Soorya Dharisanam
By GA Prabha
()
About this ebook
Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Read more from Ga Prabha
En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsAasai Veedu Rating: 5 out of 5 stars5/5Manasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5Uravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsManathin Arathanai Rating: 5 out of 5 stars5/5Kandan Pugazh Padum Kandar Alangaram Rating: 0 out of 5 stars0 ratingsPeiyena Peiyum Mazhai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Soorya Dharisanam
Related ebooks
Vaigairai Deepangal Rating: 5 out of 5 stars5/5Nesam Marakkavillai Nenjam Rating: 5 out of 5 stars5/5Vannathupoochikku Vazhi Vidu Rating: 4 out of 5 stars4/5Raasi Rating: 5 out of 5 stars5/5Merke Oru Uthayam Rating: 0 out of 5 stars0 ratingsMaya Maan Rating: 0 out of 5 stars0 ratingsVaanamadi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsParavasam Rating: 0 out of 5 stars0 ratingsNeelanira Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsNishabdha Sangeetham Rating: 5 out of 5 stars5/5Minnal Devathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVennilavu Deepangal Rating: 0 out of 5 stars0 ratingsPavala Malli Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Nerathu Udhayam Rating: 0 out of 5 stars0 ratingsNilavodu Vaa Thendraley Rating: 0 out of 5 stars0 ratingsManathin Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Kalantha Uravugul Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaibogame Rating: 2 out of 5 stars2/5Maya Poigai Rating: 0 out of 5 stars0 ratingsVenpura Nesam Rating: 0 out of 5 stars0 ratingsKankal Solkindra Kavithai Rating: 5 out of 5 stars5/5Aayiram Malaril Oru Malar Neeye Rating: 0 out of 5 stars0 ratingsPathinooravathu Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsNesathin Nizhal Karuppu Rating: 0 out of 5 stars0 ratingsNaveena Navarasa Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsArunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Muzhuthum Unathu Vaasam...! Rating: 5 out of 5 stars5/5Naal Muzhukka Naadagam Rating: 0 out of 5 stars0 ratingsAgayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratingsVaa... Pon Mayile Rating: 5 out of 5 stars5/5
Reviews for Soorya Dharisanam
0 ratings0 reviews
Book preview
Soorya Dharisanam - GA Prabha
http://www.pustaka.co.in
சூர்யதரிசனம்
Suriya Dharisanam
Author:
ஜி.ஏ.பிரபா
G.A.Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
1
ஜன்னலைத் திறந்ததும் பளீரென்று சூரிய வெளிச்சம்,ரூம் முழுவதும் பரவியது. இளஞ்சூடாய், வெது வெதுப்பான கதிர்கள் முகத்தைத் தழுவியது. முன்பக்க ஓலைகளின் இடுக்குகள் வழியே சூரியக்கதிர்கள் தரை எங்கும் சிதறிக் கிடந்தது.
தென்னை மரங்களுக்கு மத்தியில் மின்னி, மின்னி எழும் சூரியனின் பொன்னிறக் கதிர்களைப் பார்க்கையில் சந்தோஷமாக இருந்தது.
சூரியன் நம்பிக்கை. விடியும் என்ற நம்பிக்கை. விடிந்தபின் நடை போடச் சொல்லும் உந்துசக்தி.
சூரியனைப் பார்ப்பது இதமாய் இருக்கிறது. மனசுக்குப் பிரியமானவர்களை, அம்மாவைப் பார்ப்பதுபோல் அம்மா இதமாய் தலை கோதி விடுவது போல் காலைச் சூரியன் இதம்.
சூரியமே ஆதி, அவனே சகலமும்,
"சூரியனே உனக்கு நமஸ்காரம்
பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே!
பானுவே! பொன்செய் போராளித்திரனே!
ஆதித்தாய் தந்தை நீவிர் - உமக்கே
ஆயிரத் தரம் அஞ்சலி செய்வேன்"
உமாமகேஸ்வரி கண்மூடி நின்றாள். சூரியனின் பிரகாசத்தை ஒரு பெரிய சுடராய் தனக்குள் வாங்கிக் கொண்டாள். பாரம் கழன்றது போல், மனசு லேசானது. அயர்வு, டென்ஷன் குறைந்து பறப்பது போல் உணர்ந்தாள் உமா.
இன்று கனவு கூட பறப்பது போல்தான் வந்தது. அதன் ஈர்ப்பு, வசீகரம் இன்றும் மனதில் தங்கி இருக்கிறது.
என்ன அழகான குதிரை. வெள்ளைக் குதிரை. அதன்மேல் கம்பீரமாய் உமா. குதிரை பறக்கும் வேகத்தில் மூச்சடைத்தது. குதிரை பறக்கிறது. வேகம். அசாத்திய வேகம். யுகங்களைத் தடைகளைக் கடக்கும் வேகம். அதில் மூச்சடைத்தது. அதில்தான் ‘சட்’டென்று விழிப்பு வந்தது.
