Ange... Inge... Enge...?
By Rajesh Kumar
()
About this ebook
Read more from Rajesh Kumar
Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Theeratha Dhrogam Rating: 0 out of 5 stars0 ratingsManidhan Rating: 5 out of 5 stars5/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Andha October 14 Rating: 5 out of 5 stars5/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Oomai Pullanguzhalgal Rating: 5 out of 5 stars5/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5Nadunishi Thendral Rating: 5 out of 5 stars5/5
Related to Ange... Inge... Enge...?
Related ebooks
Nagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratingsJanuary February Mortuary Rating: 0 out of 5 stars0 ratingsAarthikku Aabathu! Rating: 0 out of 5 stars0 ratingsOndrum Ondrum Moondru...! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Satham Indha Neram? Rating: 4 out of 5 stars4/5Thanithiru Vizhithiru Rating: 0 out of 5 stars0 ratingsRattham Sinthum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsSila Vellai Iravugalum Oru Karuppu Pagalum Rating: 0 out of 5 stars0 ratingsKathi Mel Payanam Rating: 0 out of 5 stars0 ratingsIravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsUyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Kaakithap Poo Theen Rating: 5 out of 5 stars5/5Uyirth Thirudargal Rating: 0 out of 5 stars0 ratingsFirst Flight to Paris Rating: 0 out of 5 stars0 ratingsAnjathe Anju Rating: 5 out of 5 stars5/5Ellam Poi and Karuppu Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nanalla Rating: 0 out of 5 stars0 ratingsEndrendrum Un Ethiri Rating: 4 out of 5 stars4/5Oru Kodi Rathirikal Rating: 0 out of 5 stars0 ratings23-vathu Jannal Rating: 0 out of 5 stars0 ratingsAdvance Anjali Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi kattalai Rating: 0 out of 5 stars0 ratingsThaduththaal Kooda Tharuven Rating: 0 out of 5 stars0 ratingsVinoth Oru Vinaakkuri Rating: 5 out of 5 stars5/5Inimel Indira… Rating: 0 out of 5 stars0 ratingsUdaiyatha Vennila! Rating: 0 out of 5 stars0 ratingsKarkandu Aayutham! Rating: 3 out of 5 stars3/5Matroru Mahaabaratham Rating: 3 out of 5 stars3/5Paatharasa Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsDeadline Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ange... Inge... Enge...?
0 ratings0 reviews
Book preview
Ange... Inge... Enge...? - Rajesh Kumar
http://www.pustaka.co.in
அங்கே... இங்கே... எங்கே...?
Ange... Inge... Enge...?
Author:
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
***
அங்கே... இங்கே... எங்கே...?
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
***
1
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சியை ஒரு ஆக்க சக்தியாக மாற்றிய ‘நாசா’ உருவான வருடம் - 1958.
அந்த அதிகாலை வேளையில் மேஜை விளக்கை உயிர்ப்பித்துக் கொண்டு... அந்த அழகான இளைஞன் கம்ப்யூட்டரில் தமிழ் சாஃப்ட்வேர் உதவியோடு ஒரு கடிதத்தை டைப் செய்து கொண்டிருந்தான்.
‘என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய அம்மாவுக்கும் அப்பாவுக்கும்...
உங்கள் மகன் கோகுலனின் கடைசி வணக்கம். இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும் போது நான் உயிரோடு இருக்க மாட்டேன். என்னுடைய பிரிவை உங்களால் தாங்க முடியாது என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் இப்போது இருக்கும் நிலைமையில் மரணம் என்கிற ஒரு விஷயம்தான் எனக்கு நல்ல தீர்வாய் இருக்க முடியும்.
நான் உங்களுக்கு ஒரே மகன். நீங்கள் கோடி கோடியாய் சம்பாதித்து வைத்துள்ள சொத்துக்கு நான் ஒரே ஒரு வாரிசு. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் என்னால் வாழ முடியும். ஆனால் பணம் ஒன்று மட்டும் வாழ்க்கை இல்லையே! அதைக் காட்டிலும் வேறு ஒரு விஷயம் எனக்கு விலை உயர்ந்ததாய் தோன்றியது. அதுதான் என்னுடைய வாழ்க்கை என்று நினைத்து ஒவ்வொரு விநாடியும் வாழ ஆரம்பித்தேன். அந்த வாழ்க்கை எனக்கு நிரந்தரமாய்க் கிடைக்கும் என்று நினைத்தேன். அது வீணாய்ப் போயிற்று.
அந்த விஷயம் எதுவாக இருக்கும் என்று இந்நேரம் நீங்கள் யூகம் செய்திருப்பீர்கள். உங்கள் யூகம் சரிதான். நான் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய்க் காதலித்தேன். அவளும் என்னைக் காதலித்தாள். இருவரும் சரியான தருணம் பார்த்து விஷயத்தை வீட்டிலே சொல்லலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் அதற்குள் அவளுடைய அப்பா வேறு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து முடிவு செய்து விட்டார்.
நான் அவளுடைய அப்பாவைச் சந்தித்து எங்கள் காதல் விவகாரத்தைச் சொல்ல நினைத்தேன். என் அன்புக்குரியவள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ‘அப்பாவுக்கு இப்போது விஷயம் தெரிந்தால் ஒரு ருத்ர தாண்டவமே ஆடி விடுவார். எங்களுடைய குடும்ப மானம் வீட்டுக்குள்ளிருந்து வீதிக்கு வந்து சந்தி சிரித்து விடும். எனவே என்னை நீ மறந்து விடு!' என்று சொல்லி... இந்தக் காதல் விவகாரம் வெளியே யாருக்கும் தெரியக்கூடாது என்று சொல்லிச் சத்தியமும் வாங்கிக் கொண்டாள்.
