Indrum Naalaiyum Ilangarkal Kaiyil
()
About this ebook
Read more from Jyothirllata Girija
Ithayam Palavitham Rating: 0 out of 5 stars0 ratingsGnanam Piranthathu Rating: 0 out of 5 stars0 ratingsPurushan Veettu Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Kaadhal Thodarkirathu Rating: 0 out of 5 stars0 ratingsManikodi Rating: 0 out of 5 stars0 ratingsPorattam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Konda Nenjam Rating: 5 out of 5 stars5/5‘Mana’vilakku Rating: 0 out of 5 stars0 ratingsPenkalin Sinthanaikku Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vandha Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsKannamma Kaathirukiral Rating: 0 out of 5 stars0 ratingsAlaigalum Aazhangalum Rating: 0 out of 5 stars0 ratingsPonnulagam Nokkip Pohirairgal Rating: 0 out of 5 stars0 ratingsThiruppumunai Rating: 0 out of 5 stars0 ratingsMarabugal Murikindra Nerangal Rating: 0 out of 5 stars0 ratingsNaamirukkum Naadu Rating: 0 out of 5 stars0 ratingsMathalangal Rating: 0 out of 5 stars0 ratingsManasu Rating: 0 out of 5 stars0 ratingsMagalukkaga Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varumaa? Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Yugam Pirakattum! Rating: 5 out of 5 stars5/5Puratchi Siruvan Manickam Rating: 0 out of 5 stars0 ratingsSuvadikal Sonnathillai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Poiyin Rating: 0 out of 5 stars0 ratings
Related to Indrum Naalaiyum Ilangarkal Kaiyil
Related ebooks
Vetrikana Mugavari Rating: 0 out of 5 stars0 ratingsUyariya Nokkame Ungalathu Valimai Rating: 0 out of 5 stars0 ratingsMadamaiyai Koluthuvom Rating: 0 out of 5 stars0 ratingsVetrigalin Vilasangal Rating: 0 out of 5 stars0 ratingsSri Annaiyin Vazhviyal Vazhikattuthal Rating: 0 out of 5 stars0 ratingsManam Ennum Mahashakti Rating: 0 out of 5 stars0 ratingsEnnangal Tharum Abaara Vetri Rating: 3 out of 5 stars3/5Thittamiduvom! Vetri Peruvom! Rating: 0 out of 5 stars0 ratingsJohari Jannal Rating: 0 out of 5 stars0 ratingsThedalgal Rating: 0 out of 5 stars0 ratingsYaar Indha Sundaravalli? Rating: 0 out of 5 stars0 ratingsYethu Aanmai? Rating: 5 out of 5 stars5/5Sariyaga Seivathu Sulabam Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Vegu Thooramillai Rating: 0 out of 5 stars0 ratingsNeengale Vetrikku Pakkabalam Rating: 0 out of 5 stars0 ratingsPrachanaigal... Theervugal Rating: 0 out of 5 stars0 ratingsIlakku Rating: 0 out of 5 stars0 ratingsSaathanai Santhippugal Rating: 0 out of 5 stars0 ratingsManam Sinthanai Seyalpadu Rating: 0 out of 5 stars0 ratingsVazhkaiyil Vetri Pera 38 Padigal Rating: 0 out of 5 stars0 ratingsPanakkaararaaga 10 Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsManame Nee Unarnthidu Rating: 0 out of 5 stars0 ratingsManithaneya Maanbugale Unnatham! Rating: 0 out of 5 stars0 ratingsநாம் எதை நோக்கி ஓடுகிறோம்? Rating: 0 out of 5 stars0 ratingsயோகி, யோக சக்திகளைப் பெறுவது எப்படி? Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Siragukal Rating: 0 out of 5 stars0 ratingsAgavarigal Rating: 0 out of 5 stars0 ratingsDevi Sridevi Rating: 0 out of 5 stars0 ratingsPetrorgale Kavaniyungal Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsOttangal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Indrum Naalaiyum Ilangarkal Kaiyil
0 ratings0 reviews
Book preview
Indrum Naalaiyum Ilangarkal Kaiyil - Jyothirllata Girija
http://www.pustaka.co.in
இன்றும் நாளையும் இளைஞர்கள் கையில்
Indrum Naalaiyum Ilangarkal Kaiyil
Author:
ஜோதிர்லதா கிரிஜா
Jyothirllata Girija
For more books
http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1.கனவுகள் கற்பனைகள்
2.திறமைகளும் நோக்கங்களும்
3. இலக்கும் திட்டங்களும்
4. நம்பிக்கைகள்
5. 'இந்து’ இளைஞனுக்கு….
