சர்க்கரை நோயை குணப்படுத்தும் வழிமுறைகள்
()
About this ebook
ஒரு முக்கியமான விசயத்தை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். மருந்தோ, மருத்துவமோ மனிதர்களின் நோய்களை மட்டுமே குணப்படுத்த முடியும். நோய்களின் அறிகுறிகளை எந்த காலத்திலும் குணப்படுத்த முடியாது. ஆங்கில மருத்துவம் செய்யும் மிகப் பெரிய தவறுகளில் ஒன்று மனிதர்களின் உண்மையான நோய்களை அறிந்துக் கொள்ளாமல், நோய்களை உணர்த்த உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளுக்கு வைத்தியம் பார்ப்பதுதான்.
விரைவாக குணமாகலாம் அல்லது தாமதமாக குணமாகலாம் ஆனால் உண்மையான நோயாக இருந்தால் கண்டிப்பாக ஒருநாள் முழுமையாக குணமாக வேண்டும். எந்த மருத்துவத்திலாவது நோய்களை முழுமையாக குணப்படுத்த முடியவில்லையென்றால் அல்லது வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டுமென்று பரிந்துரைத்தால் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். ஒன்று உங்களுக்கு தொந்தரவைத் தருபவை உண்மையான நோயல்ல, அவை நோயின் அறிகுறிகள் மட்டுமே. அல்லது நீங்கள் உட்கொள்வது நோய்களைக் குணப்படுத்தக் கூடிய உண்மையான மருந்துகள் அல்ல.
உண்மையான நோயாக இருந்தால், அந்த நோய்க்குத் தக்க மருத்துவம் பார்த்தால் அந்த நோய் கண்டிப்பாக குணமாக வேண்டும். ஆகத் தாமதமாக ஆறு மாதங்களுக்கு வைத்தியம் பார்த்தும் ஒரு நோய் குறையவில்லை என்றால்; அந்த மருத்துவத்தில் ஏதோ ஒரு தவறு நடக்கிறது என்பதை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு நோயாளியை வாழ்நாள் முழுமைக்கும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள சொல்வது, ஒரு வியாபார தந்திரம் மட்டுமே ஒழிய மருத்துவம் அல்ல. மருந்து மாத்திரை நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதற்காக உங்கள் உடல் நலத்தை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
இந்நூலை தெளிவாகவும் பொறுமையாகவும் வாசித்து, நூலின் கருத்துக்களை புரிந்துகொள்ளுங்கள். புரிந்தவற்றை உங்கள் அன்புக்குரியவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நோய்களைக் கண்டு பயம் கொள்ளாதீர்கள். தக்க மருத்துவமோ தீர்வோ இல்லாத நோயே இவ்வுலகில் கிடையாது. வியாபாரிகளிடம் சிக்கி உங்கள் உடலையும் பொருட்களையும் வீணாக்காதீர்கள். இந்நூலில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் சர்க்கரை நோயை முற்றாக குணப்படுத்தலாம்.
Raja Mohamed Kassim
Healer - Reiki Master - Acupuncturist - Writer - Author - Blogger
Read more from Raja Mohamed Kassim
ஹோலிஸ்டிக் ரெய்கி Rating: 4 out of 5 stars4/5ஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை Rating: 0 out of 5 stars0 ratingsதிருக்குறள் கூறும் மருத்துவம் Rating: 0 out of 5 stars0 ratingsமௌனத்தின் சாரல்கள்: ஹைக்கூ காதல் கவிதைகள் Rating: 0 out of 5 stars0 ratings
Related to சர்க்கரை நோயை குணப்படுத்தும் வழிமுறைகள்
Related ebooks
Parambariyam Rating: 0 out of 5 stars0 ratingsOttangal Rating: 0 out of 5 stars0 ratingsArokiya Vazhvirkku Muthiraigal Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Oru Mooligai Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsAndrada Vazhvil Mooligaigalin Pangu Rating: 0 out of 5 stars0 ratingsSakthiyulla Udalai Adaiyungal Rating: 5 out of 5 stars5/5Noyilla Vazhvu Pera Sila Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsVazhkaiyil Vetri Pera 38 Padigal Rating: 0 out of 5 stars0 ratingsNamathu Mooligaigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsIyarkai Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsAasarakovai Rating: 5 out of 5 stars5/5Manathodu Oru Sitting Rating: 4 out of 5 stars4/5Thedalgal Rating: 0 out of 5 stars0 ratingsEnnangal Tharum Abaara Vetri Rating: 3 out of 5 stars3/5Saathaga Alangarathil Chiththar Karuthukkal Rating: 5 out of 5 stars5/5Thirikadukam Rating: 0 out of 5 stars0 ratingsதேடல்கள் Rating: 5 out of 5 stars5/5Maruthuva Jothidam Rating: 2 out of 5 stars2/5Siddha Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Maruthuva vingyaanigal Rating: 0 out of 5 stars0 ratingsVeettil Oru Doctor Rating: 0 out of 5 stars0 ratingsSirupanjamoolam Rating: 0 out of 5 stars0 ratingsMaranathirkku Appaal Rating: 0 out of 5 stars0 ratingsமிகவும் உயர்ந்த அறிவை அடையும் வழிகள் Rating: 5 out of 5 stars5/5Sittha Jaalam Rating: 0 out of 5 stars0 ratingsJothidam Paarkkum Mun Therinthu Kollungal! Rating: 0 out of 5 stars0 ratingsPalakkadu Iyer Parambariya Samayal Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Tips Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for சர்க்கரை நோயை குணப்படுத்தும் வழிமுறைகள்
0 ratings0 reviews
Book preview
சர்க்கரை நோயை குணப்படுத்தும் வழிமுறைகள் - Raja Mohamed Kassim
அணிந்துரை
வணக்கம்!
