Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhayathai Thodalama?
Idhayathai Thodalama?
Idhayathai Thodalama?
Ebook217 pages1 hour

Idhayathai Thodalama?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386351852
Idhayathai Thodalama?

Read more from Devibala

Related to Idhayathai Thodalama?

Related ebooks

Reviews for Idhayathai Thodalama?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhayathai Thodalama? - Devibala

    http://www.pustaka.co.in

    இதயத்தைத் தொடலாமா!

    Idhayathai Thodalama!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    உத்தம் குளித்து முடித்து பாத்ரூமிலிருந்து வெளிப்பட்டபோது மாலை ஏழு மணி.

    அந்த உயர்தர யார்ட்லி பவுடரை உடம்பு முழுக்க ஸ்ப்ரே செய்து கொண்டு கண்ணாடி முன் நின்றான்.

    கதவு தட்டப்பட்டது.

    ம்… வரலாம்!

    வேலைக்காரன் உள்ளே நுழைந்தான்.ட்ரேயில் காப்பிக்கான உபகரணங்களும் ஒரு ஆடியோ காஸெட்டும்.

    வச்சிட்டுப் போ!

    அவன் விலகினான்.

    பாலைத் தவிர்த்து கொஞ்சம் டிகாஷனை மட்டும் ஊற்றி, கொஞ்சமாக சர்க்கரை சேர்த்தான் உத்தம்.ஆடியோ காஸெட்டை எடுத்து ப்ளேயரில் செருகினான்.

    ஸ்விட்சைப்போட்டுவிட்டு, டிகாஷனைக் கையில் எடுத்துக் கொண்டான்.

    மை டியர் உத்தம்!

    அப்பாவின் கரகரப்பான குரல்.

    உத்தம் டிகாஷனை உறிஞ்சினான்.

    இன்னிக்கு-அதாவது டிசம்பர் 10-ஆம் தேதி ராத்திரி பத்து மணிக்கு உன்னை மீட் பண்ண அப்பாயின்ட்மெண்ட்.என் ரூம்ல என்னை வந்து நீ பார்க்கணும்!

    காஸெட் அவ்வளவுதான்!

    எரிச்சலுடன் டிகாஷன் கோப்பையை வைத்தான்.

    ‘எதுக்கு?’

    ‘ஏன் இந்த மீட்டிங், அதுவும் இன்னிக்கு?’

    டெலிபோன் ஒலித்தது.

    கார்ட்லெஸ்ஸை கையில் எடுத்துக் கொண்டான்.

    உத்தம்! ஷெரடான் பார்க்ல எத்தனை மணிக்கு மீட் பண்றோம்?

    டென் தர்ட்டி!

    ஏண்டா, ஒரு மணி நேரம் லேட்டா வர்ற?

    ஸாரி! ஒரு வேலை இருக்கு. வந்துடறேன்!

    உத்தம் தயாராவதற்குள் அவனைப் பற்றிக் கொஞ்சம்--

    மல்ட்டி மிலியனர் மல்லிகார்ஜீன் என்றால் இந்தியாவில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது.

    பெரிய அரசியல்வாதிகள் பலர் தேர்தல் சமயத்தில் மல்லிகார்ஜீன் வீட்டில்தான்.

    சினிமா தயாரிப்பாளர்களின்நடமாட்டம் எப்போதும் இருக்கும்.

    விளையாட்டு வீரர்கள் யார் வந்தாலும் இங்கு விருந்து உண்டு.

    எப்போதும் பத்திரிகையாளர்களின் முற்றுகை.

    பல கம்பெனிகளில் பங்குதாரர்… பினாமி பேர்களில் ஏகப்பட்ட சொத்துக்கள்…

    மாதத்தில் இருபத்தி முன்று நாட்களும் அயல் நாட்டில்தான்.

    மேற்படி நபரின் ஒரே மகன்தான் இந்த உத்தம் எனப்படும் உத்தம்குமார்.

    படிப்பதற்குக்கூட அவனை வெளியில் அனுப்பாமல் ஆசிரியர்களை வீட்டுக்கு வரவழைத்துப் பாடம் சொல்ல ஏற்பாடு செய்தவர் மல்லிகார்ஜீன்.

    உத்தமின் நாலாவது வயதில் அவன் அம்மா இறந்து போனாள்.

    அவள் சாவுக்குக் காரணம் மல்லிகார்ஜீன் என்றும் சிலர் ரகசியமாக (?) சொல்வதுண்டு.நிஜமா பொய்யா தெரியாது!