6. விவேகானந்தரின் அறைகூவல்!
7. காந்தி கண்ட கனவு
8. வேலை இல்லாத் திண்டாட்டம் தீர…
9. நூல்களின் துணை
10. ஒதுக்கித் தள்ளுங்கள்
11. பெண் சக்தி எது?
12. ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி ஏன்?
13. வரதட்சிணை ‘அசிங்கங்’கள்
14. நண்பர்கள்
15. கணவன் மனைவி உறவு
16. கற்பழிப்பு
17. ஆடைகளும் நகைகளுமா அழகு?
18 கூட்டுக் குடும்பம்
19. குடி கெடுக்கும் குடி
20. போதையால் பாழாகும் பேதையர்
21. நாளும் ஒழுக வேண்டிய நற்பண்புகள்
22. கவலையை மிதித்து களிப்புடன் வாழுங்கள்
23. பயிற்சிகள் பெற்று பலசாலியாகுங்கள்
24. புலால் உணவின் தீமைகள்
25. பிரார்த்தனை
26. அறப்போர் வீரனாகுங்கள்!
27. அணிதிரள்வீர்! பணிமுடிப்பீர்!
28. இந்தியாநேற்றுஇன்றுநாளை
1.கனவுகள் கற்பனைகள்
கனவு காணாதவர் யார்? யாருமிலர்!
விலங்குகள் கூடக் கனவு காண்கின்றனவாம். ஆறா வது அறிவு அற்றவை என்று மனிதனால் அறுதி இட்டுச் சொல்லப்படும் விலங்கினமே கனவுகள் காணும்போது மனிதன் கனவு காண்பதில் என்ன வியப்பு இருக்கிறது? ஒரு வியப்பும் இல்லைதான்.
ஆனால் அவன் என்ன கனவுகள் காண்கிறான் என்பதில்தான் அவனது உயர்வோ அல்லது தாழ்வோ அடங்கியுள்ளது. சிலருக்குக் கனவுகள் அடிக்கடி வருவதில்லை என்கிறார்கள். எப்போதாவதுதான் வருகின் றனவாம். சிலர் கனவு காணாத நாளே இல்லையாம். விந்தையான கனவுகள் சிலருக்கு வருகின்றன. பொருள் அற்ற அல்லது புரியாத கனவுகள் பலருக்கு வருகின்றன. வேறு சிலர் நாளை வரப்போவதை இன்று கணவாய்க் காண்பதுண்டு. எப்படியோ கனவுகள் இனியவையாக இருப்பின் காண்பவருக்குக் கொண்டாட்டந்தான்.
இந்தக் காலத்து இளைஞர்கள் எவ்வகையான கனவுகளைக் காண்கிறார்கள்? எத்தனையோ வகையான கனவுகள். அவரவர் பிறந்த சூழல், வளர்ந்த சூழல், பெற்ற கல்வி, நண்பர்களின் சேர்க்கை, பெற்றோரின் பக்குவநிலை அல்லது பக்குவமற்ற நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப இளைஞர்களின் மனப்போக்கு அமைந்து, அதற்கு ஒப்ப அவர்கள் காணும் கனவுகளும் அமைகின்றன
ஆனால், பொதுவாக இக்காலத்து இளைஞன் என்ன மாதிரியான கனவுகளைக் காண்பான் என்பதற்குப் பொதுவான சில பதில்கள் நமக்குத் தெரியும்.
இரவு நேரக் கனவுகள் மட்டுமின்றி, நட்ட நடுப்பகலில்கூடக் கனவு காண்போர் உண்டுதானே!
