19 Vayathu Sorgam
By Rajesh Kumar
()
About this ebook
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Read more from Rajesh Kumar
Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsVivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsUyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Good Night Krotham! Rating: 5 out of 5 stars5/5Uravugal Pirivathillai Rating: 5 out of 5 stars5/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5
Related to 19 Vayathu Sorgam
Related ebooks
Sivappu Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsThapu Thappai Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsDecember Pournami Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thedum Sooriyagandhigal Rating: 5 out of 5 stars5/5Hongkong Vizhigal Rating: 0 out of 5 stars0 ratings19 vayathu Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsMoochil Vaazhum Pullanguzhalgal! Rating: 0 out of 5 stars0 ratingsRaththa Gnayiru Rating: 5 out of 5 stars5/5Oru Thappu Thaalam Oru Sariyaana Raagam Rating: 5 out of 5 stars5/5India Naadu En Veedu Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsVanakkathukkuriya Kutram Rating: 5 out of 5 stars5/5Athikalai Nila Rating: 0 out of 5 stars0 ratingsUdhaa Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsEn Nizhalukkum Urakkamillai Rating: 0 out of 5 stars0 ratingsMoochil Vazhum Pullankuzhalkal Rating: 0 out of 5 stars0 ratingsMaandavan Kattalai Rating: 0 out of 5 stars0 ratingsThavanai Muraiyil Maranam! Rating: 5 out of 5 stars5/5Pistal Mutham Rating: 5 out of 5 stars5/5Oru Sanikizhamai Iravu Rating: 0 out of 5 stars0 ratingsKanamal Pona Aakayam Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsNirangal Rating: 3 out of 5 stars3/5Aadatha Oonjalgal Rating: 0 out of 5 stars0 ratingsKarupu Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsMugamatra Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsThoonkaatha Thottakkal and Gopuram Maark Kolaikal Rating: 0 out of 5 stars0 ratingsSorkkam En Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsSathamillamal Oru Satham Rating: 5 out of 5 stars5/5Panneer Poopanthal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for 19 Vayathu Sorgam
0 ratings0 reviews
Book preview
19 Vayathu Sorgam - Rajesh Kumar
http://www.pustaka.co.in
19 வயது சொர்க்கம்
19 Vayadhu Sorgam
Author :
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
1
ஜெயந்த் நீலமும் வெள்ளையும் வரியிட்ட கழுத்துடையை இறுக்கியபடியே டிரஸ்ஸிங் டேபிளுக்கு முன்னால் வந்து நின்றான். ஆளுயர பெல்ஜியம் மிரர் இன்னொரு ஜெயந்த்தை அட்சர சுத்தமாய் ஜெராக்ஸ் எடுத்துக் காண்பித்தது.சந்தன நிற முழு ஸ்லாக்கிலும், அதே நிற பேண்ட்டிலும் அமர்க்களம் பண்ணிணஜெயந்துக்கு அவனுடைய எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்தின் முதல் பக்க விவரப்படி இருபத்தாறு வயது மாநிறத்துக்கும் சற்றுக் கூடுதலான நிறம்.ஏதாவது ஒரு ஹேர் ஆயில் விளம்பரத்திற்கு உபயோகப்படக் கூடிய அளவுக்கு புஷ்டியான சுருண்ட-கிராப். கபில்தேவ் மீசைக்குக் கீழே - அவன் சிரிக்கும் போது உறுத்தாத பல் வரிசை. டெக்னோ எலக்ட்ரானிக் கம்பெனியில் கடந்த ஒரு வருஷ காலமாய் ஏ.ஈ. டெஸிக்னேஷனில் இரண்டாயிரத்து சொச்சம் ரூபாயை சம்பளமாக வாங்கிக் கொண்டு தன்னுடைய அதி அழகான மனைவி சூர்யநிலாவோடு-கோகுலம் காலனியின் கடைசி செக்டார்- கடைசி பிளாட்டில் தாம்பத்யம் நடத்திக் கொண்டிருப்பவன்.
