Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ival Vera Maathiri..
Ival Vera Maathiri..
Ival Vera Maathiri..
Ebook133 pages1 hour

Ival Vera Maathiri..

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

விதி இவளை... துயரங்களை நோக்கியே துரத்திக் கொண்டு இருந்தது! இவள் சென்றடைந்த இடமோ.. ஆனந்தத்தின் எல்லை! ஆம், இவள் பாதையும் பயணங்களும் வேற மாதிரி!

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109902917
Ival Vera Maathiri..

Read more from Kanchana Jeyathilagar

Related to Ival Vera Maathiri..

Related ebooks

Reviews for Ival Vera Maathiri..

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ival Vera Maathiri.. - Kanchana Jeyathilagar

    http://www.pustaka.co.in

    இவள் வேற மாதிரி..

    Ival Vera Maathiri..

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    உறக்கத்தில் தலைக்குள் ஓடும் கெட்ட கனவுகள் தேவலை.. கண் திறந்தால் ஓய்ந்துவிடும்.

    தண்ணீர் குடித்துவிட்டு படுத்தால், மறுநாள் நினைவில் நிற்பதுமில்லை.

    ஆனால், விழித்திருக்கும்போது நேரும் கெட்டவைகளை அப்படி சுலபமாய் ஒதுக்க முடியவில்லை.

    தவிர, லலிதாவிற்கு நேர்ந்த சம்பவங்கள் ஒரு நாளைவிட, அடுத்தநாள் மோசமாகிக் கொண்டே போயின!

    அப்பா தன்னை எச்சரித்தும் இத்துறையைத் தேர்ந்தெடுத்தது தப்புதான் போலும்.

    அழகியல், அழகுக்கலை எல்லாம் அநாவசியமானவை லலிம்மா. பெண்களுக்கு பாதுகாப்பானது டீச்சர் மற்றும் நர்ஸ் வேலை, அவை அர்த்தமுள்ளதும் இல்லையா?

    அப்பாவை முடிக்கவிடாமல் குறுக்கிடுவாள் - எந்தக் காலத்தில் இருக்கீங்கப்பா? அழகியலுக்கு இப்ப ஏக டிமாண்ட்.

    காலம் இருக்கட்டும்மா.. நமக்கு எது நல்லது, செளகர்யம்னும் யோசிக்கணுமே?

    ஒரே வேலையை தினம் தினம் செய்றது சலிப்புப்பா...

    ஆசிரியருக்கு ரகம்ரகமான மாணவர்கள், நர்ஸ்கள் பார்ப்பது விதவித நோய்களை.. நோயாளிகளை..

    மகள் முகம் போன போக்கில் தந்தை வாய் மூடிக்கொண்டார்!

    விஞ்ஞானப் பூர்வமான அழகியல் பயிற்சியை மூன்றாண்டுகள் படித்தவள், தன் திறமையால் நகரின் முதன்மையான ஒப்பனை நிபுணியான மிஷ்ஷேலிடம் உதவியாளராய் சேர முடிந்தது.

    மிஷ்ஷேல் இந்தத் துறையில் ஒரு நட்சத்திரம்தான். மணப்பெண்ணின் அலங்கரிப்பிற்கு அவள் வாங்கும் தொகை இருபதாயிரம்! திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு, மூன்று மணி நேரங்களில் அவள் உதவியாளர்கள் மணமகளின் சருமத்தை சுத்தப்படுத்தி, மெருகேற்றி வைப்பார்கள். முன்னங்கையில் பார்வையில் படுமளவில் முடியிருப்பின் அது அகற்றப்படும். நகங்கள் சீராகும். மணநாளன்று அப்பெண்ணில் மிஷ்ஷேலின் கைகள் இரண்டே மணி நேரங்களில் மாயாஜாலம் செய்துவிடும். வைபவத்திற்கான புடவை, நகைகளை ரசனையுடன் போட்டு அனுப்ப, அப்பெண்ணை அழகு நிலையத்திற்கு இட்டு வந்திருந்த காரோட்டியே திகைத்துப் போவார்!