படித்துக்கொண்டிருக்கும் இளைஞன் தேர்வு பற்றிய கனவுகளைக் காண்கிறான். அவனே படித்து முடித்து விட்ட இளைஞனாக இருந்தால், தனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டியது பற்றிய கனவு அவனுக்கு வருகிறது. வேலையில் அமர்ந்துவிட்ட இளைஞனாக இருப்பின், தனக்கு வாய்க்கப்போகும் மனைவி பற்றிய கனவுகளை அவன் காண்கிறான்.
இளைஞன் எனும்போது அது ஆண்பாலை மட்டுமே குறிப்பதாக எண்ண வேண்டா பெண்ணாக இருப்பின், அதற்கேற்ப அவளது நிலை மாறுபடுமேயல்லாது அவளும் கனவு காண்பவளே. எனவே இளைஞன் என்ற சொல்லைப் பொதுவான சொல்லாக எடுத்துக்கொள்க.
இளமைப் பருவம் பதினாறுபதினேழு வயதில் தொடங்கிவிடுகிறது என்று சிலர் கூறுகின்றனர். இளமைப் நவம் என்பது பதினெட்டுக்குப் பின்னரே தொடங்கு து என்று வாதிப்போர் உண்டு. எப்படியானாலும், இனாறு வயதுவரை வாழ்ந்து, வளர்ந்து விட்டவர் களுக்கு என்று ஒரு தகுதி நிலை ஏற்பட்டுவிடுகிறது. அவர்கள் இதுவரையில் வாழ் ந் த வாழ்க்கை எத்தன்மையது என்பதைப் பொறுத்து அவர்களது வருங்காலம் அமையப் போவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டாகிவிட்டன. அவற்றை அடியோடு பர்த்து மாற்றியமைத்தல் என்பது இனி இயலாத ஒன்று.
ஆனால், இந்த வயதுவரை நாம் பெற்ற கல்வியறிவின் அடிப்படையில் தற்போக்காகச் சிந்தித்தும், அறிவுரை களைப்படித்தும், கேட்டும், அனுபவம் மிக்கோரின் யோசனைகளால் தெளிவுற்றும் நமது வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய வசதி நமக்கு நிச்சயமாக இருக்கிறது.
நம் நாட்டைப் பொறுத்த வரையில், இளைஞர்கள் சரியான வழிகாட்டிகள் இல்லாத காரணத்தால் கரை சேரத் தெரியாமல் நடுக்கடலில் தத்தளிக்கும் படகுகள் போல் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
நம் நாட்டில், உண்மையான நாட்டுப் பற்றும், மனித நேயமும், இந்த நாடு இப்படியாகிவிட்டதே என்று உண்மையாகவே கவலைப்பட்டு உருகுகிற உள்ளமும் கொண்ட மிகச் சிலரும்கூட அரசியல் என்ற சாக்கடையில் விழுந்து அதிலிருந்து மீண்டு கரைசேர முடியாமல் தாற்றத்தில் அமிழ்ந்து தத்தளித்துக் கொண்டிருக்கையில், இளைஞருக்கு வழி காட்ட யார் இருக்கிறார்கள்?
தற்போது யாருமில்லைதான்.
அப்படியானால் இளைஞர்களின் கதிதான் என்ன?
அவர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டியதுதான். வேறு வழி இல்லை.
இன்றைய இளைஞர்கள் நேற்றைய குழந்தைகள். அவர்களே நாளைய தகப்பன் மார்கள். பெண்களாயின், தாய்மார்கள்
நடந்து முடிந்துவிட்ட குழந்தைப் பருவத்தை மாற்றி யமைக்க வழி இல்லை. ஆனால், இன்றும் நாளையும் நம் கையில் என்ற எண்ணத்தோடு இளைஞர்கள் முயன்றால் எந்தக் கனவும் நினைவாகும் சாததியம் நிச்சயமாக உண்டு.
மனிதனுக்கு எத்தனையோ கனவுகள் வரினும், அவை எல்லாமே நல்ல கனவுகள் ஆகமாட்டா என்பதும் நாம் அறிந்ததுதானே!
எனவே கனவுகளை நனவாக்க வழிவகைகள் தேடுமுன்னர், இளைஞர்கள் எத்தகைய கனவுகளைக் காணல் வேண்டும் என்பது குறித்துச் சிந்தித்துவிட வேண்டும்.
