Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aagaya Thottil
Aagaya Thottil
Aagaya Thottil
Ebook120 pages51 minutes

Aagaya Thottil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110002954
Aagaya Thottil

Read more from Anuradha Ramanan

Related to Aagaya Thottil

Related ebooks

Reviews for Aagaya Thottil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aagaya Thottil - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    ஆகாயத் தொட்டில்

    Aagaya Thottil

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan
    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    முன்னுரை

    பிரியமான வாசகர்களுக்கு,

    வணக்கம். நலம். நலம் தானே?

    இந்த வாழ்க்கை அழகானது. எதையும் கொஞ்சம் யோசித்து, நிதானமாக செய்தால் இந்த வாழ்க்கையை விட அற்புதமானது வேறெதுவும் இல்லை. ஆனால் நம்மில் பலர் யோசிக்கத்தான் மறந்து விடுகிறோம்.

    அப்படியே மூளை வேலை செய்தாலும், ஆத்திரமும் அவசரமும் ஒருசேர எதிராளியை எப்படிக் கவிழ்ப்பது; யாரை எந்த வார்த்தையால் காயப்படுத்தலாம் என்பதில் தான் அக்கறை எடுத்துக் கொள்கிறோம். அறிவு என்று ஒன்று இருப்பதே இதற்காகத்தான் என்றுகூட நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

    அறிவு வேறு-உணர்வு வேறு.அறிவுப்பூர்வமாக வாழ்வதை விடவும், உணர்வுப்பூர்வமாக எப்போதும் இருப்பது சுகமானது. இன்னும் கூட கிராமப்புறங்களில் படிப்பறிவு இல்லாத பாமர மக்களிடம் இந்த உணர்வுப் பூர்வமான நெருக்கத்தைக் காணலாம்.

    சற்றே சிந்தித்துப் பாருங்கள். அன்பு... அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை என்கிற வாழ்க்கை நம்மில் எத்தனை பேருக்கு சாத்தியம்?

    'ஆகாயத் தொட்டிலில் வரும் சிவராமன், அன்பு செய்வதற்கென்றே பிறந்தவர். அதனால் தான் அதனால் வர லட்சுமி, கணவரைப் பிரிந்து,கையில் குழந்தையுடன் வந்த போதும் - அவர் இருகைகளாலும் வாரி அணைத்து வாழ்ந்தது மட்டுமின்றி குழந்தை புஷ்பாவையாருக் கோபிறந்த பெண் என்று நினைக்காமல், அப்படியே தன் மகளாக்கிக் கொண்டார். ஆனால் எத்தனை பேருக்கு இந்த தாராள மனசு வரும்?

    இதற்கு அபரிமிதமான கருணை வேண்டும். சாதாரணமாய் ஆறறிவுள்ள மனிதருக்கு இப்பேர்ப்பட்ட மனசு கிடைப்பது அபூர்வம்.

    வானமும், மண்ணும், கடலும், சூரியனும், மலரும், செடி கொடி மரம் வயல்களும் இப்பேர்ப்பட்ட வள்ளல் குணம் கொண்டவை. யாருக்காக பொழிகிறோம் என்றோ, யாருக்காக பூத்துக் குலுங்குகிறோம் என்றோ, என்னுடையது உன்னுடையது என்றோ, பேதம் பார்க்காத விசால மனசு - இயற்கையாகவே இயற்கைக்கு உண்டு.

    சிவராமனின் மகளாக வளர்ந்த புஷ்பாவுக்குக் கூட இந்த மனம் இல்லை. அதற்காக சிவராமன் வருத்தப் படவும் இல்லை. பூக்கள் எல்லாம் ஒரே நிறத்தில், ஒரே மாதிரியாகவா பூக்கிறது... அது அதற்கு ஒரு நிறம், அதற்கென்று ஒவ்வொரு விதமான மணம்.

    குண்டு மல்லிகையின் வாசனையை மல்லிகையின் ஜாதியைச் சேர்ந்த காட்டு மல்லிகையில் பார்க்க முடியுமா? அல்லது கனகாம்பரத்தில்தான் பன்னீர் ரோஜாவின் சுகந்தத்தை எதிர்பார்க்க முடியுமா?

    அப்படித்தான் மகாசாதுவான கட்டின பசு போன்ற வரலட்சுமிக்கு முன்கோபமும், வார்த்தைகளில் விஷமம் படைத்த புஷ்பா மகளானதும் கூட….

    ஆனால் எப்பொழுதும் அவன் அப்படி இல்லையே... தாயைப் பற்றிய உண்மையை அறிந்த பிறகு தானே இத்தனை ஆத்திரமும் அழுகையும்... தன்னை கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்த சிவராமனைக் கண்டாலே ஆகாத அளவுக்கு பொருமித் தீர்த்தாளே...

    கடைசியில் என்ன ஆயிற்று? தெரிந்தோ, தெரியாமலோ தாயின் வாழ்க்கையில் ஓடிய துயர ரேகைகள் இவளது வாழ்க்கையிலும் தொடர்ந்து ஓடிய போது - பெற்றவளையும், வளர்த்தவரையும் புரிந்து கொண்டாளா இல்லையா?

