Vaasa Kootti Manaparapi Vandhe Paaradi Naadiyamba
()
About this ebook
கோவில்பட்டியில் பிறந்த ஸ்.ஏ.கருப்பையா அவர்கள், அமெரிக்காவில் மிசிகன் பல்கலைக்கழகத்தில் ஃபிராங்க் அவர்களுடன் சேர்ந்து எழுதியுள்ளார். 1991ம் ஆண்டு நடைபெற்ற அறிவொளி இயக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும், அது மக்கள் இயக்கமாக எப்படி வளர்ச்சி அடைந்தது என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர் ஃபிராங்க்.
ஃபிராங்க் புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆலங்குடி வட்டம், கீழாத்தூர் ஊராட்சியில் உள்ள கோவில்பட்டியில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
இவர்கள் எழுதிய இந்தப் புத்தகத்தில், கிராமத்து மக்கள் இடையே நிலவி வரக்கூடிய கதைகள், வரலாற்றுச் செய்திகள், பாடல்கள், திருவிழா முறைகள் போன்றவற்றை பதிவு செய்துள்ளனர்.
Related to Vaasa Kootti Manaparapi Vandhe Paaradi Naadiyamba
Related ebooks
Periya Puranathil Pengal Or Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Manimaalai Rating: 2 out of 5 stars2/5Enathu South Africa Payana Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsHara Hara Sankara…. Rating: 0 out of 5 stars0 ratingsOru Pen Thuraviyin Samaya Vazhvum - Samuthaya Vazhvum Rating: 3 out of 5 stars3/5Sevviyal Aringar Oriza Balu Rating: 0 out of 5 stars0 ratingsAruvi Rating: 0 out of 5 stars0 ratingsUlagam Muzhuthum Paambu Vazhipaadu! Rating: 0 out of 5 stars0 ratingsAkkini Kunjondru Rating: 0 out of 5 stars0 ratingsVainava Amutha Thuligal Rating: 0 out of 5 stars0 ratingsSivasankari Sirukathaigal Irandam Thoguppu Rating: 5 out of 5 stars5/5Sindhisai Padalgal Rating: 0 out of 5 stars0 ratingsPatta Kettu Manu Rating: 0 out of 5 stars0 ratingsW.P.A Soundrapandian Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsPon chandran kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsThadaigal Pala Thaandi... Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 4 Rating: 0 out of 5 stars0 ratingsIndha Nool Vaangalam - Part 1 & 2 Rating: 0 out of 5 stars0 ratingsKavignargalin Kaalachuvadu! Rating: 0 out of 5 stars0 ratingsNaarthaamalai Sivan Koyilgal Arputhangal Rating: 0 out of 5 stars0 ratingsSarithira Nayakan Irandaam Serfoji Rating: 0 out of 5 stars0 ratingsOppanaikalin Koothu Rating: 0 out of 5 stars0 ratingsRasamadevi Rating: 0 out of 5 stars0 ratingsC. K. Subramania Subramania Mudhaliyarin Periyapuranam Uraithiran Rating: 1 out of 5 stars1/5Kaalam Thorum Narasingam Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Sankara Vijayam Rating: 0 out of 5 stars0 ratingsIthu Yengal Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsM.P.Nirmal – Oru Thani Mara Thoppu Rating: 0 out of 5 stars0 ratingsManam Kamazhum Thirumaraigal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vaasa Kootti Manaparapi Vandhe Paaradi Naadiyamba
0 ratings0 reviews
Book preview
Vaasa Kootti Manaparapi Vandhe Paaradi Naadiyamba - S.A. Karuppaiya and Frank P. Kodi
http://www.pustaka.co.in
வாசக்கூட்டி மணப்பரப்பி வந்தே பாரடி நாடியம்பா...