கனவுகள் நியாயமானவையாகவும், தீமை பயக்காத வையாகவும் இருக்க வேண்டுவது மிக அவசியம்.
படித்து முடித்த இளைஞன் வேலை பெறக் கனவு காண்பது இயற்கை. ஒரு நல்ல வேலையில் அமர்ந்துவிட்ட இளைஞன் மனைவி பற்றிய கனவுகளில் ஆழ்வதும் இயல்பானது. தவறானது அன்று.
இவை மட்டும்தான் இளைஞர்க்குக் கனவுகளா? இல்லை. இவற்றுக்கு அப்பாற்பட்ட கனவுகள் நிச்சயமாக உண்டு. அவற்றையும் காணக்கூடிய கனவுகள், காணக் கூடாத கனவுகள் என்று பிரிக்கலாம்.
வெகு நாட்களுக்கு முன்னால் 'கல்கண்டு’ வார இதழில் இந்தக் காலத்து இளைஞர்கள் என்னமாதிரியான கனவுகள் காண்கிறார்கள்?’ என்று ஒரு கேள்வி வெளி வந்தது. அதற்கு அமரர் தமிழ்வாணன் அவர்கள், ‘அதைச் சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது' என்று பதில் சொல்லி இருந்தார்.
இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம் நம் இளைஞர்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதை.
நம் நாட்டின் வரலாறு நமக்குச் சரியாகத் தெரிய வில்லை. நம் நாட்டின் சுதந்திரத்துக்காகவும், நலனுக் காகவும் எண்ணிறந்த நற்செயல்களையும் தியாகங்களை பும் புரிந்த நல்லவர்கள் பற்றிய விவரங்கள் நமக்குத் தெரியவில்லை. பள்ளிப் படிப்பில் அரைகுறையான தகவல் களைப் பெற்றோமே யல்லாது முழு விவரங்கள் தெரிய வாய்ப்பற்றுப் போனோம். இதனால் நம் சுதந்திரத்தின் அருமை நமக்குத் தெரியாது போயிற்று.
சுதந்திரம் என்றால் எதை வேண்டுமானாலும் செய்வதற்குரிய தன்னிச்சையான போக்குக்கு ஒருவன் தனக்குத்தானே வழங்கிக்கொள்ளும் அனுமதிச் சீட்டு என்று நினைக்கவே கற்றுக்கொண்டோம்.
சுதந்திரம் என்ற சொல்லுக்கும் கட்டுப்பாடு என்ற சொல்லுக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவை மறந்தே போனோம். கட்டுப்பாடு என்பதாக ஒன்று உண்டு என்ற உணர்வே நமக்கு இல்லாது போய்விட்டது. கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் துடுப்பு இல்லாத படகுதான் என்பதை இளமையிலேயே தலையில் ஆணி அடித்தாற் போல் மூளையில் பதிக்கப்படாத சூழலில் வளர்ந்து. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று ஆகி விட்டோம்.
தொட்டிற்பழக்கம் சுடுகாடு மட்டும் என்றாலும், மனம் இருந்தால் வழி உண்டு. தீமை பயப்பது என்று திட்டவட்டமாக உணரும்போதுநல்லதையே அடைய வேண்டும் என்ற பிடிவாதம் உண்மையாகவே மனத்தில் எழும்போதுபலவீனங்களையும், தீய பழக்க வழக்கங்களையும் வெற்றிகொள்ளல் எளிதாகிறது. எவ்வளவு எளிதாகிறது என்பது எவ்வளவு உறுதியான முடிவை நாம் கொள்ளுகிறோம் என்பதைப் பொறுத்தது.
உறுதியான கொள்கையையும், நல்லதையே பெறல் வேண்டும் என்ற பிடிவாதத்தையும் பெறுவது எப்படி என்பதைத்தான் நாம் இப்போது பார்க்க வேண்டும்.
இளைஞர்களைப் பார்த்து நீ அப்படி இரு, இப்படி இரு என்று அறிவுரைகள் கூறுவதற்கு ஒருவருக்கு உண்மை யான தகுதிகள் இருப்பின், அவ்வறிவுரை களுக்குப் பயன் விளையாமற் போகாது.
