Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

December Poo Teacher
December Poo Teacher
December Poo Teacher
Ebook193 pages1 hour

December Poo Teacher

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386351043
December Poo Teacher

Read more from Pattukottai Prabakar

Related to December Poo Teacher

Related ebooks

Reviews for December Poo Teacher

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    December Poo Teacher - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    டிசம்பர் பூ டீச்சர்

    December Poo Teacher

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மரம்

    2. அர்த்தம் புரியவில்லை

    3. மனித நேரம்

    4. பின்னணியில் பெண்

    5. நாம் வாழ வந்தவர்கள்!

    6. கிளிப்பேச்சு கேட்க வா!

    7. ராஜசேகரின் கடைசி அத்தியாயம்

    8. காதல் ஊஞ்சல்

    9. இது அல்ல புரட்சி

    10. ரெண்டு இட்லி, ஒரு வடை

    11. காதலுடன் காத்திரு

    12. இன்றைக்கு வாழலாம்

    13. உயிருக்கு உரிமை இல்லை

    14. நறுக்கென்று நாலு வார்த்தை

    15. மாற்றம்

    16. புஷ்பா

    17. சௌக்கியமா?

    18. டிசம்பர் பூ டீச்சர்

    1

    மரம்

    ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது என்று பழைய தலைமுறையினர் சொல்லியிருக்கிறார்கள். ஒரு படி இன்னும் மேலே போய் நான் ஊரையே சொல்வதாய் இல்லை. வெறுமனே ‘ஊர்’ என்றே வைத்துக் கொள்வோம். ஊர் மிகப் பெரிதும் இல்லை. மிகச் சிறியதும் இல்லை – என் மனைவியின் கல்யாணப்புடவையின் ஐரிகையின் அகலம் போல, எட்டு வருட இடைவெளியில் நான் இப்போது ஊருக்கு வந்திருக்கிறேன். டீக்கடையில் அமர்ந்து ஸ்ட்ராங்காய் ஒரு டீ சொல்லி விட்டுக் காத்திருக்கும் நேரத்தில் பொழுது போகாமல் உங்களுடனே பேசிக்கொண்டிருக்கிறேன். டீக்கடை, டீ என்றதும் எனக்கு லுங்கி கட்டித் தலையில் முண்டாசு சுற்றி விடப்போகிறீர்கள். வேண்டாம் சில வரிகள் சுயபுராணம் சமர்பித்து விடுவது நல்லது. தேவேந்திரன் என்று எனக்கு ஏன் பெயரிட்டாய் என்று விவரம் கேட்டுப்பார்த்தும், பதில் கிடைக்கவில்லை. நண்பர்கள் தேவா என்பார்கள். கல்யாணமாகி மூன்று குழந்தை பெற்றக்கிழவி மாதிரி, இப்போது மாறிப்போன அபிராமி இருக்கிறாள் பாருங்கள்அவள் அப்போது தன் டீன் பருவத்தில் நீங்கள் நம்ப முடியாத ஒரு தோற்றத்தில் இருப்பாள், திங்கள் நான் என்றால், செவ்வாய் மது, புதன் ரகு, வியாழன் ரவி என்று கிழமை வாரியாக பங்கு போட்டு சைட் அடிப்போம். அந்த அபிராமி என்னைத் தேவ் என்று தான் செல்லமாக அழைப்பாள். இளமை பருவத் திருவிளையாடல்கள்!

    கதை பாதை மாறிப்போகிறது. ஊருக்கு வந்து விடலாம். இந்த ஊரில் ஒரு பெரிய சோப்பு கம்பெனி தன் ஏஜென்சி கிளை ஒன்றைத் திறந்து என்னை இங்கே வேலையில் போட்டது. மூன்று வருடங்கள் தங்கி வேலைப் பார்த்தேன். அதற்குப் பிறகு ஏஜென்சியை மூடிவிட்டார்கள். காரணம் நான் இல்லை. அந்த சோப்பைத் தேய்த்தால் உடம்பெல்லாம் அரிப்பு ஏற்பட்டுச் சொறிவதற்கு என்று தனியாகச் சம்பளத்திற்கு ஆள் வைத்துக் கொள்ள வேண்டிருக்கிறது என்று பல பேர் புகார்கள் எழுதியதோடு, கேஸ் போடவா என்று வேறு மிரட்டிவிட்டார்கள் என்று பின்னர் தெரிந்து கொண்டேன்.