    ஆனால் மகனைத் தங்கப் பெட்டகத்துக்குள் வைத்து அவர் வளர்த்தது நிஜம்.

    பதினேழு வயது வரையில் வெளி உலகமே தெரியாமல்தான் உத்தம் வளர்ந்தான்.

    ஆங்கிலம், உலக ஞானம், பாட்டு, நடனம் என்று சகலமும் வீட்டுக்குள் கற்பிக்கப்பட்ட உத்தம் சகலத்திலும் தேறியிருந்தான்.அவனாகக் கேட்டுப் பெற்றக் கொண்ட பயிற்சிகளும் ஏராளம்.அடைத்து வைத்த வாத்துக் கூட்டத்தை திடீரெனத் திறந்து விட்டால் ‘கிச்மூச்’சென்று ஒடுவது போல வெளியுலகம் காண உத்தம் புறப்பட, அவனுக்குத் தலைகால் தெரியவில்லை.

    இவனது செல்வாக்கு-பணத்துக்கு ஒரு நண்பர் கூட்டம் சேர உற்சாகமானான் உத்தம்.

    சகல கல்யாண (?) குணங்களையும் ஆறே மாதங்களில் பழகிக் கொண்டு விட்டான்.

    மல்லிகார்ஜின் காதுகளில் சில விஷயங்கள் மகனைப் பற்றி அரசல் புரசலாக எட்ட, ஒரு நாள் அழைத்துக் கேட்டே விட்டான்.

    உத்தம்! நீயும் உலகத்தைப் புரிஞ்சுக்கணும்னு தானே நான் ஃப்ரியா விட்டேன்.

    ஆமாம் டாடி!

    என் காதுல தப்புத் தப்பா விழுதே நிறைய…

    சத்தியமா இல்லை டாடி! நீங்களே யாரை வேணும்னா கேட்க்கலாம்.உங்க மேல் பொறாமை உள்ளவங்க என்னைப் பற்றி தாறுமாறா உங்ககிட்ட…

    வெல்! ஜாக்ரதையா இரு!

    அதன் பிறகு மகனை அழைத்துப் பேசுமளவுக்கு அவருக்கு நேரம் இல்லை.

    உத்தம் கையில் ஒரு டாடா சியாரா கார்.ஸெல்லுலார் போன். கட்டுக்கட்டாக பணம்.

    பிறகென்ன?

    நண்பன் கூட்டத்துடன் உத்தமின் பொழுதே ஒவ்வொரு நாளும் மாலை ஆறு மணிக்கு மேல்தான் விடியும்.

    ஸ்டார் ஒட்டலில் சாப்பாடு!

    இரவு பத்து மணிக்கு நன்றாக ஏற்றிக் கொண்டு காரில் புறப்பட்டால், காதில் வாக்மென்.நினைத்த இடத்துக்கு பயணம்.பீச் ரோட்-மகாபலிபுரம் என்று வட்டமிடும் அவசரம்…

    இது ஆரம்பத்தில்.

    கொஞ்சம் தைரியம் வந்தாலும் பாண்டிச்சேரி, பெங்களுர் என கார் பயணம் நீண்டு தீர்த்த யாத்திரையை மேற்படி இடங்களில் தொடர்ந்து இவாழ்க்கையை உத்தம் அங்குலம் அங்குலமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

    நாளை புது வருடக் கொண்டாட்டங்கள்.

    இரவு பத்து மணிக்கு மேல் பிரமாதப்படும்.நண்பர்கள் ஒட்டலில் காத்திருப்பார்கள்.

    இந்த நேரத்தில் அப்பா!

    எரிச்சலாக வந்தது.

    கொஞ்சம் குடித்தால் இந்த டென்ஷன் போகும் என்று தோன்றியது.

    வேண்டாம்.

    குடிக்கத் தொடங்கினால், நிறுத்த முடியாது.அது எல்லை தாண்டும்.

    அப்பாவுக்குத் தெரியக்கூடாது.

    தவிர்த்தான்.

    மேலும் டெலிபோன் கால்கள்.

    இருங்கடா வந்திர்றன்!

    காலிங்பெல் அடித்தது.இவன் பஸ்ஸரை அழுத்த கதவு திறந்தது.

    சாப்பாடு…?

    வேண்டாம் போ! அப்பா இப்ப எங்கே?

    இன்னும் சிங்கப்பூர்லேந்து வரலை?

    சிங்கப்பூரா? அப்புறம் எனக்கெப்படி காஸெட்?