இந்தக் கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியைக்கு அவ்வாறு அறிவுரை கூற என்ன தகுதி இருக்கிறது என்பதை ஆராயப் புகுந்தால், அவள் வெட்கித் தலை குனிய வேண்டியதுதான்இளமைப் பருவத்தைக் கடந்து வந்தவள் என்ற ஒரு தகுதியைத் தவிர வேறு எந்தத் தகுதி யும் தனக்கு இருப்பதாக இவள் கருதாத காரணத்தால்! இது அவையடக்கத்துக்காகச் சொல்லிக்கொள்ளும் சொல் லன்று. ஆயினும், தகுதி என்ற ஒன்று இருந்தால்தான் ஒருவர் மற்றவர்க்கு யோசனைகள் வழங்க உரிமை எடுத்துக்கொள்ளலாம் என்பது சுத்தமாயின், யாருக்குமே மற்றவர்க்கு அறிவுரை வழங்கத் தகுதி இல்லாது போய் விடுமே என்பதை நினைத்துப் பார்க்கும்போது இதில் பெரிய தவறு இல்லை என்ற சமாதானமும் ஏற்படுகிறது.
இளமையில் சிலர் தவறுகிறார்கள். அந்தத் தவற்றின் விளைவுகளால் மனமாற்றமும் திருத்தமும் பெறுகிறார் கள். அதன் விளைவாக மற்றவர்களைத் தடுத்து. ஆட்கொள்ளும் தகுதியை அவர்கள் பெறுகிறார்கள். இப்படி எடுத்துக்கொண்டால், யாருமே மற்றவரின் யோக்கியதையைச் சந்தேகிக்க மாட்டார்கள்.
இளமைப் பருவத்தைக் கடந்து வந்தவள் என்ற ஒரு தகுதியைத் தவிர, மேலும் ஒரு தகுதி இந்தக் கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியைக்கு உண்டு.
அதுதான், அவள் ஓர் இலட்சிய மனிதரைத் தன் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறாள் எ ன் ப து. அவர் தற்போது உயிருடன் இல்லை. அவருக்கு இருந்த இலட்சியங்களும், கெட்ட செயல்களைச் செய்யக்கூடாது என்ற கொள்கைப்பிடிப்பும், நாட்டுப் பற்றும், பழமையில் உள்ள நல்லவற்றில் பற்றும், புதுமையில் இருக்கும் உயர்ந்தவற்றில் பிடிப்பும், மனிதாபிமானமும், உடம்பை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், மன்னிக்கிற பெருந்தன்மையும், கெடுதல் செய்தவாக்கும் கூட நல்லதையே செய்த பெரிய மனமும் கொள்ள நாம் முயல்வேனமாயின், நாமும் நமது நாடும் முன்னேறியே ஆக வேண்டும் என்பதில் சந்தேகத்துக்கே இடமில்லை.
எத்தனையோ பெரிய மனிதர்கள் இருந்திருக்கிறார் கள். அவர்களை விடுத்து இந்தத் தனிமனிதரைப் பற்றி இவள் எழுதுவானேன் என்று யாரும் தயவுசெய்து குறை காண வேண்டாம். அசல் வாழ்க்கையில் நாம் ஒருவரைச் சந்தித்து அதனால் பெறும் பாதிப்பு, மற்றவர்களைப் பற்றிய புத்தகங்களைப் ப டி ப் ப த ல் விளையும் பாதிப்பைக் காட்டிலும் கண்கூடானது என்பதே இவரை நான் தேர்ந்து எடுத்துக்கொண்டதற்கு அடிப்படையாகும்.