இதற்கு என்ன அர்த்தம்.
அம்மா இருந்தால் அர்த்தம் சொல்வாள். நல்ல கனா என்றால் நல்லது என்பாள். கெட்ட கனா என்றால் மூளைச் சூடு என்று ஒதுக்கிவிடுவாள்.
எதையும் பாசிடிவ் உணர்வுடன் அணுக அம்மாவால் தான் முடியும். கொலைக்காரனைக் கூட சிரித்த முகத்துடன் அணுக அம்மா ஜீவலட்சுமியால்தான் முடியும்.
நான் நர்ஸ் உமா. உன் மூஞ்சி சிரித்தபடி இருந்தாத்தான் பேஷன்ட்ஸ்க்கு தைரியமா இருக்கும்
நீ கலங்கவே மாட்டியா?
வரும் உமா. மரணம் பாக்கறப்போ தொய்ஞ்சு, போயிடுவேன். அதைப் பார்த்து பயந்தது இல்லை. பயப்படறவாளைப் பார்த்து. சிலருக்கு மரணம் உறுதின்னு தோணும். சட்டுனு கண்ல ஒரு அமைதி, சாந்தம் குடியேறிடும் சரி, அப்ப நான் வரட்டான்னு ஒரு விடைபெறும் பாவனை. அப்பாடா அழுக்குச் சட்டையை தூக்கி எறியப் போறோம்னு நிம்மதி தெரியும். ஞானம் அது. ஆனா சிலது அழுது புலம்பும். கதறும். கையை இறுகப் பிடிச்சிண்டு கதறும்போது மனசு தவிக்கும். பகவானே இதுக்கு அமைதியான மரணத்தை கொடுன்னு வேண்டிப்பேன்.
கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை மெய்ப்பொருள் பேசியவா நாகசல வேலவா, நாலுகவித் தியாகா சுரலோக சிகாமணியே!
கண்ணில் நீர் வழிய உட்கார்ந்திருக்கும் அம்மாவைப் பார்க்கையில் அவளுக்கும் மரண பயம் உண்டோ என்று தோணும்.
அம்மாவும் தற்கொலைக்கு முயன்று மரணம் சந்தித்து மீண்டவள்தான். உமாவுக்கு மூன்று வயதாய் இருக்கையில், மூர்த்தி ஒரு முஸ்லீம் பெண்ணை விரும்பி, அவள் மதத்துக்கு மாறிவிட, அம்மா கிணற்றில் குதித்து விட்டாள்.
காவலாய் காத்திருந்த தாத்தா கத்தி, ஊரைக் கூட்டி, அம்மாவைக் காப்பாற்ற, பாட்டி உமாவைக் கட்டி அழுதாள்.
இந்தக் குழந்தைக் காணும் நீ இருடி
அம்மா நெளிந்தாள். நர்ஸ் டிரெய்னிங் எடுத்தாள். தாத்தாவிடம் ஜோஸியம் கேட்கவரும் தயாநிதி திருச்சியில் தன் ஹாஸ்பிடல்லேயே வேலை போட்டுத் தந்தார்.
தயாநிதி தூரத்து சொந்தம் என்றாலும் நெருங்கியதில்லை. தூரநின்று பழகறது நல்லது. சொந்தம் கசக்காது - தாத்தா.
இன்று ஜீவாவுக்கு சகலமும் உமா. அவள் வாழ்க்கை ஏற்றமும் எதிர்காலமுமே அவளின் கனவு.
சிரத்தையுடன் தன் வேலையை கவனிக்கும் அம்மா. அதனால் கிடைத்த சம்பள உயர்வு. வாழ்க்கை நிம்மதியாகப் போகிறது.
சுவாமி மலையைவிட திருச்சி சுகம். ஜன்னலைத் திறந்தால் மலைக்கோட்டை தெரிகிறது. மின்னும் சூரியன்.
தினமும் காலையில் சூரியனைப் பாரு
என்றாள் ஜீவா.
ஏன்?
அது உனக்கு பல விஷயங்களைச் சொல்லித் தரும்
சூரியன் அழகும்மா, தகதகன்னு
அழகுன்னு ரசி. அது மாதிரிப் பிரகாசிக்க வேணும்னு விரும்பு
விரும்புறதெல்லாம் கிடைக்குமா?
போம்மா குழப்பறே?
நீதான் குழம்பறே. உன்னால முடியும்கறதை விரும்பு. விரும்பறதை அடைய முயற்சி பண்ணு
தோல்வி அடைஞ்சா?
அனுபவம். எங்க தப்பு செஞ்சேன்னு யோசிச்சி திருத்திக்கோ. சூரியனைத் தொடணும்னு ஆசைப்படு. அப்பத்தினா உன்னால வானத்தின் விளிம்பையானும் தொட முடியும். முயலுக்கு குறி வச்சி ஜெயிக்கிறதைவிட, யானைக்கு குறிவச்சு தோக்கறது பெஸ்ட்
அப்ப கீழே நிக்கிறது அவமானமா?
