Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maaya Vizhigal
Maaya Vizhigal
Maaya Vizhigal
Ebook102 pages51 minutes

Maaya Vizhigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386351685
Maaya Vizhigal

Read more from Indira Soundarajan

Related to Maaya Vizhigal

Related ebooks

Related categories

Reviews for Maaya Vizhigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maaya Vizhigal - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    மாய விழிகள்

    Maaya Vizhigal

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarrajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    முன்னுரை

    ந்நூலில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளும் மூன்றுவித கருப்பொருள்களைக் கொண்டவை; தனித்தனியாக வந்த காலத்தில் வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றவை.

    குறிப்பாக, மாயவிழிகள் என்ற கதையை வாசித்த ஒரு வாசகி, எப்போது சார் இந்தக் கதையைப் பாதுகாக்கும்படியான நூலாகப் பதிப்பித்துத் தரப் போகிறீர்கள்?" என்று பலமுறை போன் செய்து கேட்டுவிட்டார். இன்னும் சிலர் நேரிலேயே வந்தும் கேட்டுவிட்டனர்.

    பிறகு என்ன… நம் பாடு திண்டாட்டம்தான். இதுவரை ஒருவாறு சமாதானம் (ஏமாற்றி) சொல்லி வந்தேன்.

    மேலும் மேலும் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கவே அதற்கான பணிகளில் கவனம் செலுத்தலானேன்.

    என்னுடைய மற்ற நூல்களைச் செம்மையாகப் பதிப்பித்தளித்த திருமகள் நிலையற்தாரே இந்நூலையும் வெளியிடுகின்றனர். அவர்களுக்கு என் நன்றி உரித்தாகும்.

    எனது மற்ற நூல்களுக்கெல்லாம் ஊக்கமளித்து வரவேற்ற வாசக அன்பர்கள் இந்நூலையும் உற்சாகத்துடன் வரவேற்பார்கள் என நம்புகிறேன்.

    இந்திரா சௌந்தர்ராஜன்

    1

    ஜனவரி 1, 1906.

    இன்று நான் கொல்லி மலையை அடைந்தேன். கல்கத்தாவில் ஒரு கப்பலில் தொடங்கிய என் பயணம் தூத்துக்குடியில் முற்றுப் பெற்றுது. அதன் பின் அங்கிருந்து பதினைந்து நாள் பயணம் செய்து எட்டயபுரம், மதுரை, திருச்சி வழியாக சேலத்தை அடைந்தேன்.

    நான் என் வாழ்நாளை பெரு விருப்பமுடன் கழிக்க நினைத்த கொல்லிமலை இந்த மாவட்டத்தில் தான் இருக்கிறது.

    அங்கே போவது மிகக் கடினம். சரியான பாதையே கிடையாது என்றார்கள். இருந்தாலும் நான் கலங்கவில்லை.

    அகத்தியச் சித்தரை மனதில் நினைத்துக் கொண்டே கிளம்பி விட்டேன். என்ன ஆச்சரியம்… அவரே என் எதிரில் தோன்றி கைப்பிடித்து அழைத்துச் சென்றார்.

    நாளைக்கு கோரக்கரையும், பாம்பாட்டிச் சித்தரையும் அறிமுகப்படுத்தி வைப்பதாகக் கூறினார்.

    சாம் கிரேட்மேன் டைரிக்குறிப்பிலிருந்து

    கப்பட்ட பரபரப்பில் இருந்தது கஸ்தூரி அபார்ட்மென்ட்ஸ்!

    தண்ணீர் லாரி ஒரு பக்கம்… பள்ளிக்கூடம் போகும் குழந்தைகள் ஒரு பக்கம், காய்கறிக்காரனின் தள்ளு வண்டி இன்னொரு பக்கம்.

