Asai Mazhai Megamey
()
About this ebook
'ஆசை மழை மேகமே' மென்மையான காதல் கதைதான்….! 'இடுக்கி' எஸ்டேட்டை கதைக்களமாக்கியிருக்கிறேன். நாயகி மேகாவும், கதாநாயகன் ஆகாஷும் நிச்சயமாய் வசீகரிப்பார்கள்.
ஆதமாவுக்கு ஒரு சக்தி உண்டு. அது நல்லவரைக் காக்கும். அநீதியை அழிக்கும் என்பார்கள். இந்த நாவலில் அந்த ஆத்மாவை நீங்கள் சந்திக்கலாம்.
Read more from Lakshmi Praba
Unnai Virumbinen Uyire.. Rating: 5 out of 5 stars5/5Maaya Kangal Rating: 5 out of 5 stars5/5Engey En Jeevaney..? Rating: 5 out of 5 stars5/5Ennuyir Neethaney…! Rating: 5 out of 5 stars5/5Ennalum Un Pon Vaanam Naan... Rating: 5 out of 5 stars5/5Ullam Rendum Ondru Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5Pathu Maatha Bandham Rating: 0 out of 5 stars0 ratingsEnna Vilai Azhage…? Rating: 5 out of 5 stars5/5Andhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Maavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsThirumagal Thedi Vandhaal… Rating: 5 out of 5 stars5/5Nenjam Irandin Sangamam Rating: 5 out of 5 stars5/5Kaana Vendum Seekiram...! Rating: 5 out of 5 stars5/5Unakkaagavey Naan Vazhgiren Rating: 5 out of 5 stars5/5Athisayam Adhu Rakasiyam Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Aagaya gangai Rating: 5 out of 5 stars5/5Vaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Dinam Dinam Valarpirai Rating: 0 out of 5 stars0 ratingsDevan Thantha Veenai... Rating: 0 out of 5 stars0 ratingsSorgathiley Idhu Mudivaanathu Rating: 5 out of 5 stars5/5Agnip Pravesam Rating: 5 out of 5 stars5/5Chithirame…. Senthen Mazhaiye Rating: 0 out of 5 stars0 ratingsIdhayamellam Un Ninaivu Rating: 0 out of 5 stars0 ratingsVaa... Pon Mayile Rating: 5 out of 5 stars5/5Naan Unai Neenga Maatten Rating: 5 out of 5 stars5/5Naan Undhan Poomalai Rating: 5 out of 5 stars5/5Idhayam Muzhuthum Unathu Vaasam...! Rating: 5 out of 5 stars5/5
Related to Asai Mazhai Megamey
Related ebooks
Vaasamilla Malarithu Vasanthathai Thediyathu Rating: 0 out of 5 stars0 ratingsOli Tharum Udhayam Rating: 0 out of 5 stars0 ratingsஒளி தரும் உதயம்... Rating: 0 out of 5 stars0 ratingsEn Kanavu Nee Thaanadi..! Rating: 3 out of 5 stars3/5Engiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Sarvam Brumma Mayam Rating: 0 out of 5 stars0 ratingsOondru Kol Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsUnnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5நகுலனின் மாதங்கி..! Rating: 0 out of 5 stars0 ratingsNagulanin Maathangi Rating: 0 out of 5 stars0 ratingsUdal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Patrathu Patratru Rating: 0 out of 5 stars0 ratingsVizhigalukku Vilangidu Rating: 3 out of 5 stars3/5Arunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsKanavan Amaivathellam Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Kandu Naanaada... Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsIniya Unarvey Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsபாச மலர்கள் Rating: 0 out of 5 stars0 ratingsThaaiyin Mugamingu Nizhaladuthu... Rating: 5 out of 5 stars5/5Ullangal Ondragi... Rating: 0 out of 5 stars0 ratingsமன்றம் வந்த தென்றல்! Rating: 0 out of 5 stars0 ratingsMandram Vantha Thendral Rating: 4 out of 5 stars4/5Pirai Thedum Iravu Rating: 5 out of 5 stars5/5Appa Kuruvigal Rating: 0 out of 5 stars0 ratingsMagizha Malaiya? Marma Malaiya? Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyiril Kalandhaai Rating: 5 out of 5 stars5/5Mandiyitten Madhana! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Asai Mazhai Megamey
0 ratings0 reviews
Book preview
Asai Mazhai Megamey - Lakshmi Praba
http://www.pustaka.co.in
ஆசை மழை மேகமே
Asai Mazhai Megamey
Author:
லட்சுமி பிரபா
Lakshmi Praba
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
ஆசை மழை மேகமே
1
பூமியின் மெளனம் கலைத்து, பறவைகள் கலகலத்வனி செய்து பட்டிமன்றம் நடத்தின.
