Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavu Pradhesangal
Kanavu Pradhesangal
Kanavu Pradhesangal
Ebook247 pages1 hour

Kanavu Pradhesangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110002928
Kanavu Pradhesangal

Read more from Anuradha Ramanan

Related to Kanavu Pradhesangal

Related ebooks

Reviews for Kanavu Pradhesangal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavu Pradhesangal - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    கனவுப் பிரதேசங்கள்

    Kanavu Pradhesangal

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    1

    அந்தப் பெண்கள் கல்லூரி, கல்யாணக்களை கட்ட, கலகலப்பை வாரி இரைத்துக் கொண்டிருக்கிறது.

    என்ன இருந்தாலும், கல்லூரி துவங்கும் நாளில் இருக்கும் உற்சாகமே தனிதான். மற்ற நாட்களில் 'கட்' அடிக்கும் சுபாவமுள்ள மாணவிகள் கூட, அன்றைய தினத்தில் தவறாமல் ஆஜராகியிருப்பார்கள்....

    புது மாணவிகளை வரவேற்கும் உற்சாகம்... பழகிய சினேகிதிகளை மறுபடியும் சந்திப்பதில் இருக்கும் சுகம்.

    அன்றைக்கு வராத மாணவிகளைப் பற்றி, தங்களுக்குள் கூறிக் கொள்ளும் பலவிதமான ஹேஷ்யம்....

    'மீனா வரல்லையா...?"

    ''ஐ திங்க்... அவ இனிமே வர மாட்டான்னு தோணுது...''

    ஏண்டி...?

    'ஃபாரின்லேயிருந்து ஒரு பிள்ளையாண்டான் அவளைப் பார்த்து ஓ.கே. சொல்லிட்டுப் போயிருக்கான்...''

    "ஆமா, போ. இல்லைன்னாலும் இவ டிகிரி வாங்கி என்னத்தைப் புரட்டப் போறா... ரெண்டு வருஷம் செலவு மிச்சம்...''

    "ஹேய் உனக்குத் தெரியுமா... போன வருஷம் ஃபர்ஸ்ட் இயர் லிட்ரேச்சர்லே புவனான்னு ஒரு பொண்ணு இருந்ததே...?''

    "யாரு... ஒரு தடவை கிளாஸ் நடக்கறப்ப, பாடத்தைக் கவனிக்காம விரலுக்கு கியூடெக்ஸ் பூசிட்டு, பிரின்ஸிகிட்ட வசவு வாங்கித்தே... அதுவா?''

    "அதேதான்... இப்ப பாக்யராஜ் படத்துல நடிக்குதாம்... இனிமே படிப்புக்கு முழுக்குதானாடி...''

    "ஏய்... என்னடி... லீவுல ரெண்டு சுத்து பெருத்து வந்திருக்கே... வீட்டு சாப்பாடா...?''

    "ச் சீ. போ... நீ வேற...''

    "மக்கு. இவ சதை போட்டதுக்குக் காரணம் நான் சொல்லவா...?

    "ஏய் வேண்டாம் டீ...''

    ''சொன்னா என்னடி தப்பு.... நம்ம ஃபிரண்ட்ஸ் தானே...''

    "ஏய்...வேண்டாம். எனக்கு கெட்ட கோபம் வரும்...''

    ''பாருடீ.... இவளே ஒத்துக்கறா... கோவத்துல கூட இவளுக்கு கெட்ட கோவம் தான் வருமாம்...''

    "ஆமா... பாட்னி லெக்சரர் பார்வதி பிரக்னென்ட்டா...?''

    ''அப்படித்தான் போல...''

    ''இத்தளை வயசுக்கு மேலேயா... கொஞ்சம் கூட நல்லாவே இல்லே...''

    "ஹேய் உனக்கென்னடீ......? அவ புருஷனுக்கே, இதுபத்தி கவலையில்லையாம், இவ பெரீசா சொல்ல வந்துட்டா...'

    இந்த விமரிசனங்கள் சுவையானவை. அதுவும் காலேஜ் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் பெண்களின் உலகமே தனி...

