Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalyana Raagam
Kalyana Raagam
Kalyana Raagam
Ebook945 pages1 hour

Kalyana Raagam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105702924
Kalyana Raagam

Read more from Vidya Subramaniam

Related to Kalyana Raagam

Related ebooks

Reviews for Kalyana Raagam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalyana Raagam - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    கல்யாண ராகம்

    Kalyana Raagam

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    "எல்லா சர்ட்டிபிகேட்டையும் மறக்காம எடுத்து வெச்சுண்டயா?"

    ம்…

    இன்டர்வியூ கார்டை...?

    இதோட நீ நூறாவது முறையா கேக்கறம்மா, ராத்திரியே நா எல்லாத்தையும் எடுத்து வெச்சுண்டாச்சுன்னு எத்தனை தரம் சொல்றது...? காயத்ரி சலித்துக் கொண்டாள்.

    ம்... இப்ப சலிச்சுக்கற! போன தரம் போய்ட்டு வந்த இன்டர்வியூல என்ன ஆச்சு? எல்லாத்தையும் எடுத்து வெச்சுண்டாச்சுன்னு சொல்லிட்டு கடைசில பர்ஸை விட்டுட்டு போய்ட்ட. உம் பின்னாடி பர்ஸைத் தூக்கிண்டு உங்கப்பா லோ லோன்னு ஓடி வந்ததை மறந்துட்ட. யாக்கும்?

    ம்... ஞாபகமிருக்கே! காலி பர்ஸைத் தூக்கிண்டு லொங்கு லொங்குன்னு ஓடி வந்தாரே. மறக்க முடியுமா?

    அதுசரி நீ பர்ஸை மாத்தி எடுத்துண்டு போனது அவருக்கெப்படி தெரியுமாம்.

    அடடா! தொண தொணன்னு என்ன பேச்சு...? ராவு காலத்துக்கு முந்தி அவளை புறப்படச் சொல்லு... அப்பா சபேசன் சொல்ல, காயத்ரி ஒரு வழியாய் கிளம்பினாள். ஹேண்ட் பேக்கை தோளில் மாட்டிக் கொண்டு, இடது கையில் சர்ட்டிபிகேட்கள் அடங்கிய ஃபைலையும் எடுத்துக் கொண்டாள். தங்கைகள் வாழ்த்துக்கள் கூறி அனுப்பினார்கள்.

    காயத்ரிக்குப் பிறகு அம்மா பெற்ற இரட்டைக் குழந்தைகள் இருவரும் பெண்கள். அதன் பிறகு அம்மா கொள்ளி போடவென்று தவமிருந்து பெற்ற பிள்ளை சிவா இப்போது ஒன்பதாவது படித்துக் கொண்டிருக்கிறான். தங்கைகள் கல்லூரி வாசலில் காயத்ரி வேலை வேட்டையில். அப்பாவுக்கு இன்னும் பதினெட்டு மாதங்கள் தான் பணிக்காலம். அதற்குள் காயத்ரிக்கி வேலை கிடைக்க வேண்டும் என்பது அம்மாவின் கவலை.

    எம்.காம் கம்ப்யூட்டரில் டிப்ளமோ என்று பல தகுதிகள் இருந்தும் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமானதாக இல்லை. இப்போது எல்லோரும் ஏதேதோ படிக்கிறார்கள். போட்டிகள் அதிகமாகி விட்டன. கல்வி எங்கோ உச்ச நிலைக்கு சென்று விட்டது. எம்.காமும் கம்ப்யூட்டர் டிப்ளமோவும் இப்போது சாதாரண தகுதிகள்.

    வீட்டின் ஏழ்மை நிலையில் அவள் இவ்வளவு படித்ததே பெரிய விஷயம். இதுவரை பதினைந்து தேர்வுகளுக்குச் சென்ற அனுபவம் மட்டுமே கூடியிருந்தது. படிச்சா மட்டும் போதுமா? கொஞ்சம் சாமர்த்தியமும் வேணும். உனக்கு ஏது சாமர்த்தியம்? அதிருந்தா எப்பவோ வேலை கிடைச்சிருக்கணுமே என்பாள் அம்மா அடிக்கடி.

