Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennuyir Neethaney
Ennuyir Neethaney
Ennuyir Neethaney
Ebook105 pages46 minutes

Ennuyir Neethaney

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105702946
Ennuyir Neethaney

Read more from Vidya Subramaniam

Related to Ennuyir Neethaney

Related ebooks

Reviews for Ennuyir Neethaney

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennuyir Neethaney - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    என்னுயிர் நீதானே?

    Ennuyir Neethaney?

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    கடைசிப் பந்தி நடந்து கொண்டிருந்தது. மணிவண்ணன் கை திருப்பி நேரத்தைப் பார்த்தார். மணி ஒன்பதே முக்கால். விருந்து மண்டபத்திலிருந்து வெளி ஹாலை நோக்கி நடந்தார்.

    முதல் நாள் பெண் அழைப்பு, மறுநாள் முகூர்த்தம், மாலையில் வரவேற்பு என்று மாற்றி மாற்றிப் பட்டுப் புடவையும் நகையும் அணிந்து குறுக்கும் நெடுக்கும் அலைந்திருந்த களைப்பில் வழி முழுக்கப் பெண்மணிகள், பூவும் கால் மண்ணும் இறைந்து கிடந்த ஜமக்காளத்திலேயே தலை சாய்த்து விதவிதமான கோணங்களில் படுத்து உறங்கியிருந்தார்கள். கழுத்தில் காதில் நகையைக் கூடக் கழட்டவில்லை. எவனாவது வந்து அறுத்தால்கூடத் தெரியாத அளவுக்கு ஆழ்ந்த உறக்கம்.

    மணிவண்ணனுக்கு அதைப் பார்த்துக் கவலை ஏற்பட்டது. இது சென்னைப் பட்டணமல்ல என்றாலும்கூட, எல்லா ஊரிலுமே இப்போது கொள்ளைகள் அதிகரித்துத்தான் விட்டன. அவர் வீட்டுக் கல்யாணத்தில் இது போல் அசம்பாவிதம் நடப்பது அவருக்குக் கெளரவக் குறைவு.

    இப்படி நினைத்தவர் கொல்லைப்புறம் போய், 'ஏய் மலையா!' என்று ஒரு குரல் கொடுத்ததும், மலையன் என்ற பெயருக்குச் சொந்தமான ஒரு உருவம், 'ஐயா' என்று ஓடி வந்து கைகட்டி லேசாய்க் குனிந்து நின்றது.

    கூடத்துல பொம்பளைங்க நகையும் நட்டுமா தூங்கறாங்க பாரு, நீதான் இன்னைக்குக் காவல். பாத்துக்க. கொள்ளை போய்ட்டா அசிங்கமாயிரும். பிறகு ரெண்டு நாள் லீவு வேணா எடுத்துக்கிட்டு நல்லா தூங்கு. என்ன, சரியா?

    சரிங்கய்யா.

    மணிவண்ணன் மாடிக்குப் போனார். மாடியிலும் மனிதர்கள் கன்னா பின்னாவென்று படுத்திருந்தனர். இடது பக்கம் ஓரத்திலிருந்த அறைக்குள் நுழைந்தார்.

    சுகுணா, அவர் மனைவி சாமான்களை ஒழித்து வைப் பதில் ஈடுபட்டிருந்தாள். அறை யெங்கும் துணிமணிகளும், தாறுமாறாய்ப் பெட்டிகளும், வாடின பூக்களும், அட்சதையும், ஒன்றிரண்டு டைமன் கற்கண்டுகளும் இறைந்து கிடந்தன.

    எல்லாம் எப்படிப் படுத்துடுச்சு, பாருங்க! என்று அலுத்துக் கொண்டாள் சுகுணா.

    அது சரி, பொண்ணு ரகளை பண்ணிச்சா - உள்ள போவ?

    அதெல்லாம் இல்லை. கொஞ்சம் கூச்சப்பட்டார். அவ்வளவுதான். தாப்பா போட்டுக்கடின்னு கதவைச் சாத்திட்டோம். அஞ்சு நிமிஷத்துக்கப்புறம் தாப்பா போடற சத்தம் கேட்டுச்சு. இவ போட்டாளர், மாப்பிள்ளையான்னு விடிஞ்சு எழுந்து வந்த பிறகுதான் கேக்கணும்.

