அறிவிக்கும் விகிதத்தில் அது பிரித்து வழங்கப்படும்.

    அமிர்தவர்ஷிணி ‘ஜூபிடர் டி.வி.’ ஸ்டேஷனுக்குள் நுழைந்தபோது காலை பதினோரு மணி. மாம்பழ வண்ணப் பட்டுப்புடவை. நெற்றியில் மின்னும் ஒரு பெரிய குங்குமப் பொட்டோடு காரிலிருந்து இறங்கியவளுக்கு டி.வி. ஸ்டேஷன் எம்.டி. குகன் ஒரு பெரிய பொக்கேயைக் கையில் கொடுத்து சால்வையைப் போர்த்தினார்.

    வெல்கம் மேடம்!

    ஸாரி மிஸ்டர் குகன்... வீட்ல இருந்து சீக்கிரமாய்த்தான் புறப்பட்டேன். வர்ற வழியில் டிராஃபிக்.

    நோ ப்ராப்ளம் மேடம்! நீங்க எங்க டி.வி. ஸ்டேஷன் வர ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம். வீ ஹானர்ட் பை யூ...

    உள்ளே போலாமா?

    ப்ளீஸ்...

    குகன் அமிர்தவர்ஷிணியை அழைத்துக் கொண்டு உள்ளே போனார்.

    ஸ்டேஷனின் வரவேற்பறையே அமிர்தவர்ஷிணிக்குப் பிரம்மாண்டம் காட்டியது. ஒரு சிறிய மைதானம் போன்ற ஹால். எல்லாத் திசைகளிலும் கண்ணாடிச் சுவர்கள். ஏ.ஸி.யின் குளிர். மெலிதான இசை.

    அமிர்தவர்ஷிணி நடந்துகொண்டே கேட்டாள். இந்த ஜூபிடர் டி.வி. ஆரம்பிச்சு எத்தனை வருஷம் இருக்கும் மிஸ்டர் குகன்?

    மூணு வருஷம் மேடம்...!

    இந்த மூணு வருஷகாலத்தில் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் நீங்கதான் முதலிடம் போலிருக்கு...

    ஆமாம் மேடம்...!

    பெரிய சாதனைதான். இந்தச் சாதனையை உங்களால எப்படி அடைய முடிஞ்சுது?

    "ரொம்பவும் சிம்பிள் மேடம்...! பொதுவா டி.வி.யை ‘இடியட் பாக்ஸ்’ன்னு சொல்லுவாங்க. அதை நாங்க விஸ்டம் பாக்ஸாய் மாத்தினோம். மத்த டி.வி. சானல்கள் சினிமாவுக்கும், சீரியல்களுக்கும் எழுபத்தைஞ்சு சதவீதம் முக்கியத்துவம் குடுப்பாங்க. இருபத்தைஞ்சு சதவீதம் பொதுநலன் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் குடுப்பாங்க. ஆனா நாங்க பொதுநலன் சார்ந்த விஷயங்களுக்கு தொண்ணூறு சதவீதம் ஒதுக்கி, வெறும் பத்து சதவீதம் மட்டுமே சினிமாவுக்கும் சீரியல்களுக்கும் ஒதுக்கியிருக்கோம்.

    இதன் காரணமாய்த்தான் மக்கள் எங்களுடைய ஜூபிடர் டி.வி.யை விரும்பிப் பார்க்கிறாங்க. நாங்க ஒளிபரப்பற எல்லா நிகழ்ச்சிகளும் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் நம்பர் ஒன்னில் இருக்கு. மக்களுக்கு வேண்டியது சீரியல்கள் இல்லை. அவர்களைப் பாதிக்கிற சீரியஸான விஷயங்கள்தான்!

    குட்... நல்ல கான்செப்ட்! இதே மாதிரியான எண்ணம் மற்ற டி.வி. சானல்காரர்களுக்கும் வந்தா பரவாயில்லை. நாட்டுக்குச் சுதந்திரம் கிடைச்ச நாளான ஆகஸ்ட் பதினைந்தாம் தேதியும், காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதியும் விடுமுறை நாட்களாய் இருக்கிற காரணத்தினால்தான் அதை மக்கள் மறக்காம இருக்காங்க... இல்லேன்னா என்னிக்கோ அந்தத் தேதிகளை மக்கள் மறந்து போயிருப்பாங்க...