அரசியலிலோ, சமூகம் தொடர்புள்ள பொது அலுவல் களிலோ ஈடுபட்டு அதனால் பெயரும் புகழும் பெற்று, நல்லவர்கள் என்ற பெருமை பெற்றுள்ள மிகப் பெரிய மனிதர்களுக்கு ஈடான நல்லவர்கள் நம் அன்றாட வாழ்க்கையில் நம்மால் சந்திக்கப்படுகிறார்கள். இவர்கள் ஊரும் உலகமும் அறியத் தக்க வகையில் பேரோ புகழோ பெறவில்லை, ஊர் மெச்ச நல்ல பெயர் எடுக்கவில்லை என்பது எந்தவகையிலும் இவர்களுடைய நியாயமான பெருமையைக் குறைத்துவிடாது. புகழேணியில் ஏறிப் பிரபலமாகும் வாய்ப்புக்கள் இவர்களைத் தேடி வர வில்லை, அல்லது அத்தகைய வாய்ப்புக்களைத் தேடி இவர்கள் போகவில்லைஎன்பது எந்த வகையிலும் இவர்களது சிறப்பைக் குறைத்துவிடாது
எந்தப் பதில் பயனையும் எதிர்பாராது தம் கடமை களைத் தமது எல்லைக்குட்பட்ட நிலையில் மிகச் சிறந்த முறையில் ஆற்றுவதையும், நல்லவற்றையே செய்வது என்ற கொள்கையோடு வாழ்வதையும் குறிக்கோள் களாகக் கொண்டு ஒ ழு கி ய மனிதர்கள் தனிமனிதர் களானால் என்ன, புகழ்வாய்ந்த பெரியவர்களானால் என்ன!
இந்த அடிப்படையில்தான் இவள் தானறிந்த கண் கூடான ஒரு நல்ல மனிதரைப் பற்றிய நிகழ்ச்சிகளை இந்தத் தொகுப்பில் கூறப் போகிறாள். அதற்காக இத் தொகுப்பு முழுவதும் அவரது புகழே பாடப்படும் என்ற அச்சம் யாருக்கும் வேண்டாம். பொருத்தமான இடங் களில் மட்டுமே இவர் வருவார். இவரால் வழிகாட்டப் பட்ட இளைஞர்கள் பலர் இன்று நல்ல நிலையில் உள்ளனர். அடிக்கடி இவரை நினைவு கூர்கின்றனர். தங்கள் நன்னடத்தையை உருவாக்கியமைக்கு இவர் பால் நன்றி கொண்டுள்ளனர். இந்த அளவில், இவர் ஒர் உதாரண மனிதராய் இத் தொகுப்பில் காட்டப்படுவார்.
அமரர் தமிழ்வாணன் ஒரு கேள்விக்குக் கூறிய பதில் பற்றிச் சொல்லப்பட்டது. இந்தக் காலத்து இளைஞர்கள் எதைப் பற்றிய கனவுகளைக் காண்கிறார்கள் என்பதை வெளியிடத் தமக்கு வெட்கமாக இருப்பதாக அவர் கூறிய பதில் இங்கே நினைவுபடுத்தப்படுகிறது.
இயல்பர்க வரக்கூடிய கனவுகளுக்கு ஏன் வெட்கப்பட வேண்டும் என்று சிலர் நினைக்கக்கூடும்.
விஷயம் அதில்லை. உடம்புக்குள்ளும், உள்ளத்துக் குள்ளும் விஷம் அதிகமாய் உட்சென்றதால் வரும் வேண்டாத கனவுகளையே அவர் குறிப்பிட்டார் என்பது வெள்ளிடைமலை.
நஞ்சை வேறு யாரேனும் நம் உடலுக்குள் செலுத்தி னால் நாம் அவரைக் குறை கூறலாம். நாம் அறியாத முறையில் நமக்குள் செலுத்தப்படுகிற நச்சுத்தனமான விஷயங்களுக்கு நாம் பொறுப்பில்லை என்று எளிதாய்க் கழற்றிக் கொள்ளலாம். ஆனால் நஞ்சு என்று அறிந்தும் சாக்கடை அல்லது சகதி என்பது தெரியும் நிலையிலும் அதற்குள் காலை வைப்பதுமாதிரி அதனை நாம் உட் கொள்ளுவோமாயின் அதற்கு நாமே பொறுப்பேற்க வேண்டியவர்களாகிறோம்.
யாரும் நமக்கு எடுத்துக் காட்டாமலே நமக்கு நன்மை பயக்க வல்லவை எவை எவை, கெடுதி செய்யக்கூடியவை எவைஎவை என்பது நமக்கே தெரியும் தெரிந்தும்கூட, நாம் தப்பான வழியில் போய்க்கொண்டிருக்கிறோம்.