    தங்களது அறைக்கு எந்தச் சிடுமூஞ்சி வரப் போகிறாளோ என்கிற கவலை... இந்த வருடத்திய 'மெஸ்' நிர்வாகத்தை யார் எடுத்திருக்கிறார்கள் என்கிற சர்ச்சை... புது மாணவிகளில் தங்களது அறைவாசியாக எவளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்கிற வாதம்...

    நாளைக்குக் கல்லூரி திறக்கிறார்கள் என்றால் முதல் நாளிரவு ரயிலேறும் வரையில் வீட்டையும், அம்மாவையும் பிரிந்திருக்க மனசு வராத பூஞ்சை மனசுகள்....

    கல்லூரி திறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ஹாஸ்டலில் வந்து டேரா போடும், பட்டாம் பூச்சிகள்

    போன வருடம் கிடைத்த அதே அறையே இந்த வருடமும் கிடைத்தால் ராசியாய் இருக்குமே என ஏங்கும் படித்த பத்தாம் பசலிகள்....

    கல்லூரி மூடுவதற்கு முன், ஹாஸ்டல் குளியலறையின் கதவுக்குப் பின்புறம், தான் ஒட்டி வைத்திருந்த கமலஹாசனின் படம் இன்னமும் இருக்கிறதா என்கிற கவலையோடு ஓடிவரும் பிரகிருதிகள்....

    எது எப்படியிருந்தாலும், அந்தக் கல்லூரி விடுதியின் இரண்டாம் வருடம், கடைசி வருடம் படிக்கும் மாணவிகள், தங்கள் அறைக்கு வந்து, பெட்டி படுக்கைகளை வைத்ததும் --- அரக்கப் பறக்க ஓடிப்போய் குசலம் விசாரித்தது

    திருமதி. கல்பனா ஜெயராமை....

    கல்பனா - கல்லூரி பேராசிரியை அல்ல! அதே கல்லூரியின் எதிர்சாரியில் - 'காபி பார்' வைத்து நடத்துகிறாள்.... ஒரு காலத்தில் அவள், இக்கல்லூரியின் மாணவியாக இருந்தவள் தான்.... அதனால்தானோ என்னவோ, வேறெங்கும் போய், தன் வியாபாரத்தை நடத்த விரும்பாமல் இங்கேயே கடை போட்டு விட்டாள்....

    காபி பார் வைத்துதான் இவள் பிழைக்க வேண்டும் மென்பதில்லை. இவளது கணவன் ஜெயராம் போலீஸ் தரப்பில் குற்றவாளிகளைப் பரிசோதிக்கும் ஸைக்யாட்ரிஸ்ட்

    திருமணமாகி பத்து ஆண்டுகளாகியும் இத் தம்பதியருக்கு குழந்தைப் பேறு இல்லாததால், வீட்டிலேயே இருந்து தன் குறையையே நினைத்து மனைவி ஏங்கிப் போய்விடக் கூடாது என்கிற காரணத்தினால் - அவளுக்குப் பிடித்தமான துறையில் அவளை அவள் கணவர் ஜெயராம் ஈடுபடுத்தியிருக்கிறார் என்று சொல்லிக் கொள்வார்கள்....

    மேலும் -

    இந்தப் பெண்கள் கல்லூரிக்குப் பக்கத்திலேயே, ஒரு ஆண்கள் கல்லூரியும், இன்னொரு பொறியியற் கல்லூரியும் இருப்பதால்....

    கல்பனாவின் காபி பாரில் எப்பொழுதும் கும்பலுக்கு குறைவே இருக்காது...

    எத்தனை மாணவ மாணவியர் படைதிரண்டு வந்தாலும் இன்முகத்தோடு உபசரிப்பதில் கல்பனாவுக்கு நிகர் கல்பனாதான்....

    இளைஞர்களிடம் பேசுவதை விடவும், பெண்களிடம் பேசுவதையே அதிகம் விரும்புவாள்...

    ஹாஸ்டல் மெஸ்ஸில், நல்ல டிபன் போடாத அன்றெல்லாம் இவளது பாரில் கும்பல் அதிகமாக இருக்கும்....

    ''கல்பனா அக்கா...''

    'மேடம்...''

    'மிஸஸ் ஜெயராம்...''