    இங்கே ராஜ வீதி என்றிருக்கிறது. பெயரில் தான் கம்பீரம். மற்றபடி அதை சிப்பாய் வீதி என்று கூடச் சொல்ல முடியாது. ஆனாலும் ஊருக்கு அது தான் பரபரப்பானகடை வீதி. அதில் கிருஷ்ணா கபே என்று ஒரு ஹோட்டல். முதலாளி கல்லாப் பெட்டியிலும் இருப்பார். எழுந்து வந்து சப்ளையும் செய்வார்.

    கபேக்கு மாடியில் நான்கு அறைகள் இருந்தன. அதில் ஒன்றில் மாதம் ஒன்றுக்குரூபாய் ஐம்பத்தி ஆறு வீதம் வாடகை கொடுத்துத் தங்கியிருந்தேன். ஆறு ரூபாய் கரண்டுக்காக.

    என் அறையில் இருந்து பார்க்க ஜன்னல் வழியாகத் தெரிவது சாலையில் அந்தப் பக்கம் கிருஷ்ணா கபேக்கு எதிரில் அந்த மரம்.

    அரச மரம் ஏராளமான கிளைகள். கம்பீரமான மரம். அந்த மரத்தைப் பார்க்கும் போதே ஒரு நம்பிக்கை மனதில் ததும்பும். அரச மரத்தில் பறவைகள் தங்குவதால் அதன் நிறைய இலைகளில் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவியது போல வெள்ளை எச்சங்கள் இருக்கும். இரண்டு பேர்கள் சேர்த்து முயன்றால் தான் கூட்டுறவு முறையில் அந்த மரத்தைக் கட்டிப்பிடிக்க முடியும். மரத்தில் ஆணியடித்து மூன்று போர்டுகள் மாட்டியிருக்கும். ஒன்று கேசவா டுட்டோரியல் காலேஜ். மற்றொன்று நிஜாம் டைலர்ஸ். மூன்றாவது பிரபல ஜோதிடர் கனகசபையை வேங்கடா லாட்ஜில் 6 ஆம் நம்பர் அறையில் சந்திக்கச் சொல்லும். தேர்தல் நேரத்திலும், அமைச்சர்கள் ஊருக்கு வருகை புரியும் காலங்களிலும் பேனர் கட்ட மரம் மிகவும் உதவும். எதிர்ப்புறம் விளக்குக் கம்பத்தில் கட்டி விட்டு மறுமுனைகளை மரத்தில்ஏறி ஒரு கிளையில் இழுத்துப் பிடித்துக் கட்டுவார்கள்.

    மறை கழண்டவன் என்றோ, சோம்பேறி என்றோ என்னை உங்கள் விருப்பப்படி சொல்லிக் கொள்வதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஏனென்றால்… என் முழுநேரபொழுதுபோக்கு என்னவென்றால் ஜன்னல் அருகில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு அந்த மரத்தை வேடிக்கைப் பார்த்தல்தான்.

    அந்த மரத்தை நான் எல்லா காலங்களிலும் பார்த்திருக்கறேன். எல்லா நேரங்களிலும் பார்த்திருக்கறேன். காற்றடிக்கும் போது அதன் இலைகள் சிணுங்குவதில் ஒரு நளினம் இருக்கும். குறிப்பாக காற்றடித்து ஓய்ந்த பிறகும், ஏதாவது ஒரு கிளையின் முனையில் ஒரே ஒரு இலை மட்டும் ஊஞ்சலாடுவது போல தலையசைத்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பதில் ஒரு முழு கவிதைத் தொகுப்பே படித்து முடித்த திருப்தி மனத்தில் ஏற்படும். மழை பெய்து முடிந்ததும் நிதானமாக நீர் சொட்டும் அழகு தனி. அப்போது ஏதாவது ஒரு பறவை வந்து அமர்ந்து விட்டால், அந்த அசைவில் பன்னீர் தெளிப்பது போல கிளை அசைந்து தன்னை உதறிக் கொள்ளும்.