நாம் வாழுகின்ற நாட்டையும், நம்மைச் சுற்றியுள்ள நம் நாட்டு ஏழை, எளிய மக்களையும் நேசிக்க நாம் கற்றுக்கொண்டால், நம்முடைய பலவீனங்களை வெற்றி கொள்ளுதல் மிக எளிதாகிவிடும்.
எனது நாடு, என்னுடைய நாட்டு மக்கள் என்ற பாகு பாடு இன்றி அகில உலகத்தையும், எல்லா நாட்டு மக்களை யும் நேசித்தல்மிகப் பெரிய மனிதத்தன்மையாயினும், குறைந்தபட்சம் நம் நாட்டிலாவது நமது அக்கறை விதைக்கப்பட வேண்டும் என்பதை யாரும் ஒப்புக் கொள்ளுவார்கள்.
நாட்டை நேசிக்கத் தொடங்குவதற்கு முன்னால், நாம் நமது வீட்டை நேசிக்கத் தொடங்க வேண்டும். பண்புகள் முதலில் வீட்டில்தான் விதைக்கப்படுகின்றன. வீட்டை நேசிக்கத் தெரியாத மனிதனால் நாட்டை நேசிக்க முடியாது.
இந்த உலகத்தில் கோடிக்கணக்கான . உயிரினங்கள் படைக்கப்பட்டு உயிர் வாழ்கின்றன. எத்தனை உயிரினங் கள் என்பதை மனிதன் இன்னும் முழுவதுமாய்க் கணக் கெடுத்த பாடில்லை.
ஆனால், அத்தனை உயிரினங்களிலும் தானே மிகச் சிறந்த படைப்பு என்ற செருக்கு மட்டும் மனிதனுக்கு என்றோ முளைத்துவிட்டது. என்றோ முளைவிட்டு விட்ட இத்தச் செருக்குக்கு நியாயமான முறையில் மனிதன் என்றைக்காவது வாழ்ந்துள்ளானா, இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறானா என்பதை ஆராயப் புகுந்தால், அவன் மிகக் கேடு கெட்ட பிறவி என்பது புரிய வரும். ஆண்டவனால் தனக்கு அளிக்கப்பட்ட ஆறாவது அறிவை நல்ல முறையில் ஒருவன் பயன்படுத்தி மகிழ்ச்சி பெறத் தவறும்போது, அவனைப் பற்றி வேறு என்ன சொல்லுவது?
நம் நாட்டில் இன்றுள்ள இலட்சக்கணக்கான குடும்பங். களில் மகிழ்ச்சியாக வாழும் குடும்பங்களில் சில நூறு களாவது தேறுமா என்பது சந்தேகமே.
ஏன் மனிதன் இப்படி வாழ்கிறான்? கடவுள் தனக்குக் கொடுத்த ஆறாவது அறிவை அவன் ஏன் இப்படித் தவறாகப் பயன்படுத்துகிறான்? நல்ல முறையில் தன் சக்திகளைத் திசை திருப்பினால் தானும் நன்றாக வாழ்ந்து, தனது சுற்றுப்புறத்திலும் மகிழ்ச்சியை விதைக் கலாமே அவன்!
இதற்கு அவன் என்ன செய்ய வேண்டும்?
நல்லவனாக வேண்டும். தான் செய்கிற செயல்கள் தன்னையும் மற்றவர்களையும் என்னென்ன வழிகளில் பாதிக்கும் என்பதைப் பற்றிச் சிந்திக்காமல் எந்த ஒரு செயலையும் செய்வதில்லை என்று ஒர் இ ைள ஞ ன் தனக்குள் முடிவு செய்துகொள்கிறானோ அன்றே அவனுக்கு நிம்ம தி பிறந்துவிட்டது எனக் கொள்ளலாம்.
நல்ல மனிதனின் அருகாமை சொர்க்கத்துக்கு ஈடானது. நல்லவர்கள் பிறரால் விரும்பப்படுகிறார்கள் என்பது நிச்சயமாகத் தெரிந்த நிலையிலும் நாம் நல்லவர் களாகப் பெரும்பாலும் வாழ்வதில்லை என்பது அறியா மையின் சிகரம்.