எல்லாப் புகழும், இந்நூலை எழுதத் தூண்டி, வழிகாட்டி, எழுதும் ஆற்றலைத் தந்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கே உரித்தாகட்டும்.
என்னைப் பொறுத்தமட்டில், இனிப்புநீர், நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் என்ற நோயே இந்த உலகில் கிடையாது. நான் மட்டுமல்ல மனித உடலை முழுமையாக அறிந்த எல்லா அறிஞர்களும் இதே கருத்தைத்தான் கூறுகின்றார்கள்.
உண்மையைச் சொல்வதானால் சர்க்கரை நோய் என்பது பணம் செய்யும் நோக்கத்தோடு வியாபாரிகளால் உருவாக்கப்பட்ட ஒரு நோயே ஒழிய உண்மையான நோயல்ல. ஆங்கிலத்தில் Man made diseases
என்று அழைக்கப்படும் வியாபார நோக்கத்தோடு மனிதர்களால் உருவாக்கப்பட்ட பல நோய்களில் சர்க்கரை நோயும் ஒன்று. Man made diseases
என்று இணையதளத்தில் தேடிப்பாருங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பல நோய்களின் விவரங்கள் வெளிவரும்.
நோய்களைப் பற்றி படிக்கும் போது ஒரு முக்கியமான விசயத்தை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். மருந்தோ, மருத்துவமோ மனிதர்களின் நோய்களை மட்டுமே குணப்படுத்த முடியும். நோய்களின் அறிகுறிகளை எந்த காலத்திலும் குணப்படுத்த முடியாது. ஆங்கில மருத்துவம் செய்யும் மிகப் பெரிய தவறுகளில் ஒன்று மனிதர்களின் உண்மையான நோய்களை அறிந்துக் கொள்ளாமல், நோய்களை உணர்த்த உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளுக்கு வைத்தியம் பார்ப்பதுதான்.
விரைவாக குணமாகலாம் அல்லது தாமதமாக குணமாகலாம் ஆனால் உண்மையான நோயாக இருந்தால் கண்டிப்பாக ஒருநாள் முழுமையாக குணமாக வேண்டும். எந்த மருத்துவத்திலாவது நோய்களை முழுமையாக குணப்படுத்த முடியவில்லையென்றால் அல்லது வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டுமென்று பரிந்துரைத்தால் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். ஒன்று உங்களுக்கு தொந்தரவைத் தருபவை உண்மையான நோயல்ல, அவை நோயின் அறிகுறிகள் மட்டுமே. அல்லது நீங்கள் உட்கொள்வது நோய்களைக் குணப்படுத்தக் கூடிய உண்மையான மருந்துகள் அல்ல.