    காலையில் கண் விழித்தும் அந்த மரத்தைப் பார்த்தேயாக வேண்டும் என்று ஒரு வழக்கமே கொண்டிருந்தேன். இனம் புரியாமல் எனக்கு அந்த மரத்தின் மேல் ஒரு ஒட்டுதல். என் நண்பர்கள் என்னைப் பார்க்க வரும்போது மரத்தைக் காட்டி ஏதாவது சொல்வேன். ஒரு பயலாவது ரசனையோடு கேட்க வேண்டுமே. என்ன ஆச்சு உனக்கு என்று கிண்டல் செய்வார்கள்.

    நான் அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. என்ன தெரியும் இவர்களுக்கு? இயற்கை தந்த சீதனம்-மரம் இல்லையேல் மனிதன் இல்லை. மனிதனின் ஆயுளை விடப்பல மடங்கு கெட்டி இந்த மரங்களுக்கு.

    இப்படியாகத் தினங்கள் உருண்டு கொண்டிருந்தபோது ஒரு நாள்…

    மரத்திற்கு அருகில் இருந்த எப்போதும் தூங்கி வழியும் அலுமினியப் பாத்திரங்களையும், பொரி கடலை வறுத்து விற்ற கடையும் காலி செய்யப்பட்டன. கிருஷ்ணா கபேயில் காபி குடித்து விட்டு விவரம் கேட்ட போது முதலாளி கிருஷ்ணன் அந்த பழமையான தெரியாதா உனக்கு? என்கிற டயலாக்கில் செய்தியைத் துவக்கினான்.

    பெரிய டவுனில் இருந்து ஏற்கனவே தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் வெற்றிகரமாக ஜவுளிக்கடை நடத்திக் கொண்டிருக்கும் ஈஸ்வரன் என்கிறபெரிய மனிதன். இங்கே மாடி போட்டுக் கட்டிடம் கட்டுகிறானாம். முழுக்க ஏ.சி. செய்யப் போறானாம். ‘ஈஸ்வரன் டெக்ஸ்டைல்ஸ்‘ அந்த இடத்தில்பளபளக்கப் போகிறதாம். ஊரில் ஏற்கனவே உள்ள ஏழெட்டு ஜவுளிக்கடைகளை எல்லாம் ஜீரணம் செய்யப் போகிறதாம்.

    நான் சந்தோசமாக சொன்னேன்.

    கிருஷ்ணா, நம்ம ஊர்ல இந்த மாதிரி நாலு கடைகள் வந்தா நம்ம ஊரே டெவலப் ஆகும். சுத்துப்பட்டு கிராமத்திலேர்ந்து இங்கே ஜனப்புழக்கம் வரும். எல்லா தொழிலும் இம்ப்ரூவ் ஆகும். குறிப்பா நம்ம ராஜ வீதி களைகட்டும். வரட்டும் ஜோரா வரட்டும்.

    வந்தது. ஒரு குழந்தை பிறக்கத் தேவையான மாதங்களில் ஈஸ்வர் டெக்ஸ்டைல்ஸ் உருவானது. ராஜ வீதியில் முதல் இரண்டு மாடிக் கட்டிடம். முகப்பில் பெரிய கண்ணாடிகளுக்கு பின் பொம்மைகளை நிறுத்தினார்கள். போர்டில் எவர்சில்வர் தகடு கட் லெட்டர்சில் அடித்து, அதற்கு மேல் நான்கு மெர்க்குரி ஏக விளக்குகள் போட்டு அமர்க்களம், ஸ்பெஷல் தோசை அளவுக்கு பெரிய அழைப்பிதழாக ஊரெல்லாம் விநியோகித்து திறந்தார்கள்.

    கொஞ்சம் மார்க்கெட் டல்லான நடிகை மைதா மூட்டைக்குள் விழுந்து புரண்டு வந்தவளைப் போல வந்து ரிப்பன் வெட்டி விட்டு அவளே கை தட்டினாள்.

    அந்தக் கடை ஆரம்பித்து சில தினங்களில் எனக்கு அதை பிடிக்காமல் போனது காரணம்- மரத்தின் அழகு கெட்டுப்போய் விட்டதாகப்பட்டது. முன்பு மரம் உயரமாக இருந்தது. பாத்திரக்கடையும் பொரிக் கடையும் தாழ்வாக இருந்ததில் மரம் நிமிர்ந்து நின்றது போலியிருந்தது. இப்போது பின்னணியில் மரத்தை விட உயரமான கட்டிடம் வந்து விட்டதால், அதன் ஆடம்பர விளக்குகளில் வெளிச்சங்களில் மரம் சற்று டல்லடித்தது.