    அவள் அப்படித்தான். அவள் நாக்கில் சனீஸ்வரனும், நாகராஜனும் நிரந்தரமாய் ஜாகை போட்டு விட்டார்களோ என்று தோன்றும் சில நேரம். அப்பா அதற்கு நேர் மாறானவர். அவருக்கு இன்னொரு பெயர் பொறுமை. எப்போதாவது அவர் சிடுசிடுத்தார் என்றால் அது அம்மாவிடம் தான். அதுகூட அவளது அதிகப்படி வாயினால்.

    அவரது பொறுமையைக்கூட அம்மா பொறுமை என்று ஒப்புக் கொண்டதில்லை. கையாலாகாத்தனம் என்றுதான் இளக்காரம் பண்ணுவாள். அப்பா அதையும் பொறுமையாய் கேட்டுக் கொள்வார். அவருக்கு அது பழகி விட்டது. அவளுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே. அம்மாவின் சுபாவம் பழகி விட்டது.

    அடிக்கடி வரும் விருந்தாளியும், கோபமும் சீக்கிரமே தன் மரியாதை இழப்பர். அம்மாவின் கோபமும் தன் மரியாதையை இழந்து வெகு நாளாகிறது. அதுவே அம்மாவின் கோபத்தை அதிகப்படுத்தியது, உங்களுக்கெல்லாம் நா கிள்ளுக்கீரையாப் போய்ட்டேன் என்று புலம்பு வாள் அவ்வப்போது.

    மைகாட்! எப்டிப்பா நீ இத்தனை வருஷம் இந்த அம்மாவோட. குப்பை கொட்டின? பொறுமை திலகம்ப்பா நீ! சந்தியா ஒருமுறை அடித்த கமெண்ட் இது.

    கல்யாணமானதுலேர்ந்தே அம்மா இப்படித்தானா? காய்த்ரி அப்பாவிடம் கேட்டதும் அவர் இதழ் பிரியாமல் சிரித்தார்.

    அப்டியெல்லாம் இல்ல தாயி. ஆரம்பத்துல எங்கம்மா அவளை பாடாய்ப் படுத்தினா. எது செஞ்சாலும் குத்தம் குறை. அந்த சமயத்துல நா இவளுக்குப் பரிஞ்சு பேசியிருந்தா அம்மா வெறுத்திருப்பா. நா செய்தது சரின்னு சொல்ல வரல, நா பரிஞ்சும் பேசல. அதேநேரம் அம்மாக்கு சப்போர்ட்டும் பண்ணல. தாய்க்கும் தாரத்துக்கும் நடுல மாட்டிண்டு முழிக்கற எத்தனையோ ஆண்கள்ல நானும் ஒருத்தனா இருந்தேன். மெளனத்தை என் கேடயமா உபயோகப்படுத்திண்டேன். அதான் கோபம் உங்கம்மாக்கு அந்த கோவம் இன்னி வரை என்னை அப்பப்பொ தாக்கிண்டேயிருக்கு.

    பாட்டி பொல்லாதவளா? வேணும்னு அம்மாவைப் படுத்தினாளா?' காயத்ரி கேட்டாள்.

