Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uravai Naadum Paravai
Uravai Naadum Paravai
Uravai Naadum Paravai
Ebook90 pages1 hour

Uravai Naadum Paravai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

GA Prabha is a prolific writer of Tamil, and has written about 100 novels, 120+ short stories, 5 novelettes covering in family and romance category. Her works are published in various magazines. She has also won many prizes conducted by various magazines like Kalki and Anandha Vikatan.


Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386351807
Uravai Naadum Paravai

Read more from Ga Prabha

Related to Uravai Naadum Paravai

Related ebooks

Reviews for Uravai Naadum Paravai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uravai Naadum Paravai - GA Prabha

    http://www.pustaka.co.in

    உறவை நாடும் பறவை

    Uravai Naadum Paravai

    Author:

    ஜி.ஏ.பிரபா

    G.A.Prabha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ga-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    "கணேச சரணம் கணபதி சரணம்

    நவசக்தி விநாயக சரணம்"

    கண்மூடி கிழக்கு திசை நோக்கி கரங்குவித்து நின்றாள் ஸ்வாதி.

    தகதகவென்று பொன்னிறமாய் எழும்பியது சூரியன். அதன் கதிர்கள் கண்ணாடியில் பட்டு ஐ.சி.யூவே பொன்னிறத்தில் மின்னியது. மருத்துவமனை கட்டிடத்திற்கும் மேலே உயர்ந்திருந்த மரங்களின் கிளைகள், மின்னி மன்னி மறையும் சூரியனை பார்க்கவே பரவசமாக இருந்தது.

    வெளியுலகத்தைப் பார்ப்பதே பரவசம் தான்.

    ஐ.சி.யூவுக்குள் நோயாளிகள் , அவர்களின் கேஸ்ஷஷீட் , அவர்களுக்கான மருந்துகள் என்று பன்னிரண்டு மணி நேரம் இதற்குள்ளேயே அடங்கிவிடும். வெளி உலகைக் கண்டால் இரு கை விரித்து , அணைத்துக் கொள்ளும் ஆனந்தம்.

    நைட்ட்யூட்டி இருக்கும் நாட்களில் தான் இப்படி உணர்வுகள். பகல் நேரத்தில் சாதாரணமாய் வெளிச்சம் உள்ளே வரும். கண்ணாடி அருகே நின்றால் வெளி உலகம் தெரியும்.

    ஸ்வாதி திரைச்சீலைகளை நன்றாக இழுத்துவிட்டாள்.

    வா... வா... வசந்தமே. சுகம் தரும் சுகந்தமே லீலா பாடினாள்.

    டெட்டால் வாசனை தான் அடிக்கிறது. இது சுகந்தமா?

    இதாண்டி பழகிருச்சு

    அது வேணா வாஸ்தவம்தான்

    பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைச்சுட்டியா?

    ஆச்சு என்ற ஸ்வாதி டேய் , டேய் , தம்பு , தம்பு என்று பதறி ஓடினாள். இரண்டாம் நம்பர் பெட்டில் ஏழு வயதுச் சிறுவன் தனக்குள் செருகியிருந்த டியூப்களை பிடுங்கிக் கொண்டிருந்தான்.

    தம்பு. இது கூடாது. தெரியும்ல.

    இம்சையா இருக்குக்கா.

    பிடுங்கிட்டா எல்லாம் இம்சை ஆயிடும் தம்பு

    ஆபரேஷன் தான் முடிஞ்சிடுச்சே

    இனி தானே கவனமா இருக்கணும்

    அவன் முகம் வாடியது. அலுப்போடு கண்ணை மூடிக் கொண்டான். இருதய வால்வு மாற்று ஆபரேஷன் அவனுக்கு. நேற்று இரவு தான் ஐ.சி.யூ வார்டுக்கே வந்தான். விடிவதற்குள் பொறுக்க முடியவில்லை.

    குழந்தைகளுக்கு இருதய ஆபரேஷன் நடந்தால் , அதன் பிறகு அவர்களை சமாளிப்பது தான் பெரும்பாடு. பிஞ்சு பிஞ்சாய் அந்த குழந்தைகள் வலியில் தவிக்கும் போது நெஞ்சே வெந்து விடும். நோய் பெரியவர்களுக்கு வரக்கூடாதா? ஏன் குழந்தைகளுக்கு வருகிறது?

    அப்போதெல்லாம் தான் ஏன் பி.எஸ்ஸி நர்சிங் முடித்தோம் என்று வெறுப்பாக இருக்கும். ஆனால் அந்தக் குழந்தைகள் உடல் தேறி , கன்னத்தில் முத்தமிட்டு விடைபெறுகையில் படித்த படிப்புக்கே அர்த்தம் கிடைத்துவிடும்.

    என்னடி இது நர்சிங் படிப்பு? நர்சிங் டிகிரி சேர்ந்தபோது அக்கா ஸவிதா முகம் சுளித்தாள்.

    மனித சமூகத்துக்கு பயன் தரக் கூடிய படிப்புக்கா

    என்ன பயனோ! நீ பொழைக்க வழி தேடாம?

    இதுவும் ஒரு தொழில் தானே! புண்ணுக்கு மருந்து தடவும் வேலை. அன்பான பேச்சால் , செயலால் வலியுற்றோர்க்கு நிவாரணம் தரும் புனிதமான பணி. எந்நேரமும் அன்பு , அன்பு , அன்பைத் தவிர வேறில்லை.

    ஸ்வாதி தம்புவை தடவிக் கொடுத்தாள். சூடாய் ஹார்லிக்ஸ் கலந்து தந்து , உடம்பைத் துடைத்து , பவுடர் போட்டு விட்டாள்.

    ஹப்பா! தம்பு கமகமன்னு மணக்கறேடா

    பாடி ஸ்பிரேவும் அடிச்சுப்பேன்கா

    வெரிகுட். தம்புவோட பேர் என்ன?

    சூர்யா

    அட! சிங்கம்!

    தம்புவின் முகம் பிரகாசித்தது.

    நான் அந்த படம் பார்த்துட்டேனே

    அட! ஸ்வாதி போலியாய் வருந்தினாள். நான் இன்னும் பார்க்கலை

    கதை சொல்லட்டா

    தம்புக் குட்டி இப்ப படுத்து தூங்கு. நான் நைட் ட்யூட்டி வந்ததும் கதை சொல்லுவியாம்

    ட்யூட்டி முடிஞ்சுதா அவன் முகம் வாடியது.

    நீங்க போய்ட்டா எனக்கு போர் அடிக்கும்

    அதெப்படி போர் அடிக்கும்? தம்புக் குட்டி தூங்கணும். டாக்டர் செக்கப் பண்ண வருவார். எக்ஸ்ரே எடுக்கணும். சாப்பிடணும். அம்மா வருவாங்க பார்க்க. எத்தனை வேலை இருக்கு அவன் கன்னத்தை தட்டிவிட்டு அடுத்த பெட்டுக்கு நகர்ந்தாள்.

    பள்ளி ஆசிரியை பைபாஸ் சர்ஜரி செய்து படுத்திருந்தார். எந்நேரமும் உற்சாகமுமாய் புத்துணர்ச்சியுமாய் இருப்பார். ரிசல்ட்

    Enjoying the preview?
    Page 1 of 1