Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanaville Vaanamalla
Vaanaville Vaanamalla
Vaanaville Vaanamalla
Ebook100 pages39 minutes

Vaanaville Vaanamalla

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is well known for his detective and thriller stories. He also had written excellent stories in social theme. These short stories collection is published in many popular magazines.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352850402
Vaanaville Vaanamalla

Read more from Rajesh Kumar

Related to Vaanaville Vaanamalla

Related ebooks

Reviews for Vaanaville Vaanamalla

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanaville Vaanamalla - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    வானவில்லே வானமல்ல!

    Vaanaville Vaanamalla!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    நல்ல குடும்பம் என்பது ஒரு நல்ல தராசு மாதிரி. கணவன் கோபப்பட்டால் மனைவி என்னும் தட்டு சற்று கீழே போக வேண்டும். அதேபோல் மனைவி கோபப்பட்டுப் பேசினால் கணவன் என்னும் தட்டு கீழே இறங்க வேண்டும். சிறந்த குடும்பத்தில் சினம் என்பது ஒரு வழிப் பாதையல்ல. இருவழிப் பாதை. இதை உணர்ந்தால் குடும்பம் குயில் கூவும் சோலை.

    வைகறையின் மெல்லிய - ரகசிய சூரிய வெளிச்சத்தில் - வாசலில் பெரிதாய் ‘ஸ்வஸ்திக்’ கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் உதயா. தலைக்குச் சுற்றியிருந்த ஈரிழைத்துண்டு - கூந்தலின் ஈரத்தை உறிஞ்சிக் கொண்டிருக்க உதயாவின் உதடுகளில் காயத்ரி கவசம் கசிந்து கொண்டு இருந்தது.

    காயத்ரி பூர்வத பாது ஸாவித்ரி பாது தட்சிணே ப்ரஹ்ம ஸந்தியா துமே பஸ்சாத் உத்தராயாம் ஸரஸ்வதீ...!

    வாசலில் சைக்கிள் மணிச் சத்தம்.

    பால்காரன்.

    அம்மா! பால்...

    உதயாவின் காயத்ரி கவசம் சட்டென்று நின்றது.

    என்ன தங்கவேலு... இன்னிக்கு இவ்வளவு சீக்கிரத்துல பால் கொண்டாந்துட்டே...

    ஒரு விசேஷ காரியமா ஏழு மணிக்கெல்லாம் வெளியூர் போக வேண்டிருக்கும்மா. அதான்...

    இரு... பாத்திரம் கொண்டு வர்றேன்...

    கோலத்தைப் பாதியில் விட்டுவிட்டு உள்ளே எழுந்து போனாள் உதயா.  உதயாவுக்கு இருபத்தி மூன்று வயது.

    அந்த வயதுக்குரிய இளமை உடம்பின் ஒவ்வொரு அங்குலத்திலும் தெரிந்தது.

    கழுத்தில் ஆறு மாதங்களுக்கு முன்னால் இடம் பெற்ற தாலிக் கொடி தங்கக் குண்டுகளோடு அசைந்தது.

    கூடத்தைத் தாண்டும்போது - மாமியார் கனகமும், புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டுக்கு ரெண்டு நாள் தங்கிப் போவதற்காக வந்திருந்த மகள் மனோகரியும் - விடிகாலைக் குளிருக்குப் பயந்து போர்வைக்குள் சுருண்டிருந்தார்கள்.

    கனகத்தின் குறட்டைச் சத்தம் - மரத்தை ரம்பத்தால் அறுக்கிற தினுசில் கேட்டது.

    உதயா உள்ளே போய் - சமையலறை அலமாரியில் கழுவி, கவிழ்த்து வைத்திருந்த - பாத்திரத்தை எடுத்துக் கொண்டு - கூடத்தைத் தாண்டும் போது - மனோகரி போர்வைக்குள்ளிருந்து குரல் கொடுத்தாள்.

    அண்ணி...

    ம்...

    மணி எவ்வளவு...?

    அஞ்சரை...

    பால்காரன் வந்தாச்சு... போலிருக்கே... சைக்கிள் மணி சத்தம் கேட்டது.

    ஆமா... வந்துட்டான்...

    எனக்குக் காபி வேணும்...

    எந்திரிச்சுப் பல்லைத் தேய்... தர்றேன்...

    தண்ணி கலக்காத பால்ல காப்பி வேணும்

    தர்றேன்... மொதல்ல எந்திரி... சொல்லிக்கொண்டே பால் பாத்திரத்தோடு வாசலுக்குப் போனாள் உதயா. பால்காரன் தங்கவேலு பாலை ஊற்றிக் கொண்டே அம்மா... என்றான்.

    என்ன...?

    இவ்வளவு காலையில எந்திரிச்சுக் குளிச்சு... நெத்தியில குங்குமப் பொட்டோட மகாலட்சுமியாட்டம்... நீங்க... வாசல்ல கோலம் போடறதைப் பார்க்கிறப்ப...

    சாட்சாத் அந்த மகாலட்சுமியாட்டம் இருக்காக்கும்?

    ஆமாம்மா...

    இதோ பார்... தங்கவேலு! இந்த ஐஸ் வைக்கிற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்... பால்ல இன்னிக்குத் தண்ணி ரொம்பவும் கலந்துட்டே போலிருக்கு...

    அய்யோ... இல்லேம்மா...

    என்ன இல்லே...? நீ பாலை அளந்து பாத்திரத்துல ஊத்தும் போதே எனக்குத் தெரிஞ்சிடும். தண்ணி கலக்காத பாலை ஊத்தும்போது கேட்கிற சத்தம் வேற... தண்ணி கலந்த பால் ஊத்தும் போது கேட்கிற சத்தம் வேற... என்னை ஏமாத்த முடியாது...?

    தங்கவேலு தலையைச் சொறிந்தான். மன்னிச்சுக் குங்கம்மா! இன்னிக்கு ரெண்டு பசுமாட்டுக்கு கழிச்சல் நோய். பாலைக் கறக்க முடியலை... இருக்கிற பாலை அட்ஜெஸ்ட் பண்ண வேண்டாமா...?

    அதனால குழாய் தண்ணியைக் கலந்துட்டியாக்கும்... உனக்குத் தர்ற பணத்துல ஒரு ரூபாய் கட்.

    பாலை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் உதயா. மனோகரி போர்வையைப் போர்த்திக்கொண்டு உட்கார்ந்திருக்க -

    Enjoying the preview?
    Page 1 of 1