    அடுத்தவரை பழிகூறும்போது சுலபமாக இருப்பதும், அதுவே தன் வாழ்க்கையில் வரும்போது மலையாய்த் தெரிவதும், மனித வாழ்வின் மிகச் சாதாரணமான விஷயங்கள்தாம்.

    நான் இந்த சாதாரணங்களையே எழுத்தில் வடிக்க விரும்புகிறேன். உலகத்தில் நடக்காத அதிசயங்களையோ அல்லது ராஜகுமாரிகளின் கதைகளையோ, ஏர்கண்டிஷன் பொருத்தப்பட்ட அறைகளில் பஞ்சு மெத்தைகளில் புரளும் அழகு தேவதைகளின் நுனி நாக்கு ஆங்கிலத்தையோ வர்ணித்து எழுதுவதில் எனக்கு அத்தனை உடன்பாடு இல்லை. எந்த ஒரு பெண்ணையும், மிகப் பெரிய கோடீஸ்வரன் வந்து காதலித்து திருமணம் செய்து கொள்வான் என்கிற 'சின்ட்ரலா' கதைகளை எழுதி என் அன்பு சகோதரிகளின் மனசில் ஏக்கத்தை வளர்க்க விரும்பவில்லை.

    வாழ்க்கையில் ஒருவரை நம்புவதும், கழுத்தை நீட்டுவதும், பின் அப்படி நீட்டிய பாவத்துக்காகவே படுகுழியில் விழுவதும், பின் தட்டுத் தடுமாறி எழுவதும் என்றுமே சாத்தியமான சரித்திரங்கள்.

    இக்கதையைப் படிக்கிற வாசகர்கள், இனியாவது ஒரு முறை வாழ்க்கையை இழந்து, இன்னொருவரை மணந்த பெண்களை நாக்கூசும் படியாகப் பேசாமல் - அவர்கள் என்னென்ன கஷ்டமெல்லாம் பட்டார்களோ இந்த வரலட்சுமி, புஷ்பாவைப் போல என்று ஒரு கணம் நினைத்தாலே போதும்...

    என் எழுத்து அந்த வாசகருக்கு நன்றியுடன் கை குவிக்கும்.

    நன்றி.

    சென்னை – 41

    ஆகஸ்ட் 20, 2003

    இப்படிக்கு அன்புடன்

    அனுராதா ரமணன்

    ஆகாயத் தொட்டில்

    1

    திலகா எதிர்பார்த்த அளவிற்கு மாப்பிள்ளைப் பையன் ஒன்றும் அழகாய் இல்லை. நிறமும் உயரமும் மட்டும்தான். அந்த உயரத்துக்கு சதை அதிகம். தொப்பையைப் பார்த்தால், குடிப்பான்' என்பதை உறுதியாகச் சொல்லியது.

    ஆனாலும் படித்திருக்கிறான். பெண்டாட்டியை வைத்து சோறு போடுவான் என்கிற நம்பிக்கை முகத்தில் தெரிந்தது. அவன் கூட வந்திருந்த பெற்றோரும், சகோதரிகளும் சம்பிரதாயமான பெண் பார்க்கும் படலம் முடிந்த பின், அடுத்த பேரத்தில் இறங்கினார்கள்.

    திலகா நெருப்பின் மீது உட்கார்ந்திருப்பது போல உட்கார்ந்திருந்தாள். வரதட்சணை, சீர்- இவை யாவையும் அகராதியிலிருந்தே ஒழித்து விடவேண்டும் என ஓரிரு வருடங்களுக்கு முன்பு பேசியவள்தான் திலகா. ஏன், விசுவின் அரட்டையரங்கில் பொறி பறக்கப் பேசிப் பாராட்டுப் பெற்றவள் கூட..

    இன்று 'கம்'மென உட்கார்ந்திருந்தாள். ஒருமுறை தாயை ஏறிட்டு நோக்கினாள். இந்தப் பார்வையின் தீட்சண்யத்தைத் தாங்க மாட்டாதவளாய் அவள் தாய் வரலட்சுமி மெல்லத் தலைகுனிந்தாள்.

    என்னங்க, நாங்க ஒண்ணும் பிரமாதமாக் கேட்கலே. பொண்ணுக்கு அம்பத்தியோரு சவரன் நகை. வீட்டுக்குத் தேவையான வெள்ளிப் பாத்திரம்...

    - பையனின் தாய், வார்த்தைகளையே மெல்லியக் கம்பிகளாக்கி இழுத்து, பெண்ணைப் பெற்றவர்களின் இதயத்துக்கு மின்சார அதிர்வைக் கொடுக்க...

    பையனின் அக்காள், 'பளிச்'செனக் கூறினாள்:

    "எங்க குடும்பத்துல கெளரி பூஜை உண்டு. அப்ப நாங்க

    Enjoying the preview?
    Page 1 of 1