Veliyae Therium Vergal
By Devibala
()
About this ebook
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Read more from Devibala
Thurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Theeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Naan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsKoottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Irumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsAmma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Kodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsKaanikkai Rating: 5 out of 5 stars5/5Panam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Inikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Unakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsIruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsMounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsManithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Veliyae Therium Vergal
Related ebooks
Manase Manase Kuzhappam Enna? Rating: 0 out of 5 stars0 ratingsKathi, Thupakki, Kanneer Rating: 5 out of 5 stars5/5Nandhavana Thendral Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Udai Devathai! Rating: 0 out of 5 stars0 ratingsDharmayutham Rating: 5 out of 5 stars5/5Oru Kaandhamum Oru Irumbu Thundum Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Kalaikindrana Rating: 0 out of 5 stars0 ratingsKarpu... Karpariya Aaval! Rating: 5 out of 5 stars5/5Rendu Idly, Oru Vadai Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Neruppu! Rating: 3 out of 5 stars3/5Thedathey Tholayathey! Rating: 5 out of 5 stars5/5Karunaagapura Giraamam Rating: 0 out of 5 stars0 ratingsகருநாகபுர கிராமம் Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Yutham Rating: 0 out of 5 stars0 ratingsMudindhuvitta Aasai Rating: 0 out of 5 stars0 ratingsBombay Panthayam Rating: 0 out of 5 stars0 ratingsAppavin Radio Rating: 0 out of 5 stars0 ratingsAvargal Artham Purinthavargal Rating: 0 out of 5 stars0 ratingsVazhigal Moodapattullana Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Pooparikkum Devathaiyum Neethan Rating: 0 out of 5 stars0 ratingsI Am Tired! Rating: 0 out of 5 stars0 ratingsAayudham Unakkulle!... Rating: 0 out of 5 stars0 ratingsPulligalum Kodum Rating: 0 out of 5 stars0 ratingsIravil Arugil Nizhalil... Rating: 5 out of 5 stars5/5Iraval Karu Rating: 0 out of 5 stars0 ratingsVilayada Vanthaval Rating: 0 out of 5 stars0 ratingsThodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsMaalaiyil Solkiren Vaa Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsYenni Ettavathu Naal! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Veliyae Therium Vergal
0 ratings0 reviews
Book preview
Veliyae Therium Vergal - Devibala
http://www.pustaka.co.in
வெளியே தெரியும் வேர்கள்
Veliye Theriyum Vergal
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
என்னுரை
பொதுவாகக் கதை எழுதிவிட்டு அதற்குப் பொருத்தமான தலைப்பு வைப்பதுதான் வழக்கம்.
இந்தக் கதையில் மட்டும் நான் சற்று முரண்பட்டு நிற்கிறேன்.
‘வெளியே தெரியும் வேர்கள்’ என்ற அந்தத் தலைப்பு என்னிடம் உதயமானது ஒரு அதிகாலை வேளையில்.
அந்தத் தலைப்பு கொஞ்சம் முரண்பாடாக, வித்யாசமாக, கவிதை கலந்து இருந்தது.
ஏதோவொரு கதையை எழுதிவிட்டு இந்தத் தலைப்பை நிச்சயமாக அதில் பொருத்த முடியாது என்று தோன்றியது.
இந்தத் தலைப்புக்காகவே ஒரு நல்ல கதையை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை வந்தது. யோசிக்கத் தொடங்கினேன்.
கல்வி என்பது கட்டாயமாக நம் ஒவ்வொருவருக்கும் அவசியம். அது நம் சுவாசம். நாளை நம் விலாசங்களை அறிவிக்கப் போகும் சாதனம் கல்விதான்.
அந்தக் கல்வியை நமக்கு போதிக்கும் ஆசான்களை, ஆசிரியர்களை விட ஒரு புனிதமான தொடர்பு வேறு யாருமே இருக்க முடியாது. பொதுவாக இவர்களை ஏணி என்பார்கள்.
பல பேரை ஏற்றிவிட்ட ஏணி, தான் அங்கேயே நிற்கிறது என்று கவித்துவமாகச் சொல்வார்கள்.
எனக்கு இதுவே வேறு மாதிரியாகத் தோன்றியது.
இவர்கள் வேர்கள்.
பல செடிகளை, மலர்களை, காய்களை கனிகளை படைக்கும் வேர்கள் இவர்கள். மலரும், கனியும் செழித்து வெளியே குலுங்க, வேர்கள் மட்டும் பூமிக்கு அடியில்.
அவைகள் வெளியே தெரிவதில்லை.
அப்படிப்பட்ட வேர்கள் வெளியே தெரியத் தொடங்கினால் எப்படி இருக்கும்?
வேர்கள் சாதாரணமாக வெளியே வருவதில்லை.
