Thadayai Udai!
By Rajesh Kumar
()
About this ebook
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Read more from Rajesh Kumar
Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsSivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsVivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Mudhal Nimisham Rating: 2 out of 5 stars2/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Iruttile Rendu Per Rating: 4 out of 5 stars4/5
Related to Thadayai Udai!
Related ebooks
L Board Murder Rating: 0 out of 5 stars0 ratingsAyokyan Rating: 4 out of 5 stars4/5Yetho... Nadakkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Kuttrangal Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi and Karuppu Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsKraim Dot Kaam Rating: 0 out of 5 stars0 ratingsThevai Oru Thevathai Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Oru Thigil Rating: 0 out of 5 stars0 ratingsKarkandu Ayutham Rating: 0 out of 5 stars0 ratingsEthayum Oru Thadavai! Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsThithikkum Thee Rating: 0 out of 5 stars0 ratingsOosi Munaiyil Oor Uyir Rating: 5 out of 5 stars5/5Kannukkulle Unnai vaithen Rating: 0 out of 5 stars0 ratingsChicago Secret Rating: 0 out of 5 stars0 ratingsArunthathiyum AaruThottakkalum Rating: 0 out of 5 stars0 ratingsKagithapoo Thean Rating: 0 out of 5 stars0 ratingsMella Varum Boogambam Rating: 0 out of 5 stars0 ratingsOru Maranathin Maranam Rating: 0 out of 5 stars0 ratingsIrandavathu Uyir Rating: 0 out of 5 stars0 ratingssaagavaram Rating: 0 out of 5 stars0 ratingsPistal Vazhthu Rating: 0 out of 5 stars0 ratingsAadatha Oonjalgal Rating: 0 out of 5 stars0 ratingsNil...Kavani...Kadhali... Rating: 0 out of 5 stars0 ratingsKaanamal Pona Nila Rating: 0 out of 5 stars0 ratingsMul Munaiyil Mukilaa Rating: 0 out of 5 stars0 ratingsSumathi Engira Sumai Rating: 0 out of 5 stars0 ratingsXYZ Murders Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nimishangal! and Oru Megathin Thaagam! Rating: 0 out of 5 stars0 ratingsSorkkam En Kaiyil Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thadayai Udai!
0 ratings0 reviews
Book preview
Thadayai Udai! - Rajesh Kumar
http://www.pustaka.co.in
தடையை உடை!
Thadayai Udai!
Author:
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/ rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
***
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
***
1
‘புகை பிடித்தல் உடல் நலனுக்குத் தீங்கானது’ என்னும் வாசகத்தை சிகரெட் பாக்கெட்டுகளின் மீது முதல் முதலாய் |அச்சடித்த நாடு எது என்ற கேள்விக்குப் பெரும்பாலானவர்கள் சொல்லும் பதில் ‘இந்தியா’ என்பதாகத்தான் இருக்கும். ஆனால், அந்தப் பெருமைக்குரிய நாடு நம் நாடு அல்ல. அமெரிக்கா தான்!
நுரையீரல் சுவாசக் கோளறுகளுக்கும், தொண்டைப் புற்று நோய்க்கும் புகை பிடிக்கும் பழக்கம்தான் காரணம் என்பதை அவமரிக்க மருத்துவ வல்லுநர்கள் உறுதிபடத் தெரிவித்ததும், அப்போது - அதாவது 1970-இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்ஸன், சிகவுரட் பாக்கெட்டுகளின் மீது எச்சரிக்கை வாசகம் எழுதும் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
அதன் பிறகு அடுத்த கட்டமாக சிகரெட் தொடர்பான விளம்பரங்களைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்தார்.
அவமரிக்காவின் தடை உத்தரவுக்குப் பெரும்பாலான நாடுகள் பச்சைக் கொடி காட்டினாலும், சில நாடுகள் மட்டும் ‘சர்த்தான் போய்யா... நீயும் உன்னோட சட்டமும்!’ என்று சொல்லி விட்டன.
அம்மா... குழலி!
உள்ளறையில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த தன் மாமனார் வேதாசலத்தின் குரல் கேட்டுச் சமையலறையினின்றும் எட்டிப் பார்த்தாள் குழலி.
என்ன மாமா...?
வாசல்ல யாரோ குரல் தர்றாங்க... போய் யார்ன்னு பாரம்மா...
கேஸ் ஸ்டவ்வை நிதானமாய் எரியவிட்ட குழலி, ஈரக் கையைச் சேலைத் தலைப்பால் ஒற்றிக் கொண்டே சமையலறையினின்றும் வெளிப்பட்டாள். அந்தச் சிறிய ஹாலைக் கடந்து வாசலில் இருந்த கேட்டுக்குப் பார்வையைக் கொண்டு போனாள்.
அந்த நடுத்தர வயதுப் பெண் பார்வைக்குக் கிடைத்தாள். வயது நாற்பத்தைந்து இருக்கலாம். சிவந்த நிறம், நேர்த்தியாய்த் தலை சீவப்பட்டு மினுமினுப்போடு நரையோடிய கொண்டை தெரிந்தது. அளவாய்ச் சதைபிடித்த முகத்தில் வெள்ளி ஃபிரேமிட்ட கண்ணாடி இடம் பிடித்து, முகத்துக்கு ஒரு தனி அழகைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
காம்பெளண்ட் கேட்டுக்கு வெளியே ரோட்டோர வேப்ப மரத்தின் நிழலில் ஒரு மாருதி ஆல்டோ சிவப்பு நிறத்தில் நின்றிருந்தது. யார் இது? யோசித்துக் கொண்டிருந்தபோதே –
அந்தப் பெண் குழலியைப் பார்த்ததும், கை குவித்தாள்.