இந்த நிமிஷத்தோடு பத்து நிமிஷமாச்சு…
பின்புறம் குரல் கேட்டுத் திரும்பினான் ஜெயந்த்.சூர்யநிலா நுரை ததும்பும் காப்பி டம்ளரோடும், உதட்டில் நிறுத்தியிருந்த புன்னகையோடும் தெரிந்தாள்.
பத்து நிமிஷமாச்சுன்னு எதுக்காகச் சொன்னே?
ஜெயந்த் கேட்டான்.சூர்யநிலா நிமிஷமாச்சுன்னு சொன்னே.ஒரு பொம்பளை மாதிரி அப்படியென்ன அலங்காரம் வேண்டியிருக்கு…?"
சொன்னா கோவிச்சுக்க மாட்டியே சூர்யா?
சொல்லுங்க…?
இன்னிக்கு ஒரு புது ஸ்டெனோ ஆபீஸ_க்கு வரப்போறா… மிஸ் பாமினி ஃப்ரம் புனே…
கல்யாணம் ஆனவளா…? ஆகாதவளா?
நான்தான் மிஸ்ஸ_ன்னு சொல்லிட்டேனே…
வயசு…?
ஆபிஸ் அட்டெண்டர் வீராச்சாமி ரிப்போர்ட்படி வரப்போற பாமினிக்கு இருபத்தோரு வயசு.. புனே ப்ராஞ்ச்ல வேலை பார்க்கிற பாதிப் பேரைப் பைத்தியமாகப் பண்ணிட்டு இங்கே வர்றாளாம்… ஆபீஸ் பூராவும் ஒரே டென்ஷனா இருக்கு…
அடடா!
சூரியநிலா போலியாய்க் கவலைப்பட்டாள்.
என்ன சூர்யா?
அந்த பாமினி வரப்போற விஷயத்தை நீங்க மொதலிலேயே சொல்லியிருக்கக் கூடாதா?
ஏன்?
அந்த க்ரீம் நிற சபாரி ட்ரஸ்ஸை ப்ரஸ் பண்ணி வெச்சிருப்பேனே… அந்த சபாரி ட்ரஸ்ஸிலதான் நீங்க அட்டகாசமா இருப்பீங்க… இந்த சந்தன நிற ஸ்லாக்கும், பேண்ட்டும் கட்டியிருக்கிற டையும் ஒரு மாத்து கம்மிதான்
அப்படியா? நான் வேணுமின்னா ஒரு பதினஞ்சு நிமிஷம் வெயிட் பண்றேன் சூர்யா. அந்த சபாரி ட்ரஸ்ஸை ப்ரஸ் பண்ணிக் கொடேன்…
கையில என்ன இருக்குன்னு பார்த்தீங்களா?
பார்த்தேன்.
நீளமான கொண்டை ஊசி.
"ஏய் சூர்யா என்ன இது?’
இன்னொரு வாட்டி அந்த பாமினியைப் பத்திப் பேசினா என்னோட கையில இருக்கிற இந்தக் கொண்டை ஊசிதான் பேசும். என் கழுத்துல தாலி கட்டி முழுசா ஒரு வருஷம் முடியலை. அதுக்குள்ளே பாமினி பக்கமும் ஞாபகம் தாவுதோ…?
சும்மா தாஷ{க்காகச் சொன்னேன். வரப்போற பாமினிக்கு நாற்பத்தோரு வயசு. அவ பொண்ணொருத்தி பி.எஸ்.ஸி பைனல் இயர் பண்ணிட்டிருக்காளாம்…
சூர்யநிலா சிரித்துக் கொண்டே காப்பி டம்ளரை நீட்டினாள். மணி ஒன்பதரையாகப் போகுது. சீக்கிரம் காப்பியை உறிஞ்சுட்டுப் புறப்படுங்க.
ஷர்ட்டின் மேல் காப்பி தெறித்து விடாமல் ஜாக்ரதையாய் உறிஞ்சிவிட்டுக் காலியான காப்பி டம்ளரை சூர்யநிலாவிடம் நீட்டிக்கொண்டே அவளை நெருங்கினான்.
அவள் சொன்னாள். உதடு பூராவும் காப்பி. கர்ச்சீப்பை எடுத்துக் துடையுங்க
என்று சொல்லிக் கொண்டே போனவளைக் கப்பென்று பிடித்தான்.
