Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannaana Kanmani
Kannaana Kanmani
Kannaana Kanmani
Ebook268 pages2 hours

Kannaana Kanmani

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110002947
Kannaana Kanmani

Read more from Anuradha Ramanan

Related to Kannaana Kanmani

Related ebooks

Reviews for Kannaana Kanmani

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannaana Kanmani - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    கண்ணான கண்மணி

    Kannaana Kanmani

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    முன்னுரை

    அன்பிற்குரிய வாசகர்களுக்கு வணக்கம். நலம்; நலம்தானே....

    "கண்ணான கண்மணி' - எனும் இந்நாவல் மக்களின் அறியாமை இருட்டைப் போக்க நான் ஏற்றி வைத்த சிறு அகல் விளக்கு; பல காலமாய் நாட்டில் புரையோடிப் போயிருந்த மூட நம்பிக்கைகளை - அதன் மூலம் நடக்கும் அநியாயங்களை குழி தோண்டிப் புதைக்க நான் எடுத்துள்ள சிறு கோடரி. கோடரி சிறியதுதான். ஆனாலும் கூர்மையானது. அனுபவம் என்கிற பட்டறையில் சாணை தீட்டப்பட்டது. ஆன்மீகம் பேசும் அந்தண குலத்தில் பிறந்த பெண் - தனது அனுபவப் போர்களத்தில் சுழற்றிய கத்தி வீச்சுதான் கண்ணான கண்மணி.

    நான் கடவுளை வணங்குகிறவள்தான். தெய்வ நம்பிக்கை நிறைந்தவள்தான் - ஆனாலும் எனது ஆன்மீகம் வேறு...

    என்னுடையது, அகத்தில் அதாவது - இதயத்தில் உள்ள ஆன்மாவைத் தேடுவது...

    அதுதான் என் ஆன்மீகம்.

    ஆன்மா என்பது எல்லாரிடமும், எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறது... மனிதர்களிலிருந்து, செடி, கொடி, நாய், பூனை, ஈ, எறும்பு வரை... ஆன்மா இல்லாதது எதுவுமேயில்லை.....

    ஆன்மாவுக்கு ஜாதி பேதமில்லை. பணக்கார, ஏழை பேதமில்லை..

    மனிதர்கள்தான் அடித்துக் கொள்கிறோம்... தான் வாழ, மற்றவரை நோகடிப்பதும், கீழே தள்ளி குழி பறிப்பதும், அவதூறு சொல்வதும், புகழ்வதும், இகழ்வதும், பெண் என்றால் மோக வெறி பிடித்து அலைவதும் பழி கூறுவதும்...

    இந்த விஷயத்தில் ஆண்டி முதல் அரசன் வரையில் யாரும் விதிவிலக்கில்லை....

    பொதுவாகவே - 'நான் இப்படித்தான்' என்று தனது பலவீனத்தை ஒத்துக் கொள்பவனைக் கூட 'போ... போய் தொலை' என விட்டு விடுவோம். வேடமிட்டு ஏமாற்றக் கூடாது.

    கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...

    நாம் உபயோகிக்கும் - உண்ணும் - பொருளில் தரம் குறைந்திருந்தால் கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போகிறோம். அதை உபயோகித்ததனால் உண்டானக் கேடுகளை ஆதாரத்துடன் வாதிடுகிறோம். அதற்குரிய தண்டனையை அல்லது நஷ்ட ஈட்டைப் பெற்றுத் தருகிறோம்.

    ஆனால் - 'பக்தி' என்கிற பெயரிலும், ஆன்மீகவாதி' என்கிற பெயரிலும், 'முற்றும் துறந்த சாமியார்' என்றும் சொல்லிக் கொண்டு, தன்னை நாடி வருகிற மக்களை ஏமாற்றுபவர்களுக்கு என்ன தண்டனை...

    'ஆதாரம் இருக்கிறதா..?'

    'சாட்சி இருக்கிறதா...'

    'அவர் மகான்... அப்படியெல்லாம் செய்வாரா...’

    'அதுசரி... அவர் மீது பழி சொல்கிற இவள் எந்த அளவுக்கு ஒழுங்காம?’

    'இத்தனை வருஷம் ஏன் சொல்லவில்லை?'

    'இப்படிச் சொல்வதற்காக யாரிடம் எத்தனை லட்சம் வாங்கினாள்…’

    எப்படியெல்லாமோ பேசுகிறவர்கள் ஒரு பக்கம் என்றால்... இன்னொரு பக்கம்…

    'அம்மாடி... இப்பொழுதாவது உண்மை வெளியே வந்ததே...'