நில நடுக்கம் ஏற்பட்டு பூமி பிளந்தால், இந்த வேர்களும் வெளியே வந்துதான் ஆக வேண்டும்.
அநிநாயம் கண்ணுக்கு முன்னால் நிகழும்போது ஆண்டவன் கூட மாநிட ரூபத்தில் வருவதுண்டு என்பதற்கு நம் புராணங்களும், இதிகாசங்களும் சான்று.
அப்படி வெளிப்பட்ட ஒரு வேரின் கதைதான் இது.
அடுத்தபடியாக,
இரண்டு செய்திகளை மையமாக வைத்து கதை சொல்ல வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆசை.
ஒன்று தேச பக்தி.
இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொரு படைப்பாளியும் எழுதியே தீர வேண்டியது.
அடுத்தபடியாக,
மாணவர்கள் அரசியலில் ஈடுபடும் கொடுமை.
அவர்கள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்படும் அபாயம். மேற்படி சிந்தனைகளை வேருடன் போட்டு நான் குலுக்கியபோது ஜனித்தார் குமரேசன் வாத்தியார்.
தேசபக்தி மிகுந்த அந்த ஆணிவேர் எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்டது என்பதை நான் கொஞ்சமாகத்தான் சிந்தித்தேன்.
நான் மிகுந்த லயிப்புடன் உருவாக்கிய கதைகளில் இதுவும் ஒன்று.
ஒவ்வொரு அத்தியாயத்தையும் ரசித்து ரசித்து எழுதினேன். வாரப் பத்திரிகை ஒன்றில் இதற்காக நான் பரிசு பெற்றேன். இது இன்னும் பல பரிசுகளைப் பெற்றுத்தரும் என்று நான் நம்புகிறேன்.
இது ‘வானதி’யில் வெளியாகும் எனது முதல் படைப்பு.
இதை ‘அய்யா’ அவர்களிடம் நான் கொடுத்த போது தலைப்பைப் பார்த்து விட்டுச் சொன்னார்.
‘வேர்கள்’ என்ற தலைப்பு பரிசுக்கு ராசியானது என்று.
அந்தச் சொல்லில் கொஞ்சம் தெய்வ வாக்கு தெரிந்தது. மெலிதான சிலிர்ப்பைப் பெற்றேன்.
பதிப்பகங்களின் சிகரம் வானதி.
நான் இளையவன். அரும்பிக் கொண்டிருக்கும் படைப்பாளி.
இந்த நிலையில் இது போன்ற ஒரு நல்ல படைப்பு ‘வானதியில்’ வெளியானது நான் பெற்ற பேறு.
இந்த ஆதரவு தொடரட்டும்.
என் ஆழ்ந்த நன்றிகள் பல!
சென்னை-54
27-9-’94.
நேசமுடன்
தேவிபாலா
1
அந்தக் காலை நேரம். நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பாக ஆரம்பிமாகியிருந்தது.
கறுப்பு அங்கிகளும், காக்கிச் சட்டைகளும் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்க, விடுமுறை முடிந்து, நீதிமன்றம் இயங்கத் தொடங்கும் நாள்.
விஷயம் தெரியுமா? தியாகி குமரேசனை இன்னிக்குத் தான் கோர்ட்ல ப்ரொட்யூஸ் பண்ணப் போறாங்க!
ஏன்?
அரெஸ்ட் பண்ணிப் பத்து நாளாச்சு. இன்னிக்குத் தான் ஜீடீஷியல் கஸ்டடி வாங்கப் போறாங்களாம்!
அப்படீன்னா, ஜாமீன்?
அதெல்லாம் தரமாட்டாங்க தலைவரே! அத்தனை சீக்கிரம் ‘பெயில்’ தந்துரவாங்களா? அமைச்சரைக் கொல்லப் பார்த்திருக்கான் அந்த ஆளு?
தியாகின்னு சொல்றீங்க?
தற்சமயம் தியாகி இல்லை… துரோகி…!
வாசலில் ஜீப் வந்து நின்றது. முன்னால் இரண்டு போலீஸ்காரர்கள் இறங்க, சகிதம் அந்த மனிதர் இறங்கினார்.
தியாகி குமரேசன்!...
முகத்தில் பத்து நாள் ரோமம் வெள்ளையும், கறுப்புமாய் வியாபித்திருக்க, நிஜமான ஐம்பது வயதில் இன்னும் நாலைந்து வருடங்கள் வந்து ஒட்டிக் கொண்டிருந்தன.
பத்தாவது கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் குமரேசன்.
நீதிபதி… டவாலியின் முன் அறிவிப்புடன் உள்ளே நுழைய, சகலரும் எழுந்து நின்றார்கள். ஒரு சில நொடிகளுக்குப்பின், அவர் அமர்ந்தார். முதலில் சில வழக்குகள் படிக்கப்பட்டு, வாய்தாக்கள் வழங்கப்பட்டன.