அன்றலர்ந்த அழகு மலர்கள் புத்துணர்ச்சியுடன் முகம் மலர்த்தி சிரித்துக் கொண்டிருந்தன.
ஜன்னில் வழியே தோட்டத்தில் பார்வையைப் பதித்திருந்தாள் மேகா.
வானம் இலேசாய் தூறல் போடத் தொடங்கியது.
மலர்கள் சிலிர்த்து பரவசத்துடன் தலையாட்டிய அழகில்... மேகா லயித்துப்போய் நின்றிருந்தாள்.
இரண்டே தினங்கள் பெய்த மழையில்... தோட்டத்தின் பசுமை பன்மடங்காய் கூடித் தெரிந்தது.
தோட்டக்காரன் நேற்று சாயந்திரத்தில்... பெரிய கத்தரிக்கோலால் செடிகளை சீராய் கத்தரித்தபடி "தினமும் பார்த்துப் பார்த்து தண்ணி பாய்ச்சி பதமா வளர்த்துட்டு வர்றேன்.
ஆனா. ரெண்டு நாள் தூறல் போட்டாப் போதும் இந்தச் செடி கொடிகளுக்கு என்ன தான் குஷயோ?
மழையில நனைஞ்ச மறுநாளே. மாயமா பச்சை கட்டி தளதளன்னு. புதுசா மலர்ந்த குமரிப் பொண்ணு கணக்கா... கண்ணை ஈர்க்குதே?
இந்தச் செடி கொடிகளுக்கு மழைத் தண்ணி தான் தாய்ப்பால் போலிருக்கு..." முனகினான்.
முனகியபடி அவன் பேசியதை எண்ணி தனக்குள் முறுவலித்துக் கொண்டாள்.
‘தோட்டக்காரன் சொன்னது வாஸ்தவம்தானே? இறைவனே ஒரு கவிஞன்தான். அந்தக் கவிஞன்’
மழையெனும் மையால் எழுதிய கவிதைக்கு இயற்கை இட்ட பெயர். பசுமை!
இந்தப் பகமை கண்களுக்கு சில்லென்ற குளுமையைத் தருவதோடு. மனதிற்கும் ஒரு இதத்தையும் குளிர்ச்சியையும் தருகின்றதே?
மனதிலிருக்கும் கவலையை மறக்கடித்து விடுகின்றதே?
நானும் ஒரு மலராய் பிறந்திருக்கக் கூடாதா?
எந்தக் கவலையும் இன்றி பூத்து... கண்களுக்கு விருந்தளித்து மணம் பரப்பி மாலையில் மரித்துப் போய்விடலாமே?
நான் ஏன் பெண்ணாய் பிறக்க வேண்டும்? தாமோதரன்தாட்சாயிணி தம்பதியினருக்கு ஏன் ஒரே மகளாய் பிறந்து தொலைத்தேன்?
மூன்று வயதிலேயே பாசத்திற்குரிய அப்பா டைபாயிட் ஜூரத்தில் காலமாகி விட்டாரே?