    இதற்கு யார் என்ன செய்ய முடியும்?

    கட்டிடம் கட்டுவது அவரவர் உரிமை.

    அன்றைக்கு கிருஷ்ணா கபேயில் பஞ்சாயத்து போர்டு ஆபிசில் வேலை பார்க்கிற பியூன் மசால் வடை பார்சல் வாங்கிப்போக வந்திருந்தான். எனக்கு அறிமுகமானவன். அதனால் சிரித்தான். பக்கத்தில் வந்தான்.

    காதை கொண்டாங்க என்றான்.

    எனக்கு வேணுமே என்றேன்.

    ஒரு சேதி சொல்லணும்ப்பா என்று குனிந்து, நம்ம பஞ்சாயத்து போர்டு பிரெசிடெண்டுக்கு ஆயிரம் ரூபா லஞ்சம் கொடுத்திருக்காரு ஈஸ்வர் டெக்ஸ்டைல்ஸ் முதலாளி என்றான்.

    எதுக்கு?

    எதிர் சைடில இருக்கிற அரசமரம் அவரோட கடையோட பார்வையை சுத்தமா மறைச்சிக்கிட்டு நிக்கிதில்லே, அதனால கட்டடத்தோட அழகு கெட்டுப் போகுதாம். மரம் இல்லைன்னா கடைஇன்னும் பளிச்சுன்னு தெரியுமாம். வியாபாரம் இன்னும் அதிகமா நடக்குமாம். அதுக்காக மரம் ரொம்ப வயசாகி பட்டுப்போய் எந்த நேரமும் விழுந்துடும்கிற மாதிரி இருக்கிறதா என்ஜீனியரை வச்சி ரிப்போர்ட் எழுதச்சொல்லி போர்டு ஆளுங்களை விட்டு வெட்டப் பேறாங்க. இந்த ஏற்பாட்டுக்குத்தான் லஞ்சம்.

    நான் கொதிச்சுப் போனேன். தனி நபராய் புறப்பட்டு நேராய் பிரசிடெண்ட் பஞ்சாட்சாரம் வீட்டுக்குப் போனேன். பஞ்சாட்சாரத்துக்கு இரண்டு மனைவிகள். இரண்டு குடும்பத்திலும் சேர்ந்து மொத்தமாக ஒன்றரை டஜன் உருப்படிகள் தேறும். எந்த நிமிடமும் நழுவி விழுந்து விடும் போலத்தான் வேட்டியைக் கட்டுவார். வேட்டியைச் சரியாக கட்டிக் கொள்வதற்கு நேரமே இருந்திருக்காது என்று நினைத்துக் கொள்வேன்.

    பிரசிடெண்ட் என்னை அன்போடு உபசரித்து, கசக்கக் காப்பி கொடுத்து, என்ன விஷயம்? என்றார் பவ்யமாய். இன்னொரு காரணம் உண்டு. அவரின் வயதுக்கு வந்த நான்கு பெண்களில் எவளையாவது எனக்குத் தரலாம் என்று கனவு காண்பதாக பியூன் இன்னொரு சமயம் சொல்லியிருந்தான். சைட் அடிக்கக்கூட லாயக்கில்லாத பெண்கள். கடைசி முனைவரை பின்னிக் குஞ்சம் வைத்துக் கொண்டு, அரை இஞ்ச்சுக்குப் பவுடர் அடித்திருப்பார்கள். கூரை விழுவதாக இருந்தால் மூன்று பேரையும் தூண்களாக நிறுத்தலாம். திடு திப்பென்று கிளைக் கதைக்குச் செல்வதைத் தவிர்க்க முடியவில்லை.

    "பிரசிடெண்ட் சார், ஜவுளிக்கடை ஈஸ்வரன்கிட்டே வாங்கின ஆயிரம் ரூபாயைத் திருப்பிக் கொடுத்திடுங்க. மரத்தை வெட்டச் செய்திருக்கிற ஏற்பாட்டை நிறுத்துங்க. இல்லைன்னா நான் என்ன செய்வேன்னு சொல்லிடறேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1