முப்பது நிமிடங்கள் கழித்து, குமரேசனின் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குமரேசனைக் கைது செய்து பத்து நாள்களாக ரிமாண்டில் வைத்திருந்தார்கள். இன்று தான் ஜீடீஷியல் கஸ்டடி வழங்கும் நாள்.
குமரேசனின் ஆட்கள் யாரும் வந்திருக்கவில்லை.
உங்களுக்கு பெயில் கேட்க வக்கீல் யாரும் இல்லையா?
குமரேசன் பேசவில்லை.
சட்டத்தில் உங்களுக்கு வக்கீல் வழங்க கோர்ட்டுக்கே கடமை உண்டு உபயோகப்படுத்திக்கலாம்!
இப்போதும் பதில் இல்லை.
சற்று நேரத்தில் சட்டரீதியான நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு, குமரேசன் திரும்பவும் அழைத்துச் செல்லப்பட்டார்.
குமரேசன் ஜீப்பில் ஏற்றப்பட்டு, ஜி-2 காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கே சில நடைமுறைகளை முடித்துக் கொண்டு சிறைக்கு அழைத்து வரப்பட்டார். கதவு திறக்கப்பட்டது. அது ஒரு பெரிய கூட்டம். ஏராளமான கைதிகள் இருக்கும் சிறைக்கூடம்.
ம்! போய்யா!
குமரேசனை உள்ளே அனுப்பிவிட்டு, கதவைச் சாத்திக் கொண்டான் கான்ஸ்டபிள். குமரேசன் ஒன்றும் பேசாமல் ஜன்னல் ஓரமாகப் போய் உட்கார்ந்து கொண்டார்.
ஒரு பாய், தலைகாணி, அலுமினியத் தட்டு, கண்ணாடி டம்ளர் சகலமும் வழங்கப்பட்டன. பெரிய மீசைக்காரன் அருகில் வந்தான்.
ட்ரையல் நடத்திக் குற்றம் நிரூபிக்கப்பட்டாத்தானே தண்டனை? தண்டனை வழங்கப்பட்ட கைதிகளுக்குத்தான் உடைகளும் வேலையும்! நமக்கெல்லாம் ஜாலி!
நிமிர்ந்து பார்த்தார் குமரேசன்…
நேரா நேரத்துக்கு சாப்பாடு வரும். படிக்க புத்தகங்கள் கிடைக்கும். பரஸ்பரம் நமக்குள் நட்பா இருந்தா, நாள் போறதே தெரியாது. நான் உள்ளே வந்து ஆறு மாசமாச்சு. இன்னமும் பெய்ல் தரலை எனக்கு. முதல்ல ரொம்பக் கவலைப்பட்டேன். இப்ப அதுவே பழகிப்போச்சு!...
தன் அனுபவத்தை ஒருவன் சொல்ல, குமரேசன் எதிலும் ஒட்டாமல் உட்கார்ந்திருந்தார். மணியடித்தது.
வா பெரிசு! சாப்பாட்டு நேரம்!
தட்டுகளை எடுத்துக்கொண்டு எல்லாரும் நடந்து போக, குமரேசன் மட்டும் இருந்த இடத்தைவிட்டு நகரவில்லை. இந்தப் பத்து நாட்களாகவே அவர் சாப்பிடவில்லை. வெறும் தண்ணீரும், காற்றும்தான் உணவு. அவரைத் தவிர, அத்தனை பேரும் எழுந்து போக, அந்த இளைஞன் அருகில் வந்தான்.
சாப்பிட வரலையா?
குமரேசன் ஏனோ அவனுடன் அலுமினியத் தட்டுடன் நடந்தார். களி போட்டுக் கொண்டிருந்தார்கள். தட்டை நீட்டினார்.
சட்டென அவர் கண்முன்னால், அந்தக் காட்சி வந்தது. தட்டு ஏந்தி நிற்கும் சகாதேவன்… சட்டையில் பொத்தான் பிய்ந்து, சரியாக வாரப்படாத தலையுடன், முகத்தில் சோகமும் பட்டினி ரேகைகளும் சுமந்து, இலவச மதிய உணவுக்காகத் தட்டு ஏந்தி நிற்கும் சகாதேவன்…
அதே சகாதேவன் இன்று, என்னைத் தட்டு ஏந்தி நிற்க வைத்துவிட்டான்! ஒரு நொடி சகலமும் வெறுத்துப் போயின. களியோடு வராந்தாவுக்கு வந்தார் குமரேசன். சாப்பிடப் பிடிக்கவில்லை.
"என்ன, பிடிக்கலையா? முதல்ல அப்படித்தான் இருக்கும். ருசியா சாப்பிட்ட நாக்கு இதை