    'என்னால் சொல்ல முடியவில்லை அம்மா... இந்தக் கஷ்டத்தை நானும் பட்டேன். எப்படிச் சொல்வது... எனக்கு என்று மாமியார், மாமனார்... எல்லாவற்றுக்கும் மேல், 'எதுடா சாக்கு,' என்று துள்ளிக் குதிக்கும் கோபக்காரப் புருஷன் இப்படி இத்தனை சங்கிலிகள் என்னைக் கட்டிப் போட்டிருக்கிறது...'

    'நீங்கள் எழுதியிருப்பதைப் படித்ததும், எனக்கு நேர்ந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் துடிக்கிறேன் சகோதரி... விஷயத்தை வெளியில் சொல்லிவிடமாட்டீர்கள் என்கிற நம்பிக்கையுடன் சொல்கிறேன். எனக்கு, கல்யாண வயதில் பெண் இருக்கிறாள்…

    இது மாதிரியான ரகசியமாய் ரணங்களுக்கு மருந்து தேடும் அப்பாவிப் பெண்களும் இருக்கிறார்கள். இவர்கள் வாயுள்ள ஊமைகள்.

    இவர்களுக்கு ஆறுதலும், அன்பும், தைரியமும் அளிக்க பல பெண்களும் ஒன்று சேர வேண்டியிருக்கிறது...

    அதற்கான சிறு பிரயாசையே இந்த நாவல்.

    முற்றிலும் கற்பனை என்று சொல்லி, நானும் இதில் வரும் கபட வேடதாரிகளைப் போல மற்றவர்களை ஏமாற்ற விரும்பவில்லை. உண்மையுடன் கற்பனையும் கொஞ்சம் கலந்திருக்கிறது. அவ்வளவே.

    எழுத்தாளர்கள் யாரும் வெறும் கற்பனையில் மட்டுமே கதை புனைவதில்லை. கண்டது, கேட்டது, பார்த்தது, அனுபவித்தது இப்படிப்பட்ட உண்மைகள் நிச்சயம் இருக்கும்... எத்தனை சதவிகிதம் உண்மை - எத்தனை சதவிகிதம் கற்பனை என்கிற Ratio மட்டும் மாறுபடும்.

    இதில் எத்தனை சதவிகிதம் உண்மை - எவ்வளவு கற்பனை என்பதை ஆராய்வதை விடவும், சொல்லப்பட்டிருக்கிற கருத்தை, படிக்கிறவர்கள் மனசில் வாங்கிக் கொள்ள முடிந்தால், அதுவே எனக்குத் தரப்படும் பெரிய விருது... பாராட்டு...

    இப்பொழுதும் சொல்கிறேன்... கெட்டுப் போன உணவுப் பண்டம் உடம்பைத்தான் பாதிக்கும். ஆனால், தரம் கெட்ட போலி ஆன்மீகம் - மனிதர்களின் நம்பிக்கையையும், நிம்மதியையும், ஏன் எதிர்காலத்தையும் கூட பாதிக்கும்.

    குடும்பம், குழந்தைகள், கணவன், மனைவி, பெற்றோர், நண்பர்கள், பெரியவர்கள், சக மதத்தவர்கள் இப்படி நம்மைச் சுற்றி நிறைய தெய்வங்கள் இருக்கின்றன. அவற்றின் குரல்கள் நமக்காகவே ஒலிக்கின்றன....

    அதை விட்டு, காவி வேட்டி கட்டிய சந்நியாசியிடம் ஓடி, நமது பிரச்சினைகளைச் சொல்வதினால் எந்தவித அற்புதமும் நடந்துவிடப் போவதில்லை.

    இப்படிச் சொல்வதினால் நான் நாத்திகம் பேசுவதாக எண்ணி விட வேண்டாம். என் வீட்டிலும் கடவுள் படங்கள் உண்டு. என்னைப் பெற்றோர், வளர்த்தவர் படங்கள் எல்லாம் உண்டு. ஆனால், எனக்கும் இந்தப் படக் கடவுள்களுக்கும் நடுவில் நான் எந்தப் பூசாரியையும் நியமிக்கவில்லை....

    நான் தினமும் என் கடமைகளை ஒழுங்காய்ச் செய்கிறேன். யாரையும் புண்படுத்தும்படியாக வார்த்தைகளை உபயோகிப்பதில்லை. நான் யாருக்காகவும் அல்லது எந்தவொரு சமூகத்தைத் திருப்திபடுத்த வேண்டும் என்றும் என்னை மாற்றிக் கொண்டதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, என் மேல், என் எழுத்தின் மேல் எனக்கும் நம்பிக்கை இருக்கிறது.