நாம் நல்லவர்களாக வாழ்வதில்லை என்பதோடு நம் குறைபாடு முற்றுப் பெறவில்லை. அரிதாகவே தட்டுப் படும் ஒரு சில நல்லவர்களையும் நாம் ஏமாற்றுகிறோம் என்பதில்தான் நம் குறையே அடங்கியுள்ளது.
நம் பெற்றோரே கூட இந்தப் பொதுவான விதிக்கு விலக்கில்லை. ஒரு குடும்பத்தில் ஒரு நல்ல சிறுவனும் இருக்கிறான். ஒரு பொல்லாத சிறுவனும் இருக்கிறான். பொல்லாத குழந்தைக்குப் பெற்றோர் பயப்படுகிறார்கள். நல்ல குழந்தையை ஏமாற்றிப் பொல்லாத குழந்தைக்குச் சலுகைகள் அளிக்கிறார்கள்.
எனவே, ஒரு நல்ல சிறுவனுக்குச் சோர்வு அளிக்கிற காரியம் அவனது குழந்தைப் பருவத்தில் அவனது பெற்றோராலேயே தொடங்கி வைக்கப்பட்டு விடுகிறது. இத்தகைய நடப்பினாலேயே நல்ல குழந்தைகள் பெரும் பாலும் தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவோ அல்லது அற்றவர்களாகவோ வளரும்படி நேர்கிறது.
நாடு என்பது பெரிய நிலை. வீடு என்பது சிறிய நிலை. ஆயினும் ஒரு நாட்டின் நிம்மதியான நடப்பு அதிலுள்ள வீடுகளில் நிலவும் நிம்மதியையே மிகப் பெரிய அளவுக்குப் பொறுத்திருக்கிறது. வீடுகளில் வசிப்போர் நிம்மதியின்மை, மகிழ்ச்சிக்குறைவு, பிரச்சினைகள் ஆகிய வற்றால் பாதிக்கப்பட்டிருப்பின், இவற்றின் ஒட்டுமொத்த மான சேர்க்கை அவ்வீடுகள் உள்ள ஊரின் தெருக்களில் கலவரங்களாகவும் தெருச்சண்டைகளாகவும் எதிரொலிக்கிறது.
எனவே, ஒரு நாட்டின் நிம்மதி அதன் வீடுகளின் நிம்மதியைப் பொறுத்ததாகும். வீடுகளில் நிம்மதி வர நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே அடுத்த கேள்வி.
இன்று உலகிலுள்ள எந்தப் பிரச்சினையை அணுகி னாலும், மனிதன் நல்லவனாக இல்லா திருப்பதே பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது என்பதை அறியலாம்.
இயல்பாக ஈகை, இரக்கம், அன்பு போன்ற உணர்ச்சி பூர்வமான தன்மைகள் உள்ள மனிதன் கெட்டவனாக ஆனது எதனால் என்று பார்த்தால், அவனது அநியாய மான காமத்தினாலேயே என்பது தெரிய வரும் காமம் என்பது ஆணுக்குப் பெண்ணின் மீதோ, அல்லது பெண் ணுக்கு ஆணின் மீதோ ஏற்படுகிற உடற்பசி மட்டுமன்று. காமம் என்பது அதீத ஆசை என்ற பொருளிலேயே இங்கு கூறப்படுகிறது
உலகத்தில் இன்றுள்ள அத்தனை சமூக நோய்களுக்கும் ஆசைகளே அடிப்படையாகின்றன. அதிலும், உடற் ாமம் அத்தனை ஆசைகளுக்கும் உச்சிமுனை போன்றது இன்னும் ஆழ்ந்து நோக்கி ஆராயப்புகின் ஆணின் காமமே இன்று உலகம் இருக்கிற இருப்புக்கு வழி வகுத்துள்ளது என்பதை உணரலாம்.
ஒவ்வோர் இளைஞனும் கோபப்படாது இதுபற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
இந்தக் கட்டுரைத் தொகுப்புக்கு இது ஒரு சுருக்கமான ன்னுரை போன்ற கட்டுரையே ஆகும்.
வரப்போகிற கட்டுரைகளில் நாம் ஒவ்வொறு துறை யாக அலசி ஆராய்ந்து முடிவுகளுக்கு வரலாம்.
ஆண்களின் குறைகளைச் சொல்லும்போது