    - என்று இவளைச்சுற்றி எப்போதும் வண்ணத்துப் பூச்சிகள் போல அப்படியொரு மாணவியர் கும்பல்...

    வீட்டிலிருந்து ஹாஸ்டலுக்கு வந்து தங்கும் பல பெண்கள், சொந்த சகோதரியைப் பிரிந்து வருவதற்குக் கூட அத்தனை வருத்தப்பட மாட்டார்கள்.... லீவுக்காக ஊருக்குப் போகும்போது கல்பனாவைப் பிரியமேண்டுமே என்று பிழியப்பிழிய அழுவார்கள்....

    "அப்படி என்ன தான் இருக்கு இந்த கல்பனாகிட்ட...''

    மாணவர்கள், தங்களுக்குள் மூச்சுக்கு முந்நூறு தடவை கேட்டுக் கொள்வார்கள்.

    முப்பது வயசு கல்பனா இருபது வயசுப் பெண் போல இருக்கிறாளே... அதனாலா?

    அல்லது. ஒவ்வொரு பெண்ணிடமும் உடன்பிறந்த சகோதரியைப் போல தோளில் கைப்போட்டு உரிமையுடன் பேசுகிறாளே... அதனாலா?

    பத்துப் பெண்களின் நடுவில் நின்றாலும் கல்பனா தனித்துத் தெரிவாள். இந்தியப் பெண்களின் சராசரி உயரத்தை விடவும் நாலு விரற்கடை உயரம். கூடவே... பளீரிடும் தாழம்பூ சிவப்பு... சற்று நீள்வட்டமான முகம்... காந்தக் கண்கள்.... எடுப்பான நாசியில் வடக்கத்தி பாணியில் இடது பக்கம் சின்ன நத்து... உதடுகள் சற்று தடித்து லேசாய் பிரிந்து, எப்பொழுதுமே புன்னகையைச் சுமந்தபடி...

    காலேஜ் பெண்களை வட்டமிடும் மாணவர்களில் பலர் கல்பனாவின் பரம ரசிகர்களாக இருந்தார்கள் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை....

    அவ்வளவு ஏன்? இவளை நினைத்து, ரகசியமாய் கவிதைகள் எழுதி எழுதி, இன்ஜினீயரிங் காலேஜில் நாலாம் வருடத்திலேயே ஒரு இளைஞன் பலகாலமாக உட்கார்ந்திருக்கிறான்... தி ஹாஸ்டல் பெண்கள் அத்தனையும், லீவு முடிந்து கல்லூரிக்குத் திரும்பியதும் நேரே இவளைப் பார்க்க ஓடி வருவது சகஜம். இவளும் ஒவ்வொருத்தியையும் தனிப்பட்ட முறையில் விசாரிப்பாள்....

    அன்றும் அப்படித்தான்....

    இவளைப் பார்த்து விசாரித்து விட்டுப் போவதற்காக பெண்கள் பட்டாளம், காபி பாரை நோக்கிப் படையெடுக்க....

    இப்படி வரும் தேவதைகளைத் தரிசித்து, க்ஷேம லாபங்களை விசாரிப்பதற்காகவே இன்ஜினீயரிங் காலேஜ் மாணவர்களும், ஆர்ட்ஸ் காலேஜ் மாணவர்களும் முன்னேற்பாடாய், காபி பாரின் வாசலில் வந்து தவம் கிடக்க...

    "அக்கா எப்படியிருக்கீங்க?''

    - அதோ பத்மினி வருகிறாள். கல்பனாவைக் கண்கொட்டாமல் பார்த்தபடி, ஓட்டமும், நடையுமாய், பூஞ்சோலையொன்று குலுங்கி வருவது போல ஓடிவர... பின்னாலேயே நாலைந்து இளஞ்சிட்டுக்கள்...

    ''ஹாய் பத்மினி... ஹவ் ஆர் யூ... கொஞ்சம் இளைச்சிருக்கே.... பரவாயில்லே.... இப்பத்தான் அழகா இருக்கே...."

    - கல்பனாவை முந்திக்கொண்டு இளைஞர்களின் தலைவன் போல இருந்த பரத், அவளை விசாரிக்க

    "தாங்க் யூ...''