    ஆதலால் இந்தக் கடவுள் படங்களுக்கு நான் பெரிதாக பூஜையோ, விரதமோ செய்வதில்லை... செய்பவரைப் புண்படுத்துவதுமில்லை.

    இது போதாதா …போதும்

    எல்லாக் கடவுள்களும், எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கிறது.

    அது என்னிடம் நிறைய இருக்கிறது. இந்த நாவலைப் படிக்கிற உங்களிடமும் நான் இதைத்தான் எதிர்பார்க்கிறேன்.

    அன்பைக் கொடுத்து, அன்பை வாங்குவோம்.

    அதை விடுத்து, சாமியாரிடம் போய் கும்பிட்டு நிற்பதால் வயிற்று வலியோ, பணக்கஷ்டமோ, மகளின் திருமணமோ நடந்து விடாது.

    வயிற்று வலிக்கு காரணம் கண்டு பிடித்து தகுந்த வைத்தியம் பார்க்க வேண்டும்..

    உழைக்காமல் பணக் கஷ்டம் நிச்சயமாய் தீராது. அப்படி, உழைக்காமலேயே செல்வம் சேர்ந்தால் பின்னாலேயே கைக்குக் காப்பும், செய்தித்தாளில் கட்டம் கட்டி செய்தியுடன் புகைப் படமும் வரும்... தினமும் எத்தனையெத்தனைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்?

    அது போலத்தான் பெண் திருமணமும். சாமியார்களால் மாப்பிள்ளைகளை உருவாக்க முடியாது. நாம்தான் அலைந்து, திரிந்து, நல்ல பையனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இந்த நாவலில் வரும் சிவகுருநாதன், பூபதி போன்ற சாமியார்களாயிருந்தால், பெண்களின் கதி அதோகதிதான்!

    பாவம்.... இது போன்ற துறவிகள்தான் என்ன செய்வார்கள்.

    விவரம் தெரிவதற்கு முன்பே, பத்து வயசிலும் எட்டு வயசிலும் ஆசிரமத்துக்கு வந்து, பிரும்மச்சரியத்தைப் பூணுகிறார்கள். ஆனாலும் வயசு என்று ஒன்று இருக்கிறதல்லவா…. அது, தன் தேவையை உணர்த்தத் தொடங்கியதும் கண்மறைவாகப் பசியாற வேண்டி இருக்கிறது. இதற்கு உதவுவதற்காகவே பல கைக்கூலிகள் காத்துக் கிடக்கிறார்கள்.

    ருசி கண்ட பூனை உறிக்கு உறித்தாவும் கதைதான். மனசுக்குள் அசட்டுத் துணிச்சலும், நம்மை யார் கண்டு பிடிக்கப் போகிறார்கள் என்கிற திமிரும் ஏற ஏற...

    ஒரு சாதாரண - சராசரி - மனிதன் செய்யும் அல்லது செய்யத் தயங்கும் குற்றங்கள் எல்லாம் இவர்களுக்குப் பழகிப் போய் விடுகிறது...

    நான் சொல்வது சத்தியம்.

    ஒரு குடும்பத் தலைவன், அயலான் மனைவியை ஏறிட்டுப் பார்க்கத் தயங்குவான். அப்படியே பார்க்க வேண்டுமென நினைத்தாலும் குடும்பம், மனைவி, கெளரவம் இவைகளின் நிமித்தமாவது தன்னை அடக்கிக் கொள்வான்.

    ஆசிரமத்து காவிகளுக்கு இந்தப் பிரச்சினை எதுவுமில்லை. உள்ளே என்ன நடந்தாலும், 'சாமி இப்ப பூஜையில் இருக்கார்' என்றும், பெரிய வி. ஐ. பி. கூட 'ராஜாங்க விஷயமாக பேசிட்டிருக்காள்', என்றும் சொல்ல சீடப் பிள்ளைகள் வெளியே காவல் இருப்பார்கள்.

    அப்பாவி மக்கள் விடிகாலையிலேயே தலை முழுகி, கையில் நண்டையும், சிண்டையும் பிடித்துக் கொண்டு, கொலைப் பட்டினியுடன் இந்த (ஆ) சாமிகளைத் தரிசிப்பதற்காக கியூவில் நிற்பார்கள்.

    பாலும், பழமும் சாப்பிட்டு, ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட அறையில் படுத்து, மிச்சசொச்ச நேரத்துக்கு பாதாமும் முந்திரியும் கொறித்து, 'எவள் கிடைப்பாள்' என்று பார்வையால் வலைவீசிக் கொண்டிருக்கும் - எதையும் துறக்காத துறவிகளுக்கு ஏழைகளின் கஷ்டமோ, சம்சாரிகளின் கடன் பிரச்சினையோ என்ன புரியப் போகிறது... சொல்லுங்கள்...