    "யூ ஆர் கரெக்ட் மேடம்! இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நடக்கும்போது மட்டும்தான் இன்றைய இளைஞர்களுக்கு நாட்டுப்பற்று வரும். அதுக்கப்புறம் அது காணாமப் போயிடும். நாடு நல்லா இருந்தாத்தான் ஒவ்வொரு வீடும் நல்லாயிருக்கும் என்கிற உணர்வை இளைய சமுதாயத்துக்கு ஊட்ட வேண்டிய கடமை எங்களைப் போன்ற மீடியா பீப்பிளுக்கு நிறையவே உண்டு.

    சமீபத்தில் கூட புதுசா ஒரு நிகழ்ச்சியை ஸ்டார்ட் பண்ணியிருக்கோம். முழுக்க முழுக்கக் கல்லூரி மாணவர் மாணவியர்க்கான நிகழ்ச்சி. நிகழ்ச்சியோட தலைப்பு: ‘எட்டாத தூரம் என்று எதுவும் இல்லை.’

    இஸிட்! தலைப்பு நல்லாயிருக்கு... என்னிக்கு டெலிகாஸ்ட்?

    ஒவ்வொரு சண்டேயும் காலை பதினோரு மணிக்கு!

    அவசியம் நான் பார்க்கிறேன்...

    இருவரும் பேசிக்கொண்டே நடந்தார்கள். லிஃப்டில் பயணித்து மூன்றாவது மாடிக்கு வந்து அந்தப் பெரிய அறைக்குள் நுழைந்தார்கள். பெப்பர்மின்ட் வாசனையோடு ஏ.சி. குளிரில் இருந்தது அறை.

    மேடம் இதுதான் என்னோட பர்சனல் ரும். ஒரு டென் மினிட்ஸ் இங்கே உட்கார்ந்து ரெப்ரெஷ் பண்ணிட்டு ஒரு காப்பி சாப்பிட்டுப் போலாமா?

    வேண்டாம் மிஸ்டர் குகன்! நான் காப்பி, டீ, கூல்டிரிங்க்ஸ் சாப்பிடறதை விட்டு ரொம்ப நாளாச்சு. நேரா சூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயிடலாம்.

    மேடம்! நிகழ்ச்சிக்குப் போறதுக்கு முந்தி இந்த 'டாக் ஷோ’வை நடத்தற நீலவண்ணக் கண்ணன் உங்ககிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் பேசணும்னு சொன்னார்.

    தாராளமாய்ப் பேசலாம்.

    ப்ளீஸ்... உட்காருங்க மேடம்!

    அமிர்தவர்ஷிணி உட்கார்ந்தாள்.

    குகன் மேஜை மீது இருந்த இன்டர்காம் ரிசீவரை எடுத்துப் பேச... அடுத்த சில விநாடிகளில் அந்த இளைஞன் உள்ளே வந்தான். கறுப்பு நிற ஃபுல்கட்டில் சிவப்பு டை அணிந்து ஒரு ஹீரோவுக்குரிய ஹேண்ட்ஸம் காட்டினான்.

    வணக்கம் மேடம்!

    வணக்கம்.

    அவன் பவ்யமாய் நின்றபடி பேசினான். மேடம்... இந்தக் ‘குறையொன்றும் இல்லை!’ என்கிற இந்த டாக்-ஷோ நீங்க பார்த்திருக்கீங்களா?

    ஒரே ஒரு தடவைதான் பார்த்தேன். அதுவும் ஒரு அஞ்சு நிமிஷம்தான். அதுக்கப்புறம் வேற ஒரு வேலை வந்துட்டதால தொடர்ச்சியாய்ப் பார்க்க முடியலை. ஸாரி டு ஸே திஸ்...!

    "பரவாயில்லை மேடம்...! இன்னிக்கு நீங்க இந்தக் ‘குறையொன்றும் இல்லை' நிகழ்ச்சியின் சீஃப் கெஸ்ட். ஒரு பிரபலமான கல்லூரியில் சைக்காலஜி புரஃபசராய் ஒர்க் பண்ற நீங்க மனிதனின் உளவியல் பற்றி நிறையப் புத்தகங்கள் எழுதியிருக்கீங்க... அதுல எனக்குப் பிடித்த ஒரு புத்தகம் ‘தி டீப் சைலன்ஸ் ப்ளேஸ் இன் திஸ் வேர்ல்ட்.’ அந்தப் புத்தகத்தைப் படிச்ச பின்னாடிதான் எனக்கு இப்படியொரு ‘டாக்-ஷோ’ பண்ணணும்னு தோணிச்சு. உடனே எம்.டி.கிட்ட சொன்னேன். அடுத்த விநாடியே அவர் ஓ.கே. சொல்லிட்டார்.

    "கடந்த ஒரு வருஷ காலமாய்

    Enjoying the preview?
    Page 1 of 1