வணக்கம்... குழலி!
வணக்கம்... நீ... நீங்க...?
என்னோட பேரு ஜமுனா ராணி. மேல் மருவத்தூர்க்குப் பக்கத்தில் ‘குட் ஹோப்’ ஆர்ட்ஸ் காலேஜில் பிரின்ஸிபாலாய் இருக்கேன்.
குழலியின் முகம் மலர்ச்சிக்குப் போயிற்று.
நான் இந்தக் காலேஜ் பேரைக் கேள்விப்பட்டிருக்கேன். பப்ளிக் மத்தியில் இந்த காலேஜுக்கு நல்ல பேர் இருக்கு... உள்ளே வாங்க...
தேங்க் யூ...
ஜமுனா ராணி உள்ளே வந்தாள்.
பேப்பர் படித்துக் கொண்டிருந்த தன் மாமனார் வேதாசலத்திற்க ஜமுனா ராணியை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டுக் காலியாய் இருந்த நாற்காலியைக் காட்டினாள்.
உட்காருங்க மேடம்.
அவள் உட்கார்ந்தாள்.
நல்ல வெய்யில் நேரத்துல வந்து இருக்கீங்க... மோர் தரட்டுமா...?
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் எதுக்காக உன்னைப் பார்க்க வந்திருக்கேன்னு சொல்லிடறேன்...
சொல்லுங்க மேடம்.
குழலியும் ஒரு நாற்காலிக்குப் போய்ச் சாய்ந்தாள்.
ஜமுனா ராணி தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு, பேச்சை ஆரம்பித்தாள்.
குழலி! உனக்கு என்ன வயது?
இருபத்தேழு.
ஜனனி கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியையாய் ஒர்க் பண்ணிக்கிட்டே பட்டிமன்ற மேடைகளிலேயும் பங்கெடுத்துக்கிறே போலிருக்கு!
குழலியின் உதடுகளில் ஒரு புன்முறுவல் ஒட்டிக் கொண்டது.
ஆமா.
உன்னோட பட்டி மன்றப் பேச்சுக்களைக் கேட்டிருக்கேன். நல்லாயிருக்கு. நீ எடுத்து வைக்கிற கருத்துக்கள் கொஞ்சம் புரட்சிகரமாய் இருந்தாலும், கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அவையெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாய் இருக்கு!
உங்க பாராட்டுக்கு நன்றி! ஆனா நீங்க என்னைப் பார்க்க வந்தது எதுக்காகன்னு இன்னமும் சொல்லவேயில்லையே.
"இதோ விஷயத்துக்கு வந்துட்டேன்... நான் பிரின்சிபாலாய் இருக்கிற ‘குட் ஹோப்’ ஆர்ட்ஸ் காலேஜ் வெள்ளி விழா ஆண்டு இந்த வருஷம் வருது. இந்த விழாவை யொட்டிப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தப் போறோம்.
அதுல ஒரு நிகழ்ச்சி பட்டிமன்றம். அந்தப் பட்டிமன்றத்துக்கு நீதான் தலைமை யேற்று நடத்தித் தரணும்...
குழலி மெளனமாய் இருந்தாள்.
ஜமுனா ராணி கேட்டாள்.
என்னம்மா... பேச்சையே காணோம். நான் வேலை பார்க்கிற கல்லூரியில் ஆயிரத்து அறுநூறு மாணவிகளுக்கு மேல் படிக்கறாங்க. பெரும்பாலான மாணவிகள் வெள்ளி விழா நிகழ்ச்சியில் உன்னோட பட்டிமன்றம் இருக்கணும்னு விரும்பறாங்க. நீ எந்த மறுப்பும் சொல்லாமே ஒத்துக்கணும்.
அதுவரைக்கும் ஒன்றும் பேசாமல் இருந்த வேதாசலம் ஜமுனா ராணியை ஏறிட்டார்.
நீங்க விஷயம் தெரியாமே வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்.
விஷயமா... என்ன விஷயம்?
குழலி இப்போ பட்டி மன்றங்களிலோ விவாத மேடைகளிலோ கலந்துக்கறது இல்லை!
என்ன சொல்றீங்க...?
உண்மையைச் சொல்லிட்டிருக்கேன்...!
ஏன்... என்ன காரணம்...?
வீணான பிரச்சனைகளைத் தவிர்க்கத்தான்!
அப்படி என்ன பிரச்சனைகள்?
குழலி குறுக்கிட்டாள்.
"மேடம்...! நான் மேடை ஏறிட்டா என்னோட மனசுக்கு எது சரின்னு படுதோ, அதைத்தான் பேசுவேன். பட்டிமன்றங்கள் வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாய் இல்லாமல் அறிவுபூர்வமான நல்ல சிந்தனைகளை உள்ளடக்கியதாய் இருக்கணும்ங்கிறது என்னோட எண்ணம்.
"ஆறு மாசத்துக்கு முன்னாடி நான் விவாத மேடையில் பேசும்போது, ஆண்களுக்கு எதிராய்ச் சில கருத்துக்களைச் சொன்னேன். அது ஒரு பெரிய பிரச்சனையாயிடுச்சு. அந்தப் பிரச்சனையை மதரீதியாகவும், இன ரீதியாகவும் பார்த்த சில பேர், என் வீட்டுக்கு முன்னாடி வந்து மறியல், ஆர்ப்பாட்டம்னு பண்ண - விஷயம் போலீஸ் வரைக்கும் போயிடுச்சு.
அதனால இனிமேல பட்டி மன்றம், விவாத மேடை போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறது இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.
"ஒரு பெண் துணிச்சலாய் இருந்தாலே