    பத்மினி, மகா கடுப்புடன் அவனைப் பார்த்து ஒரு முறை முறைத்து விட்டு உள்ளே நகர....

    பரத் புன்னகையுடன் அவளது முறைப்பை, தலையைச் சாய்த்து ஏற்றுக் கொண்டு அடுத்தவள் பக்கம் திரும்புகிறான்....

    அக்கா... எங்க அம்மா உங்களுக்காக தேங்காபர்பி செஞ்சு கொடுத்தாங்க... கொண்டு வந்திருக்கேன்.

    - பாலா, சின்ன எவர்ஸில்வர் டப்பாவை, கல்பனாவின் பக்கம் நீட்ட, பரத் அவர்களிருவருக்கும் இடையில் மூக்கை நுழைக்கிறான். ''எனக்காக என்ன கொண்டு வந்திருக்கே பாலா?'

    "உம்? கடப்பாரை.... அதால மண்டையில நாலு போட்டுக்கோங்க...''

    "தாங்க்யூ... தாங்க்யூ வெரிமச்... அடேய், இரும்பு விக்கற விலையில் நமக்காக கடப்பாரை கொண்டு வந்திருக்காளாம்டா...'' - பரத், பக்கத்திலிருந்தவனிடம் போலியாய் வியக்கிறான்....

    ''மேடம்... நீங்க கேட்ட திரு அருட்பா இந்தாங்க...'' 'அதுசரி மீனாட்சி... உன் அருள் எப்போ கிடைக்கும்.'

    கல்பனா. பரத்தை கடிந்து கொள்ளும் பாவனையில் பார்க்கிறாள்.

    'என்ன தம்பி... விளையாட்டுக்கு ஒரு வரம்பே கிடையாதா?''

    ''ஐயோ... என்னை தம்பி தம்பின்னு கூப்பிட்டு மூட் அவுட் ஆக்காதீங்க... கால் மீ பரத்.''

    கல்பனா சிரிக்கிறாள். மற்ற இளைஞர்களை விடவும் பரத்திடம் இவளுக்கு தனி மதிப்பு உண்டு. - அதற்குக் காரணம், பரத்தின் அண்ணன் குமார், இவளது கணவனைப் போல போலீஸ் இலாகாவைச் சேர்ந்தவன் என்பது தான். சும்மா இல்லை. போலீஸ் சூப்ரிண்டென்ட்.

    குமாரின் அதட்டலுக்கு வெளிவராத பதில்களை கல்பனாவின் கணவன் ஜெயராம், வாயிலுள்ள எச்சிலை உமிழ்வது போல உமிழச் செய்து விடுவான்.

    குமார் எடுத்துக்கொள்ளும் கேஸ், பல சுவாரஸ்யமானவை. அவைகள் குமாருக்கு மட்டுமல்லாது ஜெயராமுக்கும் சேர்த்துப் புகழை வாங்கித் தந்தவை.

    பரத் பெண்களிடம் இத்தனை சில்மிஷம் செய்தாலும் கோடு தாண்டிப் போகமாட்டான் என்கிற நம்பிக்கை அவளுக்கு உண்டு.

    ஏன், சற்று விச்ராந்தியாக உட்கார்ந்திருந்த சமயத்தில் அவளே, பரத்திடம் சொல்வாள்.

    "உங்களைச் சொல்லி பிரயோஜனமில்லே. எல்லாம் கோளாறு... என்ன, உங்க அண்ணாவும், அவர் சினேகிதரும் ஆடாத ஆட்டத்தை நீங்க ஆடிட்டீங்க... உங்க அண்ணா அந்தக் காலத்து ரோமியோ... நான் இந்தக் காலேஜ்லே படிக்கற காலத்துல, இதோ இந்த காபி பார் இருக்கற இடத்துல ஒரு புளியமரம் இருக்கும் அப்ப... சாயந்திரம் காலேஜ் விடற நேரத்துக்கு அதுக்குக் கீழே பைக்கை வச்சுட்டு நின்னுடுவாரு - ஸைட் அடிக்க...''

    ''யாரை ஸைட் அடிப்பாரு... உங்களையா?''