அப்பா விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால்... அவரது மறைவுக்குப் பின்பு அம்மா குழந்தையுடன் சித்தப்பா வீட்டில் அடைக்கலமானாளே?
சித்தப்பா தண்டபாணி நல்லவர்தான். ஆனால் சித்தி மல்லிகா...?
விதவையாய் நாதியற்று பெண் குழந்தையுடன் அடைக்கலமான அம்மாவைப் படாதபாடுபடுத்தினாளே?
அத்தனை சுடு சொற்களையும், வசை மொழிகளையும் பொறுமையாய் சகித்துக் கொண்டாளே அம்மா?
அம்மாவுக்கு பிறந்த வீட்டில் போக்கிடம் இல்லை.
பிறந்தகத்து சொந்தமே மொத்தமாக அறுபட்டுப் போயிருந்தது. காரணம் அவர்களது காதல் திருமணம்தான்...!
தட்டிக்கேட்கநாதியில்லாதவள் என்ற திமிரில்தானே சித்தி மல்லிகா. அம்மாவை அப்படி ஆட்டிப் படைத்தாள்?
மகளின் எதிர்காலம் ஒன்றையே குறிக்கோளாக கருதி. சகல கஷ்டங்களையும் அம்மா சகித்தாளே?
அப்பாவுக்குச் சேர வேண்டிய நிலத்தையும். பூர்வீக வீட்டின் பாதி பங்கையும் சித்தப்பா பிரித்துக் கொடுத்திருக்கலாம்.
ஆனால், அவர் இப்படிச் செய்யவில்லை. எல்லாவற்றையும் பொதுவாய் வைத்தே காலத்தை ஒட்டினார்.
அம்மாவுக்கும் சித்தப்பா தண்டபாணியிடம் இது பற்றிக் கேட்கத் துணிவு இருக்கவில்லையே?
அம்மாவின் ஒரே ஆறுதல்... நான் மிக நன்றாகப் படித்ததுதானே? மெரீட்டில் தேறியதும். சுலபமாய் என்ஜினியரிங் காலேஜில் இலவச சீட் கிடைத்ததே?
காலேஜ் ஃபீஸ், செமஸ்டர் ஃ பீஸ் இவைகளை முழு மனதோடுதான் சித்தப்பா தந்தார்.
இத்தனைக்கும் அவரது இரு மகள்களும், ஒரு மகனும் என்னைவிட வயதில் மூத்தவர்கள். சாதாரண ஆர்ட்ஸ் காலேஜில். டிகிரியைத் தானே படித்து முடித்தார்கள்? சித்தப்பா பாசம் மிகுந்தவர்... . பெருந்தன்மையானவர் என்று நானும் அம்மாவும் தப்புக் கணக்கு போட்டுவிட்டோமே?
சகலத்திற்கும் ஒன்றிற்கு நான்கு மடங்காய் பொய் கணக்கு எழுதி வைத்தாரே, சித்தப்பா?
‘எல்லாம் வானம் பார்த்த பூமி' மழை சரியாப் பெய்யாம போனதாலே... விவசாயத்துல வருமானமே இல்லாம போச்சு... நான் கூட்டுக் குடும்பத்தை சமாளிக்கிறதுக்கு கடனை உடனை வாங்கினேன். மல்லிகாவோட நகைகள் எல்லாம் பாதி அடமானத்துலே இருக்கு...
மீதியை வித்துட்டேன். எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க இரட்டைப் பிறவியா கடவுள் குடுத்துத் தொலைஞ்சுட்டாரு...
அவங்க உன் பொண்ணு மேகாவை விட வயசுல மூத்தவங்க... அவங்களை நான் கரை சேர்த்து ஒரு வழி வகை பண்ணணும்.
என் புள்ளைக்கும் பிஸினஸ் வச்சுக் குடுத்து அவனுக்கு செட்டில் பண்ணி விடணும்.