    அப்டின்னு சொல்ல முடியாது, வாழ வேண்டிய வயசுல வாழ்க்கையை இழந்தவ அவ. பதிமூணு வயசுல கல்யாணம் பதினஞ்சுல கர்ப்பம். பதினேழுல நார்மடிப் புடவை மொட்டைத்தலைன்னு சமூகம் அவளை கோரப்படுத்தியது அவளோட ஒரே ஒரு பற்றுக்கோடு நாந்தான். எனக்காக வாழ்ந்தா எனக்காக தேய்ஞ்சா. வீடு வீடா சமைக்கப் போனா. அன்னிக்கு முன்னால வாடி வதங்கி என்னை வளர்த்தா. மிஞ்சி மிஞ்சிப் போனா சந்தியா சுதா வயசு யோசிச்சுப் பார் எத்தனை கஷ்டம்னு. இதுங்க ரெண்டையும் குழந்தைன்றோம். ஆனா இந்த வயசுலதான் எங்கம்மா மொட்டையும் நார்மடியுமா சமைக்கப் போனா அவளைப் போய் நா எப்டி திட்ட முடியும்? மாட்டுப் பெண் கிட்ட அம்மா காட்டற கோபம் ஒரு மனோ ரீதியான பயத்தின் வெளிப்பாடு.

    தன் ஒரே ஒரு சொந்தத்தை மாட்டுப்பெண் பிரிச்சுடு வாளோங்கற பயம். பிள்ளை தன்னை உதாசீனப்படுத்திடு வாளோங்கற கலக்கம். இதைப் பத்தி உங்கம்மாகிட்ட பக்குவமா சொல்லியும் அவ புரிஞ்சுக்கல. அம்மாவோட பயத்தைப் போக்கறாப்பல நடந்துக்கோ. அவளுக்கு உன் மேல நம்பிக்கை வந்துட்டா பாசத்தைக் கொட்டுவான்னேன். ஆனா உங்கம்மா கேட்டாத்தானே? பிள்ளையை யார்க்கும் விட்டுக் கொடுக்க முடியலன்னா எதுக்கு கல்யாணம் பண்ணி வெக்கணுமாம். கடைசிவரை மடிலகட்டிண்டு அலைய வேண்டியது தானேன்னு குதர்க்கமா பேசினர்.

    புரிஞ்சுக்காதவர் கிட்ட பேசி பிரயோஜனமில்லன்னு விட்டுட்டேன். அம்மாட்டயும் இதே மாதிரிதான் குதர்க்கமா பேசுவா. பிள்ளை பொறந்தாதாண்டி உனக்கு அதோட அருமை தெரியும். கல்யாணமாகி ரெண்டு வருஷ மாறது இன்னும் வயறு தொறக்கல.

    எப்டி தொறக்கும், என்னை வயத்தெறிச்சல் கொட்டிண்டான்னு அம்மாவும் பதிலுக்கு தாக்குவா. அந்த சொல் தாங்காம உங்கம்மா அவகிட்ட ஆவேசமா ஒரு சத்தியமா பண்ணினா. 'என் உடம்புல ஒரு குறையுமில்ல, ரெண்டு தரம் நாள் தள்ளிதான் போச்சே. உங்க கண் தான் சரியில்ல. அதான் அது தங்கல. நீங்க இருக்கறவரைக்கும் "எந்தக் கருவும் என் வயத்துல தங்காதுன்னு புரிஞ்சப்புறம் பிள்ளை பெத்துக்கற ஆசையே போய்டுத்து எனக்கு. நீங்க மண்டையப் போட்டப்பறம் தான் குழந்தை பெத்துக்கற துன்னு தீர்மானமே பண்ணிட்டேன். பேரக்குழந்தைய கொஞ்சம் பாக்கியம் கிடைக்காமயே நீங்க போய்ச் சேரணும். நெய்ப்பந்தமாவது மண்ணாவது. ஒரு புண்ணாக்கும் கிடைக்கப் போறதில்ல' அப்டின்னா.

    இவளோட இந்த வார்த்தைகளால்தான் அம்மா தளர்ந்துபோய் படுத்துட்டா. சரியா அதுக்கு ரெண்டாம் வருஷம் இவ சொன்னாப்பல பிள்ளை கை கொள்ளி மட்டும் தான் கிடைச்சுது அவளுக்கு. அப்பறம் தான் நீ பிறந்த . அடுத்தது பிள்ளை பிறக்கும்னு நினைச்சா, ரெண்டும்

    Enjoying the preview?
    Page 1 of 1