    ''பார்த்தியா... நம்மையே வார்றியே.... என்னையின்னா என்னை மட்டும்தான் ஸைட் அடிப்பாரா... எங்கூட படிச்ச, எல்லாப் பொண்ணுங்களையும் தான்.... குறிப்பா உமான்னு ஒரு பொண்ணு... அவகிட்டத்தான் நிறைய வாங்கிக் கட்டிப்பாரு உங்க அண்ணா, அவரைப் போய் நீ கேட்டு வச்சிடாதே!''

    'ஐயோ, நான் அந்த மாதிரியெல்லாம் செய்வேனா...?''

    பரத் ஒன்றுமே தெரியாத அப்பாவி போல, உடம்பைக் குழைத்து நடிப்பான்.

    "ஆங்.... நீயா...? நீ என்ன வேணுமானாலும் செய்வே...''

    கல்பனா அவனைப் பார்த்துக் குறும்பாய் கண்ணைச் சிமிட்டுவாள்.

    அந்தக் கணத்தில், அவளது நத்து மாட்டிய மூக்கை இழுத்து பிடித்துத் திருக வேண்டும் போல பரத் பரபரத்துப் போவான்.

    "அட அசட்டு அண்ணாவே... இந்த கல்பனாவைப் பார்த்தா எனக்கே ஒரு மாதிரியா இருக்கே... இவளை விட்டுட்டு, நீ எதுக்கு உமா பின்னாலேயும், ரமா பின்னாலேயும் அலைஞ்சே... அது சரி.... யார் அந்த உமா? அவளை விட்டுட்டு, பிள்ளையார் எறும்புமாதிரி ஒதுங்கி, ஒதுங்கி, உன்கிட்ட பயந்து சாகற அண்ணி, லட்சுமியை எங்கேயிருந்து பிடிச்சே?''

    பரத், தனக்குள் பலமுறை கேள்வி கேட்டு, பதில் தெரியாமல் விழித்திருக்கிறான்....

    ''அந்த உமா இப்ப எங்கே?"

    ''யார் கண்டது. ஏதோ ஸ்கூல்ல அஸிஸ்டெண்ட் ஹெச்செம்மா ஒர்க் பண்றதா கேள்வி...''

    கல்பனா அத்தோடு நிறுத்திக் கொள்வாள், இது மாதிரி இளசுகளிடம் எந்த அளவுக்கு சினேகிதமாய் பழக வேண்டும் என்பது அவளுக்குத் தெரியும்....

    இன்றுகூட, பரத்திடம் கோபிப்பது போல நடந்து கொண்டாளே தவிர, இதெல்லாம் நிஜக் கோபமில்லை.

    அவனைக் கண்டு கொள்ளாதவள் போல முகத்தைத் திருப்பி, அப்பொழுது தான் உள்ளே நுழைந்து கொண்டிருந்த பெண்ணை ஆரவாரத்துடன் வரவேற்கிறாள்.

    'ஹாய் ஷீலா... என்ன இப்படிக் கறுத்துப் போயிட்டே...?''

    "அவங்க ஊர்லே தண்ணிக் கஷ்டம் ரொம்ப போல இருக்கு...''

    'ஷ்... சித்த சும்மாயிரு தம்பி...'' 'ஐயோ... மறுபடியும் தம்பியா...?'

    பரத், தலையில் கை வைத்துக் கொள்ள, கல்பனா - ஷீலாவின் கைகளைப் பிரியமாய் பிடித்துக் கொள்கிறாள்.

    "ஆமா... எங்கே உன் தோஸ்த்தைக் காணோம்...?',

    ''யாரு சசியா?''

    "உம்... இன்னும் ஊர்லேருந்து வரலையா?''

    ''உங்களுக்கு விஷயமே தெரியாதா?''

    "ஏன்... என்ன ஆச்சு?'

    "அவ ஏதோவொரு விஷயத்தினால மென்ட்டலி அப்ஸெட் ஆயிட்டா... வீட்டுல ஒரு நாள் தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு கிளம்பி, ஏக கலாட்டா.... யார் என்ன

    Enjoying the preview?
    Page 1 of 1