உனக்கும் உன் பொண்ணுக்கும் ஆன செலவு. படிப்புச் செலவு எல்லாத்தையும் கணக்குப் பார்த்தா... எங்கியோ எகிறுது...
என் அண்ணாவுக்குச் சேர வேண்டிய பங்குன்னு. ஆராய்ஞ்சு பார்த்தோம்னா... நான் பண்ணின செலவு அந்தப் பங்கைத் தாண்டி ரெண்டு மடங்கா நிக்குது...
நானும் குடும்பஸ்தன். எனக்கு மனைவி, குழந்தைங்க இருக்காங்க...
‘தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்’னு பெரியவங்க சொல்வாங்க... நான் என் குடும்பத்தை நெனச்சுப் பார்க்காம... அண்ணிக்கும் அண்ணன் பொண்ணுக்கும் வாரி விட்டுட்டு. வெறும் பயலா நிக்கிறேன்...
என் மனைவி மல்லிகா. என்னை நாக்கைப்பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்கிறா. அவ கேட்கிறதும் நியாயம்தானே அண்ணி? நீ இதுக்கு என்ன பதில் சொல்லப் போறே? என்று சித்தப்பா அம்மாவை அதட்டினாரே?
அம்மா ஸ்தம்பித்துப்போய் கண்ணிர் வடித்தபடி நின்றாளே? அவர் நீட்டிய பத்திரத்தில்... மறு பேச்சு பேசாமல் கையெழுத்து போட்டாளே?
"எங்களுக்கு சேர வேண்டிய பங்கைத் தாண்டி. ரெண்டு மடங்கா நீங்க செலவு செஞ்சிருக்கீங்க... என் பொண்ணு மேகாவுக்கு கடமை இருக்கு...
அக்காக்கள் நளினா. மீனாவோட கல்யாணத்துக்கு தன்னோட பங்களிப்பை கட்டாயமா செய்வா.
செஞ்சோற்றுக் கடனையும் நன்றிக் கடனையும் உயிர் உள்ளவரைக்கும் மறக்கவே கூடாது'ன்னு. மேகாவுக்கு நான் சின்ன வயசிலேர்ந்து சொல்லிச் சொல்லி வளர்த்திருக்கேன்....
நாங்க பட்ட கடனை. மேகா நிச்சயமா அடைக்காம விட மாட்டா..." என்று தழுதழுத்தபடி அம்மா வாக்களித்தாளே?
அந்தக் கவலை மலை போன்று பாரமாய் நெஞ்சை அழுத்தியதால். அதற்கு மறுநாளே அம்மா மாரடைப்பால் மாண்டு போனாளே?
பெற்ற தாயைப் பறி கொடுத்து விட்டு. நான் கல் மனமும் கரையும் வண்ணம் கதறினேனே?
கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல். சித்தி மல்லிகா, எரிச்சலுடன் முனகினாளே?
‘செத்தும் கெடுத்தான் சீதக்காதி’ன்னு சொல்வாங்க. நானே என் பொண்ணுங்களை கரையேத்தற வழி தெரியாம திணறிக்கிட்டிருக்கேன்.
இதுலே சாவு விழுந்து கருமாதி செலவு வேற...' என்றாளே?
துக்கம் தாளாமல்... அம்மா உபயோகித்த பெட்டியைத் திறந்து அம்மாவின் புடவையை எடுத்து அதில் முகம் புதைத்து அழுதேனே,
அந்தப் புடவையை மீண்டும் பெட்டியில் வைக்கப்போனபோது... எனக்கே தெரியாமல் ரகசியமாய் பொக்கிஷமாய் அம்மா எனக்காக . முப்பது பவுன் நகைகளைப் பத்திரமாய் ஒளித்து வைத்திருந்ததைக் கண்டதும் திகைத்தேனே...?
அத்தனை உறவுத் தலைகளுக்கு மத்தியில்... அந்த நகைகளை சித்தப்பாவிடம் நான் தந்ததும். ஒரு கணம் தயங்கியவர். சித்தி