    நான் இப்படிச் சொல்வதினால், 'மகான்களே இல்லை என்கிறாயா' எனக் கேட்டு விடக் கூடாது. ஸ்ரீ ரமணர், பரம் ஹம்ஸர், சாரதா தேவி, விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர், அன்னை, இப்படி நிறைய பேர் இருந்திருக்கிறார்கள்... -

    இன்னும் என்னைக் கேட்டால், பெண்ணை, பெண்மையை - மதிக்கும் எல்லாருமே மகான்கள், ஆன்மீகவாதிகள் என்றுதான் சொல்வேன்.

    காந்தியும், காமராஜரும், பெரியாரும் கூட மகான்கள்தான்.

    என்ன... இவர்கள் வேஷம் போட்டதில்லை..... மந்திரத்தில் மாங்காய் விழும் என்றோ, மணலைக் கயிறாகத் திரிக்க முடியும் என்றோ சொல்லி, மக்களை ஏமாற்றியதில்லை.

    உழைத்தால் உயர்வு என்றார்கள்.

    உழைப்போம்

    'பெண்ணை மதித்தால் நீ மதிக்கப்படுவாய்' என்றார்கள்.

    மதிக்கக் கற்றுக் கொள்வோம்.

    நமக்கு செய்யும் தொழிலே தெய்வம்.' அது போதும்....

    மிக நீண்ட முன்னுரைதான். என்றாலும் நான் நினைத்ததைச் சொல்லிவிட்ட திருப்தி இருக்கிறது.....

    'கண்ணான கண்மணி' _ - ராணி பத்திரிகையில் தொடர்கதையாய் வெளிவர ஊக்கமளித்த ராணி ஆசிரியர் திரு. அ. மா. சாமி அவர்களுக்கும்...

    அந்தந்த வாரம் தொடர்கதையின் அத்தியாயங்களை முன் கூட்டியே படித்து, தனது அபிப்பிராயத்தைக் கூறிய ராணி பத்திரிகையின் உதவி ஆசிரியர் திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கும்....

    ஒவ்வொரு வாரமும் உயிரோட்டமாய் ஓவியங்களை வரைந்த ஓவியர் திரு. ஜெயராஜ் அவர்களுக்கும், இதோ, உங்கள் கரங்களில் தவழும் நாவலின் அட்டைப் படத்தை வரைந்த ஓவியர் திரு. ஷியாம் அவர்களுக்கும் என் நன்றியைச் சொல்லியே ஆக வேண்டும்.

    இந் நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் பொருத்தமான கண்ணதாசன் கவிதைகளைத் தேடி எடுத்து, வரிசைப்படுத்தித் தந்த என் உதவியாளர் சர்ச்சில் பாண்டியன் அவர்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.

    பூம்புகார் பதிப்பகம் வெறும் பொழுது போக்கு எழுத்துக்களைவிடவும், சமுதாய நலனில் அக்கறை கொண்டு அதற்கேற்ற எழுத்துக்கள் எங்கிருந்தாலும் வரவேற்று நல்ல முறையில் பிரசுரிக்கும் என்பதை நான் சொல்ல வேண்டாம்; 'கண்ணான கண்மணி' சொல்லும்! வணக்கம்.

    நன்றி.

    இப்படிக்கு,

    என்றும் அன்புடன்,

    அனுராதா ரமணன்

    இந்த நாவல்,

    என் அனுபவ சோகங்களை எல்லாம் தன் மடியில் தாங்கி, எந்த நேரமும் எனக்கு ஆதரவாய், ஆறுதலாய் குரல் தரும் என் அன்னைக்கு சமர்ப்பணம்.

    - அனுராதா ரமணன்

    கதையில் மூழ்கி முத்தெடுப்பதற்கு முன்...

    இக்கதை கூட, நமது அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளையும், மூட நம்பிக்கைகளையும், வர்ண பேதங்களால் ஏற்படும் சிறுமைகளையும் சிக்கல்களையும் வைத்தே புனைந்திருக்கிறேன்...

    இதைப் படிப்பவர்களுக்கு, இதன் மூலம் ஓர் விழிப்புணர்வை என்னால் ஏற்படுத்த முடிந்ததென்றால் - அதுவே என் எழுத்துக்குக் கிடைக்கும் மாபெரும் பரிசு!