    அது இன்னிக்குக் காலைதான் எங்க கைக்குக் கிடைச்சது…

    அவன் போய் விடலாமா?

    ச்சே, கூடாது.இதுவரை அவர் கட்டளையை மீறியதில்லை.அதானால்தான் அவருக்கு என் மேல் நம்பிக்கை.

    காத்திருந்தான்.கடைசியாக ஒன்பது ஐம்பதுக்கு அப்பா வந்துவிட்டதாகச் செய்தி கிடைத்தது.

    அப்பா நேரத்தைப் பராமரிப்பவர்…

    அதனால்தான் இத்தனை வெற்றி!

    பத்து மணிக்கு இன்டர்காம் ஒலித்தது. எடுத்தான்.

    உத்தம்!நான் தயாராக இருக்கேன்.ரூமுக்கு வா!

    உத்தம் ஆகாய நிறத்தில் ஷெர்வானி ட்ரஸ் போல மெலிதாக அணிந்திருந்தான்.

    பிடித்துக் கொண்டிருந்த ஃபாரின் சிகரெட்டை அவசரமாக தட்டி ட்ரேயில் நசுக்கிவிட்டுஇகொஞ்சம் வாசனை சிக்லெட்களை எடுத்து வாயில் போட்டுக்

    கொண்டான்.

    மென்று கொண்டே நடந்தான்.

    கதவைத் தட்டினான்.

    கம் இன்!

    உள்ளே நுழைந்தான்.

    குட் ஈவினிங் டாடி!

    ரெண்டு நிமிஷம் நீ லேட்.எனக்குப் பிடிக்காது!உட்காரு உத்தம்!

    உட்கார்ந்தான்.

    வாயில் என்ன?

    சிக்லெட்!

    துப்பிட்டு வா! இந்தப் பழக்கத்தை விடு!

    சொன்னபடி செய்தான்.

    குட்! நாளைக்குப் புது வருஷம்.இத்தனை நாள் உன்னை நான் ஃப்ரியா விட்டாச்சு.இனிமே கூடாது.நாளைக்கு நம்மோட நாலு கம்பெனிகள் பொறுப்பை நீ ஏத்துக்கறே!

    டாடி!

    உனக்கு கோச் பண்ணஇஎல்லாம் சொல்லித்தர ஒரு டீம் இருக்கு.இதுக்காகவே சம்பளம் குடுத்து அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன்.நல்லாக் கத்துக்கலாம்.காலைல ஒன்பது மணிக்கு நீ தயாரா இருக்கணும்… ராத்திரி ஓன்பது மணிக்குத்தான் வீடு திரும்பணும்!

    மை காட்!

    கடுமையாக உழைக்கணும் நீ!

    டாடி! நான் பேசலாமா?

    இரு! இந்தப் பொறுப்புகளை ஏத்துக்கிட்டு ஒரு வருஷ காலம் நீ கடுமையா உழைச்சா, பிஸினஸை படிக்க உன்னை லண்டனுக்கு அனுப்பப் போறேன்!

    உத்தம் பேசவில்லை.

    நிறைய ஃப்யூச்சர் ப்ளான்கள் இருக்கு.ஒவ்வொண்ணாய் சொல்றேன்.இப்ப நீ பேசு!

    எனக்கு பயம்மா இருக்கு டாடி.குருவித்தலல…

    "புதுசா ஏதாவது சொல்லு!லுக் உத்தம்! பிஸினஸில் எந்தக் கஷ்டமும் இல்லை.சன்னமான சவால்கள் நிறைய உண்டு… உனக்கே போகப்போக தெரியும்.ஒரு பயமும் இல்லை.பழகப் பழக சரியாகும்.

    "நாளைக்கு காலைல ஏழரைக்கு நம்ம புதுக் கம்பெனி பூஜை.நீயும் நானும் போறோம்.ஏழரைக்கு நீ தயாரா இருக்கே!

    குட்நைட்!

    உத்தம் எழுந்து நின்றான்.

    அவ்வளவுதான்!இனி அவர் பேசமாட்டார்!

    தன் அறைக்கு வந்தான்.

    ‘நாளைக்கு முதல் 12 மணி நேரம் கம்பெனியில் உழைப்பா?’

    ஆலறினான்.

    வேலைக்காரான் ஒடி வந்தான்.

    கூப்பிட்டீங்களா?

    இல்லை.

    டெலிபோன் ஒலித்தது.

    பத்து இருபதுடா உத்தம்.ஏன் வரலே?