    உயர்ரக மாடல்களும் திரைப்பட நடிகைகளும் மிஷ்ஷேலின் வாடிக்கையாளர்கள்.

    ஆக அவளது மாயவிரல்களுக்கு முன்பு உட்காருவது சுலபமல்ல.

    மன்னிக்கவும்.. இப்போ முடியாது.., ஸாரி, அப்பாயின்மெண்ட் ஃபுல்.. எனும் பதில் தான் சதா.

    அப்படிப்பட்ட ஒரு இக்கட்டில்தான் லலிதாவிற்கு நடிகை அபூர்வாவின் அறிமுகம் வாய்த்தது.

    அபூர்வா அப்படி ஒன்றும் அபூர்வ அழகி அல்ல. ஆனால், தென்னிந்திய வெள்ளித்திரை அவளைக் கொண்டாடியது. திரைக்கு ஏற்ற உடல்கட்டும் முகவெட்டும் அவளுக்கு இருந்தன. தவிர இருந்த சில குறைகளை திறமையாய் மறைக்க கற்றிருந்தாள்.

    மூன்று வருட அனுபவத்தில் ஒளி, கோணங்கள் பற்றிய அறிவோடு அவளது நடிப்பும், அழுத்தமாகி இருந்தது. ஆக கவனமாய் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து முதல் வரிசையில் தன்னை நிறுத்திக் கொண்டாள்.

    ஒரு பிரபல விருது விழா அன்று அபூர்வாவின் பிரத்யேக ஒப்பனைக்காரர் சுகவீனமாகிவிட, மிஷ்ஷேலுக்கு அவசர அழைப்பு வந்தது. கிடைத்ததும் வழக்கமான பதில்தான்.

    மன்னிக்கவும்.. பதிவுகள் இயலாது

    மிஷ்ஷேலை கைப்பேசியில் பிடித்த அபூர்வா கெஞ்சினாள்.

    ஒரே மணி நேரம் வந்துட்டு போ மிஷி, இருபத்தஞ்சாயிரமா தந்துடுறேன். சிறந்த கதாநாயகிக்கான விருது இந்த வருஷம் எனக்குத்தான்ங்கறாங்க.. செய்தித்தாள், பத்திரிக்கைகளில் எல்லாம் ஃபோட்டோஸ் வரும். பார்க்கற நாலு தயாரிப்பாளர்கள் நாளைக்கு என் வீடு தேடி வரணுமே!

    ஸாரி அபூர்வா மேம். இப்ப கையில இருக்கறது பெரிய இடத்து கல்யாண வேலை. (அமைச்சரின் பெயரைச் சொன்னவள்) மணப்பெண்ணோடு மொத்தக் குடும்பத்துக்கும் ஒப்பனை நான்தான். அசைய முடியாது. ஆனா..

    நான் வேணா அங்கே வரவா?

    ரிலாக்ஸ்! என் ட்ரெய்னி லலிதாவை அனுப்பறேன். படா திறமைசாலி. என்னுடைய நெளிவு சுழிவெல்லாம் கிரஹிச்சுட்டா, குறையில்லாம வேலையச் செய்திடுவா..

    ம்ம்.. பார்ப்போம்.

    தொகையை லலிதா கையிலேயே தந்திடுங்க.

    வியாபாரத்திலும் மிஷ்ஷேல் கெட்டிக்காரி.

    அபூர்வாவின் சாமர்த்தியமும் சளைத்ததல்ல. வந்த லலிதாவிற்கு சம்பளம் பேசி தன்னிடமே வேலைக்கு அமர்த்திக்கொண்டாள். அந்த அளவிற்கு லலிதாவின் வேலை அவளுக்குத் திருப்தியாய் இருந்தது.

    அப்பா இதையும் எதிர்த்தார்.

    அழகு நிலையத்தில் உன்னைத் தேடி பெண்கள் வர்றது வேற.. நீ ஒரு நடிகையின் தனிப்பட்ட ஒப்பனையாளராய் இருப்பது வேற, லலிம்மா. அவளோடு வெளியூர் செல்ல நேரும். நிறைய பணவலிமையுள்ள ஆண்கள் புழங்கும் தொழில், நமக்கு சரிவராது.