என் பிரியத்துக்குரியவளின் வேண்டுகோளை என்னால் தட்ட முழயவில்லை. உன்னைப் பற்றிய விபரங்கள் வெளியே யாருக்கும் தெரியாதபடி நான் நடந்து கொள்வேன் என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டு ஒரு 'பை’ சொல்லி விட்டு வந்துவிட்டேன். அதற்குப் பிறகு நான் அவளைப் பார்க்கவில்லை. செல்ஃபோனில் பேசவும் முயற்சி செய்யவில்லை. அவள் வேறு ஒரு வாழ்க்கைக்குத் தயாராகி விட்டாள். ஆனால் என்னால் அப்படித் தயாராக முடியவில்லை. நான் நினைவோடு இருக்கிற ஒவ்வொரு விநாடியும் அவளுடைய ஞாபகம் தான் எனக்கு. என்னை மறந்து நான் தூங்கினாலும் கனவிலும் வந்து என்னை ரணமாக்கினாள். இந்த அவஸ்தையை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த வலியோடு நான் இந்த உலகில் வாழ விரும்பவில்லை.
இன்று அவளுக்குத் திருமணம். முகூர்த்தம் காலை ஒன்பது மணியிலிருந்து ஒன்பதரை மணிக்குள். அவளுடைய கழுத்தில் தாலி ஏறும் முன்பே நான் இந்த உலகத்தை விட்டுப் போய்விட முடிவு செய்து விட்டேன். நான் இப்படியொரு முடிவு எடுத்தது... மற்றவர்களின் பார்வைக்குத் தப்பாகத் தெரியலாம். என்னைப் பொறுத்தவரைக்கும் இதுதான் சரியான முடிவு. சந்தோஷமான முடிவு.
காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள். என்னுடைய மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. யாரையும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த வேண்டாம். அதே போல் நான் காதலித்த பெண் யார் என்று தெரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம்.
அம்மா! அப்பா...! மீண்டும் என்னை மன்னியுங்கள். நான் உங்களிடமிருந்தும் இந்த உலகத்திடம் இருந்தும் விடைபெற்றுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
உங்களுக்கு மகனாக வாழக்
கொடுத்து வைக்காத
கோகுல்.’
லெட்டரைக் கம்ப்யூட்டரில் டைப் அடித்து முடித்தவன்... அதைப் பிரிண்டர்க்குக் கொடுத்துக் காப்பி எடுத்துக் கொண்டான். பிறகு கம்ப்யூட்டரில் டைப் செய்திருந்ததை டெலிட் ஆப்ஷனுக்குப் போய் டெலிட் செய்தான்.
ஜன்னலுக்கு வெளியே பறவைகளின் சத்தம் கேட்டது. சுவரில் இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தான்.
மணி 5.45.
‘இன்னும் சற்று நேரத்திற்குள் விடிந்து விடும்.
அம்மாவும் அப்பாவும் வாக்கிங் போக எழுந்து விடுவார்கள். அவர்களுடைய பார்வையில் பட்டுவிடக் கூடாது. கிளம்பி விட வேண்டும்.’
அறையிலிருந்து மெல்ல வெளியே வந்தான். மாடி வராந்தாவும், ஹாலும் இருட்டில் இருக்க... படியிறங்கினான். ஹாலில் நடந்து வாசற்படி கதவின் தாழ்ப்பாளைத் திறந்தான்.
போர்டிகோவில் நின்றிருந்த அந்த விலையுயர்ந்த இரண்டு கார்களும் வைகறையின் அந்த அரைகுறை இருட்டிலும் மினுமினுத்தன. காருக்குப் பக்கத்தில் இருந்த அவனுடைய சேலஞ்சர் பைக்கை எடுத்துக் கொண்டான். காம்பெளண்ட் கேட் வரை தள்ளிக் கொண்டு வந்தான்.
கேட்டைத் திறந்து விட்ட வாட்ச்மேன் சல்யூட் அடிக்க... அதைப் பொருட்படுத்தாமல் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு சாலையில் பறந்தான்.
விடிந்தும் விடியாத நேரம். போக்குவரத்தற்ற சாலை. பைக் ஒரு மின்னல் துணுக்காய் காற்றைக் கீறிக் கொண்டு சீறியது.
கடற்கரை ரோட்டில் பாதி தூரம் கடந்திருந்தபோது செல்ஃபோன் அழைத்தது. பைக்கின் வேகத்தைக் குறைத்தவன்... அழைப்பது யார் என்று பார்த்தான்.
அம்மா!
'பேசலாமா... வேண்டாமா?’ என்று ஐந்து விநாடி யோசித்தவன்... ஆறாவது விநாடி செல்ஃபோனைக் காதுக்குப் பொருத்தி ம்...
என்றான்.
மறுமுனையில் அம்மாவின் குரல் கோபத்தில் வெடித்தது.
என்னடா... ம்...? நேத்து ராத்திரி பதினோரு மணிக்கு ஃபோன் பண்ணிப் பேசும் போது வீட்டுக்கு ஒரு மணி நேரத்துக்குள்ளே வந்துடறேன்னு சொன்னே! உன்கிட்ட மாற்றுச்சாவி இருக்கிறதால நானும் அதை நம்பினேன். ராத்திரி எத்தனை மணிக்கு வந்தே?
ஒரு மணிக்கு...
ஏன்டா! குரல் ஒரு மாதிரி இருக்கு?
"நேத்து பார்ட்டியில் ரெண்டு