இல்லடா கண்ணா. இந்த இடம் போறும்னு நினைக்கிறது முயற்சி இல்லாம இருக்கிறது. இதான் அவமானம். வெறும் திங்கறதுலயும், தூங்கறதுலயும் மனசு நிறைஞ்சிருமா?
அப்ப எப்பதான் நிறையும்?
அது நிறையாது உமா. நிறைய விடக்கூடாது. அப்புறம், அப்புறம்னு மனசு பறந்துகிட்டே இருக்கணும். ஒன்றை அடைஞ்சா அடுத்தது. அடுத்துன்னு பறந்துகிட்டே இருக்கணும். அப்பதான் லைஃப்ல ஒரு சுவாரஸ்யம் வரும்
என்ன பண்ணணும் நான்?
"அமைதியா இரு. சுறுசுறுப்பா இரு. அன்பைக் கொடு. அன்பை வாங்கு. நீ அழகுன்னு கர்வப்படாதே. அழகா இருக்கறதுக்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்லு.
அதனாலேயே அழகு என்பது பற்றி ஒரு விலகல் தன்மை வந்துவிட்டது.
வெல்வெட் மாதிரி இருக்கேடி
எஸ்தர் கன்னத்தோடு இழைவாள்.
செல்லுலாய்டில் எழுதிய கவிதை.
ஜீபூ, காதல் கடிதம் எழுதுகிறான். தயாநிதியின் ஒரே பையன். அதீத செல்லத்தில் முரட்டுத்தனம் அதிகமாகி பிடிவாதம். நினைத்ததை அடையும் வெறி.
என்னை லவ் பண்றியா சொல்லு, சொல்லு
நடக்க விடாமல் கைப்பிடித்து திருகினான்.
லவ்யூ சொல்லு
உலுக்கினான்.
எனக்குப் பிடிக்கலை
.
ஏன்? ஏன்?
பதறினான். ஆத்திரத்தோடு நகத்தை கடித்து துப்பினான்.
எனக்கு இப்ப காதல்ல இன்டர்ஸ்ட் இல்லை. அது இயல்பா வர உணர்வு. உன்னைப் பார்த்தா அது வரலை
அந்த முரளிப் பயலைப் பார்த்தா வருதா?
சிரிப்பு வந்தது. முரளிக்கு கண்பார்வை இல்லை. அவனுக்கு உதவியாக, அவன் எம்ஃபில் தீஸிஸ் எழுதி, கவிதைகள் காப்பி செய்து தர உதவுகிறாள். அவன் தரும் சம்பளம் உமாவின் படிப்புக்கு உதவுகிறது.
நல்ல இலக்கிய நட்பு. உமா அவனை குருவாக, தந்தை ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறாள்.
இவனுக்கு ஏன் கோபம்.
அதில் ஜீபுவுக்கு கோபம் வந்தது. கையை அழுத்திப் பிடித்து எச்சரித்தான்.
லுக் உமா. நான் விரும்பின பொருள் எனக்குத்தான் கிடைக்கணும். இல்லைன்னா அதை அழிச்சிடுவேன்
- வேகமாய் விலகிப் போனான்.
முள்ளம்பன்றியாய் சிலிர்த்தாலும், ஜீபுவின் தொந்தரவுகளை, துரத்தல்களை சகிக்க முடியவில்லை.
காரைக்கால் அம்மையார் மாதிரி சீக்கிரம் முதுமை வந்தால் தேவலாம்
- உமா சலித்தபடி வாசல் கதவைத் திறந்தாள்.
வீட்டுக்கார பாட்டி,கண்ணே, மூக்கே
என்று கொஞ்சியபடி மாட்டிடம் பால் கநற்து கொண்டிருந்தாள்.
"காலேசு இல்லையா கண்ணு’
இருக்கு பாட்டி. போணும், சமைச்சிட்டுப் போணும்
அம்மை இல்லையா?
நைட் டியூட்டி
நீ மத்தியானம் வந்துருவியா?
முடியாது பாட்டி. என் ஃபிரண்ட் எஸ்தருக்கு இன்னைக்கு மேரேஜ் நிச்சயதார்த்தம் பாட்டி. மத்தியானம் அவ வீட்டுக்கு போறோம்
மாப்பிள்ளை யாரு?
டாக்டர் ஸ்டீஃபன் செல்வராஜ்
யாரு, உங்கம்மா வேலை பாக்குதே, அந்த டாக்டரா?
அவரேதான். டாக்டரோட அம்மா எங்க இங்கிலீஷ் புரஃபஸர்
பேஷ்
எஸ்தரோட அப்பா எங்க காலேஜ் பிரின்ஸ்பால் இன்பராஜ்
சரி. நீ எப்ப சோறு போடப் போறே?
இன்னும் படிப்பே முடியலை
"உமாவுக்கு மாப்பிள்ளை பார்த்தா கியூவே