    நடுவில் அல்லாடிக் கொண்டிருந்தான் ராமு. நெற்றியில் நான்கு வரிக்கு விபூதிப்பட்டை, கழுத்தில் அழுக்குக் கயிற்றில் ஒரு ருத்திராட்சக் கொட்டை, காலர் கிழிந்த ஒரு சாம்பல் நிறச் சட்டை, கசடு ஏறிய ஒரு பிரவுன் கலர் லுங்கி, லொடக் லொடக் என்று நடக்கையில் சப்தம் போடும் சற்றே அளவில் பெரிய ஸ்லிப்பர் செருப்பு சகிதம் அவனை யார் பார்த்தாலும் ஒரு சின்ன பரிதாப உணர்ச்சி தோன்றியே தீரும்.

    ஒரு கையில் ஸ்கூல் பேக். இன்னொரு கையில் காய்கறிக் கூடை, தோளில் ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் குடம் என்று ஓடியாடிக் கொண்டிருந்தான். அபார்ட்மெண்ட்டே அவனை விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தது.

    ராமு இங்க வா… கொஞ்சம் கரண்டு பில் கட்டிட்டுவா…

    டேய் வரும் போது இந்த கோதுமையை கொஞ்சம் உடைச்சிகிட்டு வந்துடுடா…

    குரங்காக அவனை பிடுங்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

    மூன்றாவது ஃப்ளோரில் இருக்கிறான் வரதன். பால்கனியில் நின்று கொண்டு ராமு ஓடியாடுவதையும், மற்றவர்கள் அவனை உருட்டி விளையாடுவதையும் பார்த்துக் கொண்டிருந்தவனுக்குள் ஒரு நினைப்பு.

    டேய் ராமு, இங்க கொஞ்சம் வந்துட்டு போடா…என்று புகை பிரியும் வாயுடன் கூறிவிட்டு தன் ஃப்ளாட்டுக்குள் நுழைந்து கொண்டான்.

    அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ராமுவும் அவன் எதிரில்.

    முதலாளி கூப்பிட்டீங்களா?

    முதலாளியா… நானா?

    என்ன முதலாளி நீங்க. எனக்குஇந்த ஃபிளாட்ல இருக்கற எல்லாரும்முதலாளிங்க தான்.

    ஆமா, நீ ஏன் இப்பிடி எடுபிடி மாதிரி எல்லாருக்கும் வேலை பார்த்து சாகறே? ஸ்டெடியா ஒரு வேலை பார்த்தா என்ன?

    எங்கங்க… இப்படியே பழிகிட்டேன்…

    அடப்பாவி… இப்படியே ஓடிகிட்டிருந்தா ஒரு நாள் அப்படியே உழுந்துடுவடா…

    என்னங்க பண்றது, என் தலையெழுத்து…

    தலை எழுத்தாவது கால் எழுத்தாவது… ஆமா உன் அப்பா அம்மால்லாம் எங்க இருக்காங்க? அந்த கேள்வி முன் ஒரு சஷணம் பிரேக்கடித்து நின்ற லாரி ட்ராக்காட்டம் திணறலுடன் நின்றான் ராமு.

    என்னடா… எங்க இருக்காங்க சொல்லு…

    உங்களுக்கு என்னைப் பத்தி எதுவும் தெரியாதுங்களா?

    தெரியாததாலதானே கேக்கறேன்…

    நான் ஒரு குப்பைத் தொட்டி கேசுங்க…

    அப்படின்னா..?

    "புதிய பாதை படம் பார்த்தீங்களா… அதுல வர்ற பார்த்திபன் மாதிரிங்க. என்னை பெத்தவ குப்பைத் தொட்டியில போட்டுட்டு போயிட்டா.

    எப்படியோ அடிச்சு பிடிச்சு எச்சில் இலையும், பிச்சையுமா நானும் வளர்ந்து ஆளாயிட்டேன்.

    ராமு சொல்ல, வரதன் முகத்தில் திகைப்பு.

    அடப்பாவமே…!என்றது உதடு.

    "சரிங்க முதலாளி…

    Enjoying the preview?
    Page 1 of 1