அய்யாவுக்கு என்னவாம்?
நீயே சுத்தம் பண்ணிவிடு.
சரி, கர்ச்சீப்பைக் குடுங்க…
நோ, கர்ச்சீப்பையோ, உன்னொட கையையோ உபயோகம் பண்ணாமே என்னோட உதட்டைச் சுத்தப்படுத்தணும்.
அதெப்படி முடியும்?
இப்படி…
சூர்யநிலாவின் உதட்டின் மேல் தன் விரலை வைத்து தடவினான் ஜெயந்த்.
ச்சீ
என்றான் சூர்யநிலா.
ஜெயந்த் போலியாய்ப் பயப்பட்டு தோள்களைக் குலுக்கி, தன் பாண்ட் பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பை எடுத்து வாயை ஒற்றிக் கொண்டே - வாசலில் காத்திருந்த ஸ்கூட்டரை நோக்கிப் போனான்.
டெக்னோ எலக்ட்ரானிக் கம்பெனி ராஜேந்திர பிரசாத் ரோடின் மையத்தில் இருந்தது. 1936-ல் ஸ்தாபிக்கப்பட்ட கம்பெனி. மின்சாரம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் மெஷின்தனமாய் உற்பத்தி செய்து தேதித்திலிருந்த எல்லா பின்கோடுகளுக்கும் அனுப்பினார்கள். நல்ல சம்பளத்தையும் போனசையும் கொடுத்து வேலை பார்க்கிற ஐந்நூற்று சொச்ச பேரையும் வளப்பமாய் வைத்திருந்தார்கள். ‘ஸ்ட்ரைக்’ என்கிற வார்த்தையை அங்கே வேலை பார்க்கிற எந்த ஊழியரிடம் சொன்னாலும்,சரி, அதுக்கு என்ன ஸ்பெல்லிங்?
என்று கேட்பார்கள். வாசலில் எந்த நிறத்திலும் எந்த நிமிஷத்திலும் கட்சிக் கொடி பறக்காத கம்பெனி அது.
அன்றைக்கு காலை ஒன்பதரை மணிக்கு ஆபீஸ் வந்த ஜெயந்த் கண்ணாடி கேபினுக்குள் இருந்த ரிசப்ஷனிஸ்ட் கேர்ள் காவ்யாவின் குட்மார்னிங்கை வாங்கிக் கொண்டு உள்ளே போனான். தன்னுடைய அறைக்குள் நுழைந்து சுழல் நாற்காலியில் சாய்ந்து, குட்மார்னிங் சொல்லிக் கொண்டு உள்ளே வந்த ஜே.ஈ. விஷ்ணுகுமாரைப் புன்னகையோடு உட்கார வைத்து ஆபீஸ் நாளை ஆரம்பித்தான்.
அந்த ஜெனரேட்டர் கப்லிங்க் சரியா வந்ததா விஷ்னு?
ஸாரி ஸார். வீ ட்ரைட், பட்…
முடியலை?
ஆமா ஸார்.
இந்த முடியலைங்கிற வார்த்தை நம்ம எம்.டிக்குப் பிடிக்காது.உங்களுக்குத் தெரியுமா விஷ்ணு? அந்த கப்லிங்க்கோட டயாக்ராமைக் கொண்டாங்க. ஆங்கிள்ஸை மாத்திப் பார்ப்போம். சி.ஈ. யைப் பார்த்து கன்சல்ட் பண்ணீங்களா?
பண்ணினேன் ஸார். அவர் உங்களைப் பார்க்கச் சொன்னார்.
ஈஸிட்? இப்போ ஸ்பெசிமன் எங்கே இருக்கு?
பாக்டரி ஸ்டோர்ஸ் செக்ஷன்ல இருக்கு ஸார்.
வாங்க போய்ப் பார்த்துடலாம்.
ஜெயந்த் நாற்காலியினின்றும் எழுந்தான். அதே வினாடி-
மேஜை மேலிருந்த இண்டர்காம் ‘ஙீ ஙீ ஙீ என்றது. வயலெட் வண்ண ரிசீவரை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான் ஜெயந்த்.