உண்மையான நோயாக இருந்தால், அந்த நோய்க்குத் தக்க மருத்துவம் பார்த்தால் அந்த நோய் கண்டிப்பாக குணமாக வேண்டும். ஆகத் தாமதமாக ஆறு மாதங்களுக்கு வைத்தியம் பார்த்தும் ஒரு நோய் குறையவில்லை என்றால்; அந்த மருத்துவத்தில் ஏதோ ஒரு தவறு நடக்கிறது என்பதை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு நோயாளியை வாழ்நாள் முழுமைக்கும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள சொல்வது, ஒரு வியாபார தந்திரம் மட்டுமே ஒழிய மருத்துவம் அல்ல. மருந்து மாத்திரை நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதற்காக உங்கள் உடல் நலத்தை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
இந்நூலை தெளிவாகவும் பொறுமையாகவும் வாசித்து, நூலின் கருத்துக்களை புரிந்துகொள்ளுங்கள். புரிந்தவற்றை உங்கள் அன்புக்குரியவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நோய்களைக் கண்டு பயம் கொள்ளாதீர்கள். தக்க மருத்துவமோ தீர்வோ இல்லாத நோயே இவ்வுலகில் கிடையாது. வியாபாரிகளிடம் சிக்கி உங்கள் உடலையும் பொருட்களையும் வீணாக்காதீர்கள். இந்நூலில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் சர்க்கரை நோயை முற்றாக குணப்படுத்தலாம்.
ராஜா முகமது காசிம்
முக்கிய குறிப்பு:
ஆரோக்கியமாக வாழ ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமையுண்டு. நோய்கள் என்பவை மனிதனின் கற்பனைகள் மட்டுமே. நோய்கள் நிலையானவையல்ல.
தன்னிலை விளக்கம்
அனைவரும் அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட்டு ஆரோக்கியமாக வாழவேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே இந்நூலை எழுதுகிறேன். எந்த தனி நபரையும், மருத்துவத்தையும் தாழ்த்துவதோ, சிறுமைப்படுத்துவதோ எனது நோக்கமல்ல ஆனால் மக்களுக்கு தேவையான உண்மைகளை சொல்ல வேண்டியது எனது கடமையாகும்.
சர்க்கரை நோயைப் பற்றிய உண்மைகளை கூறும் இந்நூல் யார் மனதையாவது புண்படுத்தினால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சமுதாய நலனுக்காக, உண்மையான தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பது அனைவரின் கடமையுமாகும். மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகளை மக்களிடமிருந்து மறைப்பது மிக பெரிய பாவமாகும்.
இந்த நூலில் உள்ளவற்றை தெளிவாக வாசித்து சிந்தித்து பின்பற்றவும்.
ராஜா முகமது காசிம்
முக்கிய குறிப்பு:
குணப்படுத்தக் கூடிய தக்க மருத்துவமில்லாத நோய்களென்று எதுவுமே கிடையாது. அனைத்து நோய்களுக்கும் நிச்சயமாக பூரண குணமளிக்க கூடிய மருத்துவம் இருக்கும். அதை தேடி அறிந்துகொண்டால் எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம்.
முன்னுரை
வணக்கம்!
எல்லா புகழும் இறைவனுக்கே!,
ரெய்கி, இயற்கை மருத்துவம் மற்றும் அக்குபஞ்சர் மருத்துவங்களைப் பயின்று அவற்றை ஆராயும் போதுதான் புரிந்தது; மனித உடலுக்கு நோய்களை குணப்படுத்த எந்த மருந்துகளும் தேவையில்லை என்ற உண்மை. மனித உடலுக்கென்று சுயமாக அறிவுண்டு. தனக்கு உண்டாகும் குறைகளையும், உபாதைகளையும், நோய்களையும் தானாக உணர்ந்து அவற்றை சரிசெய்துக் கொள்ளும் தன்மை மனித உடலுக்கு உண்டு. மனித உடல் என்று குறிப்பிட்டு சொல்வதைவிடவும் அனைத்து உயிரினங்களுக்கும் அத்தகைய அறிவுண்டு என்பதை அறிக. இந்நூலை முழுமையாக வாசித்து முடிக்கும் பொழுது நீங்களும் அதனை ஏற்றுகொள்வீர்கள்.
இந்நூல் பெரியவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் சர்க்கரை நோய் உண்டாவதற்கான உண்மையான காரணங்களையும், அவைப் பற்றிய தெளிவான விளக்கங்களையும் வழங்கும். இந்நூல் சர்க்கரை நோய் மட்டுமின்றி மனிதர்களுக்கு உண்டாகக் கூடிய அனைத்து வகையான நோய்களையும் உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தைப் பற்றியும் பேசும். இந்நூலில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்றினால் தலைமுடி முதல் கால் பாதம் வரையில் உண்டாகக் கூடிய அனைத்து வகையான தொந்தரவுகளையும் குணப்படுத்தலாம். சிறிய நோய்கள் என்று நம்பப்படும்