    ‘இவள் இப்படி எழுதலாமா..' - என்று கேள்வி கேட்பவர்களுக்கு என் பதில்:

    இவள்தான் இப்படி எழுத முடியும்!

    ஆம்..

    'தொட்ட பின் பாம்பு என்றும்

    சுட்ட பின் நெருப்பு என்றும்

    பட்ட பின் அறிவதுதானே

    பட்டினத்தார்கள் வாழ்வு..'

    இப்படி எழுதிய கவிஞர் கண்ணதாசன் கூட, தான் அனுபவத்தால் தெரிந்து கொண்டதை மற்றவரும் தெரிந்து, பார்த்து நடக்க வேண்டும் என்றுதானே இப்படி எழுதினார்?

    சமூக ப்ரக்ஞையுள்ளவர்கள் கதையைப் படித்து சீற மாட்டார்கள்.

    சீறுபவர்களுக்கு சமுதாயச் சிந்தனை இல்லை என்பதை வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது...

    கதையைப் படியுங்கள். பின்னால் பேசுவோம்.

    இப்படிக்கு அன்புடன்,

    அனுராதா ரமணன்

    கண்ணான கண்மணி

    அனுராதா ரமணன்

    ***

    1

    சொல்லாதே சொல்லாதே

    பார்த்த்தெல்லாம் சொல்லாதே

    துடிக்கும் பெண்ணின் மனதைப் பற்றி

    தொடரும் கதைகள் முடியும் மட்டும் சொல்லாதே

    -கண்ணதாசன் படம் : ‘நான் யார் தெரியுமா?’

    அந்தக் காதல் கடிதம் அப்படித்தான் ஆரம்பித்திருந்தது.

    தங்கம் மறுபடியும் படித்தாள்.... யார் எழுதியிருப்பார்கள் என்று புரியவில்லை...

    கடிதத்தின் கடைசி வரிகள் அவளைக் குழப்பின….

    ‘இப்படிக்கு காதல் பிச்சை கேட்கும் வெள்ளி'

    யாரந்த வெள்ளி...

    ஒரு வேளை வேண்டுமென்றே சிநேகிதிகள் யாராவது விளையாடுகிறார்களோ...

    தங்கம், தனது ரோஜா உதடுகளை மேலும் கடித்ததில் சிவந்தது....

    யாருக்கு இத்தனை துணிச்சல்?

    கல்லூரியைப் பொறுத்த வரையில் அவள் தான் படிப்பில், பாட்டில், விளையாட்டில் முதல். ஆதலால், அவளைச் சுற்றி, எப்போதும் படிக்கிற பெண்கள் கூட்டம்தான் இருக்கும்.

    அவர்களில் குறும்புக்காரிகளும் இருக்கிறார்கள்.....

    சக மாணவிகளுக்கும், ஏன் பேராசிரியை, விரிவுரையாளர்களுக்குமே செல்லப் பெயர் வைத்து அழைப்பது... ஏமாந்தவள் எவளாவது கிடைத்தால் அவள் நம்பும்படி கதையளப்பது, கொண்டு வரும் டிபன் டப்பாக்களைத் திறந்து, 'ருசி பார்க்கிறேன்' என்று சொல்லியபடியே அத்தனையையும் காலி செய்வது, ஸ்கூட்டர் சாவியை ஒளித்து வைத்து அழ வைப்பது.

    இதெல்லாம்தான் நிறைய...

    அப்படியும் தங்கம், தன் வட்டத்தில் உள்ள ஒவ்வொருத்தியிடமும் கடிதத்தைக் காட்டிக் கேட்டாள்.

    யாருப்பா இது?

    என்னது - தமிழா…. தமிழ்லே லவ் லெட்டரா... மை குட்னஸ்! ஏன் தங்கம்... லவ் பண்ணத்தான் பண்றே... நாலு வார்த்தை இங்கிலீஷ் தெரிஞ்சவனாப் பார்த்து லவ் பண்ண மாட்டியோ...

    பாரு... காதல் கடிதம்னா அதுல ஒரு நேர்த்தி இருக்கணும். படிச்சா பெரிய காவியம் படிக்கற மாதிரி இல்லையின்னாலும் 'காதல்' சினிமாப் பார்த்த மாதிரியாவது இருக்கணும்... யாரிந்த ஆளு... பிச்சைக்காரன் மாதிரி கெஞ்சியிருக்கான்...

    "நான் நினைக்கிறேன்…. இதை எழுதினவன் 'ஓல்டு ஜெனரேஷன்னு... இல்லே, வளர்ப்பாவது

    Enjoying the preview?
    Page 1 of 1