ஹலோ,
ஸார், நான் ரிசப்ஷனிஸ்ட் காவ்யா.
சொல்லுங்க மிஸ் காவ்யா. என்ன விஷயம்?
உங்களைப் பார்க்கிறதுக்காக ஒருத்தர் வந்து ரிசப்ஷன்ல வெயிட் பண்றார்.
நேம்?
ராஜகணேஷ்.
ஜெயந்த் ஆச்சர்யமானான். ‘இவன் திடீரென்று துபாயிலிருந்து எப்போது வந்தான்?"
ரிசப்ஷனிஸ்ட் காவ்யா கேட்டாள்.
வர்றீங்களா ஸார்?
இப்ப வர்றேன்.
ரிசீவரை சாத்திவிட்டு- எதிரே நின்றிருந்த விஷ்ணுகுமாரைப் பார்த்தான்.விஷ்ணுகுமார், நீங்க ஸ்டோர்ஸ_க்குப் போய் ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நான் இப்போ வந்துடறேன். அன்எக்ஸ் பெக்டட்டா ஃப்ரெண்ட் ஒருத்தர் வந்துட்டார். ஒரு அஞ்சு நிமிஷம் அவரைப் பேசி அனுப்பிச்சுட்டு வந்துடறேன்.
சரி ஸார்.
அந்த விஷ்ணுகுமார் நகர, ஜெயந்த் தன் கழுத்துடையை இறுக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
ரிசப்ஷன் ஹாலை நோக்கி வேக வேகமாய்ப் போனான்.
சிவப்பு நிற வெல்வெட் சோபாவில் உட்கார்ந்து பதட்டமாய் விரல் நகத்தைக் கடித்துக் துப்பிக் கொண்டிருந்த ராஜகணேஷ் ஜெயந்தைப் பார்த்ததும். விருட்டென்று எழுந்து நின்றான். ஜெயந்த் சிரிப்போடு அவனை நெருங்கினான்.
ராஜகணேஷ் கிட்டத்தட்ட ஆறடி உயரம் இருந்தான். துபாய் பணத்தின் நிறம் உடம்பில் ஏறியிருந்தது. மெலிதான கிராப்பை முன்புற வழுக்கை தெரியாமல் சீவியிருந்தான். எப்போதும் அவன் உதட்டில் தொற்றியிருக்கும் புன்னகை அந்த நிமிஷம் காணாமல் போயிருந்தது. தலைக்குமேல் சீலிங் ஃபேன் முழு வேகத்தில் சுழன்றாலும் வியர்த்திருந்தான்.
வா… துபாய்காரா. எப்போ வந்தே?
ஜெயந்த் சிரித்தான்.
இப்பத்தான் வர்றேன்.
எப்பவுமே ஒரு லெட்டர் ட்ராப் பண்ணுவே. இந்தத் தடவை ஒரு லெட்டரையும் காணோம். ஆள் வந்து பிரசன்னமாயிட்டே? என்ன விஷயம்? வாசமதியைப் பார்க்காமே இருக்க முடியலையா?
டேய் ஜெயந்த்.
உதடுகள் துடிக்கக் கூப்பிட்டான் ராஜகணேஷ்.
ஜெயந்த், ஒரு முக்கியமான விஷயமா உன் கூடப் பேசணும். ஆபீஸை விட்டு வெளியே வர முடியமா?
பர்மிஷன் போட்டுட்டு வரட்டுமா? இல்லே லீவே போட்டுட்டு வரட்டுமா?
ஜெயந்த் மெல்லிய குரலில் அவனிடம் கேட்டான்.
லீவே போட்டுடு.
சரி…ஒரு அஞ்சு நிமிஷம் இப்படி உட்கார். நான் ஜி.எம்.மைப் பார்த்து லீவு சொல்லிட்டு வர்றேன்.
சீக்கிரம் வா…
ஜெயந்த் உள்ளே போனான்.
சரியாய் ஐந்து நிமஷம் கழித்து-
ஜெயந்த் வெளியே வந்தான்.
வாடா போலாம்….