    பெரிய சம்பளம்ப்பா. இதுபோக தயாரிப்பாளரிடமிருந்தும் ஒரு நல்ல தொகை வரும்...

    எவ்வளவு காலத்துக்கு? அந்த நடிகைக்கு மார்க்கெட் இருக்கும் வரைதானே?

    அதற்குள் என் சேமிப்பில் சில லட்சங்கள் சேர்த்திடும். மேலும் வங்கியில் கடன் வாங்கி சொந்தத்தில் ஒரு அழகு நிலையம் ஆரம்பிச்சுடலாம்ப்பா. மாடியில நம்ம வீடு. அலைச்சல் கிடையாது.. ஆனா, கைநிறைய வருமானம்... என்னப்பா?

    மகள் கெஞ்ச தகப்பன் மிஞ்சும் வகையில்லை. அவருமே கெஞ்சினார்.

    சில நல்ல வரன்ங்க கேட்டு வர்றாங்கம்மா.. கல்யாணத்திற்கு ஏற்ற வயசோடு அழகாவும் இருக்கே. இப்ப உன் கல்யாணத்தை நடத்திடறது உசிதம். தள்ளிப் போட்டால் நாம் தேடிப் போய் கெஞ்சுறது போலாயிடும்...

    வெறுமே பருவத்தை உருவத்தைப் பார்த்து ஜோடி சேருவதில் எனக்கு பிரியமில்லப்பா. ஓரளவு பழகி, பேசி, மனம் தைரியமாயிருந்தால் மேற்கொண்டு யோசிக்கலாம்.. அதில் திருப்திப் பட்டு அமையும் வாழ்வுதான் சரி..

    ஆனால், சொல்லும்போதே முன்பு வாசித்து மிரண்ட கவிதை ஒன்று லலிதாவிற்கு நினைவில் வந்தது.

    'சாதி தாண்டினார்கள்

    மதம் தாண்டினார்கள்

    சமூகம், அந்தஸ்து தாண்டினார்கள்

    தாண்ட முடியாத உறவுகள்

    அத்தனையும் தாண்டினார்கள்

    அமைதியாய் காத்திருந்தன.

    அவரவர் இயல்புகள்!’

    இரண்டு நபர்கள் தங்கள் இயல்புகளை விட்டுத்தந்து அனுசரித்துப் போவது கடும் சவால்தான். அந்தளவிற்கு தான் நேசிக்கக் கூடிய, தன்னை விரும்பும் கணவன் இருப்பானா.. வாய்ப்பானா என்றெல்லாம் மருகுவதை விட்டு, தனக்கு பிடித்த துறையில் முன்னேறுவது புத்திசாலித்தனம் எனப்பட, அதில் முயன்றாள்.

    மகளின் வேகத்தைக் கண்ட தந்தை, பிறகு முணுமுணுக்கவும் இல்லை

    லலிதா அபூர்வாவுடன் ஜெய்ப்பூருக்குப் படப்பிடிப்பிற்காக போன சமயம் அப்பாவிற்கு கடுமையான மாரடைப்பு. வாழ்வை ஆர்ப்பாட்டமில்லாது நடத்திய அவரின் மரணம்கூட எளிமையாய் அமைந்து போனது. குற்றக் குடைச்சலுடன்தான் ஊர், வீடு வந்து சேர்ந்தாள்.

    தகப்பனை இழந்த வேதனையைவிட, 'நான் பக்கத்துல இருந்திருந்தா அப்பா பிழைச்சிருப்பார். அவருக்கு வயது ஐம்பத்து ஒன்பதுதான். ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. ராத்திரி எப்படி தவிச்சாரோ.. பக்கத்தில் ஒரே உறவான நான் இல்லாம போயிட்டேன்!' புலம்பித் துடித்தாள்.

    இறுதி சடங்குக்கான அத்தனையையும் அபூர்வா தன் ஆட்கள் மூலம் கவனித்துக் கொண்டதால்தான் தன்னால்

    Enjoying the preview?
    Page 1 of 1