    மணிவண்ணனுக்குச் சிரிப்பு வந்தது.

    நம்ம மொத ராத்திரியன்னிக்கு யார் தாப்பா போட்டோம்? நீயா, நானா? என்றார்.

    ச்சி! போ கிழவா.

    யாரு நானா? கிழவனா? என்னாடி நினைச்சிக்கிட்ட?

    ச்சட். விடுங்க கையை! நல்லார்க்கு, விளையாடற நேரத்தைப் பாரு!

    சுகுணா துணிமணிகளை மடித்து ஒரு பக்கமாய் வைத்து, பெட்டிகளைச் சரி செய்து துடைப்பத்தால் குப்பையைக் கூட்டி மூலையில் சேர்த்து பேப்பரில் வாரிக் குப்பைக் கூடையில் போட்டுக் கை கழுவிக் கொண்டு வந்தாள்.

    மாத்திரை சாப்பிடீங்களா?

    இல்லை.

    சுகுணா அவர் வழக்கமாய்ப் போட்டுக் கொள்ளும் மாத்திரையைப் பெட்டியிலிருந்து எடுத்துத் தண்ணீரோடு நீட்டினாள். அவர் போட்டுக் கொண்டதும் டம்ளரை வாங்கி வைத்துவிட்டு வந்து வெறும் தரையில் ஒரு தலையணை மட்டும் வைத்துப் படுத்தாள்.

    என்னவோ இதுவரை ஒரு கசமுசா இல்லாம நல்ல படியா கல்யாணத்தை நடத்திப்புட்டோம்! என்றார் மணிவண்ணன்.

    மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும் நல்ல மாதிரியாத் தான் இருக்காங்க. ஒண்ணு ரெண்டு குறைகளைகூடப் பொருட்படுத்தல.

    அதே மாதிரி பொண்ணையும் நல்லபடியா வெச்சுக்கணும்.

    வெச்சுப்பாங்கன்னுதான் தோணுது. எங்க வீட்டுல கூட உங்களுக்கு என்னைக் கட்டிக் குடுத்தப்போ இப்படித் தான் கவலைப்பட்டாங்க. நீங்க நல்லா வெச்சுக்கலையா, என்னை! இதுவரை என்ன குறை வெச்சிங்க!

    ஆமா, நான் ஒரு குறையும் வெச்சதில்லதான். நீதான் வர வரக் குறை வெக்க ஆரம்பிச்சுட்ட. மணிவண்ணன் கண் சிமிட்டிச் சிரித்தார்.

    சுகுணா வெட்கத்தோடு திரும்பிப் படுத்துக் கொள்ள, இன்னும் பெரிதாகச் சிரித்தார்.

    நாலு மணிக்குக் கதவை யாரோ தட்டினார்கள். சுகுணா சட்டென்று கண் விழித்தாள். மணிவண்ணன் அவளுக்கு முன்னால் எழுந்து போயிருந்தார்.

    என்ன சுகுணா இந்தத் தூக்கம் தூங்கற? போய்ப் பெண்ணை எழுப்பு, மணியாவுது பார், என்று யாரோ உறவுப் பெண் ஒருத்தி சொல்ல சுகுணா அவசர அவசரமாகப் பல் தேய்த்துக் குளித்து, உடை மாற்றி வெளியே வந்தாள்.

    அதற்குள் பெண் எழுந்து வெளியே வந்திருந்தாள்.

    மஞ்சு! என்றழைத்தபடி வேகமாய் அவளருகில் சென்றாள்.

    மஞ்சு அம்மாவைக் கட்டிக் கொண்டாள்.

    மாப்பிள்ளை எப்படிம்மா ஆசையாதானே இருந்தார்?

    ம்... என்ற மஞ்சுவின் முகம் சிவந்திருந்தது.

    சமையல் கட்டிலிருந்து காப்பித் தூள் வாசனையும் பால் காயும் மணமும் கட்டுச் சாதம் தயாராகும் வாசனையும் கலந்து

    Enjoying the preview?
    Page 1 of 1