உதைத்த ஸ்கூட்டரின் பில்லியனில் ஏறி உட்கார்ந்தான் ராஜகணேஷ் ஸ்கூட்டர் பீறிட்டுக் கிளம்பி ஓடியது. திருச்சி ரோடை கட் செய்தபடியே கேட்டான் ஜெயந்த்.
ஏதாச்சும் ஒரு ஹோட்டலுக்குப் போயிடலாமா?
ம்…
ஸ்டேன்ஸ் ரோடில்-சில்வர் ஓக் மரங்கள் சுற்றிய நிழலில் விஸ்தாரமாய்ப் பரவியிருந்த ஃபார் டைம்பீயிங் ஹோட்டலுக்கு முன்னால் ஸ்கூட்டரை நிறுத்தினான். ஜெயந்த்.
கனமான நிசப்தத்தோடும் ஏராளமான காலி மேஜைகளோடும் தெரிந்த ஹாலின் ஓர் ஓரமாய்-எதிரும் புதிருமாய் உட்கார்ந்து கொண்டார்கள் இருவரும்.
வெயிட்டர் அவர்களை நோக்கி வர- ரெண்டு காப்பி
என்று சொன்ன ஜெயந்த் ராஜகணேஷிடம் கேட்டான்.
சொல்லுடா… என்ன விஷயம்.?
கண்களில் பனித்து நின்ற நீரோடு நிமிர்ந்தான் ராஜகணேஷ் நா தழுதழுத்தான். டேய்… ஜெயந்த் என்னோட கைக்குக் கிடைச்ச சொர்க்கம் நழுவிப் போயிடும் போலிருக்குடா.
வாட் டு யூ மீன்… நீ என்னடா சொல்றே?
-ஜெயந்த் குழப்பமாய் அவனைப் பாத்துக் கேட்க - ராஜகணேஷ் தன் சட்டை பாக்கெட்டில் இருந்த அந்தக் கடிதத்தை எடுத்து நீட்டினான்.
அந்தக் கடிதத்தை வாங்கி-
படிக்க ஆரம்பித்த ஜெயந்தின் முகம்-
கொஞ்சம் கொஞ்சமாய் அதிர்ச்சியைக் காட்ட ஆரம்பித்தது.
2
என்னடா இது… லெட்டர் இப்படி எழுதியிருக்கா வாசுமதி?
ஜெயந்த் ஆச்சரியமாய்க் கேட்டுவிட்டு மறுபடியும் ஒரு தடைவ அந்தக் கடிதத்தின் மேல் பார்வையைப் போட்டான்.
"அன்புள்ள ராஜகணேஷ்!
உங்கள் உயிரோடு கலந்துவிட்ட வாசுமதி எழுதிக் கொண்ட கடிதம் இந்தக் கடிதத்தை நான் எழுதும் போது என் கண்களில் நீர் நிற்காமல் வழிந்து கொண்டிருக்கிறது. எனக்கு என்ன செய்வது என்று புரியாத நிலையில் இந்தக் கடிதத்தைத் தொடர்கிறேன்.
என்னுடைய அப்பா எனக்கு திடீர் என்று மாப்பிள்ளையைப் பார்த்து முடிவு செய்து முகூர்த்த தேதியையும் குறித்து விட்டார். அடுத்த மாதம் 20-ம் தேதி எனக்குக் கல்யாணம் நம்முடைய காதல் விவகாரத்தை என் அப்பாவிடம் சொல்ல எனக்கு தைரியம் வரவில்லை. இந்தக் கடிதம் கண்டதும் நீங்கள் உடனே புறப்பட்டு வாருங்கள் நான் என்ன செய்ய வேண்டும். என்பதை நீங்களே முடிவெடுஙகள். உங்கள் முடிவுக்காகக் காத்திருக்கும்- வாசுமதி."
கடிதத்தை நான்காய் மடித்து. ராஜகணேஷிடம் நீட்டிக் கொண்டே ஜெயந்த் கேட்டான். இந்த லெட்டர் உனக்கு என்னிக்குக் கிடைச்சுது?
நேத்தைக்குக் காலையில.
"ஊருக்கு