Vaasa Kootti Manaparapi Vandhe Paaradi Naadiyamba…
Author:
எஸ்.ஏ.கருப்பையா மற்றும் ஃபிராங்க் பி. கோடி
S.A. Karuppaiya and Frank P. Kodi
For more books
http://www.pustaka.co.in/home/author/sa-karuppaiya-frank-p-kodi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
வாழ்த்துரை
அணிந்துரை
மதிப்புரை
கோவில் உருவான வரலாறு
கதைகள்
ஆடித்திருவிழா
வழிபாட்டு முறைகள்
பாடல்கள்
***
முன்னுரை
வணக்கம். நான் அமெரிக்காவில் மிசிகன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருக்கிறேன். அங்கு படிக்கும் பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் திருமதி. ஷீலா ராணி சுங்கத் அவர்களும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைத்தலைவர் திரு. வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்களும் எழுதிய எழுத்தறிவும், மேம்பாடும்
(Literacy and Empowerment) என்ற புத்தகத்தைப் படித்தேன். அந்தப் புத்தகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1991-ம் ஆண்டு நடைபெற்ற அறிவொளி இயக்கத்தின் செயல்பாடுகளையும் அது மக்கள் இயக்கமாக எப்படி வெற்றி அடைந்தது என்பதையும் படித்துப்பார்த்தபொழுது இந்த இயக்கம் எப்படி நடைபெற்றது? இப்பொழுது மக்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என நினைத்தேன்.
அதன்படி 2002-ல் நான் புதுக்கோட்டை வந்தேன். இப்பொழுது அறிவொளி இயக்கம் வளர்கல்வித் திட்டமாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மாவட் ட ஒருங்கிணைப்பாளர் ஆர். இராஜ்குமார் அவர்களைச் சந்தித்து என் ஆராய்ச்சி பற்றிக் கூறினேன். என் ஆராய்ச்சிக்கு அனைத்து ஒத்துழைப்புகளையும் கொடுத்தார்.
நான் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் எந்த அளவுக்கு எழுத்தறிவு பெற்றுள்ளார்கள் என்பதைப் பற்றியும், அவர்களது கலாச்சாரம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என முடிவு எடுத்தேன். நகரத்தில் தங்கி கிராமத்தை ஆராய்ச்சி செய்வதை விட நேரடியாக கிராமத்தில் தங்கி மக்களோடு பழகி அவர்களது கலாச்சாரம் மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள ஆலங்குடி வட்டம், கீழாத்தூர் ஊராட்சியில் உள்ள கோவில்பட்டி கிராமத்தில் தங்கியிருக்கிறேன்.
நான் நகரத்திலே பிறந்து நகரத்திலே வளர்ந்து நகரத்திலே வாழ்ந்தவன். அதனால் இந்தக் கிராமத்து மக்களின் வாழ்க்கை முறைகளும் பழக்க வழக்கங்களும் எனக்குப் புது அனுபவங்களைக் கொடுத்தன. கிராமத்து மக்கள் அன்போடும் பாசத்தோடும் பழகுகிறார்கள்.
கிராமத்து மக்களது வாழ்க் கையோடு பின்னிப் பிணைந்திருப்பது அவர்களது கிராமத்துத் தெய்வங்களின் வரலாறு. ஏனென்றால் இந்த கிராமத்துத் தெய்வங்கள் அவர்களுக்கு குலதெய்வங்கள். பொதுவாக முற்காலத்தில் சிறப்பாக வாழ்ந்து இறந்தவர்களையே பிற்காலத்தில் கடவுளாகக் கும்பிட ஆரம்பித்தனர்.
ஒரு கோவிலின் வரலாற்றை எடுக்கும் பொழுது அந்த காலத்தில் அந்தப் பகுதி மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, அவர்களது அறிவு நமக்குத் தெரியவருகிறது. உதாரணமாக அந்தக் காலத்திலிருந்து வாய்வழிச் செய்தியாக வந்து கொண்டிருக்கிற கிராமத்து சொலவடைகள், பொன்மொழிகள், நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள் இவையெல்லாம் கிராமத்து மக்களின் அறிவுக் கூர்மைக்கு சான்றுகள்" ஆகும். ஆகவே கிராமத்து மக்களின் வாழ்க்கை கலாச்சாரம், பண்பாடு குறித்து நாம் தெரிந்துகொள்ள கிராமத்து தெய்வங்களைப் பற்றி நாம் ஆராய்வது முக்கியமானதாகும்.
அந்த வகையில் இந்த ஆலங்குடி - கீழாத்தூர் பகுதியில் நாடியம்மன் கோவில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. சுற்றுவட்டாரக் கிராமத்து மக்கள் மட்டுமல்லாமல் வெளியூர் மக்களும் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இப்படி சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் இந்த நாடியம்மன் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என நினைத்தேன். அதன்படி கிராமத்து மக்கள் இடையே நிலவி வரக்கூடிய கதைகள், வரலாற்றுச்