    வர்றேன்டா!

    டாடா சியாராவின் சாவியை எடுத்துக் கொண்டான்.ஒரு மாதிரி ரத்தக் கொதிப்பு போல இருந்தது.

    என்னை கட்டிப் போடறாரா டாடி?

    என்னால முடியாது!

    நான் ஜாலியா இருக்கணும்!

    இருக்கற சொத்துக்கள் போதாதா?இன்னும் நாலு கம்பெனிகளா?

    வண்டி அந்த ஸ்டார் ஒட்டல் வாசலில் நின்றது.

    நண்பர்கள் கூட்டம் இவனைக் கைதட்டி வரவேற்றது.சகலமும் மறந்தான்.

    ‘ஒரு நல்ல நாளில் புது வருஷக் கொண்டாட்ட சமயத்தில் ஏன் சந்தோஷம் தொலைக்க வேண்டும்?’

    பார்ட்டி தொடங்கி விட்டது.

    குடியும், கூத்தும்இஆட்டமும் பாட்டமுமாகத் தொடங்கி விட்டது.

    புது வருடம் பிறக்க பலூன்களை உடைத்து, கேக் வெட்டிக் கொண்டாடினார்கள்.

    இரண்டு மணி வரை தலைகால் தெரியாமல் குடித்தார்கள்.

    ஆதன் பிறகு உத்தம், சிராஜ், ஜேம்ஸ்இதருண் நாலு பேரும் டாடா சியாராவில் புறப்பட்டார்கள்.

    மச்சான் பெங்களுருக்கு விட்ரா!

    வேண்டாம்டா!இன்னிக்கு மெட்ராஸை விட்டுப் போக வேண்டாம்.சிட்டியை ரவுண்ட் அடிக்கலாம்!

    மனம் போன போக்கில் சென்னை நகரத்தின் சந்து பொந்துகளிலெல்லாம் கார் புகுந்து புறப்பட்டது.

    விடிய விடிய நகரை வலம் வந்தார்கள்.

    விடியத் தொடங்கயிது.

    காலை ஏழரை மணிக்கு மல்லிகார்ஜீன் இன்டர்காம் எடுத்தார். அடித்துக் கொண்டே இருந்தது.

    வேலைக்காரனை அழைத்தார்.

    உத்தம் எங்கே?

    ராத்திரி போனவர் இன்னும் வரவில்லை!

    இடியட்!நான் சொன்னதை மறந்துட்டானா? மோஸ்ட் இர்ரெஸ்பான்ஸ்பிள்.

    அவர் காத்திருக்கவில்லை.கம்பெனி பூஜையை முடித்துக் கொண்டார்.

    நேரம் ஒன்பது.

    அவனுக்காக அவர் நியமித்திருந்த பயிற்சிக்குழு காத்திருந்தது.

    உத்தம் வரவில்லை.

    வீட்டுக்குப் போன் போட்டார்.

    சின்னவர் வரலிங்க!

    தன் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு உத்தம் எங்கே இருப்பான் என்று தேடும் முகமாக சில போன் கால்களைப் போட்டார்.

    நேரம் பிற்பகல் ரெண்டு மணி.

    ‘இரவு போனவன்.விசாரித்த இடங்களில் தெரியவில்லை என்ற பதில்!’

    ‘எங்கே போனான்?’

    வயிற்றுக்குள் ஒரு கலவரப் பந்து உருண்டது.

    மாலை நாலு மணிக்கு போலீசுக்கு சொல்லலாமா?என்றவரை யோசனை வரடெலிபோன் அடித்தது.

    டாடா சியரா 01-09-7777உங்க வண்டிதானே?

    ஆமாம்!

    அதை ஒட்டிட்டு வந்தவர் பீச் ரோட்ல விபத்துக்குள்ளாகி…

    விபத்துக்குள்ளாகி…?

    நாற்காலி நுனிக்கு வந்துவிட்டார் மல்லிகார்ஜீன்.

    ஸ்பாட்ல இறந்துட்டார்!

    உத்தம்…

    மல்லிகார்ஜீன் போட்ட சப்தம்இஅந்த ஆபீசையே ஒரு குலுக்கு விட்டது.

    2

    மல்லிகார்ஜீன் ஸ்பாட்டுக்கு வந்தபோது கூட்டம் சேர்ந்திருந்தது.பெசன்ட் நகர் பீச் கடந்து 3கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு இடம்.

    Enjoying the preview?
    Page 1 of 1