Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aaya Kolaigal 64
Aaya Kolaigal 64
Aaya Kolaigal 64
Ebook88 pages49 minutes

Aaya Kolaigal 64

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352851430
Aaya Kolaigal 64

Read more from Devibala

Related to Aaya Kolaigal 64

Related ebooks

Reviews for Aaya Kolaigal 64

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aaya Kolaigal 64 - Devibala

    http://www.pustaka.co.in

    ஆயகொலைகள் 64

    Aayakolaigal 64

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    அதிர்ந்தான் இன்ஸ்பெக்டர் ராம்!

    பயங்கரமான ஒரு வரியோடு அந்தக் கடிதம் தொடங்கியிருந்தது.

    'அன்பில்லாத கணவருக்கு,

    நான் உங்களை விட்டு விலகத் தீர்மானித்து விட்டேன். ஒரு மனைவிக்குரிய குறைந்த பட்ச ஆசைகள் கூட எனக்கு நிறைவேறுவதில்லை. ஊரில் பல குற்றங்களைக் கண்டுபிடிக்கும் நீங்கள் உங்கள் குற்றத்தை உணரவில்லை. நாட்டுக்கு மட்டும் நீங்கள் காவலல்ல, ஒரு இளம் மனைவிக்கும்தான். கடிதம் கண்டவுடன் இங்கு வரவில்லையானால் விவாகரத்து நோட்டீஸ் வீடு தேடி வரும்…

    -அபாக்கியவதி மனைவி ரேவதி.'

    என்ன இன்ஸ்பெக்டர் ஷாக் ஆயிட்டீங்க? ஏதாவது மிரட்டல் கடிதமா?

    பிரசன்னாவைப் பார்த்து மெல்ல சரித்த ராம், ஒரு வகையில் இதுவும் மிரட்டல கடிதம் தான்… படிச்சுப் பாருங்களேன்.

    வாங்கிப் பிரித்த பிரசன்னா, முதல் வரியைப் பார்த்து, ஜ'ம் ஸாரி, உங்க பர்ஸனல். என்று சடக்கென மூட-

    பரவாயில்லை, படிங்க…

    கொஞ்சம் சங்கடத்தோடு நெளிந்து கொண்டே படித்து முடித்தான் பிரசன்னா.

    பாவம் சயர்! ஒரு வகையில அவங்க ஆதங்கத்துல நியாயம் இருக்கு.

    இருக்கு தான் பிரசன்னா… போன மாசம் அவளுக்கு அபார்ஷன் ஆச்சு. அதனாலதான் அவங்கம்மா வீட்டுக்கு அனுப்பி வெச்சேன்.இங்க இருந்தா என்னால சரியா கவனிக்க முடியாது. பையன் வேற வாலு… ரெண்டு வயசு தானே ஆச்சு, அரிச்சு எடுத்துருவான். அதான் 'கொஞ்ச நாள் ரெஸ்ட்ல இருந்துட்டு வா, நான் வந்து பாத்துக்கறேன்'னு சொல்லி அனுப்பி வெச்சேன்.போகவே முடியலை. இது ஏழாவது லெட்டர், அதான் இந்தக் கோபம்!

    இந்த பொஸஸிவ்நெஸ் அவசியம்தான் இன்ஸ்பெக்டர்!

    இல்லைனு நான் சொல்லலை பிரசன்னா… ஆனாலும் போலீஸ்காரனுக்குக் கழுத்தைத் தந்த பின்னால, சில விஷயங்களைத் தியாகம் பண்ண கத்துக்கத்தான வேணும். மத்த பெண்களைப் போல எதிர்பார்ப்புகளை வளர்த்துக்க முடியாது. இன்னும் ஒரு படி மேல போனா, இந்த போலீஸ்காரங்க மனைவிகளுக்கெல்லாம் வாழ்க்கையே ஒரு ஊசலாட்டம்தான்.

    எந்த வேளையில் சொன்னரோ தெரியவில்லை. அந்த வார்த்தைகளுக்குச் சரியான பலன், அடுத்த இருபத்தநாலு மணி நேரங்களில் கிடைக்கும் என்பது அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

    போய்ப் பார்த்துவிட்டு வந்துருங்களேன்! அவங்களுக்கும் திருப்தியா இருக்கும்! ஒரு பத்து நாளைக்கு வேலையை அடியோடு மறந்துட்டு, ஊரைப் பார்க்கப் போய்ச் சேருங்க. சந்தோஷமா இருந்துட்டு வாங்க

    போகத்தான் வேணும்… இப்பவே புறப்பட்டு வரதா டெலிகிராம் குடுத்துடணும் ரேவதிக்கு.

    எதுக்கு இன்ஸ்பெக்டர்? உங்களை அவங்க எதிர் பார்த்தே இருக்காத தருணத்துல சடக்குனு முன்னால போய் நில்லுங்க… சர்ப்ரைஸா இருக்கும்!

    அதுவும் சரிதான்!

    *****

    மறுநாள் காலை…

    அவசர வேலை என்று பத்து நாள் லீவுக்கு அப்ளை செய்து, உடனே பேப்பரோடு தானே போய் அனுமதியும் பெற்று, செய்ய வேண்டிய அவசர வேலைகளை முடித்து, முக்கிய சார்ஜூகளை மற்றவர்களிடம் ஒப்படைத்து, பிரசன்னாவுக்கு போன் செய்து விடைபெற்று…

    திருவள்ளுவர் எக்ஸ்பிரஸ் பஸ் ஸ்டாண்டுக்கு ராம் வரும்போது இரவு எட்டரை மணி.

    மதுரை பஸ் பக்கத்தில் பெட்டியைக் கீழே இறக்கி வைத்துவிட்டு. நிமிர்ந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைக்கையில், பஸ்ஸ_க்குப் பின்னாலிருந்து வெளிப்பட்டு ராமின் பின் வந்து நின்றார்கள் அந்த இருவரும்…

    அவர்களைப் பற்றி…

    அவசியமில்லை. இந்த அத்தியாயத்துக்குப் பிறகு வரவே மாட்டார்கள்.

    சாம்பல் கலர்ல ஸஃபாரி போட்டுட்டு போறானே, அவன்தான் இன்ஸ்பெக்டர் ராம்… நம்ம கேஸ்ல தண்ணிகாட்டின ஆளு!

    உம்!

    இதோ, இந்த பஸ்லதான் ஏறப் போறான். அதுக்குள்ள நைஸா பேச்சுக் கொடுத்துத் தள்ளிட்டு வந்துரு…

    வந்து…?

    ஒரே அமுக்கா அமுக்கு இந்த ஊரைவிட்டே கொண்டு போயிரணும். அப்புறமா இவன் மூஞ்சியைக்கூட தெரியாத இடத்துல வெச்சு தீர்த்துர வேணடியதுதான்… அவன் பெட்டியக்கூட வெளியே காட்டக்கூடாது, எரிச்சுரணும் சீக்கிரமாப் போ…

    இருவரில் ஒருவன்

    Enjoying the preview?
    Page 1 of 1